search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Modi"

    • சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட 8-வது முகூர்த்தமான அபிஜித் முகூர்த்தத்தில் செய்யப்படும் மங்கள செயல்கள் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
    • கங்கா தேவி பூமிக்கு வந்ததை நினைவு கூரும் கங்கா சப்தமியுடன் இணைந்திருப்பதால் மே 14-ந் தேதி அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி பாராளுமன்ற தொகுதியில், போட்டியிட பிரதமர் மோடி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதற்கு முன்பாக, அவர் கங்கை நதியில் உள்ள தஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். பிரதமர் மோடி சாஸ்திர, சம்பிரதாயங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.

    இதனால் அவர் மிகவும் நல்ல நேரமாக கருதப்படும் 11.40 முதல் 12 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    ஜோதிட சாஸ்திரத்தில் 'அபிஜித் முகூர்த்தம்' மற்றும் 'ஆனந்த் யோகம்' ஆகியவற்றை இணைத்து, பிரதமர் மோடி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்ததாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

    சூரிய உதயத்துக்கும், சூரிய அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட 8-வது முகூர்த்தமான அபிஜித் முகூர்த்தத்தில் செய்யப்படும் மங்கள செயல்கள் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

    பூசம் (புஷ்ய) நட்சத்திரம், மே 13-ந்தேதி அன்று காலை 11.23 மணிக்கு தொடங்கி மே 14-ந்தேதி பிற்பகல் 1.05 மணி வரை நீடித்தது. இந்த நேரத்தில் செய்யப்படும் செயலானது மங்களத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

    ஏனெனில், இந்த காலம் அதிர்ஷ்டத்தையும், ஆசீர்வாதங்களையும் அள்ளித் தருவதாக நம்பப்படுகிறது.

    மேலும், கங்கா தேவி பூமிக்கு வந்ததை நினைவு கூரும் கங்கா சப்தமியுடன் இணைந்திருப்பதால் மே 14-ந் தேதி அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

    இந்த நேரத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் என தெரிவித்துள்ளனர்.

    • ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
    • ராபர்ட் பிகோ சுடப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் ஜுஜானா கேபுடோவா கண்டனம் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    ஸ்லோவாக்கியா பிரதமராக ராபர்ட் பிகோ இருந்து வருகிறார். 59 வயதான இவர் தலைநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹேண்ட்லோவா நகரத்தில் உள்ள கலாச்சார மாளிகைக்கு வெளியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்குரிய நபர் ராபர்ட் பிகோ நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

    துப்பாக்கியால் சுட்டதில் ராபர்ட் பிகோ வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதனால் சுருண்டு விழுந்த அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரதமர் ராபர்ட் பிகோ தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் ஜுஜானா கேபுடோவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ராபர்ட் பிகோ கட்சி கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 3-வது முறையாக பிரதமர் ஆனார். ரஷியாவுக்கு ஆதரவான மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், ஸ்லோவாக்கியா பிரதமர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் பிகோ விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஸ்லோவாக்கியா மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • காசியில் இருந்தபோது தேர்தல் பிரச்சாரத்தின்போது பல இளைஞர்களைச் சந்தித்தேன்.
    • புதிய கற்பனை, புதிய சிந்தனைகள் இருப்பதைக் கண்டேன்.

    பிரதமர் நரேந்திர மோடி மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    அரசு அமைந்த பிறகு முதல் 100 நாட்களில் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும், என்னென்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

    ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகும் தொடரும்... நேற்று காசியில் இருந்தபோது தேர்தல் பிரச்சாரத்தின்போது பல இளைஞர்களைச் சந்தித்தேன். நாட்டு இளைஞர்களிடம் புதிய கற்பனை, புதிய சிந்தனைகள் இருப்பதைக் கண்டேன்.

    இளைஞர்களை சந்தித்த இந்த நாட்கள் எனக்கு மிகவும் நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளன. ஆகவே, இன்னும் 25 நாட்களை இணைத்துள்ளேன். நாட்டின் இளைஞர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை எனக்கு அனுப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    • இந்தியாவின் உள்கட்டமைப்பு, சாலை திட்டமிடல் உட்பட எல்லாமே அற்புதமாகவுள்ளது.
    • 20 கிமீ நீளம் கொண்ட பாலத்தை 7-8 வருடங்களில் கட்டி முடித்துள்ளார்கள். இதை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    மும்பை:

    மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாலத்தை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது 'மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்' என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த அடல் சேது பாலம் பற்றி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, "2 மணி நேர பயணம் தற்போது 20 நிமிடங்களாக குறைந்து விட்டது. இதை உங்களால் நம்ப முடிகிறதா? இப்படி ஒரு மாற்றம் நிகழும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?

    நவி மும்பையில் இருந்து மும்பை, கோவாவில் இருந்து மும்பை, பெங்களூரில் இருந்து மும்பை என எல்லா பயணங்களும் அற்புதமான உள்கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.

    இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, சாலை திட்டமிடல் உட்பட எல்லாமே அற்புதமாகவுள்ளது. 20 கிமீ நீளம் கொண்ட பாலத்தை 7-8 வருடங்களில் கட்டி முடித்துள்ளார்கள். இதை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று அவர் தெரிவித்தார்.

    2020 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பகுதியில் உள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணத்தை ரொக்கமாகவும், 3.94 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நான் ஒரு போதும் வாக்கு வங்கி அரசியலுக்காக செயல்படுவது இல்லை.
    • கோத்ரா கலவரத்துக்கு பிறகு எதிர்க்கட்சிகளால் எனது தனி மரியாதை, இமேஜ் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் சதவீதத்தில் முன்னிலையில் இருப்பதாக சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கை தகவல் வெளியானது.

    இந்த நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடியும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசுவதாக தகவல்கள் பரவியது. குறிப்பாக தேர்தல் பிரசார கூட்டங்களில் மத ரீதியாக பிரதமர் மோடி பேசுவதாக பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

    தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்து உள்ளார். தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்த அவர் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-

    நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் பற்றி நான் பேசிய ஒரு பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நான் இஸ்லாமியர்களை மட்டும் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. ஆனால் நான் அப்படி பேசியதாக ஒரு தகவல் பரப்பப்பட்டுள்ளது.

    முஸ்லிம்கள் பற்றி நான் தவறாக பேசியதாக பரவிய தகவல் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் பற்றி நான் பேசினால் அது முஸ்லிம்கள் பற்றி பேசியதாக உங்களுக்கு யார் சொன்னது. நான் அப்படி பேசியது நாட்டில் உள்ள ஏழை மக்கள் பற்றியதாகும்.

    எங்கு அதிக வறுமை இருக்கிறதோ அங்கு அதிக குழந்தைகள் இருக்கிறார்கள். இதைதான் நான் குறிப்பிட்டு பேசினேன். அதை தவறாக புரிந்து கொண்டு இஸ்லாமியர்கள் பற்றி நான் பேசியதாக அநீதி இழைப்பது ஏன்?

    நான் ஒரு போதும் வாக்கு வங்கி அரசியலுக்காக செயல்படுவது இல்லை. நான் மத ரீதியாக பேச தொடங்கினால் நான் பொது வாழ்க்கையில் இருப்பதற்கு தகுதி இல்லாதவன் ஆகி விடுவேன். நான் ஒருபோதும் அப்படி செயல்படுவது இல்லை.

    குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து நிகழ்ந்த மிகப் பெரிய கலவரம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். அப்போது நான் குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தேன். கோத்ரா கலவரத்துக்கு பிறகு எதிர்க்கட்சிகளால் எனது தனி மரியாதை, இமேஜ் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டது.

    என்னை இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் போல சித்தரிக்கிறார்கள். எனது வீட்டை சுற்றி அதிக அளவில் இஸ்லாமியர்கள் தான் வசிக்கிறார்கள். இஸ்லாமியர்களின் பண்டிகை நாட்களில் எங்களுடைய வீட்டில் உணவு சமைக்கப்படுவது இல்லை. அவர்கள் வீட்டில் இருந்து எங்களுக்கு உணவு வந்து விடும்.

    எங்கள் வீட்டை சுற்றி இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் எங்களுக்கு அடிக்கடி விருந்து தருவார்கள். அவர்களோடு ஒருங்கிணைந்துதான் நான் வாழ்ந்தேன். எனது சிறு வயது வாழ்க்கை அப்படித் தான் அமைந்து இருந்தது.

    இப்போது கூட எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பிறகு என் மீதான இமேஜ் மாற்றப்பட்டு விட்டது.

    இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள் என்னை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் எனக்காக வாக்களிப்பார்கள். நான் மத ரீதியாக பேசவில்லை என்பது அவர்களுக்கு புரியும்.

    நான் இந்து, முஸ்லிம் பற்றி பேசுவது இல்லை. இதனை எனது வாக்குறுதியாகவே மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • பிரதமர் மோடி இன்று தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என தகவல்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று காலை 11.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று, தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அவருடன் பா.ஜ.க. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பிரதமருடன் காணப்பட்டனர்.

    பிரதமர் மோடியுடன் பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி, லால்சந்த் குஷ்வாஹா, பைஜ்நாத் படேல் மற்றும் சஞ்சய் சோன்கர் ஆகிய நான்கு பேர் முன்மொழிந்தனர். 

    இந்நிலையில், பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2014ம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக வாரணாசியில் போட்டியிட்டு வரும் பிரதமர் மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் பிரமாணப் பத்திரத்தில், அவர் ரூ.3.02 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், ரூ.52,920 ரொக்கத்தையும் வைத்திருக்கிறார் என்றும் அவருக்கு சொந்தமாக நிலம், வீடு, கார் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் வரிக்கு உட்பட்ட வருமானம் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்தில் இருந்து 2022-23ல் ரூ.23.5 லட்சம் என இரு மடங்காக உயர்ந்துள்ளது. 

    பாரத ஸ்டேட் வங்கியில் பிரதமர் மோடிக்கு இரண்டு கணக்குகள் உள்ளன. எஸ்பிஐயின் காந்திநகர் கிளையில் ரூ.73,304 டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், எஸ்பிஐயின் வாரணாசி கிளையில் ரூ.7,000 மட்டுமே உள்ளது.

    பிரதமருக்கு எஸ்பிஐயில் ரூ.2,85,60,338 நிலையான வைப்புத்தொகை உள்ளது.

    பிரதமரிடம் ரூ.2,67,750 மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்களும் உள்ளன.

    கடந்த 2019ம் ஆண்டு தேர்தலைவிட இந்த முறை பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

    • வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
    • கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன் என்று மோடி கூறியுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். அதற்கான வேட்மனுவை இன்று பிரதமர் மோடி தாக்கல் செய்தார்.

    ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இத்தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

    அப்போது பேசிய மோடி, "கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. ரூ.140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்றார். தாய் குறித்து பேசும்போது பிரதமர் மோடி கண்கள் கலங்கி குரல் தழுதழுத்தது.

    இந்நிலையில், கங்கை நதி குறித்து மோடி பேசியது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

    • கங்கை நதியை தூய்மை செய்கிறோம் என ரூ.20,000 கோடி செலவு செய்த நிலையிலும், கங்கை தூய்மையாக இல்லையே ஏன்?

    • மோடி, தான் தத்தெடுத்த வாரணாசி கிராமங்களை கைவிட்டது எதற்கு?

    • வாரணாசியில் மகாத்மா காந்தியின் பெருமையை அழிக்க மோடி திட்டமிடுவது ஏன்?

    என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

    • தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி - அதானியை வசைபாடுவதை ராகுல்காந்தி நிறுத்திவிட்டார் என மோடி பேசியிருந்தார்.
    • "மோடி தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?" என ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

    அண்மையில் பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்தார். கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது "காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.

    பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.

    காங்கிரஸ் கட்சிக்கு டெம்போ லோடு பணம் வந்து சேர்ந்ததா?. ஒரே இரவில் அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்" என்று பிரதமர் மோடி பேசினார்.

    அந்த சமயத்தில், "மோடி தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?" என ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ராகுல்காந்தி மீண்டும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இன்று நான் லக்னோ விமான நிலையத்தில் இருக்கிறேன். லக்னோ, மும்பை, அகமதாபாத், மங்களூரு, கவுகாத்தி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் வரை அனைத்து விமான நிலையங்களையும் 50 ஆண்டுகளுக்கு பிரதமர் தனது 'டெம்போ நண்பர் அதானியிடம் ஒப்படைத்துள்ளார். இதற்கு எத்தனை டெம்போவில் காசு வாங்கினீர்கள் என்பதை நரேந்திர மோடி பொதுமக்களிடம் சொல்வாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதானியும் அம்பானியும் காங்கிரஸ் கட்சிக்கு கறுப்புப் பணம் தருகிறார்கள் என்று 5 நாட்களுக்கு முன்பு தானே மோடி கூறினார். எப்போது சிபிஐ, அமலாக்கத்துறையை அனுப்ப போகிறீர்கள். சீக்கிரமாக விசாரணையை ஆரம்பியுங்கள்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மேலும் விமான நிலையத்தில் இருந்த அதானி நிறுவனத்தின் விளம்பரங்களையும் சுட்டிக் காட்டி அவர் விமர்சனம் செய்துள்ளார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • 10 ஆண்டுகளில் காசிக்கு (வாரணாசி) உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியை மோடி கொண்டு வந்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடையின்றி தொடரும் என்றும் வாரணாசி மக்கள் அவருக்கு மீண்டும் ஒரு சாதனை வித்தியாசத்தில் வெற்றிப்பெற ஆசீர்வதிப்பார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார்.

    வாரணாசி மக்களவைத் தொகுதியில் 3வது முறையாக மீண்டும் வெற்றிப்பெறும் நோக்கில் பிரதமர் மோடி இன்று மனுத்தாக்கல் செய்தார்.

    அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர். அமித்ஷாவும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். 

    இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய கலாச்சாரத்தின் மையமான பாபா விஸ்வநாத்தின் நகரமான காசியில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த 'யஷஸ்வி' பிரதமர் நரேந்திரமோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    10 ஆண்டுகளில் காசிக்கு (வாரணாசி) உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியை மோடி கொண்டு வந்துள்ளார்.

    அவர் இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் மேம்படுத்தியுள்ளார். மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடையின்றி தொடர பாபா விஸ்வநாத் மற்றும் கங்கா 'மையா' ஆகியோரை நான் பிரார்த்திக்கிறேன்.

    இந்த முறையும் காசி மக்கள் மோடியை சாதனைக்குரிய வித்தியாசத்தில் வெற்றி பெற ஆசீர்வதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலையான அரசு அமையும்பட்சத்தில் அது பங்குச்சந்தை சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.
    • பங்குச் சந்தை கடந்த சில அமர்வுகளில் பல்வேறு காரணிகளால் 16 முறை பெரும் திருத்தங்களை கண்டுள்ளன.

    புதுடெல்லி:

    பங்கு சந்தை வர்த்தகம் கடந்த வாரம் சரிந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற்றார்கள். புதிதாக முதலீடு செய்யவும் தயங்குகிறார்கள்.

    இதற்கு காரணம் தேர்தல் தான் என்றும் தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு பாதகமாக இருக்கிறது. எனவே பங்கு சந்தை சரிவை சந்திப்பதாகவும் எதிர்கட்சிகள் தகவல் பரப்பியது.

    ஆனால் சர்வதேச அளவிலான சாதகமற்ற நிலவரமும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றமும் தான் பங்கு சந்தை ஏற்ற இறக்கத்துக்கு காரணம் என்று பங்கு சந்தை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    இந்த நிலையில் பங்கு சந்தை நிலவரம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    பங்கு சந்தையை தேர்தலுடன் இணைக்கக் கூடாது. ஆனால், நிலையான அரசு அமையும்பட்சத்தில் அது பங்குச்சந்தை சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.

    பங்குச் சந்தை கடந்த சில அமர்வுகளில் பல்வேறு காரணிகளால் 16 முறை பெரும் திருத்தங்களை கண்டுள்ளன. 7 கட்ட தேர்தல் முடிந்து ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதில் பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமையும். அதன்பிறகு இந்திய பங்குச் சந்தைகள் கணிசமான ஏற்றத்தை சந்திக்கும். எனவே, பங்குகளை வாங்க இதுவே சரியான தருணம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன்.
    • காசியுடனான எனது உறவு அற்புதமானது,

    கங்கை நதியில் சிறப்பு பூஜைக்கு பிறகு பிரதமர் மோடி கூறும்போது, கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. ரூ.140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்றார். தாய் குறித்து பேசும்போது பிரதமர் மோடி கண்கள் கலங்கி குரல் தழுதழுத்தது.

    முன்னதாக மோடி, எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, காசியுடனான எனது உறவு அற்புதமானது, ஒருங்கிணைந்தது மற்றும் ஒப்பிட முடியாதது. அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றுதான் என்னால் சொல்ல முடியும் என்றார்.

    • பாராளுமன்ற தேர்தலில் நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
    • வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இதுவரை வென்றதில்லை.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி 3-வது முறையாக அத்தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.

    வாரணாசி தொகுதிக்கான வாக்குப்பதிவு 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் நடக்கிறது. இதில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

    நேற்றே வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார். இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டனர்.

    பிரதமர் மோடி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வதையொட்டி வாரணாசி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மோடி மனுத்தாக்கல் செய்யும் இடத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். இன்று காலை 9.30 மணிக்கு கங்கை கரையில் உள்ள தசப்வம்தே காட் என்ற இடத்துக்கு பிரதமர் மோடி சென்று கங்கை நதிக்கு பூஜை நடத்தினார். அவருக்கு நெற்றியில் புரோகிதர்கள் திலகமிட்டு பட்டு வஸ்திரம் அணிவித்தனர்.

    அதன்பின் புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி மனமுருக வேண்டினார். கங்கை நதிக்கு பூ, பால் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்தார். அதன்பின் கங்கை நதிக்கு கங்கா ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்.

    கங்கையில் சிறப்பு பூஜையை முடித்த பிறகு பிரதமர் மோடி கப்பலில் பயணம் செய்து நமோ காட் என்ற இடத்தில் உள்ள கால பைரவர் கோவிலுக்குச் சென்றார். அங்கு அவரை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றார். கால பைரவர் கோவிலில் மோடி சாமி தரிசனம் செய்தார்.

    கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய புறப்பட்டார். அவர் காலை 11.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு தேர்தல் அதிகாரியிடம் பிரதமர் மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது மோடியுடன் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் சென்றார். மோடியின் வேட்புமனுவை பண்டிட் ஞானேஸ்வர் பைஜ்நாத் படேல், லால் சந்த் குஷ்வாகா, சஞ்சய் சோங்கர் ஆகியோர் முன்மொழிந்தனர்.

    பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஹர்தீப்பூரி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், ராஷ்டீரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ராஜ்பர், அப்னா தளம் (எஸ்) தலைவர் அனு பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    வேட்புமனு தாக்கல் முடிந்ததும் பிரதமர் மோடி பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    வாரணாசி தொகுதி தற்போது பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட வாரணாசி பாராளுமன்ற தொகுதி பல ஆண்டுகளாக பா.ஜ.க-காங்கிரஸ் இடையே பெரிய போட்டி களமாக இருந்துவருகிறது. அத்தொகுதியில் பா.ஜ.க. 7 தடவையும், காங்கிரஸ் 6 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இதுவரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×