search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rahul dravid"

    • தென் ஆப்பிரிக்காவில் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
    • தொடரை சமன் செய்ய எங்களுக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.

    ஐதராபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ராகுல் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். அதுபற்றி அணி தேர்விலேயே நாங்கள் தெளிவாக உள்ளோம். நாங்கள் இரண்டு விக்கெட் கீப்பர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தென் ஆப்பிரிக்காவில் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். உண்மையிலேயே அவர் சிறப்பாக விளையாடினார். தொடரை சமன் செய்ய எங்களுக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.

    ஆனால் ஐந்து டெஸ்ட் போட்டிகளை கருத்தில் கொண்டும், இங்குள்ள சூழ்நிலையை பொறுத்தும் விக்கெட் கீப்பர் இடத்திற்கு மற்ற இரண்டு வீரர்களிடையே (கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜூரல்) போட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • டிராவிட் மகனான சமித் ஜூனியர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
    • 3 அரைசதங்கள் உள்பட 370 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இருப்பவர் ராகுல் டிராவிட். இவரது மகனான சமித் ஜூனியர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆல்ரவுண்டராக கலக்கும் அவர் 7 போட்டிகளில் விளையாடி 37.78 சராசரியுடன் 3 அரைசதங்கள் உள்பட 370 ரன்கள் எடுத்தார். மேலும், பந்து வீச்சில் வலது கை வேகப்பந்து வீச்சாளரான சமித் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இந்நிலையில் தனது மகன் சமித்துக்கு பயிற்சியளிப்பது குறித்த தனது கருத்துக்களை டிராவிட் பகிர்ந்து கொண்டார்.

    அதில் ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது:

    பெற்றோர் மற்றும் பயிற்சியாளராக இருப்பது கடினம் என்பதால் எனது மகன் சமித்திற்கு நான் பயிற்சி அளிக்கவில்லை. நான் தந்தையாகவே இருப்பதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், ஒரு பயிற்சியாளராக நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.

    என்று அவர் கூறியுள்ளார்.

    • இஷான் கிசான் இத்தொடரின் தேர்வுக்கான பட்டியலில் இல்லை.
    • ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கான் ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று மொகாலியில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 14 மாதங்கள் கழித்து மீண்டும் விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இருப்பினும் இந்த தொடரில் கேஎல் ராகுல் போன்ற சில முக்கிய வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். குறிப்பாக கடைசியாக நடைபெற்ற தென்னாபிரிக்க தொடரில் இடம் பிடித்திருந்த இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 2 வீரர்கள் இந்த தொடரில் சம்பந்தமின்றி நீக்கப்பட்டுள்ளார்கள். 

    இதில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதாக சொல்லிவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவர்கள் மீது நன்னடத்தை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

     

    இந்நிலையில் இவர்கள் இருவரும் மீது நன்னடத்தை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நன்னடத்தை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை. இஷான் கிசான் இத்தொடரின் தேர்வுக்கான பட்டியலில் இல்லை. தென்னாப்பிரிக்க தொடரில் இடைவெளி கேட்ட அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம். எனவே தற்போது அவர் விளையாடுவதற்கு தயாராக இல்லை.

    இடைவெளி முடிந்ததும் அவர் உள்ளூர் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவார். அதே போல ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைய அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அதனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. எனவே இதன் பின்னணியில் சுமாரான நன்னடத்தை உட்பட எந்த காரணமும் இல்லை.

    இவ்வாறு டிராவிட் கூறினார். 

    • இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
    • ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 11) நடைபெறவுள்ளது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பிடித்துள்ளனர். கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய டி20 அணியில் இடம்பெற்று இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.




    இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி விளையாட மாட்டார் என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து இருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதலாவது டி20 போட்டியில் விளையாட மாட்டார்.

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் விராட் கோலி விளையாடுவார். இந்திய அணிக்கு ரோகித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.
    • இந்த போட்டியில் விராட்கோலி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது. இதன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்த போட்டியில் விராட்கோலி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டை கோலி முந்தினார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராகுல் டிராவிட் 1252 ரன் (21 போட்டி) எடுத்து 3-வது இந்திய வீரராக இருந்தார். தற்போது விராட்கோலி 1274 ரன் எடுத்து அவரை முந்தி 3-வது இடத்தை பிடித்தார். அவர் 3 சதம், 4 அரைசதத்துடன் இந்த ரன்னை எடுத்தார்.

    இன்னும் 33 ரன்கள் எடுத்தால் சேவாக்கை பின்னு தள்ளி 2-வது இடத்தை கோலி பிடிப்பார். டெண்டுல்கர் 1741 ரன்னுடன் முதல் இடத்திலும், ஷேவாக் 1306 ரன்னுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். தென்ஆப்பிரிக்க வீரர்களில் காலிஸ் 1734 ரன்னும், ஹசிம் அம்லா 1528 ரன்னும், டிவில்லியர்ஸ் 1334 ரன்னும் எடுத்துள்ளனர்.

    • இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படுவார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.
    • தென் ஆப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படுவார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.

    இந்நிலையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பார்தீவ் படேல் கூறியதாவது:-

    இந்தியாவின் டெஸ்ட் போட்டி விக்கெட் கீப்பர், ரஞ்சி கோப்பை அல்லது முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து கீப்பிங் செய்பவராக இருக்க வேண்டும்.

    என்று அவர் கூறினார்.

    • வேகப்பந்துவீச்சுக்கு உகந்த செஞ்சூரியன், ஜோகன்னஸ்பர்க் ஆடுகளங்களில் ரன் குவிப்பது சுலபமல்ல.
    • பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா என்பதை புள்ளி விவரங்களே சொல்லும்.

    பெங்களூரு:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்க மண்ணில் மட்டும் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த மாத கடைசியில் அந்த நாட்டுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.

    இந்நிலையில் பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டிராவிட் கூறியதாவது:-

    பேட்டிங் செய்வதற்கு சவாலான இடம் தென்ஆப்பிரிக்கா என்பதை புள்ளி விவரங்களே சொல்லும். உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு கடினமான இடங்களில் ஒன்று தென்ஆப்பிரிக்கா. குறிப்பாக இங்குள்ள வேகப்பந்துவீச்சுக்கு உகந்த செஞ்சூரியன், ஜோகன்னஸ்பர்க் ஆடுகளங்களில் ரன் குவிப்பது சுலபமல்ல.

    ஒவ்வொரு பேட்ஸ்மேனும் இங்கு எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டமிடலுடன் வருவார்கள். அதற்கு ஏற்ப பயிற்சியும் மேற்கொள்வார்கள். எல்லோரும் ஒரே மாதிரி ஆடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் நமது வீரர்களுக்கு எப்படி ஆடினால் கைகொடுக்கும்.

    அதை எப்படி களத்தில் செயல்படுத்த வேண்டும் என்பதில் தெளிவான நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். களத்தில் நிலைத்து நிற்க வாய்ப்பு அமைந்து விட்டால், அதை வெற்றிக்குரிய இன்னிங்சாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்து இருந்தது.
    • எவ்வளவு காலம் வரை நீட்டிக்கப்படும் என்ற தகவல் இல்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணியுடனான தனது பயணத்தை நீட்டிப்பது தொடர்பாக இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் அவரது குழுவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்து இருந்தது.

    இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்தில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-க்கான பதவிக்காலம் முடிந்தது. இதையொட்டி ராகுல் டிராவிட் உடன் நடத்தப்பட்ட ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொள்கிறோம்," என்று தெரிவித்து இருந்தது.

     

    எனினும், இந்த அறிக்கையில் ராகுல் டிராவிட் மற்றும் அவரது குழுவுடனான ஒப்பந்தம் எவ்வளவு காலம் வரை நீட்டிக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், "அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, ஆனாலும் நான் இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. பி.சி.சி.ஐ.-இடம் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆவணங்கள் வரட்டும்," என்று தெரிவித்து இருக்கிறார். 

    • இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் மறக்க முடியாதவை.
    • எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை பி.சி.சி.ஐ ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தது.

    இதனையடுத்து அவரது பதவி காலத்தை நீட்டிக்க பிசிசிஐ விருப்பம் தெரிவித்திருந்தது. ராகுல் டிராவிட்டில் முடிவுக்காக பிசிசிஐ காத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் நியமத்துக்கு ராகுல் டிராவிட் தற்போது சரி என தெரிவித்துள்ளார். மேலும் விக்ரம் ரத்தோர், டி திலீப் மற்றும் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் இந்திய அணியில் தொடருவார்கள்.

    இது குறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது:- 

    இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் மறக்க முடியாதவை. நாங்கள் தோல்வியையும் வெற்றியையும் கண்டிருக்கிறோம். இந்த பயணம் முழுவதும், குழுவிற்குள் இருந்த ஆதரவும் தோழமையும் தனித்துவமானது. டிரஸ்ஸிங் ரூமில் நாங்கள் அமைத்துள்ள கலாச்சாரத்தைப் பற்றி நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

    இந்த காலகட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், எனது பார்வையை ஆதரித்ததற்காகவும், ஆதரவை வழங்கியதற்காகவும் பிசிசிஐ மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் புதிய சவால்களை சந்திக்கும் போது, சிறந்ததைத் தொடர நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
    • தென் ஆப்பிரிக்க தொடருக்கு அவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரவி சாஸ்திரி பதவி காலம் 2021-ம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி தொடருடன் முடிவுக்கு வந்தது.

    அதைத் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஒப்பந்தம் செய்தது.

    சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தது. அவரது பயிற்சியின் கீழ் 20 ஓவர் உலகக் கோப்பை அரைஇறுதியில் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி, ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி என 3 ஐ.சி.சி. தொடர்களிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் பயிற்சியாளர் பதவியில் அவர் நீட்டிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்க தொடருக்கு அவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது. இதை கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க தொடருக்கு பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்றுக் கொள்வாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அவர் தனது முடிவை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஐசிசி-யின் இரண்டு இறுதிப் போட்டியிலும், ஒரு அரையிறுதியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
    • இவரது தலைமையில் இந்திய சீனியர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியாமல் ஏமாற்றம்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டி தோல்வி அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    ராகுல் டிராவிட் இரண்டு ஐசிசி-யின் இறுதிப் போட்டியிலும், ஒரு அரையிறுதி போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளார். எதிர்கால பயிற்சியாளர் பதவி குறித்தும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிவற்றில் ஒன்றிற்கு பயிற்சியாளராக இருப்பீர்களா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் "என்னுடைய பதவியின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவில்லை. தற்போதுதான் இந்த போட்டியில் இருந்து வெளியே வந்துள்ளேன். அது குறித்து யோசிக்க நேரம் இல்லை. எனக்கு நேரம் கிடைக்கும்போது அது குறித்து யோசிப்பேன். இந்த நேரம் வரை, இந்த தொடரில்தான் முழுக் கவனம் செலுத்தினேன். இதைத்தவிர என்னுடைய மனதில் வேறு ஒன்றுமில்லை. எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எதையும் நினைக்கவில்லை" என்றார்.

    • முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.
    • இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று கார்டிப் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து சற்று தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.

    அதை தொடர்ந்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. 45.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 297 ரன்களை எடுத்த நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு டேவோன் கான்வே- டார்ல் மிட்சேல் முக்கிய பங்காற்றியவர்கள். அந்த ஜோடி அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தனர். கான்வே 13 பவுண்டரி 1 சிக்ஸருடன் 111* (121) ரன்கள் விளாசி அசத்தினார். டார்ல் மிட்சேல் 7 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதமடித்து 118* (91) ரன்கள் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். டேவோன் கான்வே ஆட்டநாயகன் விருதை வென்றார். 

    அத்துடன் 3-வது விக்கெட்டுக்கு 180* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்த கான்வே - மிட்சேல் ஜோடி இப்போட்டி நடைபெற்ற கார்டிஃப் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற ராகுல் டிராவிட் - விராட் கோலியின் 12 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தனர்.

    அந்த பட்டியல்:

    1. டேவோன் கான்வே – டார்ல் மிட்சேல் : 180*, 2023

    2. ராகுல் டிராவிட் – விராட் கோலி : 170, 2011

    3. சர்ப்ராஸ் கான் – சோயப் மாலிக் : 163, 2016

    4. எம்எஸ் தோனி – சுரேஷ் ரெய்னா : 144, 2014

    ×