search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insurance plan"

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட விடுபட்ட பயனாளிகள் பயன் தரும் வகையில் காப்பீடுதிட்ட அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. இம்முகாமினை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தார். அவர் பேசியதாவது,விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர், செஞ்சி, விக்கிரவாண்டி ஆகிய இடங்களில் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்று வருகின்றது. இம்முகாமினை பயன்படுத்தி மக்கள் பயன்பெற வேண்டும் என கூறினார்.

    முகாமில் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், நகர செயலாளர் பூக்கடை கணேசன், பேரூராட்சி மன்றம் துணைத் தலைவர் ஜோதி, வட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் மணிவண்ணன், நகர சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சுலைமான், நகர துணை செயலாளர் தில்லை.காமராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், மருத்துவ காப்பீடு ஊழியர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சி, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும், ரோட்டரி டயாலிசிஸ் சென்டரில் முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அறிமுக விழா நடந்தது.

    பயனாளி களுக்கு முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, திருவண்ணா மலை நாடாளுமன்ற உறுப்பினர்.

    சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி. மாநில தட்கள் சங்கத் துணைத்தலைவர். எ.வ.வே.கம்பன், இணை இயக்குநர் சுகாதரா துறை ஏழுமலை. மாநில கைப்பந்து சங்க துணை தலைவர். ஸ்ரீதரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, அன்பூண்டி ஊராட்சியில் நேற்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் பாரத பிரதமரின் காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    மண்டல மேலாளர் ஜான்வெட் மற்றும் நிதி சேர்க்கை மேலாளர் கோகுல கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் உஷாராணி ரஜினி வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பொது இயக்குனர் ஜெயஸ்ரீ கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னோடி வங்கி மேலாளர் ஜாமல் மொய்தீன் மற்றும் வங்கியின் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

    • தேசிய காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கால்நடைகளை காப்பீடு செய்யலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட வேளாண் குடிமக்களின் கால்நடை செல்வங்களை பாதுகாக்க 2022-23-ம் ஆண்டிற்கான தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து பயன்பெறலாம்.

    1100 அலகுகள் குறியீடாக பெறப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் விருப்பம் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கால்நடைகளை அரசு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்து வரை அணுகி தங்கள் கால்நடைகளை காப்பீடு செய்து கொள்ளலாம்.

    அரசு மானியமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு காப்பீடு சந்தாத்தொகையில் 70 சதவீதம் மானியமும் பொதுப் பிரிவினர்களுக்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

    காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்த ப்படும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறக்க நேரிட்டால், கால்நடை உதவி மருத்துவரால் காதுவில்லைக்குரிய இறந்த கால்நடையை பரிசோதனை செய்து அதற்கான பிரேத பரிசோதனை சான்றிதழுடன் காப்பீடு நிறுவனத்தில் இருந்து காப்பீடு தொகை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த திட்டம் தொடர்பான தகவல்களை சிவகங்கை, காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்களின் கைப்பேசி எண்கள்: 94450 32581, 94450 32556 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×