search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Department of Posts"

    • வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புவோர் தபால் துறையில் விசாரித்து அனுப்புவது நல்லது.
    • வரிகள் செலுத்தப்பட்ட ஆவணம் கட்டாயம் பார்சலில் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    இந்திய தபால் துறை மூலம் நம் நாட்டில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது.

    ஒரு பார்சலில் ஒரே பொருளை ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் அனுப்பினால் அதை சேவை ரீதியாக எடுத்துக் கொள்ளாமல், வணிக ரீதியாக கருதப்படும் என பல நாடுகள் சர்வதேச தபால் துறை அமைப்பிற்கு தற்போது தெரிவித்துள்ளன.

    உதாரணத்திற்கு உங்களின் உறவினர் ஒருவர் பிரான்சில் இருக்கிறார்.அவருக்கு நீங்கள் தபால் துறை பார்சல் மூலம் 3 சட்டைகள் அனுப்புகிறீர்கள். இதில் 2 சட்டைகள் மட்டுமே சேவையாக கருதப்படும். 3-வது சட்டை வணிக ரீதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதனை ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக கருதப்படுகிறது.

    இதனால் பார்சல் அனுப்புவோர் ஏற்றுமதிக்கு கொடுக்க வேண்டிய ஆவணங்கள் ஐ.இ.சி., பதிவு எண் மற்றும் ஜி.எஸ்.டி., வரிகளுக்கு செலுத்தப்பட்ட ஆவணம் கட்டாயம் அந்த பார்சலில் இருக்க வேண்டும்.


    இந்த ஆவணங்கள் இல்லையெனில் அந்த பார்சல் டெலிவரி செய்யப்படாமல் உடனடியாக திருப்பி அனுப்பப்படும். இதற்கு ஆகும் சேவை கட்டணங்களை செலுத்திய பின்னரே பார்சல் அனுப்பியவருக்கு பொருள் திரும்ப ஒப்படைக்கப்படும்.

    இந்தியாவில் இருந்து பார்சல்கள் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

    இதனால் தங்கள் நாட்டு வணிகர்கள் பாதிக்கப்படுவது டன், அன்னிய செலாவணி வருவாயும் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் பல்வேறு நாடுகள் இதுபோன்ற பார்சல்களை தடை செய்து வருகின்றன.

    இதுபோல் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் மூலம் அனுப்பப்பட்ட சில பார்சல்கள் இதுபோன்ற பிரச்சனையில் திருப்பி அனுப்பப்பட்டதால் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புவோர் தபால் துறையில் விசாரித்து அனுப்புவது நல்லது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
    • அபராத தொகையுடன்தான் புதுப்பிக்க முடியும்.

    தஞ்சாவூர்:

    அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள தள்ளுபடியுடன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என அஞ்சல் துறையின் தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் தங்கமணி தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது:

    இந்திய அஞ்சல் துறை மூலம் குறைந்த பிரீமியம் மற்றும் அதிக போனசுடன் அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பல்வேறு சூழல் காரணமாக பாலிசி தொடங்கிய வாடிக்கையாளா்கள் தங்கள் தவணைத் தொகையை உரிய காலத்தில் செலுத்தத் தவறி விடுவதால், அந்த பாலிசிகள் காலாவதியாகிவிடுகின்றன.

    காலாவதியான பாலிசிகளை அபராத தொகையுடன்தான் புதுப்பிக்க முடியும்.

    தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீடு இயக்குநரகம் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் வாடிக்கையாளா்களுக்கு அபராதத் தொகையில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகபட்சம் ரூ. 2 ஆயிரத்து 500 முதல் ரூ. 3 ஆயிரத்து 500 வரை விலக்கு அளிக்கும் சலுகையை அறிவித்துள்ளது.

    மேலும், விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களை அணுகலாம்.

    இந்தச் சலுகை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மட்டுமே.

    இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளா்கள் பயன்படுத்தி காலாவதியான பாலிசிகளை சலுகை தள்ளுபடியுடன் புதுப்பித்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 150 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட அஞ்சல் துறை கொரோனா காலத்தில் சிறந்த சேவையை மக்களுக்கு அளித்தது.
    • தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைக்கு தந்திக்கு பதிலாக இ.போஸ்ட், மணியாடருக்கு பதிலாக இ-எலக்ட்ரானிக் மணியாடர் சேவைகளும் மக்களுக்கு அளிக்கப்படுகிறது

    திருச்சி,

    திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் சேவை திறன் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், 150 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட அஞ்சல் துறை கொரோனா காலத்தில் சிறந்த சேவையை மக்களுக்கு அளித்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைக்கு தந்திக்கு பதிலாக இ.போஸ்ட், மணியாடருக்கு பதிலாக இ-எலக்ட்ரானிக் மணியாடர் சேவைகளும் மக்களுக்கு அளிக்கப்படுகிறது என்றார்.

    விழாவில் திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் கலந்து கொண்டு அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 69 பேருக்கு விருதுகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    விளம்பரம் இல்லாமல் பணிபுரிந்து வரும் அஞ்சல் துறை மக்களிடம் நேரடி தொடர்பு இருக்கிறது. சிறுசேமிப்பு, செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆயுள் காப்பீடு, ஆதார் மற்றும் வங்கி சேவை என பன்முக சேவைகளை வழங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் அஞ்சல் துறையின் சேவை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். மக்கள் இருக்கும் வரை அஞ்சல் துறை சேவையும் இருக்கும். அஞ்சல் துறையின் மேம்பாட்டுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர்கள், உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சி கவுன்சிலர் எல்.ரெக்ஸ், பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில பொறுப்பாளர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அஞ்சல் துறை இயக்குனர் ரவீந்திரன் வரவேற்றார். உதவி இயக்குனர் கலைவாணி நன்றி கூறினார்.

    ×