search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muslims"

    • தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 30 பள்ளிவாசல்கள் மற்றும் பெண்கள் வழிபடும் தைக்காகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • தொழுகையில் செயலாளர் மக்கின், முன்னாள் மாவட்ட தலைவர் சம்சுதீன் மற்றும் பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி :

    ரம்ஜான் பண்டிகையை யொட்டி தூத்துக்குடி, தென்காசி, மாவட்டங்களில் இன்று காலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 30 பள்ளிவாசல்கள் மற்றும் பெண்கள் வழிபடும் தைக்காகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து க்களை பரிமாறிக்கொண்டனர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில் நிர்வாகி சாகுல் ஹமீது தலைமையில் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையில் செயலாளர் மக்கின், முன்னாள் மாவட்ட தலைவர் சம்சுதீன் மற்றும் பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் காயல்பட்டினம் ஜெய்லானி நகர் ஷாகின்பாக் திடலிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இங்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்புடன் இணைந்த காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் சார்பில் ஹசனா லெப்பை தொழுகை நடத்தினார். அப்துல் பாசித் குத்பா உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் அமைப்பின் நகர தலைவர் ஜாபர் சாதிக், செயலாளர் முகம்மது இத்ரிஸ், பொருளாளர் ரைய்யான் சாகுல் ஹமீது உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்று மாலை காயல்பட்டினம் கடற்கரை பூங்காவில் இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் கூடி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வர்.

    உடன்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள திடலில் தலைவர் தவுலத்துல்லா, செயலாளர் குத்புதீன், பொருளாளர் அர்சிக் ரகுமான், துனைத்தலைவர் இப்ராகிம் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். மேலும் சிதம்பர தெரு, பெரிய தெரு, புதுமனை தெரு, முகைதீன் புதுத்தெரு, சுல்தான்புரத்தில் தொழுகை நடைபெற்றது.

    தூத்துக்குடி மாநகரில் முத்தையாபுரம், திரேஸ்புரம், தாளமுத்துநகர் உள்ளிட்ட இடங்களிலும், விவிடி சிக்னல் அருகே தனியார் பள்ளியிலும் தொழுகை நடந்தது. கயத்தாறில் ஜூம்மா நயினார் பள்ளிவாசல் சார்பில் பேரணியாக சென்று ஈத்கா திடலில் திரண்டு ஜமாத் தலைவர் பீர் மைதீன் தலைமையில் தொழுகை நடத்தினர். இதில் 870 பேர் கலந்து கொண்டனர். செய்துங்கநல்லூர் பழைய பள்ளிவாசலில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பேச்சாளர் சுலைமான் தலைமையில் தொழுகையில் ஈடுபட்டனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் 4 இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜார் சாலையில் ஜமாஅத் தலைவர் மவ்லவி ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி தொழுகை நடத்தி மக்களுக்கு குத்பா பிரசங்கம் செய்தார் . இது போல் கலந்தர் மஸ்தான் தெருவில் உள்ள பாத்திமா நகர் மஸ்ஜித் தக்வா திடலில் பஷிர் அஹ்மத் உமரியும் மக்கா நகர் மஸ்ஜித் ஆயிஷா திடலில் ஆசிரியர் ரஹ்மத்துல்லாஹ்வும் பேட்டை மஸ்ஜித் அக்ஸா திடலில் முஹிப்புல்லாஹ் உமரி ஆகியோர் தொழுகை நடத்தி மக்களுக்கு குத்பா பிரசங்கம் செய்தார்கள்.

    முன்னதாக கமிட்டி சார்பில் நகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுக்கு உணவு சமைக்க தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. இதுபோல் நேஷனல் தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் இக்பால் நகர், ரகுமானியாபுரம் , மக்கா நகர் பகுதிகளில் தொழுகை நடத்தினர். இதுபோல் எஸ்.டி.பி.ஐ. சார்பில் இக்பால் நகர் ,மதினா நகர் ஆகிய பகுதிகளில் பெருநாள் தொழுகை நடத்தினர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். காயிதே மில்லத் திடலில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசிர் தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார். பெரியதெரு, புதுத்தெரு ,மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர்.

    பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் முகைதீன் அல்தாபி, ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துல் காதர் , மக்காநகர் தவ்ஹீத் திடலில் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம், தவ்ஹீத் நகர் அல் ஹிதாயா திடலில் ரபீக் ராஜா, பாத்திமா நகர் பள்ளி திடலில் குத்தூஸ், இக்பால் நகர் ரய்யான் பள்ளி திடலில் ரயான் மைதீன் , மஹ்மூ நகர் திடலில் குல்லி அலி மதினா நகர் தவ்ஹீத் திடலில் ஹாஜா மைதீன் என நகரில் 9 இடங்களில் தொழுகை நடைபெற்றது.

    இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் சன்முகம் மேற்பார்வையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.தொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பித்ரா அரிசி வழங்கினர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர் , வடகரை, வீராணம் ,சங்கரன்கோவில், புளியங்குடி , வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 32-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடைபெற்றது.

    சங்கரன்கோவிலில் ஈத்கா திடலில் ஜமாத் கமிட்டி தொழுகையை அசரத் முகமது ரபீக் நடத்தினார். தலைவர் அப்துல் காதர், செயலாளர் நயினா முகமது, பொருளாளர் அப்பாஸ், துணைச்செயலாளர் ரக்மத்துல்லா, அப்பாஸ், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, ம.தி.மு.க. இளைஞரணி முகமது ஹக்கீம், தே.மு.தி.க. அயூப்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிககளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • மேம்பாட்டு குழு நிறுவனர் காத்துன் பீவி தலைமை தாங்கினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அன்னை பாத்திமா இஸ்லாமிய மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் ஏழை, எளியோருக்கு ரம்ஜான் பண்டிகையை யொட்டி புத்தாடைகள் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேம்பாட்டு குழு நிறுவனர் காத்துன் பீவி தலைமை தாங்கினார். சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் டிரஸ்டி ஓஜிர்கான், தலைவர் அக்பர்கான், செயலாளர் ஆரிப்கான், பொருளாளர் ரபிக் முன்னிலை வகித்தனர்.

    பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பாத்திமா பீவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு இஸ்லாமி யர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், கவிஞர் மோகன் தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்டச் செயலாளர்கள் பாலமுருகன் தவிடன், பாண்டுரங்கன், வேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாக்கிலிப்பட்டி பாலமுருகன், சவுந்தர், அக்பர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்த்திருவிழா நிகழ்வுகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
    • அம்மனுக்கு சாத்த பட்டுசேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவிலுக்கு வந்தனர்.

    உடுமலை :

    மதங்களின் பெயரால் பல கலவரங்கள்,பல போராட்டங்கள் நடந்து வரும் இன்றைய சூழலில் தொப்புள் கொடி உறவுக ளாக வாழ்ந்து வரும் உடுமலை மக்கள் வியக்க வைக்கிறார்கள்.

    ஆண்டுதோறும் நடைபெறும் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை அனைத்து மதத்தினரும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.குறிப்பாக தேர்த்திருவிழாவன்று தேரோடும் வீதிகளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் நின்று தேருக்கு வரவேற்பளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.தற்போது தேர்த்திருவிழா நிகழ்வுகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் இஸ்லாமியர்கள் ஊர்வ லமாக வந்து மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கிய நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்று ள்ளது.உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் நேற்று உடுமலை நகர்மன்றத் தலைவர் மத்தீன் தலை மையில் அம்மனுக்கு சாத்த பட்டுசேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவி லுக்கு வந்தனர்.அவர்களை கோவில் பரம்பரை அற ங்காவலர் யு.எஸ்.எஸ் ,ஸ்ரீதர்உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.மேலும் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.சீர்வரிசைத் தட்டுக்களை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கிய இஸ்லாமியர்கள் தேர்த்தி ருவிழா சிறக்க வாழ்த்து க்களை தெரிவித்தனர்.

    மதங்களைக் கடந்து மனித நேயத்துடன் ஒருவரு க்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்தது.பல இடங்களில் மத ரீதியான மோதல்கள் நடந்து வரும் நிலையில் மதங்களை விட மனிதமே பெரிது என உடுமலை மக்கள் உதாரண மாக வாழ்வது இந்த நிகழ்வால் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளது.

    • பாபநாசம் அருகே பள்ளியில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள், கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி மதரஸாயே ஹிதாயத்துன் நிஸ்வான் பள்ளியில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பாபநாசம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் துணைத்தலைவர் ஏ.ஹாஜாமைதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கௌரவ ஆலோசகர் எம்.ஜெ.அப்துல்ரவூப், ராசகிரி பெரி பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர் யூசுப்அலி, ஆர்டிபி கல்லூரி தாளாளர் தாவூத்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெரிய பள்ளிவாசல் இமாம் முஹம்மது இஸ்மாயில் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.ஜமாத்துல் உலமா சபை மாநில துணை தலைவர் ஜீயாவுதீன் பார்கவி நோம்பை திறந்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் நிஸ்வான் பள்ளியின் தலைவர் நூர்முஹம்மது, செயலாளர் முஹம்மது பாரூக், பொருளாளர் முஹம்மதுரபி, மற்றும் பாபநாசம் ராசகிரி, பண்டா ரவாடை ஜமாத்தார்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள், கலந்து கொண்டனர்.

    • இஸ்லாமியர்களின் பங்கு குறித்த விளக்க கூட்டம் நடந்தது.
    • ஹாஜி மவுலானா மவுலவி முஹம்மது பாரூக் ஆலிம் மன்பஈ தலைமை தாங்கினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளி நிர்வாகிகள், ஜமாத்தார்கள் இணைந்து ''இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு'' குறித்த விளக்க கூட்டத்தை நடத்தியது.

    சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி மவுலானா மவுலவி முஹம்மது பாரூக் ஆலிம் மன்பஈ தலைமை தாங்கினார். பெரிய பள்ளிவாசல் துணைத்தலைவர் பாபா அமீர் பாதுஷா முன்னிலை வகித்தார். மதரசா ஆசிரியர் மவுலானா ஷேக் பாசில் யூசுப் கிராஅத் ஓதினார். மஸ்ஜித் அல் அக்ஸா பள்ளி மவுலானா முஹம்மது சிராஜுதீன் கீதம் பாடினார், இமாம் ஹிதாயா ஜும்மா பள்ளிவாசல் இமாம் மவுலானா நூருல் அஜீம் மிப்தாஹி தொகுத்து வழங்கினார். திருப்பத்தூர் வட்டார உலாமா சபை தலைவர் மவுலானா சையது முகமது இல்ஹாமி வரவேற்றார்.

    திருப்பத்தூர் பெரிய பள்ளிவாசல் செயலாளர் சிக்கந்தர் பாதுஷா, தாருல் உலூம் தாவத்துல் ஹூதா மதரஸா தலைமை ஆசிரியர் மவுலானா மவுலவி முஹம்மது ஆதில் தாவூதி, கவிஞர் பாரதன், சிவகங்கை மாவட்ட உலமா சபை தலைவர் மவுலானா முஹம்மது ரிலா பாக்கவி ஆகியோர் ஆகியோர் பேசினர். மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் அலி நன்றி கூறினார்.

    • இந்து சுடுகாட்டை இஸ்லாமியர்கள் சுத்தம் செய்தனர்.
    • அதன் பிறகு அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன.

    மதுரை

    மதுரை சக்கிமங்கலம், கல்மேடு அன்னை சத்யா நகரில் இந்துக்களுக்கு என்று சுடுகாடு உள்ளது. அது கடந்த சில மாதங்களாக குப்பை-கூளங்களுடன் காட்சி அளித்தது. அதனை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் பலன் இல்லை. சக்கிமங்கலம் சுடுகாட்டை தாங்களாகவே முன்வந்து புனரமைப்பது என்று மதுரை எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அங்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப் பட்டது. சுமார் மூன்று மணி நேரத்துக்கு பிறகு சக்கிமங்கலம் சுடுகாட்டில் குப்பை குளங்கள் அகற்றப்பட்டன. அதன் பிறகு அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கிளை தலைவர் கரீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனி சிக்கந்தர், செயலாளர் ஜாபர் சாதிக், துணைத் தலைவர்கள் செல்வகனி, அப்துல் ரஹீம், வர்த்தக அணி இணைச் செயலாளர் முகம்மது அலி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மதுரை சக்கிமங்கலத்தில் இந்துக்களுக்கான சுடுகாட்டை இஸ்லாமியர்கள் புனரமைத்து மத நல்லிணக்கம் பேணிய சம்பவம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது.

    • கோவை - திருச்சி மெயின் ரோட்டில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
    • பல்லடம் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

    பல்லடம் :

    திருப்பூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால் ரோட்டில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் கோவை திருச்சி மெயின் ரோட்டில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    • பாஜக செய்திதொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.
    • அவருடைய கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டங்களை பதிவு செய்தன.

    தோகா:

    பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்த சர்ச்சை கருத்தை வெளியிட்டது தொடர்ந்து முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவரது கருத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டங்களை தெரிவித்தன. இதையடுத்து நுபுர் ஷர்மா செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவருடைய கருத்துக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என பா.ஜ.க தெரிவித்தது.

    இந்நிலையில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கத்தார் அரசு அந்நாட்டில் பணியாற்றும் இந்து தொழிலாளர்களை வெளியேற்றி வருவதாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் அந்த வீடியோ உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

    கடந்த மார்ச் மாதம் ரெட்கோ இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் வெளியிட்ட சம்பள அறிக்கைக்கு எதிராக, அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் போராடினர். அந்த வீடியோ தற்போதுள்ள நுபர் சர்மா விவகாரத்துடன் இணைக்கப்பட்டு போலியாக பரப்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகளை உ.பி அரசு புல்டோசர்கள் மூலம் இடித்து வருகிறது.
    • தமது குடும்பத்தினரை வாரண்ட் இல்லாமல் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    லக்னோ:

    கடந்த சில நாட்களுக்கு முன் நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இஸ்லாமிய நாடுகள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அவர்களை கைது செய்யக் கோரி நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 300 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.

    இதுமட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகளை உ.பி அரசு புல்டோசர்கள் மூலம் இடித்து வருகிறது. இதில் முஸ்லீம்களின் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய ஜாவேத் முஹமது என்ற நபரின் வீடு புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளப்பட்டது. இவரது வீடு பிரக்யா ராஜின் கரேலி பகுதியில் அமைந்துள்ள ஜேகே ஆஷியானா காலனியில் அமைந்திருந்தது.

    இதையடுத்து ஜாவேத்தின் மகளும் சமூக ஆர்வலருமான அஃப்ரீன் பாத்திமா, தமது குடும்பத்தினரை வாரண்ட் இல்லாமல் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவியும் ஆவார். பல்வேறு போராட்டங்களில் மாணவர்களை ஒன்றிணைந்து, தலைமை தாங்கியுள்ளார்.

    இதையடுத்து ஆஃப்ரீன் பாத்திமாவுக்கு ஆதரவாக ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்துடன் #istandwithafreenfathima என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆகி வருகிறது.

    பாகிஸ்தானில் முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மை சீக்கிய மக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை பேணவும், வளர்க்கவும் சீக்கிய வியாபாரி ஒருவர் தள்ளுபடி விலையில் உணவுப்பொருட்கள் வழங்கியுள்ளார்.
    பெஷாவர்:

    பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணம், ஜாம்ருத் பகுதியில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையை இந்திய வம்சாவளி சீக்கியர் நரஞ்ச் சிங் திறந்து நடத்தி வருகிறார்.

    இவர் முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மை சீக்கிய மக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை பேணவும், வளர்க்கவும் ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில், தன் கடையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்களுக்கு தள்ளுபடி விலையில் உணவுப்பொருட்கள் வழங்க முடிவு செய்து, அதை மேற்கொண்டுள்ளார். இது அங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    அரசாங்கத்தின் விலை கட்டுப்பாட்டு குழு நிர்ணயம் செய்துள்ள விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு இவர் உணவு பொருட்களை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்து வருகிறார். குறிப்பாக உணவுப்பொருட்களை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை குறைவான விலையில் இவர் விற்பனை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 20 லட்சம் இஸ்லாமிய மக்கள் இன்று மக்கா நகரில் குவிந்தனர். #Hajj2018
    மக்கா:

    இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது.

    இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து மெக்கா நகரில் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் இங்கு குவிந்துள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் சவுதி அரேபியாவை சேர்ந்த சுமார் ஒருலட்சம் பேரும் பங்கேற்கிறார்கள்.

    இந்த வருட யாத்திரைக்கு டெல்லியில் இருந்து இன்று 1200 யாத்ரீகர்கள் இன்று புறப்பட்டு செல்கின்றனர். இந்த குழுவில் டெல்லி மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் யாத்ரீகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    5 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் மக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் தொழுகை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றிய பின்னர், மினா நகருக்கு புறப்பட்டு செல்லும் யாத்ரீகர்கள், அங்கு சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிவிட்டு அரபா மலையில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளை புறப்பட்டு செல்வார்கள்.


    இறைவனின் கட்டளையை ஏற்று இறைத்தூதரான இபுறாஹிம் நபி, தனது ஒரே மகனான இஸ்மாயீலை பலியிட சித்தமான வரலாற்றை நினைவுகூரும் அரபாத் மலையை வலம்வந்த பின்னர், முசதல்பியா என்ற வெட்டவெளியில் கூழாங்கற்களை சேகரித்து, ஜம்ராத் என்ற இடத்தில் தீயமன ஆசைகளான சாத்தான் மீது கல்லெறியும் சம்பிரதாயத்தை யாத்ரீகர்கள் நிறைவேற்றுகின்றனர்.

    பின்னர், தங்களது விருப்பம்போல் ஆடு மற்றும் ஒட்டகங்களை ‘குர்பானி’ (இறைவனின் பெயரால் புனிதப் பலி) செய்துவிட்டு, தங்களது பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவர்களாக - அன்று பிறந்த குழந்தையைப் போல் ‘ஹாஜி’ என்ற பட்டத்துடன் தங்களது இல்லங்களுக்கு புறப்பட்டுச் செல்வர்.


    ஹஜ் யாத்திரைக்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளதால் புனித நகரங்களான மக்கா, மதினாவை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    எதிர்பாராத விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கில் யாத்ரீகர்கள் அனைவருக்கும் மின்னியல் கைப்பட்டை வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமுள்ள இடங்களை அறிந்து புனிதப் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ள அது உதவும். #Hajj2018 #2millionMuslim #hajjpilgrimagebegins
    நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியாவில் இருந்து மீண்டும் ஒரு பாகிஸ்தான் உருவாகும் என பா.ஜ.க எம்.பி ஹரி ஓம் பாண்டே தெரிவித்துள்ளார். #BJP #HariOmPandey
    லக்னோ:

    மதம் சார்ந்த அரசியலை பா.ஜ.க முன்னெடுத்து வருவதாக பல்வேறு தரப்பில் இருந்து வரும் புகார்களை அவ்வப்போது அக்கட்சியைச் சேர்ந்த சிலர் உறுதி செய்து வருகின்றனர். இஸ்லாமியர்கள், தலித் போன்ற சிறுபான்மையினர்கள் மீதான அவர்களின் கருத்து சர்ச்சைகளை உண்டாக்கி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஹரி ஓம் பாண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்தாவிட்டால், விரைவில் மீண்டும் ஒரு பாகிஸ்தான் உருவாகும் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், விரைவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.

    மேலும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தான், நாட்டில், கற்பழிப்பு சம்பவங்கள், கொலை போன்றவை அதிகரித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். பா.ஜ.க எம்பியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #HariOmPandey
    ×