search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varanasi constituency"

    • வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரதமர் மோடி ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
    • பிரதமர் மோடி சுற்றுப் பயணத்தின் போது, ​​கங்கை நதியில் நடைபெறும் பிரமாண்ட கங்கா ஆரத்தியையும் காண இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் தேசியக்கட்சிகள் தற்போது முதலே அதற்கான நடவடிக்கைகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இருந்து புனித தலத்துக்குச் சென்று 'மிஷன் -2024' என்ற ரீதியில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறார்.

    இதற்காக பிரதமர் மோடி வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வாரணாசியில் சுற்றுப்பயணம் செய்கிறார். வருகிற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காசிக்கு வரக்கூடிய அவர், தனது பாராளுமன்றத் தொகுதியில் இரவு தங்குகிறார். மறுநாள் திங்கட்கிழமை கட்சி மற்றும் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார்.

    வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரதமர் மோடி ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து வாரணாசி கோட்ட ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா கூறுகையில், பிரதமர் மோடி காசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன் தொடர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார் என்றார்.

    அதேபோல் காசி தமிழ் சங்கமம், உலகின் மிகப் பழமையான கலாச்சார பாரம்பரியத்தின் வாழ்க்கைப் பிணைப்புகளை புதுப்பிக்க மத்திய கல்வி அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சகம், கலாச்சாரம், ஜவுளி, ரெயில்வே போன்ற பிற துறைகளுடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த காசி தமிழ்ச் சங்கமத்தில், இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கிடையேயான வரலாற்று மற்றும் குடிமைத் தொடர்பின் பல பகுதிகள் கலாச்சார மரபுகளை நெருக்கமாக கொண்டு, பகிர்வு பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகின்றன.

    காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள பழமையான தொடர்புகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் இரண்டாம் கட்ட விழா வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. அதிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் என்றார்.

    மேலும் பிரதமர் மோடி இந்த சுற்றுப் பயணத்தின் போது, கங்கை நதியில் நடைபெறும் பிரமாண்ட கங்கா ஆரத்தியையும் காண இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளில், கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு சின்னங்களுக்கு இடையேயான விக்சி பாரத் சங்கல்ப் யாத்ரா கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

    மோடி வருகையையொட்டி வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு இன்று வாரணாசி தொகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

    இதையொட்டி அவர் நேற்று குஜராத் சென்று தனது தாயை சந்தித்து ஆசி பெற்றார்.

    பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு வாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவும் மோடி முடிவு செய்தார். வாரணாசி தொகுதியில் இருந்து 2014-ல் எம்.பி.யான மோடி மீண்டும் இந்த தடவையும் அங்கு போட்டியிட்டு 2-வது முறையாக எம்.பி.யாகி உள்ளார்.

    முதல் தடவை வாரணாசி தொகுதியில் மோடிக்கு சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வாரணாசி தொகுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்க மோடி வாரணாசி சென்றார்.


    மோடி வருகையை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை வாரணாசி சென்று தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். மோடி இன்று காலை வாரணாசி வந்ததும் அவரை வரவேற்று காசி விசுவநாதர் ஆலயத்துக்கு அழைத்து சென்றார்.

    காசி விசுவநாதர் ஆலயத்தில் மோடி சிறப்பு வழிபாடுகள் செய்தார். விசுவநாதருக்கு தன் கைப்பட அபிஷேகம் செய்த அவர் தீபாராதனையும் காட்டி வழிபட்டார்.


    இதைத் தொடர்ந்து வாரணாசியின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள தீன் தயாள் உபாத்யாயா மையத்துக்கு செல்லும் மோடி அங்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேச உள்ளார்.

    பின்னர் வாரணாசியில் முக்கிய இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
    பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
    லக்னோ:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தமுறை வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார்.

    வாரணாசியில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முழுமையான முடிவுகள் வெளியான நிலையில் பிரதமர் மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகளை பெற்றார். இரண்டாவது இடத்தை பிடித்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவ் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகளை பெற்றார்.

    ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 548 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    கடந்த 2014-ம் ஆண்டில் இதே தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட 3 லட்சத்து 71 ஆயிரத்து 784 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.
    பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருந்தார். தொடர்ந்து அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்தபடி உள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் குஜராத் மாநிலம் வதோரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார்.

    2 தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர் வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டார்.

    இந்த தேர்தலில் மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரியங்கா போட்டியிடவில்லை.

    காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் நிறுத்தப்பட்டார். பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி சார்பில் ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டார். ஆனால் மோடிக்கு இவர்கள் யாரும் வலுவான சவாலை ஏற்படுத்தவில்லை.

    பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் கடந்த தேர்தலின்போது சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இந்த தடவை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க பா.ஜனதா நிர்வாகிகள் களம் இறக்கப்பட்டனர்.

    அதற்கேற்ப வாரணாசி தொகுதி முழுக்க பா.ஜனதா தீவிர பிரசாரம் நடத்தியது. இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

    மதியம் 12 மணி அளவில் சில சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு இருந்தன. அப்போதே பிரதமர் மோடி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருந்தார். தொடர்ந்து அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்தபடி உள்ளது.

    எனவே அவர் இந்த தடவையும் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பாராளுமன்ற தேர்தலில் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி நடத்திய ரோடு ஷோவில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.
    வாரணாசி:

    பாராளுமன்றத்துக்கு வருகிற 19-ந்தேதி நடக்கும் இறுதி 7-வது கட்ட தேர்தலில் 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த 59 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக களம் இறங்கியுள்ள பிரதமர் மோடி கடந்த மாதம் 25-ந் தேதி அங்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் வாரணாசியில் சுமார் 3 லட்சம் பேர் கலந்துகொண்ட மிகப்பிரமாண்ட ரோடு ஷோவில் கலந்து கொண்டார்.

    அதன்பிறகு மோடி 2 தடவை வாரணாசி சென்று தனக்கு ஆதரவு திரட்டினார். பிரசாரம் நிறைவு பெறும் நாளையும் மோடி வாரணாசியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராயை ஆதரித்து பிரசாரம் செய்தார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் களம் இறக்கப்பட்டுள்ள பிரியங்கா வாரணாசி தொகுதியிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

    ஏற்கனவே 2 தடவை வாரணாசியில் பிரசாரம் செய்துள்ள பிரியங்கா நேற்று 3-வது முறையாக அங்கு சென்று ஆதரவு திரட்டினார். நேற்று மாலை வாரணாசி தொகுதிக்கு சென்று சேர்ந்த அவர் 6.15 மணிக்கு ரோடு ஷோ நடத்தினார்.


    பிரதமர் மோடி கடந்த மாதம் வேட்பு மனுதாக்கல் செய்யும் முன்பு வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து ரோடு ஷோவை தொடங்கினார்.

    நேற்று பிரியங்காவும் அதே இடத்தில் இருந்து ரோடு ஷோவை நடத்தினார். மோடி செய்தது போல அவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதன்மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பிரியங்கா ரோடு ஷோ நடத்தினார்.

    பிரியங்காவைப் பார்ப்பதற்காக அவர் ரோடு ஷோ செல்லும் பகுதிகளில் ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். வாரணாசி தொகுதி காங்கிரசார் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்களை அழைத்து வந்திருந்தனர். இதனால் பிரியங்காவின் ரோடு ஷோவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

    பிரியங்காவின் ரோடு ஷோ சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தது. வாரணாசி நகருக்குள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பிரியங்காவின் ரோடு ஷோ நடந்தது.

    வாரணாசியில் உள்ள லங்கா, அசி, படனி, சிவலா, சோனாபுரா, மதன்புரா பகுதிகள் வழியாக பிரியங்காவின் ரோடு ஷோ சென்றது. குறிப்பாக பிரதமர் மோடி கடந்த 25-ந்தேதி நடத்திய ரோடு ஷோ பாதைகளில் பெரும்பாலான பகுதிகளில் பிரியங்காவின் ரோடு ஷோவும் அமைந்தது.

    இந்த ரோடு ஷோவால் வாரணாசி தொகுதி காங்கிரஸ் தொண்டர்களிடம் புத்துணர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி உள்ளனர்.

    இதற்கிடையே மாயாவதி-அகிலேஷ் யாதவ் இருவரும் இன்று (வியாழக்கிழமை) வாரணாசியில் ரோடு ஷோ நடத்துகிறார்கள். இதனால் வாரணாசி தொகுதியில் உச்சக்கட்ட தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் தேஜ்பகதூர் யாதவ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #TejBahadurYadav #Varanasi
    புதுடெல்லி:

    ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  ஆனால், வேட்பு மனுவில் சரியான விவரங்கள் இல்லை என கூறி தேர்தல் ஆணையம் அவரது வேட்பு மனுவை நிராகரித்தது.

    ஆனாலும், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதில் உறுதியாக இருந்த தேஜ் பகதூர் யாதவ், தனது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    அவரது மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். அப்போது, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சுட்டிக் காட்டிய அவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது தேர்தல் வழக்கு தொடரலாம் என தெரிவித்தார்.

    ஆனால், பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதாடிய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, தேர்தல் முடிந்தபிறகுதான் தேர்தல் தொடர்பான வழக்குகளை தொடர முடியும் என்றார்.

    அப்படியென்றால் தேர்தல் முடிந்தபிறகு தனது கட்சிக்காரர், இந்த வழக்கை மீண்டும் தொடர அனுமதிக்கும்படி பிரசாந்த் பூஷன் கேட்டுக்கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தேஜ் பகதூர் யாதவின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதன்மூலம் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் தேஜ் பகதூர் யாதவின் முயற்சி தோல்வி அடைந்தது. #TejBahadurYadav #Varanasi
    வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த பிரதமர் மோடி, ’மோடி ஏற்கனவே ஜெயித்து விட்டார்' என்ற மாயை பிரசாரத்தில் மக்கள் மயங்கி விடக்கூடாது என்று வலியுறுத்தினார். #ModiinVaranasi #Modi
    லக்னோ:

    2014-ம் ஆண்டு வாரணாசி தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனக்கு அடுத்தபடியாக வந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதே தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘மோடி ஏற்கனவே வெற்றிபெற்று விட்டார். இனி அவருக்கு யாரும் வாக்களித்து ஆகப்போவது ஏதுமில்லை. எனவே, வாக்களிக்க செல்ல வேண்டாம் என்பது போன்ற ஒரு மாயைச்சூழலை சிலர் உருவாக்கி வருகின்றனர். அதை நம்பி வாரணாசி மக்கள் வாக்களிக்காமல் இருந்துவிட வேண்டாம்.



    அவர்களின் மாயை வலையில் தயவுசெய்து நீங்கள் விழுந்துவிட வேண்டாம். வாக்களிக்களிப்பது உங்கள் உரிமை. எனவே, அதை நீங்கள் ஒவ்வொருவரும் சரியாக நிறைவேற்ற வேண்டும்’ என தெரிவித்தார். #ModiinVaranasi #Modi
    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #ModiNomination
    வாரணாசி:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இந்த முறையும் மோடியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்காக பாஜகவினர் இரவு பகலாக தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வாரணாசியில் நேற்று மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

    இந்நிலையில், பிரதமர் மோடி இன்று வாரணாசியில் உள்ள காகாலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார். 11.30 மணியளவில் வாரணாசி கலெக்டர் அலுவலகம் சென்ற அவர், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


    இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். #LokSabhaElections2019  #ModiNomination  #LokSabhaElections2019 #ModiNomination
    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக ஷாலினி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். #Loksabhaelections2019 #PMModi #ShaliniYadav
    வாரணாசி:

    பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வருகிற 26-ந்தேதி மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இதில் வாரணாசி தொகுதியில், சமாஜ்வாடி போட்டியிடுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக ஷாலினி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.



    இவர் பாராளுமன்ற மேல்-சபையின் முன்னாள் துணை சபாநாயகர் ஷியாம்லால் யாதவின் மருமகள் ஆவார். காங்கிரசில் இருந்து ஷாலினி யாதவ் சமீபத்தில் விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.

    இதுபற்றி ஷாலினி யாதவ் கூறும் போது, எங்களது கட்சி தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையின் கீழ் பணியாற்றுவேன். அவரது வழி காட்டுதலின்படி செயல்படுவேன் என்றார். #Loksabhaelections2019 #PMModi #ShaliniYadav
    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார். #LoksabhaElections2019 #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் மே 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அந்த தொகுதியில் பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி வேட்புமனுதாக்கல் செய்ய உள்ளார். இது குறித்து பா.ஜனதா வட்டாரங்கள் கூறியதாவது:-

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் வருகிற 26-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் 25-ந்தேதி வாரணாசி செல்கிறார்.

    அன்று பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது. பேரணியில் பிரதமர் மோடி சாலை வழியாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்த பேரணியில் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பேரணியில் கலந்து கொள்கிறார்கள்.

    26-ந்தேதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இது குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நவின் கோலி கூறுகையில், “பிரதமர் மோடியை வரவேற்பதை வாரணாசி மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்” என்றார். #LoksabhaElections2019 #PMModi
    வாரணாசியில் பாஜகவின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இரண்டு நாட்கள் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். #Loksabhaelections2019 #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி தன் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்துக்கு செல்லவுள்ளார். சமீப காலமாக ராகுல், பிரியங்கா இருவரும் அடிக்கடி குஜராத் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் மோடியும் குஜராத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

    மேலும் 5 பொதுக்கூட்டங்களில் பேச மோடி திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் நாளை குஜராத்தில் உள்ள ஹிமாத்நகர், சுரேந்திர நகர், அனந்த் ஆகிய 3 நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

    நாளை மறுநாள் 18-ந் தேதி அம்ரேலி நகரிலும் 21-ந்தேதி குஜராத் மாநிலம் பதன்நகரிலும் பேசுகிறார். மீண்டும் 23-ந்தேதி அகமதாபாத் சென்று அங்கு தனது வாக்கை பதிவு செய்கிறார்.

    அதன்பிறகு வாரணாசி தொகுதியில் கவனம் செலுத்த மோடி திட்டமிட்டுள்ளார். அதன்படி 25-ந்தேதி மோடி வாரணாசி செல்கிறார். அங்கு நடக்கும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். அன்றிரவு அவர் வாரணாசியில் தங்குகிறார்.

    மறுநாள் (26-ந்தேதி) வாரணாசி தொகுதியில் மோடி மனுதாக்கல் செய்கிறார். அன்றும் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.

    அமேதியில் ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்த போது 3 கி.மீ. தூர ரோடு ஷோ நடத்தினார். அதை மிஞ்சும் வகையில் பிரதமர் மோடி வாரணாசியில் 2 நாட்கள் ரோடு ஷோ நடத்தவுள்ளார்.

    இதற்கிடையே அடுத்த வாரம் பிரியங்காவும் வாரணாசி தொகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். மோடியின் வாரணாசி பயணத்துக்கு முன்போ அல்லது பின்போ பிரியங்காவும் வாரணாசி செல்வார் என்று தெரிய வந்துள்ளது.

    உத்தரபிரதேசத்தில் நியாய் ரத யாத்திரை நடத்த பிரியங்கா ஏற்பாடு செய்து வருகிறார். பதேபூர் சிக்ரி நகரில் பிரியங்கா இந்த பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதனால் அடுத்த வாரம் முதல் உத்தரபிரதேச தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்ட உள்ளது. #Loksabhaelections2019 #PMModi
    பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தவிர மோடி போட்டியிடும் இரண்டாவது தொகுதியை தேர்வு செய்ய பாஜக மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். #Loksabhaelections2019 #BJP #PMModi
    போபால்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது குஜராத் மாநிலம் வதேதரா, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    அந்த இரு தொகுதிகளிலும் மோடி வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதியில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இதையடுத்து வதேதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த மோடி, வாரணாசி தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். மீண்டும் 2-வது முறையாக வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட உள்ளார்.

    வாரணாசி தொகுதியில் மே 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதி தவிர மேலும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி வி.வி.ஐ.பி. தொகுதி என்ற அந்தஸ்தைப் பெற்ற அதிர்ஷ்டமான தொகுதியாகும்.

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1991-ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானும் தொடர்ச்சியாக 5 தடவை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூம் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்ற கோ‌ஷம் வலுத்து வருகிறது.

    விதிஷா தொகுதிக்கு இன்னும் பாரதிய ஜனதா வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Loksabhaelections2019 #BJP #PMModi
    ×