search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் சிவசேனா புறக்கணிப்பு
    X

    பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் சிவசேனா புறக்கணிப்பு

    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சியினர் புறக்கணித்துள்ளனர். #MonsoonSession #NoConfidenceMotion #Sivasena
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    தெலுங்கு தேசம் கட்சி சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில் தெலுங்குதேசம் அளித்த நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை விவாதம் நடத்த அனுமதி அளித்தார். 

    அதன்படி, பாராளுமன்றத்தில் மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. 

    முன்னதாக, இந்த விவாதத்தில் பங்கேற்பது தொடர்பாக சிவசேனா கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிவசேனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்துள்ளது. #MonsoonSession #NoConfidenceMotion #Sivasena
    Next Story
    ×