search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சல் துறை"

    • அஞ்சல்துறை சென்னை மண்டல இயக்குநர் சோமசுந்தரம் வரவேற்றார்.
    • 219 நாடுகளுக்கு பொருட்களை அஞ்சல்துறை மூலம் ஏற்றுமதி செய்யலாம் என்றார்.

    காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அஞ்சல்துறை சார்பில் மின் வணிகம் மற்றும் அஞ்சலக ஏற்றுமதி மையம் தொடங்கப்பட்டு இருப்பது குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.

    சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலைவர் ஜி.நடராஜன் தலைமை தாங்கினார். அஞ்சல்துறையின் வெளிநாட்டு வர்த்தகப்பிரிவு இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ், கைத்தறி ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் நிர்வாக இயக்குநர் என்.ஸ்ரீதர், காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவின் செயல் இயக்குநர் வி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அஞ்சல்துறை சென்னை மண்டல இயக்குநர் சோமசுந்தரம் வரவேற்றார். அஞ்சல்துறை தலைவர் பி.பி.ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்கொரியாவுக்கு வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பிய பார்சலை பெற்றுக்கொண்டு அதற்குரிய ரசீது வழங்கினார். அஞ்சல்துறைத் தலைவர் ஜி.நடராஜன் பேசும்போது, தமிழகத்தில் 50 நகரங்களில் அஞ்சல்துறை ஏற்றுமதி மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. ஏற்றுமதியாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே 219 நாடுகளுக்கு பொருட்களை அஞ்சல்துறை மூலம் ஏற்றுமதி செய்யலாம் என்றார்.

    • கட்டுமான வேலைகளை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டது
    • தொழில்நுட்ப ஆலோசனைகளை சென்னை ஐஐடி வழங்கியது

    கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரூவில் இன்று இந்தியாவின் முதல் முப்பரிமாணத்தில் (3D) அச்சிடப்பட்ட கட்டுமான தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட தபால் நிலையத்தை ரெயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் மென்பொருள் துறைகளுக்கான மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.

    இந்த தபால் நிலையம் பெங்களூரூவில் உள்ள கேம்பிரிட்ஜ் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. 1021 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த தபால் நிலையம் இன்றிலிருந்தே மக்களுக்கு சேவையை தொடங்குகிறது.

    இந்த தபால் அலுவலக கட்டிடத்தின் கட்டுமானம், பிரபல கட்டுமான நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (L&T) மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் அனைத்தும் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் சென்னை கிளையை சேர்ந்த வல்லுனர்களால் வழங்கப்பட்டதாகவும் அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "இந்த புதிய கட்டுமான தொழில்நுட்பம், 3டி கான்கிரீட் அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு முழுமையான தானியங்கி கட்டிட கட்டுமான தொழில்நுட்பம். இக்கட்டுமானத்தில் ரோபோவால் இயக்கப்படும் அச்சுப்பொறி கான்கிரீட்டை துல்லியமாக ஒன்றன் மேல் ஒன்றாக குவிக்கும்."

    "இதில் உபயோகப்படுத்தப்படும் கான்கிரீட் சிறப்பு வகையை சேர்ந்தது என்பதால் இது விரைவாக கடினத்தன்மையை அடைகிறது. வழக்கமான கட்டுமான முறையில் கட்டியிருந்தால் இது கட்டி முடிக்க சுமார் 6 முதல் 8 மாதங்களாகும். பழைய முறையோடு ஒப்பிடும்போது இந்த தொழில்நுட்பத்தில் முழு கட்டுமான பணிகளும் 45 நாட்களில் நிறைவடைந்தது. நேரத்தையும், செலவையும் குறைப்பதால் இந்த கட்டுமான தொழில்நுட்பம் வழக்கமான முறைக்கு ஒரு சரியான மாற்றாக அமையும். இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பரவலாக பயன்படுத்தப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

    • காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
    • அபராத தொகையுடன்தான் புதுப்பிக்க முடியும்.

    தஞ்சாவூர்:

    அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள தள்ளுபடியுடன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என அஞ்சல் துறையின் தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் தங்கமணி தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது:

    இந்திய அஞ்சல் துறை மூலம் குறைந்த பிரீமியம் மற்றும் அதிக போனசுடன் அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பல்வேறு சூழல் காரணமாக பாலிசி தொடங்கிய வாடிக்கையாளா்கள் தங்கள் தவணைத் தொகையை உரிய காலத்தில் செலுத்தத் தவறி விடுவதால், அந்த பாலிசிகள் காலாவதியாகிவிடுகின்றன.

    காலாவதியான பாலிசிகளை அபராத தொகையுடன்தான் புதுப்பிக்க முடியும்.

    தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீடு இயக்குநரகம் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் வாடிக்கையாளா்களுக்கு அபராதத் தொகையில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகபட்சம் ரூ. 2 ஆயிரத்து 500 முதல் ரூ. 3 ஆயிரத்து 500 வரை விலக்கு அளிக்கும் சலுகையை அறிவித்துள்ளது.

    மேலும், விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களை அணுகலாம்.

    இந்தச் சலுகை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மட்டுமே.

    இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளா்கள் பயன்படுத்தி காலாவதியான பாலிசிகளை சலுகை தள்ளுபடியுடன் புதுப்பித்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
    • தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம்.

    திருப்பூர் :

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 302 மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது. கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடந்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலமாக 2 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 7 ஆயிரத்து 145 மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கப்பட வேண்டும்.

    பள்ளிகளில் நடக்கும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம். தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலமாக மாணவர்களின் ஆதார் எண், செல்போன் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் வங்கிக்கணக்கு தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 150 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட அஞ்சல் துறை கொரோனா காலத்தில் சிறந்த சேவையை மக்களுக்கு அளித்தது.
    • தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைக்கு தந்திக்கு பதிலாக இ.போஸ்ட், மணியாடருக்கு பதிலாக இ-எலக்ட்ரானிக் மணியாடர் சேவைகளும் மக்களுக்கு அளிக்கப்படுகிறது

    திருச்சி,

    திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் சேவை திறன் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், 150 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட அஞ்சல் துறை கொரோனா காலத்தில் சிறந்த சேவையை மக்களுக்கு அளித்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைக்கு தந்திக்கு பதிலாக இ.போஸ்ட், மணியாடருக்கு பதிலாக இ-எலக்ட்ரானிக் மணியாடர் சேவைகளும் மக்களுக்கு அளிக்கப்படுகிறது என்றார்.

    விழாவில் திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் கலந்து கொண்டு அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 69 பேருக்கு விருதுகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    விளம்பரம் இல்லாமல் பணிபுரிந்து வரும் அஞ்சல் துறை மக்களிடம் நேரடி தொடர்பு இருக்கிறது. சிறுசேமிப்பு, செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆயுள் காப்பீடு, ஆதார் மற்றும் வங்கி சேவை என பன்முக சேவைகளை வழங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் அஞ்சல் துறையின் சேவை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். மக்கள் இருக்கும் வரை அஞ்சல் துறை சேவையும் இருக்கும். அஞ்சல் துறையின் மேம்பாட்டுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர்கள், உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சி கவுன்சிலர் எல்.ரெக்ஸ், பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில பொறுப்பாளர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அஞ்சல் துறை இயக்குனர் ரவீந்திரன் வரவேற்றார். உதவி இயக்குனர் கலைவாணி நன்றி கூறினார்.

    • அஞ்சலகங்களில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது.
    • விபத்து உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.

    கோவில்பட்டி:

    அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாக கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் (பொ) சிவாஜிகணேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காப்பீடு திட்ட பலன் சாமானிய மக்களை சென்றடையும் வகையில் அஞ்சலகங்களில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது. இதில் சேர 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் உள்ளிட்ட எவ்வித காகிதங்கள் பயன்பாடின்றி வீடு தேடி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை பதிவு மூலம் 5 நிமிடத்தில் டிஜிட்டல் முறையில் பாலிசி திட்டத்தில் இணையலாம். விபத்து உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.

    விபத்தில் உள்நோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரமும், புறநோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரமும், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் 2 குழந்தைகள் கல்வி செலவுக்கு ரூ.1 லட்சம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாளுக்கு தினப் படியாக ரூ.ஆயிரம் வீதம் 9 நாள்களுக்கு கிடைக்கும்.

    விபத்தில் பாதிக்கப்பட்ட வரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயணச் செலவுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரமும், இறுதிச் சடங்கு செய்ய ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். இத்தகைய பலன்களை பெற ஆண்டுக்கு ரூ.399 பிரிமியம் செலுத்தினால் போதும், விபத்து காப்பீடு பாலிசி எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் பாதிப்பு, உயிரிழப்பு போன்ற சம்பவம் மூலம் குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

    எனவே, அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் கிழக்கு கோட்டம் சார்பில் இந்திய அஞ்சல் துறையில் அகில இந்திய அளவில் கடிதப்போட்டியை நடத்த உள்ளது.
    • இன்லாண்டு லெட்டர் பிரிவில் எழுதுவோர் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
    ×