search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "post office"

    • புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் மூடப்பட்ட தபால் அலுவலகத்தை மீண்டும் அதே இடத்தில் செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தினர்
    • செல்போன்களின் தாக்கத்தால் தபால் சேவை குறைந்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரில் வடக்கு 2-ம் வீதியில் மச்சுவாடி கிளை தபால் நிலையம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இதனை மச்சுவாடி, காமராஜபுரம், வண்டிப்பேட்டை, ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்த நிலையில் மச்சுவாடி கிளை தபால் நிலையம் தற்போது மாவட்ட தலைமை தபால் நிலைய அலுவலகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.இதனை புதுக்கோட்டை நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு கண்டித்து உள்ளது.

    இது பற்றி அவர்கள் கூறும் போது, மச்சுவாடி கிளை தபால் நிலையத்தை போன்று புதுக்கோட்டை நகரில் பல கிளை தபால் நிலையங்கள் மாவட்ட தபால் நிலையத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இது தபால் நிலையத்தை பயன்படுத்தும் மக்களை அப்புறப்படுத்த கூடிய செயலாகும். மச்சுவாடி கிளையில் பணிபுரிந்த ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மீண்டும் மச்சுவாடி கிளை தபால் நிலையம் அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஏற்கனவே புதிய பேருந்து நிலையம், சின்னப்பா பூங்கா செல்லும் வழியில் இயங்கி வந்த தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. செல்போன்களின் தாக்கத்தால் தபால் சேவை குறைந்துள்ளது. ஆனால் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கும், அலுவல் ரீதியிலான தபால்கள் அனுப்புவதற்கும் தபால் அலுவலகங்களை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிளை தபால் அலுவலகங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.


    • இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
    • தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம்.

    திருப்பூர் :

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 302 மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது. கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடந்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலமாக 2 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 7 ஆயிரத்து 145 மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கப்பட வேண்டும்.

    பள்ளிகளில் நடக்கும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம். தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலமாக மாணவர்களின் ஆதார் எண், செல்போன் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் வங்கிக்கணக்கு தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவம் குறித்து தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

    பசுமலை புது அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது59). இவர் மதுரை மீனாட்சி பஜார் தலைமை தபால் அலுவலகத்தில் எம்.டி.எஸ். பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இதே அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை பத்மநாபன் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். பெண் ஊழியர் பலமுறை அவரை எச்சரித்தும் கேட்கவில்லை.

    பத்மநாபன் தொடர்ந்து பெண் ஊழியரிடம் தொல்லை செய்து வந்துள்ளார். மனமுடைந்த பெண் ஊழியர் இந்த சம்பவம் குறித்து தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு ஊழியர் பத்மநாபனை போலீசார் கைது செய்தனர்.

    • பாவூர்சத்திரம் தபால் அலுவலகத்தில் செல்வ மகள் சிறு சேமிப்பு திட்டம் தொடங்குவதற்கான முகாம் நாளை மறுநாள் (10-ந் தேதி) நடைபெறுகிறது.
    • ஒரு வீட்டில் 10 வயதுக்குட்பட்ட 2 பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் தபால் அலுவலகத்தில் செல்வ மகள் சிறு சேமிப்பு திட்டம் தொடங்குவதற்கான முகாம் நாளை மறுநாள் (10-ந் தேதி) நடைபெறுகிறது.

    10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் உள்ள அனைவரும் இந்த கணக்கை தொடங்கி தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமய மாக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

    ஒரு வீட்டில் 10 வயதுக்குட்பட்ட 2 பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

    இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் பணம் செலுத்தி விட்டு 21 வருடம் முடிவில் கணக்கை முடித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் செலுத்தும் தொகை மற்றும் முதிர்வுக்கு தொகை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

    ஒரு நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரை இந்த திட்டத்தின் கீழ் பணம் செலுத்தலாம். இத் திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் பாவூர்சத்திரம் தபால் அலுவலகத்தில் அணுகி விண்ணப்பிக்கலாம் எனவும் பாவூர்சத்திரம் தபால்நிலைய அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • கோவையில் தபால் அலுவலகங்கள் மூலம் ரெயில்களில் பொதுமக்கள் பார்சல் அனுப்பும் வசதி தொடங்கியது.
    • ரெயில்களுக்கான பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    கோவை:

    ரெயில்களில் சரக்கு பார்சல் அனுப்பும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் தங்களது பொருட்களை தபால் அலுவலகங்கள் மூலம் ரெயில்களில் அனுப்பும் வசதி நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி தங்கள் பகுதியில் உள்ள தபால் அலுவலகங்களில் பொருட்களை கொடுத்து பதிவு செய்யலாம். ரெயில்களுக்கான பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும். நேற்று கோவையில் இருந்து சென்னை செல்லும் சதாப்தி ரெயில் மூலம் பார்சல் அனுப்பும் திட்டம் தொடங்கியது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, "816 கிலோ எடையுள்ள பொருட்களுக்கு ரூ.477 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதன்படி ரெயில்களின் தூரம், ஊர் ஆகியவற்றை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். எவ்வளவு பொருட்களை வேண்டுமானாலும் தபால் அலுவலகங்கள் மூலம் அனுப்பி வைக்கலாம். பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலனை கருத்தில் கொண்டு இது செயல்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்ததனர்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட வர்த்தக பிரிவு அதிகாரி பாண்டுரங்கன் மற்றும் தபால்துறை அதிகாரி அகில் நாயர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தொழில்துறையினர் கூறும்போது, "இந்த திட்டம் சிறு, குறுந்தொழில்முனைவோர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும். எந்த இடத்தில் பொருட்களை உற்பத்தி செய்கிறோமோ அந்த பகுதியில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் அனுப்புவதன் மூலம் நேரம் மிச்சமாகிறது. இதற்காக தபால்துறை மற்றும் ரெயில்வே துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்தனர்.

    • வள்ளியூர் பஸ் நிலையத்தில் கிளை அஞ்சல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது.
    • தொடர்ந்து பஸ் நிலையத்தின் அருகில் கிளை அஞ்சல் நிலையம் செயல்படவேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி, வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் பஸ் நிலையத்தில் கிளை அஞ்சல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த அஞ்சலகத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட பதிவு தபால், மணிஆர்டர் சேவைகள் செய்யப்பட்டு வந்தது. இது தவிர இந்த கிளை அஞ்சல் அலுவலகத்தில் 500-க்கும் அதிகமான சிறுசேமிப்பு கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தினமும் அஞ்சல் தலை விற்பனை உள்ளிட்ட அஞ்சலக பணிகள் நடைபெற்று வந்தது. பஸ் நிலையத்திற்குள் அஞ்சலகம் செயல்பட்டு வந்ததால் வெளியூர் பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு அதிக பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் வள்ளியூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனை அடுத்து பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த கடைகள், புறக்காவல் நிலையம், நூலகம், அஞ்சலகம் அனைத்தும் காலி செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டுள்ளது.

    இதில் கடை வியாபாரிகளுக்கு பஸ் நிலையத்தின் வெளிப் பகுதியில் சாலையை யொட்டி தற்காலிகமாக கடைகள் அமைத்து கொடுக்கப் பட்டு அதில் வியாபாரங்கள் நடந்து வருகிறது. கிளை அஞ்சல கத்திற்கும் தற்காலிக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அஞ்சல் பணியாளர்கள் இந்த தற்காலிக இடத்தில் செயல்படமுடியாது என கூறி கிளை அஞ்சலகத்தை வள்ளியூர் தலைமை அஞ்சல கத்துடன் இணைத்துவிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கு வள்ளியூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பஸ் நிலையத்தின் அருகில் கிளை அஞ்சல் நிலையம் செயல்படவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராதாபுரம் வட்டார செயலாளர் சேது ராமலிங்கம் பாளையங்கோட்டை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    வள்ளியூர் பஸ் நிலையத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கிளை அஞ்சல் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது பஸ் நிலையம் விரி வாக்கம் பணியை யொட்டி கிளை அஞ்சல் நிலையம் மூடப்பட்டு செயல்பட வில்லை. இதனால் இப்பகுதி யைச் சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட பொது மக்கள், வியாபாரிகள், வெளியூர் பயணிகள் பாதிக்க ப்பட்டுள்ளனர். எனவே வள்ளியூர் பஸ் நிலையம் அருகிலேயே மாற்று இடத்தில் கிளை அஞ்சல் நிலையம் அமைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டுள்ளது.
    • அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையரிடம் நேரடியாகச்சென்று இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

    உடுமலை : 

    கிராம கோவில் பூசாரிகளுக்கு, தபால் நிலையம் வாயிலாக ஆயுள் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் வாசு கூறியதாவது:-

    நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டுள்ளது. தபால் நிலைய ஊழியர்கள், வீடு தேடிச்சென்று ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தி, ஓய்வூதியர்களின் ஆயுள் சான்றுகளை டிஜிட்டல் முறையில் வழங்கி வருகின்றனர்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், கிராமப்புற கோவில்களில் பணியாற்றி, 60 வயது கடந்த ஓய்வு பெற்ற பூசாரிகள், வங்கிகள் வாயிலாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.அரசு ஓய்வூதியர்களை போன்று, ஆண்டுதோறும் இவர்களும் ஆயுள் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    அதன்படி, அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையரிடம் நேரடியாகச்சென்று இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.கிராமப்புறங்களில் வசிக்கும் வயதான பூசாரிகள், தொலைவில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு சென்று வருவது சிரமமானது.

    இதுபோன்றவர்கள், ஆயுள் சான்று பெறுவது என்பது மிகுந்த சிரமமானது. எனவே அரசு ஓய்வூதியர்களை போன்றே கோவில் பூசாரிகளுக்கும் தபால் நிலையம் வாயிலாக, ஆயுள் சான்று கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி இ.கே.ஒய்.சி., பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் தங்கள் பகுதியில் தபால் சேவை வழங்கும் தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் தங்கள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இணைத்த பிறகு https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற பிரதம மந்திரியின் கிஷான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி இ.கே.ஒய்.சி., பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூரில் 48 ஆயிரத்து 748 பயனாளிகள் இணைக்க வேண்டியுள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களையும் பயன்படுத்தி ஆதாரில் செல்போன் எண்ணை இணைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகள் பான் கார்டு பெறவும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் நிரந்த பதிவு செய்யவும், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, குடும்ப அட்டை, பி.எப்., தொடர்பான சேவைகள், ஆதாரில் செல்போன் எண் திருத்தம், இணைத்தல், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தபால்துறை சார்பில் செல்வமகள் திட்டம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் செல்வ மகள் திட்டத்தில் அனை வரும் பயன்பெற வலியுறுத்தப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தபால்துறை சார்பில் செல்வமகள் திட்டம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நாமக்கல் தலைமை அஞ்சலகம் முன்பு நாமக்கல் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தொடங்கி வைத்தார்.

    பேரணி பி.எஸ்.என்.எல். அலுவலகம், மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க் வழியாக மீண்டும் அஞ்சல் நிலையம் வந்தடைந்தன.

    பேரணியில் செல்வ மகள் திட்டத்தில் அனை வரும் பயன்பெற வலியுறுத்தப்பட்டன. பேரணியில் அஞ்சல அலுவலகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • ecom.indiapost.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பொருட்களை விற்று வந்தனர்.
    • வாடிக்கையாளர் வரவேற்பு குறைந்துவிட்டதால் இந்த சேவை நிறுத்திவிட்டது.

    திருப்பூர் :

    தபால்துறை புதிய இ- காமர்ஸ் தளம் ஒன்றை கடந்த 2018ல் துவங்கியது. இதன்கீழ் இந்தியா போஸ்ட் மூலம்தங்களது தயாரிப்புகளை நாடு முழுவதும் விற்பனை செய்ய விரும்புபவர்கள், ecom.indiapost.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து, தங்களது பொருட்களை விற்று வந்தனர்.

    கிராமப்புற வணிகர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், பெண்கள் சுய உதவி குழுக்கள் போன்றவற்றுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது.இதற்கு வாடிக்கையாளர் தரப்பில் வரவேற்பு குறைந்துவிட்டதால், இந்த சேவையை நிறுத்திவிட்டது தபால்துறை. தற்போது இணையதளமும் முடக்கப்பட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை திருப்பூர் தபால்துறை வெளியிட்டுள்ளது.

    • 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
    • www.epostoffice.gov.in எனும் ஆன்லைன் முகவரியிலும் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     திருப்பூர் :

    நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    மூவர்ண கொடி என்ற பிரசாரம் அடிப்படையில் நாட்டில் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்களில் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் தேசியக் கொடி விற்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசியக்கொடிகள், காகித பொருட்கள விற்பனை செய்யும் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசிய கொடிகள், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 8 சிறு குறு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேசிய கொடிகள் ஆகியவை பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும். குறிப்பாக தபால் நிலையங்கள் மற்றும் www.epostoffice.gov.in எனும் ஆன்லைன் முகவரியிலும் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 20 இன்ச் அகலம் 30 இன்ச் நீளம் உள்ள தேசியக்கொடி 25 ரூபாய் மட்டுமே.

    ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற சொல்வதால் மக்களிடையே தேசபக்தி உணர்வை ஏற்படுத்தவும், அதற்காக உழைத்தவர்களை நினைவுபடுத்துவதே இதன் திட்டமாகும். ஒவ்வொரு தபால் அலுவலகம், தலைமை அலுவலகங்கள், துணை அலுவலகங்கள், மற்றும் கிளை அலுவலகங்களில் 15 ந் தேதி தேசிய கொடி ஏற்றப்படும் என கோட்ட தபால் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அதன்படி திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ஆர்.எம்.எஸ். தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் பிரச்சாரத்தின் கீழ் நடவடிக்கை.
    • குறைந்தபட்சம் ஒரு கவுன்டர் மூலம், தேசியக் கொடி விநியோகிக்க ஏற்பாடு.

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசியக்கொடி விற்பனை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் அஞ்சல் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெற்று வருகிறது. தேசியக் கொடி விற்பனைக்காக சுதந்திர தினம் வரை விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் அஞ்சல் நிலையங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் பிரச்சாரத்தின் கீழ் தேசியக் கொடிகளின் விற்பனையை எளிதாக்க, அனைத்து அஞ்சல் நிலையங்களும் சுதந்திர தினத்திற்கு முன் விடுமுறை நாட்களில் செயல்படும். 

    இந்த பொது பிரச்சாரத்தை செயல்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய தபால் நிலையங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொது விடுமுறை நாட்களில் தேசியக் கொடிகள் விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 9 மற்றும் 14 தேதிகளில் அஞ்சல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு கவுன்டர் மூலம், தேசியக் கொடிகளை விநியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ×