search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muslims"

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 20 லட்சம் இஸ்லாமிய மக்கள் இன்று மக்கா நகரில் குவிந்தனர். #Hajj2018
    மக்கா:

    இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது.

    இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து மெக்கா நகரில் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் இங்கு குவிந்துள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் சவுதி அரேபியாவை சேர்ந்த சுமார் ஒருலட்சம் பேரும் பங்கேற்கிறார்கள்.

    இந்த வருட யாத்திரைக்கு டெல்லியில் இருந்து இன்று 1200 யாத்ரீகர்கள் இன்று புறப்பட்டு செல்கின்றனர். இந்த குழுவில் டெல்லி மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் யாத்ரீகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    5 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் மக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் தொழுகை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றிய பின்னர், மினா நகருக்கு புறப்பட்டு செல்லும் யாத்ரீகர்கள், அங்கு சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிவிட்டு அரபா மலையில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளை புறப்பட்டு செல்வார்கள்.


    இறைவனின் கட்டளையை ஏற்று இறைத்தூதரான இபுறாஹிம் நபி, தனது ஒரே மகனான இஸ்மாயீலை பலியிட சித்தமான வரலாற்றை நினைவுகூரும் அரபாத் மலையை வலம்வந்த பின்னர், முசதல்பியா என்ற வெட்டவெளியில் கூழாங்கற்களை சேகரித்து, ஜம்ராத் என்ற இடத்தில் தீயமன ஆசைகளான சாத்தான் மீது கல்லெறியும் சம்பிரதாயத்தை யாத்ரீகர்கள் நிறைவேற்றுகின்றனர்.

    பின்னர், தங்களது விருப்பம்போல் ஆடு மற்றும் ஒட்டகங்களை ‘குர்பானி’ (இறைவனின் பெயரால் புனிதப் பலி) செய்துவிட்டு, தங்களது பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவர்களாக - அன்று பிறந்த குழந்தையைப் போல் ‘ஹாஜி’ என்ற பட்டத்துடன் தங்களது இல்லங்களுக்கு புறப்பட்டுச் செல்வர்.


    ஹஜ் யாத்திரைக்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளதால் புனித நகரங்களான மக்கா, மதினாவை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    எதிர்பாராத விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கில் யாத்ரீகர்கள் அனைவருக்கும் மின்னியல் கைப்பட்டை வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமுள்ள இடங்களை அறிந்து புனிதப் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ள அது உதவும். #Hajj2018 #2millionMuslim #hajjpilgrimagebegins
    நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியாவில் இருந்து மீண்டும் ஒரு பாகிஸ்தான் உருவாகும் என பா.ஜ.க எம்.பி ஹரி ஓம் பாண்டே தெரிவித்துள்ளார். #BJP #HariOmPandey
    லக்னோ:

    மதம் சார்ந்த அரசியலை பா.ஜ.க முன்னெடுத்து வருவதாக பல்வேறு தரப்பில் இருந்து வரும் புகார்களை அவ்வப்போது அக்கட்சியைச் சேர்ந்த சிலர் உறுதி செய்து வருகின்றனர். இஸ்லாமியர்கள், தலித் போன்ற சிறுபான்மையினர்கள் மீதான அவர்களின் கருத்து சர்ச்சைகளை உண்டாக்கி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஹரி ஓம் பாண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்தாவிட்டால், விரைவில் மீண்டும் ஒரு பாகிஸ்தான் உருவாகும் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், விரைவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.

    மேலும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தான், நாட்டில், கற்பழிப்பு சம்பவங்கள், கொலை போன்றவை அதிகரித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். பா.ஜ.க எம்பியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #HariOmPandey
    அன்சாரி நண்பர்கள் புடைசூழ அல்லாஹ்வின் தூதர் ஏகத்துவத்தின் தலைநகரம் மதினாவை சென்றடைந்தார்கள். ஹிஜ்ரத் முடிவடைந்தது. இஸ்லாம் என்னும் பேரொளி குன்றிலிட்ட ஒளியாய் பிரகாசிக்கத் தொடங்கியது.
    “மலைக்குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த போது, எதிரிகள் வந்து சூழ்ந்து கொண்ட சமயத்தில் தன்னுடன் குகையில் இருந்த தோழராகிய அபூபக்கரை நோக்கி, ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்’ என்று கூறிய போதும், அல்லாஹ் அவருக்கு தன்னுடைய மன நிம்மதியை அளித்தான்”. (திருக்குர்ஆன் 9:40)

    மக்கள் மூட நம்பிக்கையில் திளைத்திருந்த காலம் அது. தங்கள் கற்பனையில் உருவான உருவங்களை கடவுளாக வணங்கி வந்தனர். மேலும் தவறான, பாவம் நிறைந்த செயல்களில் ஈடுபட்டு வாழ்ந்தனர்.

    அப்போது மக்களை திருத்தி, நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு நேர்வழிகாட்ட முகம்மது நபி (ஸல்) அவர்களை, தனது தூதராக இறைவன் அனுப்பினான். ஏக இறைவன் அல்லாஹ், தனது இறைச்செய்தியை நபிகளாருக்கு அனுப்பி மக்களிடம் அதை தெரிவிக்கச்செய்தான். ஆனால் மக்கள் இதை ஏற்க மறுத்தனர். அதோடு, நபிகளாருக்கு கடும் துன்பங்களையும் கொடுத்தார்கள்.

    நாளுக்கு நாள் இறைமறுப்பாளர்களின் துன்பங்களும், கொடுமைகளும் அதிகரித்தன. ஏக இறைக்கொள்கைகளை மக்களிடம் எடுத்துச்சொல்ல முடியாத அளவுக்கு எதிரிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.

    எனவே இறைக்கட்டளைப்படி நபிகளார் தனது தோழர் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடன் மக்காவில் இருந்து மதினாவுக்கு புலம் பெயர்ந்து சென்றார். இந்த நிகழ்ச்சி ‘ஹிஜரத்’ என்று அழைக்கப்பட்டது.

    அருமை நாயகம் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில்இருந்து தப்பி விட்டார்கள் என்ற செய்தி அறிந்த எதிரிகள் கோபம் அடைந்தனர். குறிப்பாக அபூஜஹில் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தான், ‘அவர்கள் அவ்வளவு எளிதில் எல்லையை கடந் திருக்க முடியாது. முகம்மதை உயிரோடு பிடித்து கொண்டு வருபவர்களுக்கு நூறு வெள்ளை ஒட்டகங்கள் பரிசாக அளிப்பேன்’ என்று அறிவித்தான்.

    அரேபியர்கள் மத்தியில் வெள்ளை ஒட்டகத்திற்கு என்று தனி மதிப்பு உண்டு. அதுவும் நூறு வெள்ளை ஒட்டகங்கள் என்றால் கேட்கவா வேண்டும். எதிரிகள் அத்தனை பேருமே அண்ணலாரைத் தேடி பல திசைகளில் பயணித்தார்கள்.

    ஆனால், அருமை நபிகளும், அபூபக்கரும் பாலைவனத்தில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்தார்கள். கிட்டத்தட்ட பாதி தூரம் சென்றவர்கள், அந்த பாலைவனத்தைக் கடந்து தவுர் மலையில் உள்ள ஒரு குகையை அடைந்தார்கள்.

    அந்த குகை மிகவும் பழமை வாய்ந்த பள்ளதாக்கில் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு இருவரும் அதில் ஏறினார்கள். தங்களது கால்தடங்கள் கூட தங்களை எதிரிகளிடம் காட்டிக்கொடுத்து விடும் என்று நபிகளார் அஞ்சினார்கள். எனவே அவர்கள் தங்களது விரல் நுனியிலேயே நடந்து வந்தார்கள். இதனால் அவர் களது கால் விரல் வெப்பத்தினால் வெந்து காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது.

    அதனைக் கண்ணுற்ற அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் உடனே நபிகளாரை தனது தோள்களில் தூக்கி வைத்துக்கொண்டு அந்த குகையை ேநாக்கி நடந்தார்கள். குகைக்குச் சென்றதும் அண்ணலாரை வெளியே இருக்கச் செய்து விட்டு, தான் மட்டும் உள்ளே நுழைந்தார்கள். அந்த குகை மிகவும் சிறியதாக இருந்தது. இரண்டு நபர்கள் படுப்பதற்கும் மூன்று அல்லது நான்கு நபர்கள் அமரும் இடவசதி கொண்டது.

    உள்ளே சென்ற அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் குகையை நன்றாக சுத்தம் செய்தார்கள். குகைகளில் இருந்த ஏராளமான துவாரங்களை தங்களுடைய ஆடையை கிழித்து அடைத்தார்கள். பின்னர் அண்ணலாரை உள்ளே அழைத்தார்கள். அண்ணலார் உள்ளே சென்றதும், களைப்பின் மிகுதியால் அப்படியே துயில் கொள்ள ஆரம்பித்தார்கள்.

    அண்ணலாரின் தலையை தன் மடியில் சாய்த்துக்கொண்ட அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள், தன்னுடைய கால் விரல்களால் மீதமிருந்த இரண்டு துவாரங்களையும் அடைத்துக் கொண்டார்கள்.

    துரதிர்ஷ்டவசமாக அந்த துவாரத்தில் இருந்த நாகம் ஒன்று அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் பாதங்களை தீண்டி விட்டது. கொடிய விஷம் உடலில் ஏறியதால் சொல்லொண்ணா வலியும் வேதனையும் ஏற்பட்டது. கால்களை அசைத்தால் அது அண்ணலாரின் தூக்கத்தை கெடுத்து விடும் என்று நினைத்து, வலியை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.

    ஆனால், வலியின் வேதனையில் அவரது கண்ணிலிருந்து வழிந்தோடிய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சில கண்ணீர்த்துளிகள் வழிந்தோடி அண்ணலாரின் கன்னங்களில் பட்டு தெறித்தது.

    உடனே விழித்துக்கொண்ட அண்ணலார், ‘அபூபக்கரே! என்ன நேர்ந்தது?’ என வினவினார்கள்.

    அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள், ‘அண்ணலே! எனது காலில் ஏதோ விஷ ஜந்து தீண்டி விட்டது போல் தெரிகிறது. வலியையும் வேதனையையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்றார்கள்.

    உடனே பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் உமிழ் நீரை எடுத்து கடிபட்ட இடத்தில் தடவினார்கள். உடனே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வலியும் வேதனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.

    அண்ணலாரும், அபூபக்கரும் குகையில் நுழைந்ததும் ஒரு புறா ஜோடி அங்கே கூடு கட்டி அதில் முட்டையிட்டு அடைகாக்க ஆரம்பித்து விட்டது. குகையின் வாயிற் பகுதியில் ஒரு சிலந்தி தன் வலைகளை முழுவதுமாக பின்னி அந்த இடத்தில் எந்தவித அசைவுகளும் ஏற்படவில்லை என்பது போலவும், யாரும் அங்கே நுழைந்திருக்க முடியாது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது.

    சுகாதாரமற்ற, காற்று வசதி இல்லாத இருண்ட, விஷ ஜந்துக்கள் குடியிருக்கும் அந்த குகையில் இரு நண்பர்களும் தங்கினார்கள்.

    இந்நிலையில் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் மகன் ஹஸ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், விரோதிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஒவ்வொரு இரவும் குகைக்கு வந்து மக்கா நகரின் தற்போதைய தகவல்களை சொல்லிச் செல்வார்கள்.

    அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் அடிமை ஆமீர் இப்னு பஷீர் என்பவர் பாலைவனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருவது போல குகை இருக்கும் பகுதிக்கு இரவில் வந்து, குகையில் தங்கியிருந்த அண்ணலாருக்கும், அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுக்கும் ஆட்டின் பாலைக் கறந்து அருந்த கொடுப்பார்கள்.

    பரிசுகளின் அறிவிப்பை தொடர்ந்து மேலும் பலர் அண்ணலாரை எல்லா இடங்களிலும் தேட ஆரம்பித்தார்கள். ஒரு கூட்டத்தினர் அண்ணலார் இருந்த குகை வாசல் வரை வந்து விட்டார்கள். அவர்களின் கால் பாதங்களை அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களால் பார்க்க முடிந்தது.

    “அண்ணலே! நம்மை எதிரிகள் சூழ்ந்து விட்டார்கள். சற்று குனிந்து பார்த்தால் நாம் பிடிபட்டு விடுவோம். என்ன செய்வது ரசூலே” என்றார்கள்.

    அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் “நீர் அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்றார்கள். (திருக்குர்ஆன் 9:40)

    அந்த நேரத்தில் எதிரிகளில் ஒருவன், ‘ஏதோ இங்கே ஒரு குகையின் வாசல் போல தோன்று கிறதே’ என்றான். ஆனால் அதற்கு பதிலாக மற்றொருவன், ‘இங்கே புறா கூடு கட்டியுள்ளது, சிலந்தி வலை பின்னியுள்ளது. இதனை அறுத்துக்கொண்டு யாரும் சென்றதற்கான அடையாளமே இல்லையே?. எனவே இங்கே யாரும் இருக்க மாட்டார்கள்’ என்று கூறியபடியே அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.

    எதிரிகளின் ஆரவாரம் முடிந்ததும், நபிகளார் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து மதினாவின் எல்லையை அடைந்தார்கள். அந்த எல்லையில் ஒரு இடத்தில் தங்கினார்கள். அதுவே ஹிஜ்ரத்தின் கடைசி இடமாகும். அங்கு தான் வந்து தங்கியதும் தொழுவதற்காக பேரீச்சம் மர இலைகளால் கூரை வேய்ந்த பள்ளியைக் கட்டினார்கள். அதுவே ‘மஸ்ஜிதே குபா’ என்று அழைக்கப்படுகிறது.

    அங்கிருந்து அன்சாரி நண்பர்கள் புடைசூழ அல்லாஹ்வின் தூதர் ஏகத்துவத்தின் தலைநகரம் மதினாவை சென்றடைந்தார்கள். ஹிஜ்ரத் முடிவடைந்தது. இஸ்லாம் என்னும் பேரொளி குன்றிலிட்ட ஒளியாய் பிரகாசிக்கத் தொடங்கியது.

    மு. முஹம்மது யூசுப் - உடன்குடி.
    எல்லோரையும் ஏற்ற, தாழ்வின்றி சமமாகப் பாவிப்பவர்களுக்கு கோபம் வருவது அரிதே. கோபம் கொள்வதால் நாம் செய்யும் நற்செயல்கள், இறைவனிடத்தில் எந்த பலனையும் பெற்றுத் தராது.
    உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பது உயிரினங்களின் பண்பாக இருக்கிறது. விலங்குகளுக்கு பகுத்தறிவு இல்லாததால் அவைகளால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது.

    ஆனால் மனிதர்களுக்கு எது சரி, எது சரியல்ல, இதைச் செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று பகுத்து அறியும் ஆற்றலை இறைவன் அருளியுள்ளான். எனவே உணர்ச்சிகள் கொப்புளிக்கும்பொழுது தன்னைக் கட்டுப்படுத்துபவனே விலங்குகளிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்கிறான்.

    மற்றவர்களைக் காயப்படுத்தும் உணர்ச்சிகளுள் ஒன்றான கோபத்தை ஒருவன் அடக்கத் தவறினால் அந்தக் கோபம் அவனையும் அழித்து, அடுத்தவர்களையும் பொசுக்கி விடும்.

    மற்றவர்களின் மீது ஒருவருக்கு கோபம் ஏற்பட முக்கிய காரணங்கள் இவை தான்: 1) சம்பந்தப்பட்ட நபர் மீது வெறுப்பு, 2) தான் சரியென்று நினைப்பதை அடுத்தவர் ஒப்புக்கொள்ளாமல் இருப்பது, 3) தான் எண்ணியது நடக்கவில்லை என்கிற போது... இதுபோன்று பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

    கோபத்தில் முகம் சிவந்தது, கோபத்தில் ரத்தம் கொதித்தது போன்ற வார்த்தை பிரயோகங்கள் அறிவியல் பூர்வமாக சரியானவையே. ஒருவர் கோபப்படும் பொழுது ரத்த நுண் குழாய்களில் அழுத்தம் அதிகமாகி வெடித்து விடும் ஆபத்தும் உள்ளது என்று எச்சரிக்கிறது மருத்துவம்.

    இதனால் கோபப்படுபவருக்கு உடல் நலம் கெடுவதுடன் அதனால் சம்பந்தப்பட்டவர்களும் மனஅழுத்தத்திற்கு ஆளாகலாம். கோபத்தினால் எந்த லாபமும் இல்லை, புண்ணியமும் இல்லை.

    அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் (எளிதில் கோபப்படும் இயல்புடைய) ஒருவர் வந்து, ‘எனக்கு ஏதாவது ஒரு அறிவுரை கூறுங்களேன்’ என்று கேட்டார். அதற்கு ஏந்தல் நபி (ஸல்) ‘கோபப்படாதீர்’ என்று பதில் கூறினார்கள். இதே கேள்வியை பல முறை அந்த மனிதர் கேட்டும் அண்ணலார் அவர்கள் ஒவ்வொரு முறையும் ‘நீர் கோபம் கொள்ளாதீர்’ என்றே கூறினார்கள்.

    கட்டுப்படுத்த முடியாமல் கோபம் வரும்பொழுது அதை அடக்கிக் கொள்பவனே உண்மையான வீரன். “குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்பொழுது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையில் வலிமை வாய்ந்தவன்” என்றும் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

    மிகுதியான கோபம் ஏற்படும்பொழுது நாவைக் கட்டுப்படுத்துவது மிகச்சிறந்ததாகும். ஏனெனில் கோபம் மூளையை ஆக்கிரமித்து, என்ன பேசுகிறோம் என்பதை நாம் உணராத அளவிற்கு செய்து விடும். கோபம் குறைந்த பின், ‘நானா அப்படிச் சொன்னேன்?’ என்று நாம் ஆச்சரியப்படுவது இந்த காரணத்தினால் தான்.

    எரிமலையாய்ச் சீறும் ஒருவரின் நாவில் இருந்து வரும் வார்த்தைகள் தீக்கங்குகளாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. எனவே தான் கோபம் சாட்டப்பட்டவர்கள் வேதனையில் வெந்து போகிறார்கள். இதையே திருவள்ளுவர் ‘தீயினாற் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்கிறார்.

    கோபம் கொள்பவர்கள் ஷைத்தானின் ஆதிக்கத்தில் இருக்கிறார்கள். நெருப்பால் படைக்கப்பட்ட அவனின் தாக்கமே அவர்களிடமிருந்து கோபமாக கொப்புளிக்கிறது. ஆகவேதான் கோபம் தலைக்கேறும் பொழுது நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டு உடனே தண்ணீரும் பருகுவதால் கோபம் தணியும்.

    கோபத்தில் பொங்கும் மன தைக் குளிர்விக்கவே ரஸூல் (ஸல்) அவர்கள் “கோபம் ஷைத்தானின் பாதிப்பினால் ஏற்பட்ட விளைவாகும். அவன் நெருப்பினால் படைக்கப்பட்டவன். நெருப்பு நீரினால் மட்டுமே அணைகிறது. எனவே உங்களில் ஒருவர் கோபம் கொள்ளும் பொழுது அவர் ‘ஒளு’ செய்து கொள்ளட்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

    இன்னும் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் பொழுது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும், இப்படிச் செய்து கோபம் மறைந்து விட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவுரை பகன்றுள்ளார்கள்.

    கோபம் வரும்பொழுது, ‘விரட்டப்பட்ட ஷைத்தானிடம் இருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்று இறைவனிடம் கோருவது, கோபத்தில் இருந்து நம்மைத் தடுத்துக் கொள்வதற்கான ஒரு எளிய வழியாகும்.

    கோபத்தை அடக்க முடியாமல் ஆத்திரத்தில் கொலை போன்ற கடுமையான குற்றங்களைச் செய்பவர்களை நாம் பார்க்கிறோம். கோபம் வடிந்து, ‘தவறு செய்து விட்டோமே’ என்று காலம் தாழ்ந்து உணர்பவர்கள் வேதனைப்பட்டாலும் அதில் எந்த பலனும் கிடைக்காது. பெரும் தவறு செய்த குற்றத்திற்காக சிறை தண்டனைதான் கிடைக்கும்.

    கோபத்தினாலும், ஆத்திரத்தினாலும் நடந்த முதல் கொலை ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் நடந்தது. காபீல், ஹாபீல் இருவரும் ஆதம் (அலை) அவர்களின் புதல்வர்கள். காபீலுக்கு ஹாபீலின் மீது பொறாமை ஏற்படுகிறது.

    இறைவனுக்காக இருவரும் சமர்ப்பணம் செய்த காணிக்கைகளில் ஹாபீலின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனால் பொறாமைத் தீ இன்னும் கொழுந்து விட்டு எரிய, கோபத்தில் காபீல், ஹாபீலைக் கொன்று விடுகிறார்.

    கோபம் எப்படிப்பட்ட சீரழிவிலும் கொண்டு போய் விட்டு விடும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இல்லை. இதுமட்டுமின்றி பொறாமையின் காரணமாகவும் மனிதர்கள் கோபம் கொள்கிறார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

    ‘நான் தான் பெரியவன்’ என்னும் அகம்பாவம் மனதில் மேலோங்கும் பொழுது ‘தாங்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும்’ என்று எண்ணுபவர்களுக்கு, தங்கள் சொல்லைக் கேட்காதவர்கள் மீது கோபம் ஏற்படுகிறது. இதனால்தான் சிலர் தமக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் கோபம் கொள்கிறார்கள்.

    எல்லோரையும் ஏற்ற, தாழ்வின்றி சமமாகப் பாவிப்பவர்களுக்கு கோபம் வருவது அரிதே. கோபம் கொள்வதால் நாம் செய்யும் நற்செயல்கள், இறைவனிடத்தில் எந்த பலனையும் பெற்றுத் தராது. கோபத்தை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மையை அளிக்கக் கூடியது என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.

    மனிதர்களுக்கு கோபத்தைத் தூண்டி விட்டு, அவர்களை நன்மைகள் செய்வதிலிருந்தும் தடுப்பது ஷைத்தானின் வேலையாக இருக்கிறது. எனவே நாம், கோபம் கொள்வதிலிருந்து இறைவனிடத்தில் பாதுகாப்பு தேடிக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84 
    இறைவனின் அன்பை அடைய நான்கு வழிகள் உண்டு. அவை: உணவை குறைப்பது, உறக்கத்தை குறைப்பது, பேச்சை குறைப்பது, மக்களுக்கிடையே கலந்திருப்பதை குறைப்பது.
    புனித ரமலானின் நோன்பு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அன்பை பெற்றுத்தரும் ஒரு சிறந்த வணக்க வழிபாடாக அமைந்துள்ளது. இறைவனின் அன்பை அடைய நான்கு வழிகள் உண்டு. அவை: உணவை குறைப்பது, உறக்கத்தை குறைப்பது, பேச்சை குறைப்பது, மக்களுக்கிடையே கலந்திருப்பதை குறைப்பது.

    இந்த நான்கு அம்சங்கள் ஒரு முஸ்லிமிடம் இடம் பெற்றால் அவர் இறைவனின் அன்பை எளிதாக பெற்றுவிடலாம். இந்த நான்கு அம்சங்களும் புனித ரமலானின் நோன்பில் அமைந்துள்ளது.

    உணவை குறைப்பது

    புனித ரமலானில் நோன்பாளிகள் வெகுவாக உணவை குறைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு உணவை குறைத்துக் கொள்வதின் மூலம் இறைவனின் நெருக்கத்தை சுலபமாக அடைந்து கொள்கிறார்கள். இதுகுறித்த நபிமொழி வருமாறு:-

    ‘எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார். நோன்பு எனக்கு மட்டுமே உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று இறைவன் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) புகாரி)

    நோன்பு காலத்தில் உணவை குறைத்துக் கொள்வதின் வழியாக நோன்பின் சன்மானத்தை இறைவனின் திருக்கரத்தால் பெறமுடிகிறது.

    தூக்கத்தை குறைப்பது

    புனித ரமலானில் இரவு வணக்கம் என்பது முக்கியமானது. மற்ற மாதங்களை விட ரமலானில் இரவு வணக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் வெகுநேரம் தூங்கமுடியாது.

    ‘எவர் ரமலான் இரவில் இறை நம்பிக்கையாளராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் இருந்து (தராவீஹ்) தொழு கிறாரோ, அவர் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) புகாரி)

    ‘நபி (ஸல்) அவர்கள் ரமலான் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள்.’ (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) புகாரி)

    ‘கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பான தொழுகை ‘தஹஜ்ஜத்’ தொழுகை ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

    ‘பயபக்தியாளர்கள் பொறுமையாளராகவும், வாய்மையாளராகவும், இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவோராகவும், தான தர்மங்கள் செய்வோராகவும், ஸஹ்ர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருபவராகவும் இருப்பர்.’ (திருக்குர்ஆன் 3:17)

    ‘(ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவில் அல்லாஹ்வைத் தொழுது உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்.’ (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), புகாரி)

    ‘நோன்பும், திருக்குர்ஆனும் நாளை மறுமையில் அடியானுக்கு பரிந்துரை செய்யும். ‘இறைவா! நான் அவனை பகலில் உண்ணுவதை விட்டும், மனோ இச்சைகளை விட்டும் தடுத்தேன். எனவே அவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக’ என்று நோன்பு கூறும்.

    ‘இறைவா! நான் அவனை இரவில் தூங்குவதை விட்டும் தடுத்தேன். எனவே அவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக’ என்று திருக்குர்ஆன் கூறும். எனவே இரண்டு வகையான பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்பின்அம்ர் (ரலி), அஹ்மது)

    புனித ரமலானில் நிறைவேற்றப்படும் இந்த செயல்பாடுகள்தான் அவர்களுக்கு இறைவனின் அன்பை பெற்றுத்தர போதுமானதாக அமைந்துவிடுகிறது.

    பேச்சை குறைப்பது

    ‘எவர் பொய்யான காரியங்கள் செய்வதையும், பொய்யான பேச்சுகளையும் விடவில்லையோ, அவர் தமது உணவையும், நீரையும் விட்டுவிடுவ(நோன்பு வைப்ப)தில் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)

    ‘நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே நோன்பாளி தவறான பேச்சுகளைப் பேசவேண்டாம். முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடவேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால், அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி’ என்று இருமுறை கூறட்டும்! என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)

    நோன்பு என்பது உண்ணாமல், பருகாமல் இருப்பது மட்டுமே அல்ல. கெட்ட வார்த்தைகளை பேசாமலும், பொய் பேசாமலும், புறம் பேசாமலும், அவதூறு பேசாமலும், கோள் பேசாமலும், ஆபாசமாக பேசாமலும், தீச்சொல் பேசாமலும் இருக்க வேண்டும். இவ்வாறு இருப்பதுதான் மெய்யான நோன்பாகும்.

    நோன்பின் ஒழுக்கங்கள் எட்டு. அதில் நாவைப் பேணுதலும் அடங்கும். இறைவனின் அன்பை பெற தேவையற்ற பேச்சு களை விட்டு தவிர்ந்திருக்க வேண்டும்.

    மக்களுடன் குறைவாக கலந்திருப்பது

    புனித ரமலானில் நோன்பாளிகள் தமது நட்பு வட்டாரத்தை சுருக்கிக் கொண்டு, இறை நெருக்கத்தை அடையும் வகையில் மக்களுடன் கலந்திருப்பதை தவிர்த்து கொள்கிறார்கள்.

    ரமலானின் மூன்றாவது பத்தில் நோன்பாளிகள் உலகத் தொடர்பை துண்டித்து, குடும்ப உறவை தற்காலிகமாக நிறுத்திவைத்து, இல்லறத்தொடர்பை முற்றிலும் விட்டுவிட்டு, பள்ளிவாசலில் தஞ்சமடைந்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை தியானிக்க ‘இதிகாப்’ இருப்பார்கள்.

    இதுகுறித்து குர்ஆன் கூறுவதைக் காண்போம். ‘நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இதிகாப்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்’ (2:187)

    ‘நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் இதிகாப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியரும் இதிகாப் இருந்தனர்.’ (அறிவிப் பாளர் : ஆயிஷா (ரலி), புகாரி)

    கெட்ட சகவாசத்தை விட ஒதுங்கி தனியாக இருப்பதே மேல். அதிலும் ரமலானில் இருப்பது அதைவிடவும் மேலானது.

    மேற்கூறப்பட்ட நான்கு அம்சங்களையும் கடைப்பிடித்தால் இறைவனின் அன்பை அடையலாம். மேலும், இறைவனையே பரிசாக பெற்றுவிடலாம். இத்தகைய அம்சங்களை கடைப்பிடிக்கக்கூடிய பாக்கியம் புனித ரமலானில் மட்டுமே அரிதாகக் கிடைக்கும்.

    ‘சுவையான உணவை தேடுபவன் இறைவணக்கத்தில் இன்பம் பெறமாட்டான். அதிகமாக தூங்குபவன் வாழ்க்கையில் அபிவிருத்தியை அடையமாட்டான். மனிதர்களிடம் புகழை தேடுபவன் இறைவனின் பொருத்தத்தை பெறமாட்டான். புறமும், வீண் பேச்சும் பேசுபவன் தீனுல் இஸ்லாத்தில் மரணிக்கமாட்டான்’ என இப்ராகீம் பின் அத்ஹம் (ரஹ்) கூறுகிறார்கள்.

    இந்த புனித ரமலானில் இறைவனுக்கு பிடிக்காத அனைத்துவிதமான செயல்களையும் அறவே விட்டுவிட்டு, அறவழியில் சென்று இறையருளைத்தேடுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
    நபிபெருமானார் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்தே சொல்லொண்ணா தொல்லைகளுக்கு ஆளானார்கள்.
    “நபியே! உங்களைச் சிறைப்படுத்தவோ, அல்லது உங்களை கொலை செய்யவோ, அல்லது உங்களை ஊரை விட்டு அப்புறப்படுத்தவோ, நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன்.” (திருக்குர்ஆன் 8:30)

    நபிபெருமானார் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்தே சொல்லொண்ணா தொல்லைகளுக்கு ஆளானார்கள். மக்காவை விட்டு தாயிப் நகருக்கு சென்று அங்கு தன் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். அங்குள்ள மக்களும் நபிகளாரை துன்புறுத்தினார்கள்.

    எனவே, மக்காவைப் பிரிந்து மதினா சென்றால் தான் இறைச்செய்தியை எடுத்துச்சொல்ல முடியும் என்று நபிகளார் முடிவு செய்தார்கள். இருப்பினும், அல்லாஹ்வின் கட்டளைக்காக காத்திருந்தார்கள்.

    ஒரு நாள் இரவு மக்கா முழுவதும் நீண்ட அமைதி நிலவியது. நபிகளாரைக்கொல்ல எதிரிகள் திட்டம் வகுத்து காத்திருந்தார்கள்.

    அப்போது, இரவின் பிற்பகுதியில் அண்ணலாருக்கு இறைவனின் கட்டளை வருகிறது. “நீங்கள் மக்காவை விட்டு மதினாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செய்யுங்கள்” (புலம் பெயர்ந்து செல்லுங்கள்) என்று உத்தரவு வருகிறது.

    உடனே எம்பெருமானார் (ஸல்) அவர்கள், அலி (ரலி) அவர்களை அழைத்து, “அருமை அன்பரே! எனக்கு அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. நான் இப்போதே மதினாவிற்கு பயணம் புறப்படப்போகிறேன். அதற்கு முன்னால் எனக்கு ஒரு கடமை இருக்கிறது. என்னிடம் மக்கா குரைஷியர்கள் பலர், எதிரிகளாய் இருந்தாலும் அமானிதமாய் பல உயர்ந்த பொருட்களை என்னிடம் கொடுத்திருக்கின்றனர். அத்தனைப் பொருட்களையும் உரியவர்களிடம் சேர்க்கின்ற பொறுப்பை உங்களுக்கு வழங்குகிறேன்.”

    “இன்ஷா அல்லாஹ், உடமைகளை உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு, என்னை மதினாவில் இரண்டொரு நாளில் வந்து சந்தியுங்கள்” என்று பணித்தார்கள்.

    அன்று இரவு அண்ணல் எம்பெருமானார் (ஸல்) வீட்டை விட்டு புறப்படுவதற்கு முன்பே மக்கத்து குரைஷிகள், ஏற்கனவே சதித்திட்டம் தீட்டியபடி, அண்ணலாரின் வீட்டைச் சூழ்ந்து கொண்டார்கள். வாள், வில் ஆயுதங்களுடன் எதிரிகள் நிற்பதைக்கண்டு அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் சிறிதும் அஞ்சவில்லை.

    ‘நீங்கள் மதினாவிற்குப் புறப்படுங்கள்’ என்று அல்லாஹ் ‘வஹி’ (இறைச்செய்தி) அனுப்பியிருக்கிறான். அல்லாஹ் சொல்வது சத்தியம். அது நிறைவேறித்தான் ஆக வேண்டும். எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் நாம் மதினா செல்வது உறுதி. அந்த பொறுப்பை அல்லாஹ் ஏற்றிருக்கும் போது எதற்கு அனாவசிய கவலை என்று எண்ணியபடி தைரியமாக வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். எதிரிகளும் அவர்களைப் பார்த்தார்கள்.

    அப்போது, அண்ணலார் தன் கரங்களால் ஒரு பிடி மண்ணை எடுத்து எதிரிகளின் முன்னிலையில் வீசினார்கள். சூரா யாஸீனில் உள்ள இந்த வசனத்தை ஓதியவர்களாக முன்னேறினார்கள்.

    “அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும் பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடி விட்டோம். ஆதலால் அவர்களால் எதையும் பார்க்க முடியாது” (திருக்குர்ஆன் 36:9)

    இந்த வசனத்தை கேட்ட உடனே, எதிரிகள் அனைவரும் அப்படியே உணர்ச்சியற்றவர்களாக ஸ்தம்பித்து நின்றனர். அல்லாஹ் திருமறையில் சொன்னது போல் அவர்கள் கண் திறந்திருந்தும் பார்க்க முடியவில்லை. கைகளில் வாள் இருந்தும் அவை அசையவில்லை.

    மிக மெதுவாக நிதானமாக அவர்களை கடந்து சென்றார்கள் நபிபெருமானார். நேரே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வீடு நோக்கி சென்றார்கள். என்ன ஆச்சரியம், வீட்டில் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கதவை தட்டுவதற்காக கை வைத்த உடன் அது தானாக திறந்து கொண்டது. அங்கே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் ஆவலாய் யாரையோ எதிர்பார்த்த வண்ணம் தயாராக இருப்பதை நபிகளார் கண்டார்கள்.

    “அருமை நண்பரே! இந்த இரவு வேளையில் யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்” என்று நபிகளார் வினவினார்கள்.

    “யா ரஸூலுல்லாஹ்! நீங்கள் சில தினங்களுக்கு முன், அபூபக்கரே இங்கே மக்காவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. ஏற்கனவே ஈமான் கொண்டவர்கள் புலம் பெயர்ந்து மதினா சென்று விட்டார்கள். இங்கே பலரும் நம்மை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை. நாம் வெகு சிலரே மக்காவில் உள்ளோம். இதனை விட்டு அகன்று மதீனாவில் நம் இறைச்சேவையை, ஏகத்துவத்தை எடுத்தியம்பினால் மக்களிடம் கொஞ்சம் மாற்றம் ஏற்படும் போல் தெரிகிறது. எனவே நீங்கள் தயாராக இருங்கள். அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் காத்திருக்கிறேன். கட்டளை கிடைத்ததும் உங்களை நாடி வருவேன். நாம் இருவரும் ‘ஹிஜ்ரத்’ செய்து மதினா செல்ல வேண்டும் என்று சொன்னீர்கள்” .

    “அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் உங்கள் அழைப்பிற்காக இரவு பகலாக காத்திருக்கிறேன். நீங்கள் உத்தரவிட்டால் தாமதிக்காமல் உடனே புறப்பட வேண்டும். அதற்காகத் தான் தயாராய் காத்திருக்கின்றேன்” என்றார் அபூபக்கர் சித்திக் (ரலி).

    பின்னர் இருவரும் அங்கிருந்து உடனே மதினா நோக்கி புறப்பட்டார்கள்.

    அதேநேரத்தில், அண்ணலார் வீட்டை சுற்றி நிலைகுலைந்து நின்றிருந்த எதிரிகள் சிறிது நேரம் கழித்து சுயநினைவிற்கு வந்தார்கள்.

    ‘என்னவாயிற்று நமக்கு, நபிகள் நம் முன் வந்தது போல் தெரிந்ததே? எங்கே அவர் போய் விட்டார்?’ என்று நினைத்தபடி வீட்டினுள் நுழைந்தனர்.

    இதற்கிடையே அண்ணலாரின் கட்டளையை நிறைவேற்ற எண்ணிய அலி (ரலி) அவர்கள் எதிரிகளின் முற்றுகையைப் பொருட்படுத்தாமல் வீட்டினுள் சென்று அண்ணலார் வழக்கமாய் படுத்துறங்கும் இடத்தில் நன்றாக முகத்தை மூடி போர்வையை போர்த்தியவராக உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

    அலி (ரலி) அவர்கள் படுத்திருந்த நிலையைக் கொண்டு அவர்கள் தான் நபியாக இருக்கும் என்று எண்ணிய எதிரிகள் அவர்களைச் சுற்றி சூழ்ந்து, கொல்வதற்காக வாட்களை ஓங்கினார்கள்.

    அப்போது, கூட்டத்தில் ஒருவர் சொன்னார், “முகத்தை மூடிய நிலையில் ஒருவரை கொல்வது அரேபியர் வீரத்திற்கு அழகல்லவே. போர்வையை விலக்கி முகத்தைப் பார்த்து அவரை கொல்வதே நமது வீரத்திற்கு சான்று பகரும் சாட்சி. எனவே போர்வையை விலக்குங்கள்” என்றார்.

    போர்வையை விலக்கியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அலி (ரலி) அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். எதிரிகள் ஆச்சரியம் மேலிட்டவர்களாக அவரைத் தட்டி எழுப்பி, “அலியே! நாங்கள் முகம்மதை கொல்வதற்காக பல நாட்கள் காத்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இருந்தும் என்ன தைரியத்தில் முகம்மது வீட்டில், அதுவும் அவரது படுக்கையில் எந்த வித அச்சமின்றி தூங்கிக்கொண்டிருக்கிறாய்?. போர்வையை விலக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் உன் உயிர் போயிருக்குமே?” என்று வினவினார்கள்.

    அப்போது, அலி (ரலி) அவர்கள் மிக அலட்சியமாக, “அது எப்படி என் உயிர் போகும்? அண்ணல் நபிகளார் என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து, அதை நிறைவேற்றி விட்டு இரண்டொரு நாளில் என்னை வந்து சந்தி என்றல்லவா சொல்லிவிட்டு சென்றார்கள். எனவே எனக்கு நம்பிக்கை உண்டு. இரண்டு நாட்களில் நபிகளாரை நான் நிச்சயம் சந்திப்பேன் என்று சொன்னது நபிபெருமான். அவர் சொல்வது அனைத்தும் சத்தியம், உண்மை. அண்ணலின் வாக்கு என்றைக்குமே பொய்த்ததில்லையே? அதனால் தான் எந்தவித அச்சமின்றி தூங்கிக் கொண்டிருந்தேன்” என்றார்கள்.

    வாயடைத்து நின்றனர் எதிரிகள்.

    அண்ணல் நபிகளாரில் வாக்கில் எந்த அளவுக்கு அவரது தோழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வுகள் சாட்சியாகும்.

    அபூபக்கர் சித்திக் (ரலி) என்னவென்றால், ‘நாயகம் சொல்லிவிட்டார்கள். எந்த நிமிடமும் அவர்கள் வரலாம்’ என்ற எதிர்பார்ப்போடு இரவு பகலாக தன் வீட்டில் காத்திருந்தார்கள்.

    அலி (ரலி) அவர்கள், ‘நபிகள் சொல்லி விட்டார்கள். நாளை அவர்களை உயிருடன் சந்திப்போம்’ என்ற நம்பிக்கையில் அச்சமின்றி இருந்தார்கள்.

    நபிகள் சொல்லில் எந்த மாற்றமும் நிகழாது என்பதில் அவர்கள் இருவருக்கும் அத்தனை உறுதி. நம்மில் எத்தனை பேர் நபிகளார் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளோம், சிந்திப்போமாக. 
    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை யொட்டி மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி:

    முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப் பட்டணம், வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை, ராயக்கோட்டை, ஜெகதேவி, மத்தூர், தேன்கனிக் கோட்டை, சூளகிரி, ஓசூர், மத்திகிரி, தளி, அஞ்செட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் ராயக் கோட்டை சாலையில் உள்ள ராஜீவ் நகர், வெங்கடாபுரம், நமாஸ் பாறை ஆகிய இடங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அதே போல கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள மசூதியில் பெண்கள் மட்டும் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது.

    ரம்ஜான் பண்டி கையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் வீடுகளில் பிரியாணி சமைத்து, அக்கம் பக்கத்தினருக்கும், நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.

    தேன்கனிக்கோட்டையில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் நேற்று சிறப்பாக கொண்டாடினார்கள். இதையொட்டி புத்தாடை அணிந்து தேன்கனிக்கோட்டை அருகே பஜ்ஜேப்பல்லி என்ற இடத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஊர்வலமாக ஈத்கா மைதானத்தை அடைந்து தொழுகையில் ஈடுபட்டனர். ரம்ஜானை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதி முஸ்லிம்கள் வீடுகளில் பிரியாணி சமைத்து, உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினர்களுக்கும் வழங்கினார்கள். மேலும் இனிப்பு வழங்கி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள். 
    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.
    நாமக்கல்:

    ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் நேற்று கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்தபின்பு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரியாணி வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் - சேலம் ரோடு ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையை இமாம் சாதிக் நடத்தினார். இந்த சிறப்பு தொழுகையின்போது இந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் பேட்டை பள்ளிவாசல் முத்தவல்லி ஷேக்நவீத் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

    முன்னதாக அவர்கள் நாமக்கல் - சேந்தமங்கலம் ரோடு பேட்டை அஞ்சுமனே இஸ்லாமியா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக தொழுகை நடந்த இடத்திற்கு சென்றனர். தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு இந்து பிரமுகர் ஒருவர் உள்பட சிலர் பாதாம்பால் வழங்கினர்.

    இதேபோல் நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் திடல் மற்றும் நாமக்கல் கோட்டை பள்ளிவாசல், மாருதிநகர் பள்ளிவாசல் என அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி என மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. 
    பெரம்பலூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் டவுன் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு நகரில் உள்ள அனைத்து முஸ்லிம் பெருமக்களும் ஒன்றுகூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.

    இதில் டவுன் பள்ளிவாசல் பேஸ் இமாம் சல்மான்ஹஜ்ரத், நூர் பள்ளிவாசல் ஹஜரத் முஸ்தபா ரம்ஜான் நோன்பின் மாண்புகள், இஸ்லாம் ஒருங்கிணைப்பிற்கும், வளர்ச்சிக்கும் பெருமகனார் நபி(ஸல்) ஆற்றிய பணிகள், ஈகையின் அவசியம் அன்பு சகோதரத்துவத்தை நிலை நாட்ட வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.



    இதில் டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி யூசுப், முதன்மை நாட்டாண்மை முனவர் ஷெரீப், உலமாசபை மாவட்டத்தலைவர் முகம்மது முனீர், இப்ராகிம், மதரசா நிர்வாகி காஜாமொய்தீன், மருத்துவ அதிகாரி டாக்டர் ஹூசைன், மதரசா சத்தார், சாகுல்அமீது, வக்கீல் முகமது இல்யாஸ், அப்துல்லா உள்பட திரளாக முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சிறுவர்-சிறுமியர்கள் திரளாக கலந்து கொண்டு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதனை தொடர்ந்து முஸ்லிம்கள் டவுன் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு வழிபாடு (தூ-ஆ) நடத்தியபின்பு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் பள்ளி வாசல், ஆகியவற்றில் ஈத் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

    இதேபோல் ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் ஜே.கே.மகால் வளாகத்தில் நடந்த சிறப்பு தொழுகை ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர் மாவட்டத்தில், லெப்பைக்குடிக்காடு கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லம் மசூதிகள், அரும்பாவூர், பூலாம்பாடி, மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, விசுவக்குடி, முகம்மதுபட்டினம், வி.களத்தூர், தேவையூர், பாடாலூர், து.களத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். 
    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். மேலும் ஊர்வலமும் நடந்தது.
    புதுக்கோட்டை:

    உலகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை செய்ய காலை முதல் முஸ்லிம்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் காலையில் சுமார் 7.30 மணியளவில் பள்ளிவாசல் முன்பு உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் திருவள்ளுவர் பேரவை நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னதாக முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.



    இதேபோல சிறுவர், சிறுமிகள் கைக்குலுக்கி கொண்டும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதேபோல புதுக்கோட்டை தெற்கு 3-ம் வீதியில் உள்ள பெரியபள்ளிவாசல், தெற்கு 2-ம் வீதியில் உள்ள பள்ளிவாசல், அண்டக்குளம், கலீப்நகர், மச்சுவாடி, திருக்கோகர்ணம், சின்னப்பாநகர், கைக்குறிச்சி, பாலன்நகர், அடப்பன்வயல், திருவப்பூர், மீன்மார்க்கெட் அருகே, பூங்காநகர் உள்பட புதுக்கோட்டை நகரில் உள்ள பள்ளிவாசல்களில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

    இதேபோல பொன்னமராவதி இந்திராநகர் மற்றும் கேசராபட்டி பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. பொன்.இந்திராநகர் முஆத் இப்னு ஜபல் ஜீம்மா பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதேபோல கொன்னையூர், வேந்தன்பட்டி, புதுவளவு, அம்மன் கோவில் வீதி, திருக்களம்பூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகையை தொடர்ந்து முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

    இதேபோல அறந்தாங்கி அலிஜைனம் ஓரியண்டல் அரபிக்பள்ளி வளாகத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். இதேபோல அரசர்குளம், காரணியானேந்தல், வெட்டிவயல், மேற்பனைக் காடு, ரெத்தினகோட்டை, மீமிசல், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    கந்தர்வகோட்டை பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை பெரிய பள்ளிவாசல், கல்லாக்கோட்டை பள்ளிவாசல், பெருங்களூர் பள்ளிவாசல், அண்டனூர் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

    கீரனூர்-திருச்சி சாலையில் உள்ள குத்பா பள்ளி மைதானத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி வழியாக ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்னர் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

    இதேபோல அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, மாங்குடி, பெருமநாடு, புல்வயல், வயலோகம், பரம்பூர், குடுமியான்மலை, காலாடிப்பட்டி, தென்னலூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதனைதொடர்ந்து சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் உலக அமைதிக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பள்ளிவாசல்களில் உள்ள அடக்கஸ்தளத்திற்கு சென்று முன்னோர்களுக்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல திருவரங்குளம், கைகாட்டி, வல்லத்திராக்கோட்டை, ஆலங்குடி உள்பட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 
    தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சென்னை:

    தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அக்கட்சியின் தலைவர் திருப்பூர் அல்தாப் தலைமையில் சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    நாளை(இன்று) சட்டமன்றம் கூட இருக்கிறது. சட்டமன்றத்தில் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் நாளை வெடிக்க இருக்கிறது என்பது பற்றியும், எதிர்க்கட்சி என்றமுறையில் என்னவிதமான உணர்வுகளை அங்கு வெளிப்படுத்தி, கேள்விகளை எழுப்பவிருக்கிறோம் என்பதையும் நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

    கடந்த ஒரு வார காலத்தில் தமிழகத்தில் நடந்துள்ள அக்கிரமங்கள், அநியாயங்கள், தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கி சூட்டுக்கு பலியான கோர சம்பவம், அதற்கெல்லாம் காரணமானவர்கள் யார்? அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா? துப்பாக்கிசூடு நடத்தும் ஆணையை வழங்கியது யார்? அந்த உத்திரவு எங்கிருந்து வந்திருக்கிறது? என்பதெல்லாம் இன்றைக்கு கேள்விக்குறியாக இருந்தாலும், இதற்கெல்லாம் முழு காரணமாக இருந்தவர்கள், ஆட்சியில் இருப்பவர்கள் தான் என்பது நாடறிந்த உண்மை. அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.

    தமிழ்நாட்டில் 13 பேர் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி இருக்கின்றனர், ஆனால், ஒரு அனுதாப செய்தியாவது இதுவரை பிரதமரிடம் இருந்து வந்திருக்கிறதா என்றால் இல்லை. ஒருவேளை, குஜராத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், பிரதமர் மோடி வாய் திறக்காமல் இருந்திருப்பாரா?

    ஆனால், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டாலும், படுகொலைக்கு ஆளானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் கூட இன்றைக்கு பிரதமர் இல்லை என்பதை எண்ணி பார்க்கின்றபோது, எப்படிப்பட்ட பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம் என்று வேதனைப்படுவதை தவிர வேறு வழியில்லை.

    இதற்கெல்லாம் முடிவுகட்டக்கூடிய வகையில், ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நாம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் ஏற்படுத்த தயாராக வேண்டும் என்பதற்கான உறுதியை எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    தலாக் முறையை ஒழித்ததற்கு பிரதமர் மோடிக்கு முஸ்லிம்கள் நன்றி தெரிவித்துள்ளதாக மதுரையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishnan #Modi
    மதுரை:

    மதுரையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றது. இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    பிரதமராக மோடி பதவியேற்ற போது இந்தியாவின் கடைக்கோடி சாமானிய மக்களின் வளர்ச்சி, பெண் கல்வியை மேம்படுத்துவேன் என உறுதி கூறினார்.

    4 ஆண்டுகளில் நாட்டில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

    மோடி அரசின் சாதனை குறித்து பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மக்களை சந்தித்து விளக்கி வருகிறார்கள். அதன்படி இன்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நாட்டில் ஏழைகள் அனைவருக்கும் இலவச கியாஸ் இணைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நாட்டில் ஒரு கோடியே 25 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். நானும் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளேன்.

    தூய்மை திட்டத்தின் கீழ் இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுத்து கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.


    பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செல்வமகள் சேமிப்பு திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பெண் ஊழியர்களுக்கு 12 வாரமாக இருந்த பிரசவ விடுப்பு 22 வாரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தலாக் முறையை ஒழித்ததற்கு மோடிக்கு முஸ்லிம்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    தினமும் 30 கி.மீ. தூரம் என்ற நோக்கத்தில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள 56 விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் இரட்டை ரெயில் பாதை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இதுவரை 93 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் ரூ. 28 ஆயிரம் கோடி மதிப்பில் இணையம் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #Modi
    ×