search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாதுதீன் ஒவைசி"

    • ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவர்களுக்கானதா? அல்லது ஒட்டு மொத்த இந்தியாவுக்கானதா?
    • தீர்மானத்தின் மூலம், மற்ற மதங்களை தாண்டி ஒரு மதத்தின் வெற்றி குறித்த செய்தியை இந்த அரசு வெளியிடுகிறதா?.

    பாராளுமன்றத்தில் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பகவான் ராமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், நாதுராம் கோட்சேவை வெறுக்கிறேன். ஏனென்றால், அவரால் கொல்லப்பட்ட நபர் கூறிய கடைசி வார்த்தை ஹேம் ராம்.

    இன்று நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். மோடி தலைமையிலான அரசு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதா?. ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவர்களுக்கானதா? அல்லது ஒட்டு மொத்த இந்தியாவுக்கானதா? இந்த அரசு சொந்த மதத்தை கொண்டுள்ளதா?. இந்த அரசு எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்திருக்கவில்லை. இந்த நாடு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காகவும் நிற்காது, நிற்கக் கூடாது என்று நான் நம்புகிறேன்.

    ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடந்த நிகழ்வு குறித்த இந்தத் தீர்மானத்தின் மூலம், மற்ற மதங்களை தாண்டி ஒரு மதத்தின் வெற்றி குறித்த செய்தியை இந்த அரசு வெளியிடுகிறதா?. நாட்டிலுள்ள 17 கோடி முஸ்லிம்களுக்கு இதைவிட இந்த அரசு தெரிவிக்கும் பெரிய செய்தி என்ன?" என்றார்.

    மேலும், முஸ்லிம் தலைவர்களின் படையெடுப்பு மற்றும் ஆட்சிக்குப் பிறகு, சிறுபான்மையினர் பிரிவில் இருந்து வந்த தலைவர்கள் என பா.ஜனதாவால் முத்திரை குத்தப்பட்டு வரும் நிலையில் "நான் என்ன பாபர், ஜின்னா அல்லது அவுரங்கசீப்பின் செய்தி தொட்பாளரா?" என கடுமையாக தாக்கி பதில் அளித்தார்.

    • 2018ல் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது
    • காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த், ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர் என்றார் ஒவைசி

    இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து, இறுதி முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட உள்ளது.

    தெலுங்கானாவில் 2018-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 47 சதவீத வாக்குகளை பெற்று பாரத ராஷ்டிரிய சமிதி (அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி) 119 இடங்களில் 88 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியை சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெறுகிறது.

    இந்திய தேசிய காங்கிரஸால் 19 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் 30 அன்று தெலுங்கானா சட்டசபையில் உள்ள 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெல்வதற்கு அங்கு பாரதிய ராஷ்டிர சமிதியை தவிர, காங்கிரஸ், பா.ஜ.க., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் களத்தில் உள்ளன. பிரசாரத்தில் அனல் பறக்கும் விமர்சனங்கள் நடைபெறுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, வாக்கு சேகரிப்பின் போது ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பி.ஆர்.எஸ்., ஆகிய இரு கட்சிகளும் பா.ஜ.க.வுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

    ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, தெலுங்கானா தேர்தலில் ஐதராபாத்திற்கு உட்பட்ட 9 இடங்களுக்கு வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. அங்குள்ள நம்பள்ளி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் பிரசாரம் செய்தார்.

    அப்போது ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.

    காங்கிரஸ் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    பிறரை குற்றம் சாட்டும் முன் ராகுல் காந்தி கண்ணாடியில் தன்னை பார்த்து கொள்ள வேண்டும். 2019ல் 540 பாராளுமன்ற இடங்களுக்கு போட்டியிட தலைமையேற்ற ராகுல் காந்தியால் அக்கட்சிக்கு 50 இடங்கள் மட்டுமே நாடு முழுவதும் கிடைத்தது. இது ஏன்? நீங்கள் (ராகுல்) பிரதமர் மோடியிடம் இருந்து எவ்வளவு தொகையை பெற்றீர்கள்? மைனாரிட்டி ஆதரவாளர்கள் என சொல்லி கொண்டு, பாபரி மஸ்ஜித் தகர்ப்பிற்கு காரணமான சிவசேனையுடன் காங்கிரஸ் மகாராஷ்டிரத்தில் கூட்டணி வைத்திருக்கிறது. மைனாரிட்டிகளுக்கும் ஏழைகளுக்கும் குரலாக ஏ.ஐ.எம்.ஐ.எம். வளர்ச்சி பெற்று வருவதால் எங்களை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, இங்க் தெளிக்கப்பட்ட வெறும் காகிதம்; அதில் ஒன்றுமில்லை. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருமண திட்டத்தின்படி இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு பலன் கிடைக்குமே தவிர இஸ்லாமியர்களுக்கு பலன் எதுவும் இல்லை. எங்கள் ஆடைகளையும், தொப்பிகளையும் நோக்கி காங்கிரஸார் விரல் நீட்டும் போது அன்பு குறித்து அவர்கள் பேசுவதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும்? தெலுங்கானாவில் அவர்கள் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி, ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்டவர் என்பதை மறக்காதீர்கள்.

    இவ்வாறு ஒவைசி பேசினார்.

    • கேரளாவில் உள்ள உங்கள் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிடாதீர்கள்.
    • ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெற்றிடுவார்.

    தெலுங்கானாவில் உள்ள துக்குகுடா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில கட்சிகளான பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். உள்ளிட்டவைகளை விமர்சித்து பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை சேர்ந்த அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "ராகுல் அவர்களே, நீங்கள் தொடர்ந்து பெரிதாக பேசுகிறீர்கள். இனிமேல் கேரளாவில் உள்ள உங்கள் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிடாதீர்கள். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஹைதராபாத் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து போட்டியிட்டு காட்டுங்கள்," என்று தெரிவித்தார்.

    அசாதுதீன் ஒவைசி கருத்துக்கு பதிலடி கொடுத்து பேசிய சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், "ராகுல் காந்தியின் அரசியல் உயரம் பலமடங்கு அதிகரித்துவிட்டது. தேர்தல் களத்தில் ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவர் வெற்றி பெற்றிடுவார். மேலும் ஒவைசி தன்னை உண்மையான தேசபக்தர் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அவர் ராகுல் காந்தியை தவிர்த்துவிட்டு அமித் ஷா மற்றும் நரேந்திர மோடிக்குத் தான் சவால் விட வேண்டும்," என்று தெரிவித்து உள்ளார்.

    • பல மாநிலங்களிலிருந்து 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து I.N.D.I.A. கூட்டணியை அமைத்துள்ளது
    • பா.ஜ.க. ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய 3 கட்சிகளையும் காங்கிரஸ் எதிர்க்கிறது

    வரும் 2024 இந்திய பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியையும், அதனை சேர்ந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும் எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி I.N.D.I.A. கூட்டணி எனும் எதிர்கட்சிகள் கூட்டணி மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்.

    தெலுங்கானாவில் உள்ள துக்குகுடா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் அம்மாநில கட்சிகளையும் விமர்சித்து பேசினார்.

    அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கும் அக்கட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளுக்கும், அத்தகைய கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிராக எந்த வழக்கும் எந்த மத்திய விசாரணை அமைப்பாலும் பதிவு செய்யபடுவதில்லை. ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி இதுவரை ஒரு வழக்கையும் சந்திக்கவில்லை. தெலுங்கானா முதல்வரையும், ஒவைசியையும் மோடி தனது அணியை சேர்ந்தவராகவே பார்க்கிறார். அதனால் அவர்கள் மீது வழக்குகள் கிடையாது. ஆனால் எதிர்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை மட்டுமல்ல, ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகிய கட்சிகளையும் சேர்த்து எதிர்க்கிறோம். அவை தனித்தனி கட்சிகளாக இயங்கினாலும் மறைமுகமாக மூன்றும் கை கோர்த்து இயங்குகின்றன.

    இவ்வாறு ராகுல் விமர்சனம் செய்தார்.

    நேற்று, இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி தெரிவித்ததாவது:

    ராகுல் அவர்களே, நீங்கள் தொடர்ந்து பெரிதாக பேசுகிறீர்கள். இனிமேல் கேரளாவில் உள்ள உங்கள் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிடாதீர்கள். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஹைதராபாத் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து போட்டியிட்டு காட்டுங்கள்.

    இவ்வாறு சவால் விடும் வகையில் ஒவைசி பதிலளித்தார்.

    எதிர்கட்சிகள் கூட்டணியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 25 கட்சிகளுக்கும் மேல் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் தேசிய கூட்டணியை எதிர்த்து வருகிறது. ஆனால், இக்கூட்டணியில் சேருமாறு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு அழைப்பு கூட விடப்படவில்லை என ஒவைசி சில நாட்களுக்கு முன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 454 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்
    • இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்

    பாராளுமன்ற மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.

    454 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இந்த நிலையில், நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம் என ஏஐஎம்ஐஎம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். நானும், எனது கட்சியின் இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தோம் என்றார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''மகளிர் இடஒதுக்கீடு மசோதா முஸ்லிம் மற்றும் ஓபிசி பெண்களுக்கான துணை ஒதுக்கீட்டை வழங்கவில்லை. ஓபிசி மற்றும் முஸ்லிம்களை ஒதுக்கீடு வரம்பில் சேர்க்கக்கோரி இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் போராடுகிறார்கள் என்பதை நாடு அறியும் வகையில் நாங்கள் அதற்கு எதிராக வாக்களித்தோம்.

    நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு அதிகமாக ஓபிசி மக்கள் உள்ளனர். இவர்களுக்கு போதுமான பிரதிநித்துவத்தை பாராளுமன்றம் மற்றும் சட்டசபை ஆகியவற்றில் இந்த மசோதா வழங்கவில்லை. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், அரசு அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது?. நாட்டில் 7 சதவீத முஸ்லிம் பெண்கள் உள்ளனர். ஆனால், அவர்ளுடைய பிரநிதித்துவம் சட்டசபை மற்றும் பாராளுமன்றத்தில் 0.7 சதவீதம் மட்டுமே ஆகும்'' என்றார்.

    • ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
    • அப்போது அவர், உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துங்கள் என்றார்.

    ஐதராபாத்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த வாரம் தெலுங்கானா மாநிலம் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, மாநிலத்தை ஆட்சி செய்வது டிஆர்எஸ் என்ற கார், ஆனால் அதன் ஸ்டீயரிங் ஒவைசி கைகளில் உள்ளது என தெரிவித்தார்.

    இந்நிலையில், உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தலாமே? - அமித்ஷாவுக்கு ஒவைசி கேள்வி

    எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், தெலுங்கானா அரசு கோவில்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை ஒப்புதல் அளித்து வருகிறது. ஆனால், ஸ்டீயரிங் என் கையில் உள்ளது என்று அவர் (அமித் ஷா) கூறுகிறார். ஸ்டீயரிங் என் கையில் இருந்தால், உங்களுக்கு ஏன் வலி ஏற்படுகிறது?

    பழைய நகரில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்கிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த முடியுமா என தெரிவித்தார்.

    • ஒவைசி பாராளுமன்ற தெருவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    • கூடுதல் துணை கமிஷனர் தலைமையில் போலீசார் அவரது வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.

    புதுடெல்லி:

    அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி. ஐதராபாத்தை சேர்ந்த இவருக்கு டெல்லியிலும் வீடு இருக்கிறது.

    இந்த நிலையில் டெல்லி அசோகா சாலையில் உள்ள ஒவைசியின் வீடு மீது மர்ம மனிதர்கள் நேற்று மாலை 5.30 மணியளவில் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமானது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஒவைசி பாராளுமன்ற தெருவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து கூடுதல் துணை கமிஷனர் தலைமையில் போலீசார் அவரது வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.

    எனது வீடு மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. எனது வீட்டு உதவியாளர் இதை தெரிவித்தார். இதை தொடர்ந்து ஜெய்பூரில் இருந்து நான் டெல்லி திரும்பினேன்.

    எனது வீடு மீண்டும் தாக்கப்பட்டு உள்ளது. 2014-ம் ஆண்டில் இருந்து இது மாதிரி நடப்பது 4-வது சம்பவமாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அனைத்து எதிர்க்கட்சிகளும், பாஜக வெற்றி பெற உதவுகின்றன.
    • நேரு பிரதமராக இருந்தபோது பாபர் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டன.

    அகமதாபாத்:f

    குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இன்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் யார் சிறந்த இந்து என்பதை காட்டிக் கொள்வதில் பிரதமர் மோடியுடன் போட்டி போட்டுக் கொண்டிருப்பது தெரிகிறது. அது டெல்லி முதல்வராக இருந்தாலும் சரி, காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் சரி, அல்லது சமாஜ்வாதி கட்சி அல்லது ராஷ்டிரிய ஜனதாதள கட்சியாக இருந்தாலும், இதை காட்டிக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள்.

    காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும், வெறுப்புடன் சேர்ந்து வெறுப்பை எதிர்த்துப் போராடுகிறார்கள். இதன் மூலம் பாஜக தேர்தலில் வெற்றி பெறுகிறது. பாஜக ஏன் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகிறது என்பது குறித்து ராகுல் காந்தி அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஜெய் சியா ராம் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸுக்கு இதுபோன்ற அறிக்கைகள் வருவது சகஜம், ராகுலின் இது போன்ற கருத்து எனக்கு ஆச்சரியமாக இல்லை,

    நேரு பிரதமராக இருந்தபோது பாபர் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டன. பாபர் மசூதி வலுக்கட்டாயமாக திறக்கப்பட்டபோது, ராகுலுடையது தந்தை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். பாபர் மசூதி உடைக்கப்பட்டபோது பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தார். எனவே, காங்கிரசார் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது இயல்பானது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • சீன ஆக்கிரமிப்பை தடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன்.
    • நீங்கள் அனைவரும் அரசியல் சக்தியாக வரவில்லை என்றால் இங்கு எதுவும் மாறாது.

    மத்தியப் பிரதேசத்தில் விரைவில் மாநகராட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சியினர் (ஏஐஎம்ஐஎம்) சில பகுதிகளில் போட்டியிடுகிறது.

    இதையொட்டி, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி நேற்று தனது கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக பறை சாற்றும் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டில் காங்கிரஸ் வீணான சக்தியாக மாறிவிட்டது. அது அதன் இருப்பை இழந்துவிட்டது. அதனால் காங்கிரசுக்காக உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள்.

    இந்திய நிலத்தை சீன நாடு ரகசியமாக அத்துமீறி ஆக்கிரமித்து வருவதால், எல்லையில் கவனம் செலுத்தி சீன ஆக்கிரமிப்பை தடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன். இதற்கு யார் காரணம் என்று காங்கிரசையும், பாஜகவையும் நான் கேட்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அரசியல் சக்தியாக வரவில்லை என்றால் இங்கு எதுவும் மாறாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×