என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » no confidence motion
நீங்கள் தேடியது "no confidence motion"
பாஜகவின் பாதையை நாங்கள் பின்பற்றி இருந்தால் ஜனநாயகம் என்றைக்கோ அழிந்திருக்கும் என நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். #NoConfidenceMotion
புதுடெல்லி:
மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-
70 வருடங்களாக 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்று மத்திய அரசு சொல்கிறது. இந்தியா முழுவதும் 6,23,000 கிராமங்கள் உள்ளது. நீங்கள் 4 வருடங்களில் 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் கொடுத்து இருந்தாலும், நாங்கள் 6 லட்சம் கிராமங்களுக்கு மின்சார வசதியை செய்துக் கொடுத்தோம். இது வளர்ச்சி கிடையாதா?.
பா.ஜ.க எங்களுடைய பணியை ஒருபோதும் அங்கீகரித்தது கிடையாது எங்களுக்கு பாடம் எடுக்கக்கூடாது. பா.ஜ.க முதலில் தன்னுடைய குறையை பார்த்துக் கொள்வது கிடையாது.
நாங்கள் உங்களுடைய பாதையை பயன்படுத்தியிருந்தால் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே ஜனநாயகம் அழிந்து இருக்கும். காங்கிரஸ் எப்போதுமே ஜனநாயகத்தை பாதுகாக்கவே முயற்சிகளை மேற்கொண்டது. பா.ஜ.க அரசு அதானி மற்றும் அம்பானி பற்றி பேசுகிறது. ஆனால், விவசாயிகள் குறித்து பேசுவது கிடையாது.
நீங்கள் இந்து கடவுள் ராமர் மற்றும் கிருஷ்ணா பற்றி பேசுகிறீர்கள். ஆனால், மகாபாரத்தில் உள்ள பிறரை பற்றி பேசுவது கிடையாது.
என அவர் பேசினார்.
பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். #LokSabha #NoConfidenceMotion #PMModi #RahulGandhi #SumitraMahajan
புதுடெல்லி:
மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார்.
தனது உரையை முடித்த பின்னர், யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்ற ராகுல் காந்தி மோடியை கட்டிப் பிடித்தார். பதிலுக்கு மோடியும் சிரித்துக் கொண்டே ராகுல் காந்தியின் கையை பிடித்து குலுக்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது அவரை ராகுல் காந்தி கட்டித் தழுவியது ஏற்கத்தக்கது அல்ல. இது அவையின் மாண்பை குறைக்கும் செயல்.
அவையில் மாண்புகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து வந்து யாரும் அவைக்கு பாதுகாப்பு தரமுடியாது. அவையில் இருக்கும் நீங்கள் தான் இதற்கு முழு பொறுப்பு என தெரிவித்துள்ளார். #LokSabha #NoConfidenceMotion #PMModi #RahulGandhi #SumitraMahajan
மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடந்து வரும் நிலையில், இது தொடர்பான #NoConfidenceMotion மற்றும் #RahulGandhi ஆகிய இரு ஹேஷ்டேக்குகள் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது.
பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று காலை முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பலரும் கருத்து கூறி வருவதால் #NoConfidenceMotion என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. சுமார் 3 லட்சம் ட்வீட்டுகள் இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ளன.
அதேபோல், #RahulGandhi என்ற ஹேஷ்டேக்கும் உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ராகுல்கந்தி இன்று மக்களவையில் பேசிய பேச்சு மற்றும் அவர் மோடியை கட்டியணைத்து வாழ்த்து பெற்றது போன்ற செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் ட்வீட்டுகள் ராகுல் காந்தியை மையப்படுத்தி பதிவிடப்பட்டுள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #NoConfidenceMotion
புதுடெல்லி:
மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகின்றது. மாலை 6 மணியளவில் இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.
இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.
தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீர்மானம் மீதான விவாதம் முடிந்ததும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்படி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஒட்டெடுப்பு நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவையில் தனது உரையை முடித்த பின்னர் மோடியை ராகுல் கட்டிப்பிடித்ததற்கு கருத்து தெரிவித்த பாஜக பெண் எம்.பி பாதல், “கட்டிப்பிடி வைத்தியம் செய்ய இது இடமில்லை” என கூறினார். #NoConfidenceMotion #RahulHugsModi
புதுடெல்லி:
மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார். தனது உரையை முடித்த பின்னர், யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்ற அவர் மோடியை கட்டிப்பிடித்தார்.
மோடியும் சிரித்துக்கொண்டே ராகுல் காந்தியின் கையை பிடித்து குலுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனை அடுத்து பேசிய பாஜக பெண் எம்.பி பாதல், “முன்னா பாய் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய இது உகந்த இடமில்லை” என தெரிவித்தார். இதனை அடுத்து பாதலை சபாநாயகர் உட்கார வைத்தார். (முன்னாபாய் என்ற இந்தி படத்தில் அனைவரையும் கட்டிப்பிடித்து அமைதிப்படுத்துவது போல காட்சிகள் இருக்கும். தமிழில் இது வசூல்ராஜா என்ற பெயரில் வெளியானது)
ராகுல் காந்தி பாலிவுட்டில் நடிக்க போகலாம் என மற்றொரு பாஜக பெண் எம்.பி கிரண் கெர் தெரிவித்தார். “ராகுல் வயதளவில் வளர்ந்து விட்டாலும் அவர் குழந்தை போல நடந்து கொள்கிறார்” என ராகுலின் கட்டிப்பிடித்தல் குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். #RahulHugsModi #NoConfidenceMotion
புதுடெல்லி:
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்ற மக்களவையில் இன்று நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீதும் பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
குறிப்பாக ரபேல் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு பொய்யர் என ராகுல் கூறினார். இதற்கு, பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால், அவை சிறிது நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியதும் ராகுல் காந்தி பேசினார். அப்போது, “ஒத்திவைக்கப்பட்ட இடைவேளையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்லாது உங்கள் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் வந்து என்னிடம் சரியான கேள்விகளை கேட்டீர்கள் என பாராட்டு தெரிவித்தனர்” என ராகுல் கூறினார்.
தனது பேச்சில் மோடியை கடுமையாக ராகுல் தாக்கினாலும், பேசி முடித்ததும் நேராக மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டி அணைத்தார். மோடியும் சிரித்துக்கொண்டே ராகுலின் கையை பிடித்து குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் புறக்கணித்துள்ளதால், மெஜாரிட்டி எண் குறைந்துள்ளது. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. #NoConfidenceMotion
புதுடெல்லி:
மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கிடையே, தீர்மானம் மீதான விவாதத்தை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சி புறக்கணித்துள்ளது.
இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.
தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். #NoConfidenceMotion #RahulGandhi #NarendraModi
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று காலை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சியினர் புறக்கணித்தனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார் மோடி. விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், நான் பிரதமர் இல்லை. பிரதம சேவகன் என்றார் மோடி. அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?
பிரதமர் நாட்டுக்காக உழைக்கவில்லை; சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பர் பலனடைந்துள்ளார். என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேசவேண்டும்; ஆனால் அதை தவிர்க்கிறார். பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும் என்றார்.
அமித்ஷா மகன் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்த போது மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இடைவேளைக்கு பின்னர் பேசிய ராகுல் காந்தி, என் மீது உங்களுக்கு கோபம் உள்ளது. நீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம். ஆனால், நான் உங்கள் மீது கோபப்பட மாட்டேன்.
அவை ஒத்திவைக்கப்பட்ட இடைவேளையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்லாது உங்கள் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் வந்து என்னிடம் சரியான கேள்விகளை கேட்டீர்கள் என பாராட்டு தெரிவித்தனர்” என ராகுல் கூறினார்.
தனது பேச்சில் மோடியை கடுமையாக ராகுல் தாக்கினாலும், பேசி முடித்ததும் நேராக மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டி அணைத்தார். மோடியும் சிரித்துக்கொண்டே ராகுலின் கையை பிடித்து குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். #NoConfidenceMotion #RahulGandhi #NarendraModi
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, மக்களவையில் எம்.பி.க்களே இல்லாத தி.மு.க. ஆதரிப்பதாக கூறியதற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக கூறி இருக்கிறார். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி மத்தியில் நடந்த போதுதான் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது என்பது தான் உண்மை.
பா.ஜனதா தலைமையிலான இன்றைய மத்திய அரசில் தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு தமிழகத்துக்கு வந்துள்ளது. நீட் தேர்வில் பாமர மக்களின் குழந்தைகளும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்து இருக்கிறது.
தி.மு.க.வில் எம்.பி.க்களே இல்லை. ‘ஜீரோ’ எம்.பி.க்களை வைத்துக் கொண்டு மத்திய பா.ஜனதா அரசை எதிர்த்து கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறுகிறார். ஆளும் கட்சியும் ஆதரிக்க வேண்டும் என்கிறார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கையில் லட்சக் கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது தி.மு.க. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததா?
8 வழிச்சாலை நாட்டு வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான திட்டம். எனவே, அதை ரஜினி ஆதரித்தார். மத்திய அரசுக்கு எதிரான சில கருத்துக்களையும் கூறியுள்ளார். ரஜினி ஆளும் கட்சியின் ஆதரவாளர் என்று சொல்வது தவறு. ஸ்டாலின் எதிர்த்தால் எல்லோரும் எதிர்க்க வேண்டும் என்பது நாகரீக அரசியல் அல்ல.
‘நீட்’ தேர்வு தமிழ் கேள்விகளில் நடந்த குளறுபடிகளுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் காரணம். நடந்த தவறுக்கு அவர்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சத்துணவு பெண் பணியாளர் நியமனம் தொடர்பாக தமிழகத்தில் தீண்டாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 21-ம் நூற்றாண்டிலும் இப்படி நடந்திருப்பது வேதனை. தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். எஸ்.சி. எஸ்டி. பிரிவினருக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. பா.ஜனதாவுக்கு எதிரான கருத்துக்களை வலிமையான பிரசாரத்தால் முடியடிப்போம்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #DMK
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக கூறி இருக்கிறார். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி மத்தியில் நடந்த போதுதான் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது என்பது தான் உண்மை.
பா.ஜனதா தலைமையிலான இன்றைய மத்திய அரசில் தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு தமிழகத்துக்கு வந்துள்ளது. நீட் தேர்வில் பாமர மக்களின் குழந்தைகளும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்து இருக்கிறது.
தி.மு.க.வில் எம்.பி.க்களே இல்லை. ‘ஜீரோ’ எம்.பி.க்களை வைத்துக் கொண்டு மத்திய பா.ஜனதா அரசை எதிர்த்து கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறுகிறார். ஆளும் கட்சியும் ஆதரிக்க வேண்டும் என்கிறார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கையில் லட்சக் கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது தி.மு.க. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததா?
மு.க.ஸ்டாலின் ரஜினியை பா.ஜனதாவின் நட்சத்திர செய்தி தொடர்பாளர் என்கிறார். எம்.பி.க்களே இல்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க சொல்லும் மு.க.ஸ்டாலின் காங்கிரசின் ‘ஜீரோ’ செய்தி தொடர்பாளர்.
‘நீட்’ தேர்வு தமிழ் கேள்விகளில் நடந்த குளறுபடிகளுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் காரணம். நடந்த தவறுக்கு அவர்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சத்துணவு பெண் பணியாளர் நியமனம் தொடர்பாக தமிழகத்தில் தீண்டாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 21-ம் நூற்றாண்டிலும் இப்படி நடந்திருப்பது வேதனை. தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். எஸ்.சி. எஸ்டி. பிரிவினருக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. பா.ஜனதாவுக்கு எதிரான கருத்துக்களை வலிமையான பிரசாரத்தால் முடியடிப்போம்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #DMK
பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சியினர் புறக்கணித்துள்ளனர். #MonsoonSession #NoConfidenceMotion #Sivasena
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சி சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில் தெலுங்குதேசம் அளித்த நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை விவாதம் நடத்த அனுமதி அளித்தார்.
அதன்படி, பாராளுமன்றத்தில் மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது.
முன்னதாக, இந்த விவாதத்தில் பங்கேற்பது தொடர்பாக சிவசேனா கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிவசேனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்துள்ளது. #MonsoonSession #NoConfidenceMotion #Sivasena
மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்குவதற்கு முன்பாக பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #NoConfidenceMotion #NoConfidenceDebate
புதுடெல்லி:
மத்திய அரசின் மீது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி எம்பி ஜெயதேவ கல்லா விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதனை ஏற்கவில்லை. இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவே, நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #NoConfidenceMotion #NoConfidenceDebate
மத்திய அரசின் மீது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி எம்பி ஜெயதேவ கல்லா விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் தொடங்கியது. #NoConfidenceMotion #NoConfidenceDebate
புதுடெல்லி:
அதன்படி பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. தெலுங்கு தேசம் கட்சி எம்பி ஜெயதேவ கல்லா விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். விவாதத்தின் முடிவில் மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்கு ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு 3 மணி 33 நிமிடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது பெரிய கட்சியான அ.தி.மு.க.வுக்கு 29 நிமிடங்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 27 நிமிடங்களும், பிஜூ ஜனதா தளத்துக்கு 15 நிமிடங்களும், சிவசேனாவுக்கு 14 நிமிடங்களும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்களும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 9 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 7 நிமிடங்கள், சமாஜ்வாதி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 6 நிமிடங்கள், லோக் ஜன் சக்தி கட்சிக்கு 5 நிமிடங்கள். மொத்தம் 6 மணி 35 நிமிடங்கள் வரை தீர்மானம் மீது விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையை நிரூபித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்போம் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்த் குமார் தெரிவித்தார். #NoConfidenceMotion #NoConfidenceDebate #MonsoonSession
பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தெலுங்குதேசம் சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில் தெலுங்குதேசம் அளித்த நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு விவாதம் நடத்த அனுமதி அளித்தார்.
அதன்படி பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. தெலுங்கு தேசம் கட்சி எம்பி ஜெயதேவ கல்லா விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். விவாதத்தின் முடிவில் மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்கு ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு 3 மணி 33 நிமிடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது பெரிய கட்சியான அ.தி.மு.க.வுக்கு 29 நிமிடங்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 27 நிமிடங்களும், பிஜூ ஜனதா தளத்துக்கு 15 நிமிடங்களும், சிவசேனாவுக்கு 14 நிமிடங்களும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்களும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 9 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 7 நிமிடங்கள், சமாஜ்வாதி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 6 நிமிடங்கள், லோக் ஜன் சக்தி கட்சிக்கு 5 நிமிடங்கள். மொத்தம் 6 மணி 35 நிமிடங்கள் வரை தீர்மானம் மீது விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையை நிரூபித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்போம் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்த் குமார் தெரிவித்தார். #NoConfidenceMotion #NoConfidenceDebate #MonsoonSession
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X