search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் எண்"

    • இதில் அந்தரங்கம் பற்றிய கவலையும் அடங்கி இருக்கிறது.
    • தொடர்பு எண் விவரங்களைத் தரவில்லை என்றால், பில் போட முடியாது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

    புதுடெல்லி :

    வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு செல்போன் எண்களைத் தருமாறு சில்லரை வியாபாரிகள் வற்புறுத்துவதாகவும், அவ்வாறு தர மறுத்தால் அவர்களுக்கு சேவைகள் வழங்கப்படுவதில்லை எனவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு புகார்கள் சென்றுள்ளன.

    இந்தியாவில் சில்லரை வியாபாரி பில் போடுவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண்களைத் தரவேண்டியது கட்டாயம் இல்லை. வியாபார பரிமாற்றங்களை செய்து முடிப்பதற்கு வாடிக்கையாளர்களின் செல்போன் எண்கணை சில்லரை வியாபாரிகள் கேட்டு ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்துவதாகவும், பெரும்பாலான நேரங்களில் வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு கூடவிடுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் புகார்களைப் பரிசீலித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம், இது தொடர்பாக சில்லரை வியாபாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    இது பற்றி மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தொடர்பு எண் விவரங்களைத் தரவில்லை என்றால், பில் போட முடியாது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நியாயம் இல்லாத, கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை. இப்படி தகவல்களை சேகரிப்பது சரி இல்லை.

    இதில் அந்தரங்கம் பற்றிய கவலையும் அடங்கி இருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்களின் நலனைப் பேணுகிற வகையில் சில்லரை வியாபாரத்துறைக்கும், இந்திய தொழில் சம்மேளனத்துக்கும், இந்திய வர்த்தக தொழில் சம்மேளனத்துக்கும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    எனவே குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்களைத் தரவேண்டும் என்று சில்லரை வியாபாரிகள் வற்புறுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாய்பிரனீத் பொறுப்பேற்று உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்தின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாமல்லபுரத்தில் சட்ட விரோதமாக வெளிநாட்டு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், ஆன்லைன் விபச்சாரம், உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் ஓ.எம்.ஆர், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கட்ட பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளை தனிப்படை மூலம் ரகசியமாக கண்காணித்து அவர்களை ஒழிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.

    மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து, பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கும், வாட்ஸ் ஆப் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர்கள் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பல இடங்களில் கள்ளச்சா ராயம் விற்பனை செய்த வர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் கள்ளத்தனமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் விற்பனை, போலி மதுபான விற்பனை போன்ற மதுவிலக்கு சம்பந்தமான குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால், பொதுமக்கள் அது குறித்த தகவல்களை 88383 52334 என்ற நம்பருக்கு போன் மூலமாகவோ, வாட்ஸ் ஆப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.

    அவ்வாறு கிடைக்கும் தகவலின் பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், தகவல் தருபவர்கள் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும். இந்த செல்போன் நம்பர் மாவட்ட எஸ்.பி.யின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பொதுமக்கள் தங்களது குறைகளுக்காக எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். இதற்காக தனி செல்போன் எண் விரைவில் வெளியிடப்படும்.
    • கஞ்சா விற்பனை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னை கொளத்தூர் புதிய துணை கமிஷனராக சக்திவேல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உளவு பிரிவு துணை கமிஷனராக இருந்த இவர் இடமாறுதலாகி சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராகி இருக்கிறார்.

    சட்ட விரோத செயல்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றும், ரவுடி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை கமிஷனர் சக்திவேல் கூறியுள்ளார்.

    பொதுமக்கள் தங்களது குறைகளுக்காக எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். இதற்காக தனி செல்போன் எண் விரைவில் வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது குறைகளை மட்டுமின்றி தவறான செயல்கள் நடைபெறுவது தெரிய வந்தால் அதுபற்றியும் தகவல் தெரிவிக்கலாம். கஞ்சா விற்பனை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரவுடிகளை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உள்ளேன்.

    இவ்வாறு துணை கமிஷனர் சக்திவேல் தெரிவித்தார்.

    துணை கமிஷனர் சக்தி வேல் தமிழக காவல் துறையில் பல்வேறு இடங்களில் திறம்பட பணியாற்றி உள்ளார். 2009-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று நேரடி டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த இவர் ஒருவருட பயிற்சிக்கு பின்னர் ஜெயங்கொண்டத்தில் முதலில் பணியமர்த்தப்பட்டார். இதன் பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்த சக்திவேல், கோவை மாவட்டம் வால்பாறையிலும் பணி புரிந்துள்ளார். 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு இறுதி வரையில் ஊட்டி தேவாலா பகுதியிலும் டி.எஸ்.பி.யாக பணியாற்றியுள்ள சக்திவேல் பின்னர் கூடுதல் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சத்தியமங்கலம் எஸ்.டி.எப்.பில் பணியமர்த்தப்பட்டார். இதன் பின்னர் கிருஷ்ணகிரி மற்றும் சேலத்திலும் பணி புரிந்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்ற சக்திவேல் சென்னை மாநகர உளவு பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

    10 மாதங்கள் அங்கு சிறப்பாக பணியாற்றிய அவர் கொளத்தூர் துணை போலீஸ் கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகும்.

    • கிலோவுக்கு நான்கு ரூபாய் வீதம் 20 கிலோவுக்கு குறைந்தபட்சம் 80 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பார்சல் முன்பதிவுக்கு 94450 14435 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பார்சல் மற்றும் கூரியர் குறைந்த கட்டணத்தில் அனுப்புவதற்கான பார்சல் திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக திருச்சி, மதுரை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட இடங்களில் முன்பதிவு மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    கிலோவுக்கு நான்கு ரூபாய் வீதம் 20 கிலோவுக்கு குறைந்தபட்சம் 80 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டத்துக்கான பார்சல் முன்பதிவு மையம் கோவையில் செயல்படுகிறது. கோவையில் இருந்து தமிழகம் முழுவதும் இயங்கும் விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பார்சல் தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் 8 தாலுகா உள்ளது. பல்லடம், காங்கயம், அவிநாசி, தாராபுரத்துக்கு அதிக அளவில் விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் வந்து செல்கிறது. ஆனால் மாவட்டத்தில் எந்த பஸ் நிலையத்திலும் விரைவு பஸ்களுக்கான பார்சல் முன்பதிவு மையம் இல்லை. டிக்கெட் முன்பதிவு செய்யவும் வழியில்லை.

    பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து விடுகின்றனர். தனியார் கூரியர் நிறுவனம் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இவ்விஷயத்தில் உயரதிகாரிகள் தலையிட்டு வர்த்தக நகரான திருப்பூரில்எஸ்.இ.டி.சி., பஸ்களுக்கான பார்சல் முன்பதிவு மையம் உடனடியாக துவங்க வேண்டும்.

    பார்சல் குறைந்த கட்டணத்தில் புக்கிங் செய்ய வழியில்லாதது குறித்து, கோவை கோட்ட எஸ்.இ.டி.சி., அதிகாரிகளிடம் கேட்ட போது, பார்சல் முன்பதிவுக்கு 94450 14435 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த எண்ணுக்கு அழைத்தால் கிலோ எவ்வளவு, கோவையில் இருந்து எப்போது எந்தெந்த பகுதிக்கு பார்சல்களை அனுப்ப முடியும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் என்றனர்.

    • 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி இ.கே.ஒய்.சி., பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் தங்கள் பகுதியில் தபால் சேவை வழங்கும் தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் தங்கள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இணைத்த பிறகு https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற பிரதம மந்திரியின் கிஷான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி இ.கே.ஒய்.சி., பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூரில் 48 ஆயிரத்து 748 பயனாளிகள் இணைக்க வேண்டியுள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களையும் பயன்படுத்தி ஆதாரில் செல்போன் எண்ணை இணைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகள் பான் கார்டு பெறவும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் நிரந்த பதிவு செய்யவும், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, குடும்ப அட்டை, பி.எப்., தொடர்பான சேவைகள், ஆதாரில் செல்போன் எண் திருத்தம், இணைத்தல், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×