search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mobile Number"

    • 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி இ.கே.ஒய்.சி., பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்க தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் தங்கள் பகுதியில் தபால் சேவை வழங்கும் தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் தங்கள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இணைத்த பிறகு https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற பிரதம மந்திரியின் கிஷான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை குறியீட்டு எண் அங்கீகாரத்தை பயன்படுத்தி இ.கே.ஒய்.சி., பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூரில் 48 ஆயிரத்து 748 பயனாளிகள் இணைக்க வேண்டியுள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களையும் பயன்படுத்தி ஆதாரில் செல்போன் எண்ணை இணைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகள் பான் கார்டு பெறவும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் நிரந்த பதிவு செய்யவும், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, குடும்ப அட்டை, பி.எப்., தொடர்பான சேவைகள், ஆதாரில் செல்போன் எண் திருத்தம், இணைத்தல், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×