search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பீடு திட்டம்"

    • இதற்கு சூடாமணி ஏரியின் மழை நீர் வெளியேற வழி இன்றி நிற்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • நெல் பயிர்கள் அழுகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் பின்ன லூர், மதுபானைமேடு, நெல்லி கொல்லை. துரிஞ்சி கொல்லை உள்ளிட்ட கிராம விவசாயிகளின் நெல் பயிர்கள் சுமார் 1000 ஏக்கர் அழுகி உள்ளது. இதற்கு சூடாமணி ஏரியின் மழை நீர் வெளியேற வழி இன்றி நிற்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் -விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் இந்த பகுதியில் வடிகால் அமைக்கப்படாத தால் நெல் பயிர்கள் அழுகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வில்லை எனவும் லேடன்மூ லம் கணக்கெடுப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என காப்பீடு திட்ட அலுவலர்களும், வேளாண் துறை அலுவலர்க ளும் தெரிவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.அழுகிய நிலையில் உள்ள நெல் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்
    • காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்தவருக்கு உடனடியாக காப்பீடு அட்டை வழங்கவும் நட வடிக்கை

    நாகர்கோவில் :

    மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மெகா மருத்துவ முகாம் நடந்தது. குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப் பட்டது. பொன்மனை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தனியார் மற்றும் அரசு டாக்டர் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, எக்கோ, இ.சி.ஜி. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம் போன்ற டாக்டர்களும் சிகிச்சை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கவிமணி பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும் மேயருமான மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் மேயர் மகேஷ் பரிசோதனை செய்து கொண்டார். அதன்பிறகு அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த மருத்துவ முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்தவருக்கு உடனடியாக காப்பீடு அட்டை வழங்கவும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இதைத்தொடர்ந்து காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்த 2 பேருக்கு அதற்கான அட்டையை மேயர் மகேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மருத்துவ கல்லூரி முதல்வர் பிரின்ஸ்பயஸ், சூப்பிரண்டு அருள்பிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பரக்குன்று ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய மருத்துவ முகாம் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    • பல 100 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி ஆண்டுதோறும் நடக்கிறது.
    • பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. காய்கறி பயிர்கள் மட்டுமின்றி தென்னை, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட நீண்ட கால பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த இரண்டு மாவட்டங்களில், பல 100 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி ஆண்டுதோறும் நடக்கிறது. உற்பத்தியாகும் வாழைகள், வியாபாரிகள் மூலம் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. கனமழை, வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், இயற்கையாக பரவும் தீ விபத்து உட்பட பல்வேறு காரணங்களால், பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.குறிப்பாக வாழை பயிரிடும் விவசாயிகள், கனமழை, சூறைக்காற்று ஆகியவற்றின் காரணமாக பெருத்த நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

    குறிப்பிட்ட சில பயிர்களுக்கு மட்டுமே அரசு காப்பீடு திட்டத்தை வழங்குகிறது. இதனால் விவசாயிகள், பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். ஆனால் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு மட்டுமே இந்த காப்பீடு திட்டம் பொருந்தும் என்பதால், இதர கிராமங்களில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இது பொருந்தாது.இதனால் இழப்பினை சந்திக்கும் வாழை விவசாயிகள் செய்வதறியாமல் பரிதவிக்கின்றனர். ஆண்டு தோறும் பேரிடர் காரணமாக வாழைகள் கடுமையாக சேதமடைகின்றன.

    சமீபத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் வீசிய சூறைக்காற்று மற்றும் கன மழையால் பல 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. எனவே அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் காப்பீடு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் காற்றுக்கு வாழை மரங்கள் முறிவதற்கான வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்திய வானிலை மையத்தின் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சார்பில் திருப்பூர் மாவட்டத்தின் காலநிலை விவரம் வழங்கி வருகிறது. அதன்படி வரும் நாட்களில் மாவட்டத்தின் காலநிலை, 35 முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 4 முதல், 8 கி.மீ., வேகத்தில், பெரும்பாலும் கிழக்கு திசையில் இருந்து, தென் கிழக்கு திசை வரை பதிவாகும்.

    காற்றுக்கு 5 மாதம் வயதுடைய வாழை மரங்கள் சாய்ந்து விழும் வாய்ப்புள்ளதால் மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும். பரவலாக வாழையில் குருத்து அழுகல் நோய் தென்படுகிறது. இதை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவுக்கு பிளீச்சிங் பவுடர் கலந்து, மரத்தின் அருகே ஊற்ற வேண்டும். நோய் தாக்குவதற்கு முன் இந்த மருந்து செலுத்தினால் நோய் பரவாமல் பாதுகாக்க முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சுரக் ஷா காப்பீடு திட்ட த்தில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு அளிக்கப்படுகிறது.
    • 100 சதவீதம் மக்கள் அனைவரையும் பயனாளியாக சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    திருப்பூர் :

    மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து, பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா என்கிற பெயரில் விபத்து காப்பீடு திட்டம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (பி.எம்.ஜெ.ஜெ.பி.ஒய்.,) எனும் ஆயுள் காப்பீடு திட்டங்களை செயல்படுத்துகிறது.வங்கி கணக்கு வைத்துள்ளோர் அனைவரும் இந்த காப்பீடு திட்டங்களில் பயனாளி களாக சேர்கப்படுகின்றனர்.

    சுரக் ஷா காப்பீடு திட்ட த்தில் வெறும் 20 ரூபாய் ஆண்டு பிரீமியத்தில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு, ஜீவன் ஜோதி திட்டத்தில் ஆண்டு பிரிமியம் 436 ரூபாய்க்கு 2 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளியாக இணைய வயது வரம்பு தகுதி மட்டுமே உள்ளது. சுரக் ஷா காப்பீடு திட்டத்தில், 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டோரும், 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டோர், ஜீவன் ஜோதி திட்டத்திலும் இணையலாம்.வங்கிகள் மூலம் மலிவான பிரீமிய த்தில், அதிக பலன் தரும் இந்த திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. அதனால், காப்பீடு திட்ட பயனாளிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.இந்நிலையில் இரு காப்பீடு திட்டங்களிலும் 100 சதவீதம் மக்கள் அனைவரையும் பயனாளியாக சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து, அனைத்து வங்கி தலைமையுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பர ன்ஸிங்கில் பேசியுள்ளார்.அதனடிப்படையில் அனைத்து வங்கிகளும், காப்பீடு திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க வேண்டும் என மாவட்ட அளவில் இயங்கும் தங்கள் வங்கி கிளைகளுக்கு அறிவு றுத்தியுள்ளன.

    காப்பீடு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் அனைவரையும் பயனா ளியாக இணைப்பதற்காக, கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது.அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட முன்னோடி வங்கிகள் இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 

    • பிரதமர் காப்பீடு திட்டத்தில் பணம் பெற்று மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் பால கிருஷ்ணன், பழனிவேல், முத்துக்குமார் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் "ஆயுஷ் மான்" மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அடையாள அட்டையை பெறுவதற்கு ஒருசில ஏஜென்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட் டுள்ளது.

    ஆனால் மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் மதுரை விளாச்சேரி ஊராட்சி மன்ற வாசலில் 5 பேர் கொண்ட கும்பல் "ஆயுஷ்மான்" மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு அடையாள அட்டை வாங்கித்தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளனர்.

    அந்த கும்பலை அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் பிடித்து திருநகர் போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இந்த புகார் தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் விசாரித்து கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 5 பேர் கொண்ட கும்பல் பணம் வசூலித்தது உண்மை என தெரியவந்தது.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த நடேஷ்குமார், வெங்கடசுப்பு நரசிம்மன், ராஜா, லோகசுந்தர் ஆகிய 5 பேர் மீது திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • தேசிய காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கால்நடைகளை காப்பீடு செய்யலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட வேளாண் குடிமக்களின் கால்நடை செல்வங்களை பாதுகாக்க 2022-23-ம் ஆண்டிற்கான தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து பயன்பெறலாம்.

    1100 அலகுகள் குறியீடாக பெறப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் விருப்பம் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கால்நடைகளை அரசு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்து வரை அணுகி தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து கொள்ளலாம்.

    அரசு மானியமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு காப்பீடு சந்தாத்தொகையில் 70 சதவீதம் மானியமும் பொதுப் பிரிவினர்களுக்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

    காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்த ப்படும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறக்க நேரிட்டால், கால்நடை உதவி மருத்துவரால் காதுவில்லைக்குரிய இறந்த கால்நடையை பரிசோதனை செய்து அதற்கான பிரேத பரிசோதனை சான்றிதழுடன் காப்பீடு நிறுவனத்தில் இருந்து காப்பீடு தொகை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த திட்டம் தொடர்பான தகவல்களை சிவகங்கை, காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்களின் கைப்பேசி எண்கள்: 94450 32581, 94450 32556 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன.
    • மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறும்.

    பல்லடம் :

    கைத்தறி நெசவாளர்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பாரதீய மஸ்தூர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து அதன் கோவை மண்டல பொது செயலாளர் நடராஜன் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. பாரம்பரியமாக நெசவு செய்து வரும் பல ஆயிரம் குடும்பங்களுக்கு இத்தொழில் வாழ்வாதாரமாக உள்ளது.குறைந்த கூலி வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வரும் நெசவாளர்களின் நலன் கருதி மகாத்மா காந்தி பங்கர் பீமா யோஜனா காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தியது.

    இத்திட்டத்தில் உறுப்பினர் இயற்கை மரணமடைந்தால் குடும்பத்தினருக்கு 60 ஆயிரம் ரூபாய், விபத்து மரணம், அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் 1.50 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறும்.ஆனால் 4 ஆண்டாக இத்திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இத்திட்டத்தில் இணைந்த நெசவாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு உரிய காப்பீடு கிடைப்பதில்லை. இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம், முத்ரா கடனுக்கு மானியம் வழங்காதது, கூட்டுறவு சங்கங்களில் சேலை உற்பத்தி செய்த உறுப்பினர்களின் கணக்கிலேயே, மானிய தொகையை வரவு வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • அஞ்சலகங்களில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது.
    • விபத்து உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.

    கோவில்பட்டி:

    அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாக கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் (பொ) சிவாஜிகணேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காப்பீடு திட்ட பலன் சாமானிய மக்களை சென்றடையும் வகையில் அஞ்சலகங்களில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது. இதில் சேர 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் உள்ளிட்ட எவ்வித காகிதங்கள் பயன்பாடின்றி வீடு தேடி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை பதிவு மூலம் 5 நிமிடத்தில் டிஜிட்டல் முறையில் பாலிசி திட்டத்தில் இணையலாம். விபத்து உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.

    விபத்தில் உள்நோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரமும், புறநோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரமும், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் 2 குழந்தைகள் கல்வி செலவுக்கு ரூ.1 லட்சம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாளுக்கு தினப் படியாக ரூ.ஆயிரம் வீதம் 9 நாள்களுக்கு கிடைக்கும்.

    விபத்தில் பாதிக்கப்பட்ட வரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயணச் செலவுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரமும், இறுதிச் சடங்கு செய்ய ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். இத்தகைய பலன்களை பெற ஆண்டுக்கு ரூ.399 பிரிமியம் செலுத்தினால் போதும், விபத்து காப்பீடு பாலிசி எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் பாதிப்பு, உயிரிழப்பு போன்ற சம்பவம் மூலம் குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

    எனவே, அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×