search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raid"

    • விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்றன.
    • ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ‘ரெய்டு’ உருவாகியுள்ளது.

    'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் ரெய்டு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. சமீப காலமாக வெளியாகியுள்ள விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்று வருவதால் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது.

    ஆக்ஷன் த்ரில்லர் படமாக 'ரெய்டு' உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கார்த்தி இயக்கி இருக்க, எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.

    இந்த படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதிரவன் ஒளிப்பதிவும், மணிமாறன் படத்தொகுப்பும், கே.கணேஷ் ஆக்ஷன் காட்சிகளையும் கவனித்திருக்க இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

    • மத்திய சிறையில் உள்ள குறிப்பிட்ட பிளாக்குகளில் ஜெயிலர் கிருஷ்ணகுமார் மற்றும் சிறை போலீசாருடன் திடீர் சோதனை மேற்கொண்டார்.
    • ஜெயிலர் கிருஷ்ணகுமார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் உள்ள குறிப்பிட்ட பிளாக்குகளில் ஜெயிலர் கிருஷ்ணகுமார் மற்றும் சிறை போலீசாருடன் திடீர் சோதனை மேற்கொண்டார்.

    அப்போது சோதனை மேற்கொண்ட அறைகளில் இருந்த கைதிகள் விமல், பிரவீன், அஸ்வின் குமார் ஆகியோர் மறைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர், சிம் கார்டு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது குறித்து ஜெயிலர் கிருஷ்ணகுமார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 32 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
    • சம்பந்தப்பட்ட 5 கடைகளுக்கு உணவுத்துறை அதிகாரிகள் நோட்டீஸ்

    ஊட்டி,

    நாமக்கல் மாவட்டத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு (சவர்மா) சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அசைவ உணவகங்களில் உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் நந்தகுமார், சிவராஜ் அடங்கிய குழுவினர், ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து கமர்சியல் சாலை, பாரதியார் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு கெட்டுப்போன 32 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் பல்வேறு அசைவ உணவகங்களில் விதிமுறை மீறல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட 5 கடைகளுக்கு உணவுத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் கூறுகையில், பழைய கெட்டுப்போன இறைச்சிகளை உணவகங்களில் பயன்படுத்துவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • செங்கல்பட்டு மாவட்ட "ரிசர்வ்டு" பகுதிகளை மாவட்ட போலீசார் உதவியுடன் ஆய்வு செய்தனர்.
    • மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிகளில் நேற்று இரவு பரபரப்பு கானப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மத்திய ரிசர்வ் போலீசின் ஒரு பிரிவான "ரேபிட் ஃபோர்ஸ்" அதிரடிப்படை என்பது தேர்தல், பேரிடர், கலவரம், தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட அவசர நிலை பாதுகாப்பிற்கு மத்திய அரசு பிரகடனம் செய்யும் போது ராணுவத்திற்கு இணையாக களமிறங்கும் படையாகும். இப்படையினர் ஆண்டிற்கு ஒருமுறை பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ரிசர்வ்டு பகுதிகளை ஆய்வு செய்து ஒத்திகை போன்று பாதுகாப்பு பயிற்சி எடுப்பது வழக்கம்.

    அதேபோல் நேற்று செங்கல்பட்டு மாவட்ட "ரிசர்வ்டு" பகுதிகளை மாவட்ட போலீசார் உதவியுடன் ஆய்வு (பயிற்சி) செய்தனர். அதில் முக்கிய இடமாக மாமல்லபுரம் புராதன சின்னங்களான அர்சுனன்தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் ஆகியவை இடம் பெற்றிருந்தது.

    இதையடுத்து, நேற்று மாலை அப்பகுதிகளை கோவையில் இருந்து, துணை கமெண்டோ ஜின்சி பிலிப் தலைமையில் வந்திருந்த 30 ரேபிட் ஃபோர்ஸ் வீரர்கள் நவீன ரக துப்பாக்கிகளுடன், திபு திபு என வாகனத்தில் இருந்து இறங்கி ஆய்வு பயிற்சியை மேற்கொண்டனர்.

    பின்னர், அப்பகுதிகளை சுற்றி பார்த்து, நுழைவு வாயில், அவசர நிலை வெளியேற்று பகுதி, தற்போதைய பாதுகாப்பு, காவல் நிலைய தூரம், மருத்துவமனை தூரம், உள்ளிட்டவை குறித்து கள ஆய்வு செய்தனர். கடைசியாக கடற்கரை கோயிலை சுற்றி பார்த்து ஆய்வு பயிற்சி செய்த பின்னர் அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்தனர்.

    இதனால் மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிகளில் நேற்று இரவு பரபரப்பு கானப்பட்டது. பின்னர் இது அவசரநிலை பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை என்பது பகுதி மக்களுக்கு தெரியவந்தது.

    • ஆர்.எஸ்.மங்கலம் அருகே 1800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • திருவாடானை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப் படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வட்ட வழங்கல் அலுவலர் கோகிலா தலைமையில் அதிகாரிகள் சிலுக வயல் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனையிட்ட போது 50 கிலோ எடையுள்ள 36 பிளாஸ்டிக் பையில் 1800 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி டிரைவர் பார்த்திபனூர் பெருங்கரையை சேர்ந்த பாலமுருகன்(27) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் வீடுகளில் ரேசன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி கடத்தி செல்வதாக கூறினார். இது தொடர்பாக குற்றப்பு லனாய்வு பிரிவு துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 1800 கிலோ ரேசன் அரிசி திருவாடானை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    • வீரா.சாமிநாதன் வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில், பழனியில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
    • வீடு, தோட்ட பங்களாவிலும் 2 குழுக்களாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதனுக்கு சொந்தமான வீடு, தோட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

    வீரா.சாமிநாதன் வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில், பழனியில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள வீடு, தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்ட பங்களாவிலும் 2 குழுக்களாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் சாமிநாதன் என்பதால் அதிகாரிகள் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.

    • மசாஜ் சென்டர்களில் ஆய்வு நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
    • மாநகரில் கோர்ட் அனுமதியின்றி முறைகேடாக செயல்படும் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும்

    திருப்பூர்:

    திருப்பூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நூதன முறையில் பாலியல் தொழில் நடப்பதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் திருப்பூரில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்களில் ஆய்வு நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    இதனைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லையில் குமரன் ரோடு பென்னி காம்பவுண்ட், ஓடக்காடு புஷ்பா தியேட்டர் அருகில் செயல்பட்டு மசாஜ் சென்டர் உள்ளிட்ட மூன்று சென்டர்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அதில் திருப்பூர் பின்னிகா ம்பவுண்ட் பகுதியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் நூதன முறையில் பாலியல் தொழில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த சென்டரை பூட்டிய போலீசார் அங்கிருந்த உரிமையாளர் மற்றும் இரண்டு பெண்களை திருப்பூர் மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறும்போது திருப்பூர் மாநகரில் கோர்ட் அனுமதியின்றி முறைகேடாக செயல்படும் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தென்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிளாஸ்டிக்கை சாலையில் வீசுவதால் வடிகால் ஓடைகளில் அடைப்பு ஏற்படுகிறது.
    • ஆய்வில் 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு, சிந்துபூந்துறை பகுதிகளில் அதிகமாக பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    பிளாஸ்டிக்கை பயன்படுத்தி விட்டு அவை சாலையில் வீசப்படுவதால் மழை நீர் வடிகால் ஓடைகளில் அடைப்பு ஏற்படுகிறது.

    மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன், மட்டன் கடைகள், மீன் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக காணப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனைத்தொ டர்ந்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தர வின்படி நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்த லின் பேரில் தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்து பூந்துறை, உடையார்பட்டி, மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் சுகாதார ஆய்வா ளர் முருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள 35 கடைகளில் ஆய்வு நடத்தினர். அதில் 10 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடை உரிமையா ளர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல் வண்ணார்பேட்டை பகுதியில் சுகாதார ஆய்வாளர் சங்கர நாராயணன் தலைமையிலான குழுவினர் 15 கடைகளில் ஆய்வு நடத்தினர். அதில் 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டு அந்த கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையானது தொடர்ந்து அனைத்து கடைகளிலும் மாநகரம் முழுவதும் நடைபெறும் என்று கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
    • சுகாதார அலுவலர்கள் தலைமையில் மாநகர பகுதி கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகள், வணிக நிறுவனங்களில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்க கூடாது என்று மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தர விட்டுள்ளார்.

    அதிகாரிகள் சோதனை

    ஆனாலும் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதாகவும், குறிப்பாக விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் இறைச்சிகடை, மீன் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு சகஜமாக இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    இதனை தொடர்ந்து கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் நெல்லை மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் சுகாதார அலுவலர்கள் தலைமையில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    வியாபாரிகளுக்கு அபராதம்

    அந்த வகையில் நெல்லை மண்டலத்தில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது நயினார் குளம் மார்க்கெட் முக்கு பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு சில கடைகளிலும் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தமாக 15.500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடைகளுக்கு அபராதமாக ரூ. 4,600 விதிக்கப்பட்டது.

    • பொதுப்பணி துணை வளாக கட்டிடத்தில் நீர் மேலாண்மை பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன.
    • ரூ.2¼ லட்சம் பணத்தை யார்-யார் கொடுத்தார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    இங்குள்ள பொதுப்பணி துணை வளாக கட்டிடத்தில் நீர் மேலாண்மை பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று இரவு அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    நீர்வள துறையின்கீழ் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு ஒன்றும் தனியாக செயல்பட்டு வருகிறது. அங்கு உதவி செயற்பொறியாளராக உள்ள பாஸ்கரன் அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் அவரது அறையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது. அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் எண்ணி பார்த்தபோது அதில் ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 540 பணம் இருந்தது தெரியவந்தது.

    அந்த பணத்துக்கு உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனிடம் போலீசார் கணக்கு கேட்டனர். ஆனால் அவர் உரிய கணக்கு காட்டாததால் ரூ.2¼ லட்சம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நீர் மேலாண்மை துறையின் கீழ் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களின் உரிமத்தை புதுப்பித்து கொடுப்பதற்காக அவர்களிடமிருந்து பெறப்பட்ட லஞ்ச பணமாக இது இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ரூ.2¼ லட்சம் பணத்தை யார்-யார் கொடுத்தார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எழிலகம் வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு விடிய விடிய சோதனை நடத்தி இந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதனால் எழிலகம் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

    • சோதனையில் 9 கிலோ கஞ்சா, ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.
    • ரவுடிகள் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பெங்களூரு

    கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் வேலை விஷயமாக குடியிருந்து வருகிறார்கள்.

    இதனால் தலைநகரில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் பொதுமக்களை மிரட்டி பணம், செல்போன், நகைகளை பறித்து செல்லும் நிகழ்வுகளும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக ரவுடிகள் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எனவே பெங்களூருவில் ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்க அடிக்கடி, அவர்களது வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்ற தயானந்த், நகரில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    அதே நேரத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த 40-க்கும் மேற்பட்ட ரவுடிகள், கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தும், ஆஜராகாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள கிழக்கு, மேற்கு, மத்திய, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, ஒயிட்பீல்டு ஆகிய 8 போலீஸ் மண்டலங்களில் இருக்கும் அனைத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ரவுடிகளின் வீடுகளில் நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அதாவது மேற்கு மண்டலத்தில் 177 ரவுடிகள், தெற்கு மண்டலத்தில் 175 ரவுடிகள், வடக்கு மண்டலத்தில் 254 ரவுடிகள், மத்திய மண்டலத்தில் 90 ரவுடிகள், கிழக்கு மண்டலத்தில் 207 ரவுடிகள், வடகிழக்கு மண்டலத்தில் 156 ரவுடிகள், தென்கிழக்கு மண்டலத்தில் 160 ரவுடிகள், ஒயிட்பீல்டு மண்டலத்தில் 125 ரவுடிகள் வீடுகள் என ஒட்டு மொத்தமாக 1,344 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் இந்த சோதனையை நடத்தி இருந்தார்கள்.

    அதிகாலை 5 மணியளவில் நகர் முழுவதும் ஒரே நேரத்தில் ரவுடிகளின் வீடுகளில் அனைத்து மண்டலங்களிலும் போலீசார் இந்த சோதனையை நடத்தி இருந்தனர். அதிகாலை 5 மணியில் இருந்து காலை 10 மணிவரை என தொடர்ந்து 5 மணிநேரம் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது. பின்னர் 1,344 ரவுடிகளையும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    அங்கு ரவுடிகள் தற்போது செய்து வரும் தொழில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கிறார்களா? சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டனர். குற்றங்களில் ஈடுபடுவதை விட்டு விட்ட ரவுடிகளை சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையில், போலீஸ் சோதனையின் போது ரவுடிகளின் வீடுகளில் கஞசா, போதைப்பொருட்கள், திருட்டு வாகனங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 9 கிலோ கஞ்சா உள்ளிட்ட பிற போதைப்பொருட்களையும், 16 மோட்டார் சைக்கிள்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி இருந்தார்கள்.

    மேலும் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டும் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த 46 பேரும் போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் போலீசார் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். குறிப்பாக மேற்கு மண்டலத்தில் பிரபல ரவுடிகளாக இருக்கும் குமரேஷ், பசவேசுவராநகரை சேர்ந்த சந்தீப், மாகடி ரோடுவை சேர்ந்த தர்ஷன், காமாட்சி பாளையாவை சேர்ந்த விஷ்ணு ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் சந்தீப் வீட்டில் 500 கிராம் கஞ்சா சிக்கி இருந்தது.

    சோதனையின் போது கஞ்சா, போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர்கள், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த ரவுடிகள் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பெங்களூருவில் ஒரே நாளில் 1,344 பேரின் வீடுகளில் நடந்த இந்த சோதனையில் ரவுடிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தார்.
    • சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் சாலை எஸ்.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள பேக்கரியில் வாலிபர் ஒருவர் 2 லிட்டர் தண்ணீர் கேன் வாங்கியுள்ளார். தண்ணீரில் குப்பை மற்றும் பாசி படிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.

    அந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தார். அதில் தூசிகள் இருந்ததால் அந்த பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடையில் உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெறாமல் மேலும் பேக்கரி கடை நிறுவனத்திற்கான சான்றிதழை வைத்து கடையை நடத்தியது தெரியவந்தது.

    மேலும் ஆய்வு செய்யும் போது அழுகிய உருளைக்கிழங்கு, தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் இருந்தது.இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் அந்த குடிநீர் பாட்டிலை பறிமுதல் செய்து பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    ×