என் மலர்
நீங்கள் தேடியது "காசி விசுவநாதர் கோவில்"
- கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
- இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு வந்தது.
மதுரை:
தென்காசி சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலின் செயல் அலுவலர் முருகனின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டருக்கும் அதிகமான மண் அள்ளப்பட்டது. இதனால் கோவிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது.
காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023 ஆம் ஆண்டு கூட்டம் போடப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை. இதனால் பழமையான கோவிலை இழக்கும் நிலையும், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையும் உள்ளது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட உதவி ஆணையர் ஆய்வு செய்ததில் பணிகள் முழுமை செய்யப்படாததும், அரசின் பணம் மோசடி செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதோடு நாள்தோறும் பணிகளை செய்தால் மட்டுமே ஏப்ரல் 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக பணிகளை முடிக்க இயலும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், அரசு வழங்கிய நிதியை மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ளார்.
இதையொட்டி அவர் நேற்று குஜராத் சென்று தனது தாயை சந்தித்து ஆசி பெற்றார்.
பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு வாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவும் மோடி முடிவு செய்தார். வாரணாசி தொகுதியில் இருந்து 2014-ல் எம்.பி.யான மோடி மீண்டும் இந்த தடவையும் அங்கு போட்டியிட்டு 2-வது முறையாக எம்.பி.யாகி உள்ளார்.


பின்னர் வாரணாசியில் முக்கிய இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
ஆனால், தாங்கள் வேண்டிக் கொள்ளும்போதே, அதாவது நன்றிக் கடனை முன்னதாகவே பெண்கள் செலுத்தும் ஆலயம் ஒன்று உள்ளது என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?
ஆம்... திருச்சியில் உள்ள புத்தூரில் உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் காசி விசுவநாதர். இறைவியின் திருநாமம் காசி விசாலாட்சி.
ஆலயம் ஊரின் நடுவே அமைந்திருக்க நான்கு புறமும் வீதிகள். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்திற்கு கிழக்கு, தெற்கு என இருபுறமும் வாசல்கள் உள்ளன. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். நந்திதேவன் தனி மண்டபத்தில் அமர்ந்திருக்க, அடுத்து உள்ளது மகா மண்டபம்.
அந்த மகாமண்டபத்தின் வலதுபுறம் நின்ற கோலத்தில் அன்னை விசாலாட்சி அம்மன் அருள்பாலிக்கிறாள். அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவாசலின் இடதுபுறம் விநாயகர் மற்றும் ஆதிலிங்கேஸ்வரர் திருமேனிகளும், வலது புறம் பாலமுருகன் திருமேனியும் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் காசி விசுவநாதர் லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார்.
பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த புராதன ஆலயம், அழகுற சீரமைக்கப்பட்டு, சுற்றிலும் திருமதிற் சுவற்றுடன் அழகுற விளங்குகின்றது.
இங்குள்ள இறைவனின் திருவுருவம் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக பக்தர்கள் சொல்கின்றனர்.
தெற்கு வாசலைக் கடந்தால் அங்கேயும் நந்தியும் பலி பீடமும் உள்ளன. இறைவனின் கருவறை கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கை அம்மனும் அருள் பாலிக்கின்றனர். தெற்குப் பிரகாரத்தில் விநாயகர், மேற்குப் பிரகாரத்தில் நாகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித் தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள்.

நவராத்திரியின் 10 நாட்களும் இங்கு கொலு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. தவிர பிரதோஷம், வருடப்பிறப்பு, பொங்கல், தீபாவளி, ஆடி வெள்ளி நாட்கள், ஆடிபூரம், தை பூசம், சித்திரை மாதப் பிறப்பு, சங்கடஹர சதுர்த்தி, பங்குனி முதல் நாள், மாத கார்த்திகை நாட்கள், சஷ்டி தை வெள்ளி நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் போன்றவை நடைபெறுகின்றன. சித்திரா பவுர்ணமி, விஜயதசமி, தை பூசம், நவராத்திரி ஆகிய நாட்களில் இறைவன் இறைவி ரிஷப வாகனத்தில் வீதியுலா வருவதுண்டு. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடை பெறும் அன்னாபிஷேகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
தடைபட்ட திருமணம் நடந்தேற பிரார்த்தனை செய்து கொள்பவர்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவிக்கு சேலை வாங்கி சாற்றி வழிபட்டு நன்றிக் கடனை தெரிவித்துக் கொள்கின்றனர்.
இங்கு அருள்பாலிக்கும் இறைவி அருள்மிகு விசாலாட்சி அம்மன் கன்னிப் பெண்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.
திருமணத்திற்கு காத்து நிற்கும் பெண்கள் தங்களது மனதிற்குப் பிடித்த மணாளன் அமைய வேண்டுமென அன்னையிடம் மன முருக வேண்டிக் கொள்கின்றனர். அத்துடன், மாங்கல்யம் செய்து அதை இறைவியின் கழுத்தில் முன்னதாக நன்றி கடனாக அணிவித்து தங்களது பிரார்த்தனைக்கு முழு வடிவம் கொடுக்கின்றனர்.
அவர்களது பிரார்த்தனை நிறைவேறுவது கண்கூடான நிஜம் என்று சிலிர்ப்போடு கூறுகின்றனர் பக்தர்கள்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில்இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். உறையூர் வழியாக செல்லும் நகரப் பேருந்துகள் இந்த ஆலயம் வழியே செல்லும்.






