என் மலர்

    நீங்கள் தேடியது "telangana assembly polls"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. கடந்த 28, 29-ந்தேதிகளில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். #Telanganaassemblypolls #rahulgandhi

    நகரி:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி ஆகிய 4 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதற்கு மெகா கூட்டணி என்று பெயரிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 28, 29-ந்தேதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூட்டாக ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    தெலுங்கானாவில் ராகுல் காந்தி பிரசாரத்தில் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளதாக கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல்காந்தி தெலுங்கானாவில் மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    அதன்படி வருகிற 3 மற்றும் 5-ந்தேதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். 3-ந்தேதி மெகாபூபாபாத், கரீம் நகர் மாவட்டங்களிலும், 5-ந்தேதி நல்கொண்டா மாவட்டங்களிலும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். மேலும் ரோடு ஷோவும் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். #Telanganaassemblypolls #rahulgandhi

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரசாரத்தை ரத்து செய்தால் ரூ.25 லட்சம் லஞ்சம் தருவதாக காங்கிரஸ் கட்சி தங்களிடம் பேரம் பேசியது என ஒவைசி புகார் தெரிவித்துள்ளது. #TelanganaAssembly #AsaduddinOwaisi
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்கு நிர்மல் தொகுதியில் அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இத்தாஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவர் அசதுத்தீன் ஒவைசி எம்.பி., பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர், “இந்த தொகுதியில் நான் பிரசாரத்தை ரத்து செய்தால் ரூ.25 லட்சம் லஞ்சம் தருவதாக காங்கிரஸ் கட்சி பேரம் பேசியது. இது தொடர்பாக இடைத்தரகர் ஒருவர் எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஒருவருடன் தொலைபேசியில் பேசி உள்ளார். அந்த ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது” என்ற திடுக்கிடும் புகாரை கூறினார்.

    ஆனால் இந்த புகாரை அந்த தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நிராகரித்தனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு என, மஜ்லிஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்துள்ளது. #TelanganaAssemblyPolls
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அம்மாநில முதல்மந்திரி சந்திரசேகர ராவ் அமைச்சரவையை கலைத்தார். இதன்மூலம் தெலுங்கானா மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் தெலுங்கானாவுக்கு தேர்தல் நடத்தப்படுமா? அல்லது தனித்து தேர்தல் நடைபெறுமா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஜ்லிஸ் இ இட்டேஹாத் அல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சி இன்று தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இக்கட்சியின் தலைவர் அசாடுதீன் ஒவைசியின் தம்பி அக்பருதீன் ஒவைசி உட்பட 7 வேட்பாளர்களை முதற்கட்டமாக மஜ்லீஸ் கட்சி அறிவித்துள்ளது. #TelanganaAssemblyPolls
    ×