search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேசியக்கொடி விற்பனை- விடுமுறை நாட்களிலும் அஞ்சல் நிலையங்கள் திறந்திருக்கும்
    X

    தபால் நிலையம்   தேசிய கொடி விற்பனை

    தேசியக்கொடி விற்பனை- விடுமுறை நாட்களிலும் அஞ்சல் நிலையங்கள் திறந்திருக்கும்

    • இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் பிரச்சாரத்தின் கீழ் நடவடிக்கை.
    • குறைந்தபட்சம் ஒரு கவுன்டர் மூலம், தேசியக் கொடி விநியோகிக்க ஏற்பாடு.

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசியக்கொடி விற்பனை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் அஞ்சல் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெற்று வருகிறது. தேசியக் கொடி விற்பனைக்காக சுதந்திர தினம் வரை விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் அஞ்சல் நிலையங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் பிரச்சாரத்தின் கீழ் தேசியக் கொடிகளின் விற்பனையை எளிதாக்க, அனைத்து அஞ்சல் நிலையங்களும் சுதந்திர தினத்திற்கு முன் விடுமுறை நாட்களில் செயல்படும்.

    இந்த பொது பிரச்சாரத்தை செயல்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய தபால் நிலையங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொது விடுமுறை நாட்களில் தேசியக் கொடிகள் விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 9 மற்றும் 14 தேதிகளில் அஞ்சல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு கவுன்டர் மூலம், தேசியக் கொடிகளை விநியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×