search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OPS"

    • எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற கூக்குரலுடன் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.
    • மீண்டும் தனது மகன் ரவீந்திரநாத்தை தேனி தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    மதுரை:

    2024 பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பெரும்பாலான மாநிலங்களில் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி தொகுதி பங்கீட்டையும் முடித்துவிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளும்கட்சியான தி.மு.க. முதலிடத்தை பிடித்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற கூக்குரலுடன் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.

    இதற்கிடையே தமிழகத்தின் மற்றொரு பிரதான கட்சியான அ.தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஏராளமான சிறிய கட்சிகள், அமைப்புகள் தங்களது ஆதரவினை அளித்த போதிலும் பெரிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதில் இழுபறி நிலையே தற்போது வரை நீடிக்கிறது. இருந்தபோதிலும் வலுவான கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஜெயல லிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமையில் செயல்பட்டு வந்த அ.தி. மு.க. தற்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் தனித்துவிடப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். 10 தொகுதிகள் வரை பா.ஜ.க. மேலிடத்தில் கேட்டு வரும் நிலையில் இன்னும் தொகுதி ஒதுக்கீடு குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை வைத்து தான் தனக்காக பலத்தை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக கருதி அதற்கேற்ப ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொண்டார்களா? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தனது தலைமையிலான அ.தி.மு.க.வின் பயணத்தை இந்த தேர்தலில் வெற்றியுடன் தொடங்க வியூகம் வகுத்து வருகிறார்.

    அதேவேளையில், தென் மாவட்டங்களில் தனக்கான செல்வாக்கை பயன்படுத்தி அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் பா. ஜ.க.வுடன் கைகோர்த்துள்ளார். பா.ஜ.க.வுடன் அமைத்துள்ள கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் தனது மகன் ரவீந்திரநாத்தை தேனி தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    அவ்வாறு நிறுத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார், அந்த தொகுதியில் செல்வாக்கு மிகுந்த மகேந்திரனை களமிறக்க முடிவு செய்து அதற்கான வேலை களையும் தொடங்கியுள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்த தேர்தலில் கொடுக்கும் 'அடி' தங்களுடன் மீண்டும் மோதக்கூடாது என்பதை மையமாக கொண்டிருக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. ரவீந்திரநாத்தை தோற்கடித்து அதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுக்க தயாராகி வரும் அ.தி.மு.க. அதற்கேற்றவாறு காய்களை நகர்த்தி வருகிறது.

    இதுபோன்ற காரணங்கள் அறிந்த ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதியில் இருந்து மாறி தனது மகன் ரவீந்திரநாத்தை மதுரை தொகுதியில் போட்டியிட வைக்கவும் திட்டம் வகுத்து வருகிறார். இதுபற்றி தான் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க. மேலிடத்திலும் இதுபற்றி ஆலோசித்து வருகிறார்.

    மதுரையில் பா.ஜ.க. ஆதரவுடன் போட்டியிட்டால் சவுராஷ்டிரா மக்கள் பேராதரவுடன் மற்ற சமு தாய வாக்குகளையும் எளிதாக பெற்றுவிடலாம் என்ற கணக்குடன் இந்த முயற் சியை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் கண்டிப்பாக தனது மகனுக்கே ஓட்டுப்போட வாய்ப்புள்ளதாகவும், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி களமிறங்குவதால் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என்றும் கணித்துள்ளார்.

    அதேபோல் செல்வாக்கு மிகுந்த ராமநாதபுரம் தொகுதியை குறிவைத்தும் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்காக காய் நகர்த்தி அவரை எப்படியாவது வெற்றி பெறச்செய்து எம்.பி.யாக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை அவரது ஆதரவாளர்களும் வரவேற்று உள்ளனர்.

    • அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் அறிக்கை வெளியீடு.
    • குழுவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளாக நியமனம்.

    அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்துள்ளார்.

    இதில், மாநிலத் தலைவர், மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் பதவிகளுக்கு நியமனங்கள் மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பான அறிக்கையில், "அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் குழுவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுவதாக" குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு அது பற்றி கூறுகிறேன்.
    • எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது மனைவி அனுராதாவுடன் சென்று கோ- பூஜை, கஜ பூஜை செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்பாளின் அனுகிரகத்தை பெறுவதற்காக வந்து பூஜைகள் செய்தேன். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை. கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு அது பற்றி கூறுகிறேன். நானும் ஓ.பி.எஸ்.ம் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்படுவது என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளோம். எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது. எனவே வீண் வதந்திகளை நம்பாதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சசிகலா கொடுக்கும் விருந்துக்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை.
    • பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    மேலும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

    இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.

    வரும் 24ம் தேதி சசிகலா கொடுக்கும் விருந்துக்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் கட்டாயம் கலந்து கொள்வேன்.

    அதிமுக கரைவேட்டி, கொடி பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் அதிக அளவில் உள்ளது.

    பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற இருக்கிறது.
    • புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் பொதுவிடுமுறை அளித்துள்ளன.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோவில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரமாண்டமான கோவில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 22) மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

    இந்த விழாவில் இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். இந்த மிகப் பிரமாண்டமான திருக்கோவில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடெபெறும் நாளான 22-ந்தேதி (நாளை) அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க. கட்சியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
    • ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு.

    அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு காாலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க இருக்கிறது. அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்து இருந்தார்.

    இவரது தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
    • திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம், பதிவாளர் (பொறுப்பு) லெ.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

    பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் கூறியதாவது:-

    பிரதமரிடம் அரசியல் பேசவில்லை, மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.

    நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றிய 10 ஆண்டு காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    உலக நாடுகள் நம் இந்தியாவின் முன்னேற்றத்தை கண்டு பிரம்மித்து இருக்கிறது.

    பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் உள்ளது.

    ஈபிஎஸ் குறித்த ரகசியத்தை தற்போது வெளியே சொல்ல இயலாது தெரிய வேண்டிய நேரத்தில் வெளியே வரும்.

    கொடநாடு சம்பவம் நடைபெற்ற போது, நாங்கள் ஈபிஎஸ் உடன் இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • திருச்சி வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
    • இரு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொள்கின்றனர்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிந்து நான்கு மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக நாளை (ஜனவரி 2) தமிழகம் வருகிறார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாளை காலை திருச்சி வருகிறார்.

    நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அதன்பிறகு, மதியம் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1200 கோடி செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு இருக்கும் பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார்.


    கோப்புப்படம்

    கோப்புப்படம்

     

    இதே நிகழ்ச்சியில் ரூ. 19 ஆயிரத்து 850 ரோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஆளுனர் ஆர்.என். ரவி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இந்த நிலையில், திருச்சி வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி மற்றும் ஒ.பி.எஸ். இடையேயான சந்திப்பு திருச்சி விமான நிலையத்தில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

    • அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற நிலையில், இன்று பட்டியலிடப்படவில்லை.
    • முறையீடு அன்று மனு தாக்கல் செய்யவில்லை. பிறகு எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும்?- நீதிபதிகள்

    அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கியது. கடந்த 7-ந்தேதி தனிநீதிபதி என். சதீஷ்குமார் இந்த தடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.

    இதனை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. அதில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்கவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. அத்துடன் வருகிற வெள்ளிக்கிழமை (இன்று) ஆர். மகாதேவன், முகமது ஷெரீஃப் ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று மேல்முறையீடு மனு மீது விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று பட்டியலிடப்படவில்லை. இதனால் வருகிற புதன்கிழமை (15-ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

    மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும் விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் இன்று விசாரிக்க ஓ.பி.எஸ். தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், முறையீடு அன்று மனு தாக்கல் செய்யவில்லை. பிறகு எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவித்தனர்.

    • சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு எந்தவொரு இடைக்கால தடையும் விதிக்கவில்லை- நீதிபதி
    • கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பெயர், கொடியை பயன்படுத்த வருகிற 30-ந் தேதி வரை இடைக்கால தடை

    அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கியது. நேற்று தனிநீதிபதி என். சதீஷ்குமார் இந்த தடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.

    இதனை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டுள்ளது. அதில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்கவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    அதன்படி நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 10-ந்தேதி) அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர். மகாதேவன், முகமது ஷெரீஃப் ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மேல்முறையீடு மனுவை விசாரிக்கிறது.

    முன்னதாக,

    எடப்பாடி பழனிசாமி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையே கட்சியை நிர்வகிப்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ததை ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்தார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். என்றாலும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வந்தன.

    அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கு மனுவில் கூறியிருந்ததாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் ரத்து செய்யப்பட்டு, பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியும், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது.

    ஆனாலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு அவர் செயல்படுகிறார்.

    எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி, அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுகுறித்து கடிதம் கொடுத்தும், சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம், எனக்கு அருகில் முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க.வுக்கு எதிராகவும் செயல்பட்டுவருகிறார். எனவே, அ.தி.மு.க. பெயரை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்புக்கும் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

    "ஏன் இருதரப்பும் மாறிமாறி ஐகோர்டடு, சுப்ரீம் கோர்ட்டு என்று வழக்குமேல் வழக்கு தொடர்ந்து வருகிறீர்கள். விளம்பரத்துக்காக வழக்குகள் தொடர்கிறீர்களா? ஏற்கனவே அனைத்து அம்சங்களையும் வாதிட்டு, உத்தரவு பெற்ற பின்னர், எதற்காக இந்த வழக்கு?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண், "அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்று கூறி, அறிக்கைகளை வெளியிட்டும், கட்சி நிர்வாகிகளை நியமித்தும் தேவையில்லாமல் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு விட்டார். இதை ஐகோர்ட்டும் உறுதி செய்துள்ளது. அப்படியிருந்தும் அவர் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்'' என்று வாதிட்டார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் ராஜலட்சுமி, "ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். சதீஷ்குமார், "அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு எந்தவொரு இடைக்கால தடையும் விதிக்கவில்லை.

    எனவே, அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு போன்றவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த வருகிற 30-ந் தேதி வரை இடைக்கால தடை விதிக்கிறேன். இந்த வழக்கிற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.

    • இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை.

    முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தனது காரில் ஏறி, அங்கிருந்து கிளம்ப முற்பட்டார்.

    அப்போது, அங்கிருந்தவர்களில் சிலர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் அவரது காரை நோக்கி கற்கள் மற்றும் காலணிகளை வீசினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு கற்கள் மற்றும் காலணிகளை வீசியர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமிக்கு அரங்கேறிய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம், "நான் எனது சமூக வலைதள பதிவுகளின் மூலம் அறிவுறுத்தி இருந்தேன். பசும்பொன் எனும் புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தொந்தரவையோ, துயரத்தையோ கொடுக்கக்கூடாது என்பது என் வேண்டுகோளாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தேன். இது போன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது," என்று தெரிவித்தார்.

    • 2001 முதல் 2006 வரையில் ஆட்சியில் ஓ.பி.எஸ். வருவாய்த்துறை மந்திரியாக இருந்தார்
    • 1.76 கோடி ரூபாய் அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், ஜெயலிதாவின் 2001-2006 ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறை மந்திரியாக இருந்தார்.

    2006-ம் ஆண்டு ஆட்சி மாறியபோது, ஓ. பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 374 சதவீதம் அதிகமாக 1.76 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர் செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு முதலில் மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    2011-ல் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்தது, அப்போது, வழக்கை திரும்ப பெற்றுக் கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. 2012-ல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், போதிய ஆதாரங்கள் இல்லாத அடிப்படையில் வழக்கு திரும்பப்பெற முடிவு செய்து மனுதாக்கதல் செய்யப்பட்டது.

    இதனால் சிவகங்கை நீதிமன்றம் ஓ. பன்னீர் செல்வம் உள்பட்ட வழக்கில் இணைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

    இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தும் என அறிவித்தது. அதன்படி இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இது தொடர்பாக பதில் அளிக்க ஓ. பன்னீர் செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் "குற்ற வழக்கு விசாரணை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. சட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம். அதிகார வரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு வழக்கை உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளன" என தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

    ×