search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "telangana assembly polls"

    • 2018ல் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது
    • காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த், ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர் என்றார் ஒவைசி

    இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து, இறுதி முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட உள்ளது.

    தெலுங்கானாவில் 2018-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 47 சதவீத வாக்குகளை பெற்று பாரத ராஷ்டிரிய சமிதி (அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி) 119 இடங்களில் 88 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியை சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெறுகிறது.

    இந்திய தேசிய காங்கிரஸால் 19 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் 30 அன்று தெலுங்கானா சட்டசபையில் உள்ள 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெல்வதற்கு அங்கு பாரதிய ராஷ்டிர சமிதியை தவிர, காங்கிரஸ், பா.ஜ.க., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் களத்தில் உள்ளன. பிரசாரத்தில் அனல் பறக்கும் விமர்சனங்கள் நடைபெறுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, வாக்கு சேகரிப்பின் போது ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பி.ஆர்.எஸ்., ஆகிய இரு கட்சிகளும் பா.ஜ.க.வுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

    ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, தெலுங்கானா தேர்தலில் ஐதராபாத்திற்கு உட்பட்ட 9 இடங்களுக்கு வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. அங்குள்ள நம்பள்ளி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் பிரசாரம் செய்தார்.

    அப்போது ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.

    காங்கிரஸ் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    பிறரை குற்றம் சாட்டும் முன் ராகுல் காந்தி கண்ணாடியில் தன்னை பார்த்து கொள்ள வேண்டும். 2019ல் 540 பாராளுமன்ற இடங்களுக்கு போட்டியிட தலைமையேற்ற ராகுல் காந்தியால் அக்கட்சிக்கு 50 இடங்கள் மட்டுமே நாடு முழுவதும் கிடைத்தது. இது ஏன்? நீங்கள் (ராகுல்) பிரதமர் மோடியிடம் இருந்து எவ்வளவு தொகையை பெற்றீர்கள்? மைனாரிட்டி ஆதரவாளர்கள் என சொல்லி கொண்டு, பாபரி மஸ்ஜித் தகர்ப்பிற்கு காரணமான சிவசேனையுடன் காங்கிரஸ் மகாராஷ்டிரத்தில் கூட்டணி வைத்திருக்கிறது. மைனாரிட்டிகளுக்கும் ஏழைகளுக்கும் குரலாக ஏ.ஐ.எம்.ஐ.எம். வளர்ச்சி பெற்று வருவதால் எங்களை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, இங்க் தெளிக்கப்பட்ட வெறும் காகிதம்; அதில் ஒன்றுமில்லை. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருமண திட்டத்தின்படி இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு பலன் கிடைக்குமே தவிர இஸ்லாமியர்களுக்கு பலன் எதுவும் இல்லை. எங்கள் ஆடைகளையும், தொப்பிகளையும் நோக்கி காங்கிரஸார் விரல் நீட்டும் போது அன்பு குறித்து அவர்கள் பேசுவதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும்? தெலுங்கானாவில் அவர்கள் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி, ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்டவர் என்பதை மறக்காதீர்கள்.

    இவ்வாறு ஒவைசி பேசினார்.

    • 2018ல் கே.சி.ஆர். கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது
    • கே.சி.ஆர். குடும்பத்தினரால் மாநிலம் முழுவதும் ஊழல் பரவி உள்ளது என்றார் ராகுல்

    தெலுங்கானாவில், வரும் நவம்பர் 30 அன்று அம்மாநில சட்டசபையின் 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலின் முடிவுகள், டிசம்பர் 30 அன்று வெளியிடப்படும்.

    கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் - தற்போது பி.ஆர்.எஸ். என பெயர் மாற்றப்பட்டுள்ள (பாரத் ராஷ்டிர சமிதி) அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வென்றது. அதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் ஆட்சியமைத்தார்.

    தற்போது அவருக்கு எதிராக தேசிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவை மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன. இக்கட்சிகளை தவிர அசாதுத்தீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். (AIMIM) கட்சியும் போட்டியிடுகிறது.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கம்மம் மாவட்ட பினபாகா மற்றும் வாரங்கல் மாவட்ட நரசம்பேட்டை பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு ஆதரவு தேடி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் வெற்றி எனும் புயலை எதிர்கொள்ள கே.சி.ஆர். தயாராக வேண்டும். மக்களாட்சியை கொண்டு வர காங்கிரஸ் உறுதி எடுத்துள்ளது. தெலுங்கானாவில் நிலவும் ஊழல் மக்களை சலிப்படைய செய்து விட்டது. பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள அனைத்து துறைகளையும் தன் குடும்பத்தின் வசம் வைத்து கொண்டு ஊழலை வளர்த்திருக்கிறார், கே.சி.ஆர். காங்கிரஸ் இலவசமாக ஏழைகளுக்கு அளித்த விவசாய நிலங்களை கே.சி.ஆர். அரசு டிஜிட்டல்மயமாக்கல் எனும் பெயரில் பதிவுகள் இல்லாமல் அழித்து விட்டது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், கே.சி.ஆர். குடும்பம் ஏமாற்றி அபகரித்து வைத்துள்ள செல்வத்தை மீட்டு மக்களுக்கு செலவு செய்வோம். தனி தெலுங்கானா அமைய பாடுபட்ட கட்சி காங்கிரஸ் கட்சிதான். ஐதராபாத் நகரை "மென்பொருள் துறை தலைநகர்" (IT Capital) என மாற்றியதும் காங்கிரஸ் கட்சிதான். தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டாலும் பா.ஜ.க., பி.ஆர்.எஸ்., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆகியவை மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளன.

    தெலுங்கானாவில் மக்களாட்சி அமைந்ததும், அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அகற்றப்பட்டு காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

    • 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சந்திரசேகர ராவ் வெளியிட்டார்
    • ஏழு மாற்றங்கள் மட்டுமே இடம் பிடித்திருந்ததால், ஏற்கனவே உள்ளவர்களுக்கு வாய்ப்பு

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் இந்த வருடம் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ஏழு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, கிடைக்காததால் தலைவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழும் காட்சி வெளியாகியுள்ளது.

    ஸ்டேசன் கான்புர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, தட்டிகோண்டா ராஜையா விண்ணப்பத்திருந்தார். ஆனால், அவருக்கு பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. வாய்ப்பை கிடைக்காததை பொறுத்துக் கொள்ள முடியாத அவர், மண்டியிட்டு கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவரது ஆதரவாளர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, தெலுங்கு தேசம், சிபிஐ ஆகிய நான்கு கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போது பாரத ராஷ்டிய சமிதி) தோற்கடிக்க முயற்சி செய்தன. ஆனால் மகா கூட்டணிக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.

    சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஒவைசி கட்சி 7 இடங்களிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

    • 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் அறிவிப்பு
    • சந்திரசேகர ராவ் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார்

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருட இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும், சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி 119 இடங்களில் 115 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளையும் ஆச்சர்யத்திற்குள் ஆழ்த்தும் வகையில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நர்சாபுர், நம்பல்லி, கோஷமஹால், ஜன்கயோன் ஆகிய நான்கு இடத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

    வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சந்திரசேகர ராவ், ''நாங்கள் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே இருந்த பட்டியலில் ஏழு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சந்திரசேகர ராவ், காஜ்வெல் தொகுதியில் போட்டியிடுகிறார். அத்துடன் தற்போது கமரெட்டி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த கட்சியை சேர்ந்த கம்பா கோவர்தன் தொடர்ந்து நான்கு முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்களவை தேர்தலில் ஓவைசி கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். அந்த கூட்டணி தொடரும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிதான், பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. தற்போது, வேட்பாளர்களுக்கான விண்ணபத்தை வினியோகம் செய்துள்ளது. கடந்த 18-ந்தேதி முதல் ஆகஸ்ட் 25-ந்தேதி வரை போட்டியிட விரும்புவோம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, தெலுங்கு தேசம், சிபிஐ ஆகிய நான்கு கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போது பாரத ராஷ்டிய சமிதி) தோற்கடிக்க முயற்சி செய்தன. ஆனால் மகா கூட்டணிக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.

    சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஒவைசி கட்சி 7 இடங்களிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

    • சந்திரசேகர ராவ் பா.ஜனதாவின் ‘பி’ கட்சியாக செயல்பட்டு வருகிறார்
    • தெலுங்கானாவில் பா.ஜனதா இல்லை. அவர்களுடைய நான்கு டயர்களும் பஞ்சராகிவிட்டன

    தெலுங்கானாவில் இந்த வருடம் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தெலுங்கானா உடன் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. மற்று மூன்று மாநிலங்களிலும் தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவும். ஆனால், தெலுங்கானாவில் ஆட்சி செய்து வரும் சந்திரசேகர ராவ் கட்சியுடன் இரு கட்சிகளும் மோத உள்ளன. பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்றாலும் காலூன்ற நினைக்கிறது.

    இதனால் தெலுங்கானா வரும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சந்திரசேகர ராவையும், அவர் கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

    நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி கம்மம் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சந்திரசேகர ராவ் பா.ஜனதாவின் 'பி' கட்சியாக செயல்பட்டு வருகிறார். அந்த கட்சியை பா.ஜனதா ரெஷ்தேதார் (உறவு) சமிதி என்று அழைக்கலாம். சந்திரசேகர ராவ் மற்றும் அவரது கட்சியில் உள்ளவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டு பா.ஜனதாவுக்கு அடிபணியச் செய்துள்ளது. சந்திரசேகர ராவ் உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது. அவர் இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் காங்கிரஸ் இருக்காது என்பதை எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் வலியுறுத்துகிறேன்.

    சந்திரசேகர ராவ் மோடியிடம் உள்ள ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படுகிறார். சந்திரசேகர ராவ் தன்னை மன்னராகவும், தெலுங்கானா அவருடை ராஜ்ஜியம் என்றும் நினைக்கிறார்.

    கர்நாடகாவில் ஊழல், மக்கள் எதிர்ப்பு அரசுக்கு எதிராக போராடி ஏழை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களால் பா.ஜனதாவை தோற்கடித்தோம்.

    அதபோல் நிலை தெலுங்கானாவில் நடக்கப்போகிறது. ஒரு பக்கம் அரசின் பணக்காரர்களும், அதிகாரம் படைத்தவர்களும் இருப்பார்கள். இன்னொரு பக்கம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு கடைக்காரர்கள் எங்களுடன் இருப்பார்கள். கர்நாடகாவில் என்ன நடந்ததோ அப்படியே தெலுங்கானாவில் நடக்கும்.

    தெலுங்கானாவில் பா.ஜனதா இல்லை. அவர்களுடைய நான்கு டயர்களும் பஞ்சராகிவிட்டன. தற்போது காங்கிரஸ் கட்சிக்கும்- பா.ஜனதாவின் 'பி' அணிக்கும் இடையில்தான் போட்டி.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. கடந்த 28, 29-ந்தேதிகளில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். #Telanganaassemblypolls #rahulgandhi

    நகரி:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி ஆகிய 4 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதற்கு மெகா கூட்டணி என்று பெயரிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 28, 29-ந்தேதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூட்டாக ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    தெலுங்கானாவில் ராகுல் காந்தி பிரசாரத்தில் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளதாக கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல்காந்தி தெலுங்கானாவில் மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    அதன்படி வருகிற 3 மற்றும் 5-ந்தேதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். 3-ந்தேதி மெகாபூபாபாத், கரீம் நகர் மாவட்டங்களிலும், 5-ந்தேதி நல்கொண்டா மாவட்டங்களிலும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். மேலும் ரோடு ஷோவும் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். #Telanganaassemblypolls #rahulgandhi

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரசாரத்தை ரத்து செய்தால் ரூ.25 லட்சம் லஞ்சம் தருவதாக காங்கிரஸ் கட்சி தங்களிடம் பேரம் பேசியது என ஒவைசி புகார் தெரிவித்துள்ளது. #TelanganaAssembly #AsaduddinOwaisi
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்கு நிர்மல் தொகுதியில் அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இத்தாஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவர் அசதுத்தீன் ஒவைசி எம்.பி., பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர், “இந்த தொகுதியில் நான் பிரசாரத்தை ரத்து செய்தால் ரூ.25 லட்சம் லஞ்சம் தருவதாக காங்கிரஸ் கட்சி பேரம் பேசியது. இது தொடர்பாக இடைத்தரகர் ஒருவர் எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஒருவருடன் தொலைபேசியில் பேசி உள்ளார். அந்த ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது” என்ற திடுக்கிடும் புகாரை கூறினார்.

    ஆனால் இந்த புகாரை அந்த தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நிராகரித்தனர்.
    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு என, மஜ்லிஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்துள்ளது. #TelanganaAssemblyPolls
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அம்மாநில முதல்மந்திரி சந்திரசேகர ராவ் அமைச்சரவையை கலைத்தார். இதன்மூலம் தெலுங்கானா மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் தெலுங்கானாவுக்கு தேர்தல் நடத்தப்படுமா? அல்லது தனித்து தேர்தல் நடைபெறுமா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஜ்லிஸ் இ இட்டேஹாத் அல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சி இன்று தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இக்கட்சியின் தலைவர் அசாடுதீன் ஒவைசியின் தம்பி அக்பருதீன் ஒவைசி உட்பட 7 வேட்பாளர்களை முதற்கட்டமாக மஜ்லீஸ் கட்சி அறிவித்துள்ளது. #TelanganaAssemblyPolls
    ×