search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோன்பு"

    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    • நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.

    துபாய்:

    ரமலான் நோன்பையொட்டி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பள்ளிவாசல்கள், கூடாரங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த நிலையில் உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    இந்த நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர். அவர்கள் நோன்பை திறந்த போது விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது நடந்து கொண்டிருந்தது.


    இது குறித்து துபாய் விமான நிலைய அதிகாரி கூறும்போது, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான சூழலில் வேலை செய்து வந்தவர்கள் அதனை மறந்து பலரும் விளையாட்டாக பேசிக் கொண்டு மன இறுக்கத்தை மறந்து செயல்பட்டனர்.

    விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

    துபாயில் கின்னஸ் உலக சாதனைகள் பல வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விமான ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

    • குரு பகவானுக்குரிய நாள் வியாழக்கிழமை.
    • வெள்ளிக்கிழமையன்று சுக்ரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு உண்டாகும்.

    வாரத்தின் துவக்கம் முதல் இறுதி வரை பலவிதமான விரதங்களை நாம் கடைபிடிக்கின்றோம்.

    ஒவ்வொரு கிழமையும் கடைபிடிக்க வேண்டிய விரதங்களும், கடைபிடிக்கும் வழிமுறைகளையும் விரிவாக பார்க்கலாம்.

    ஞாயிறு

    ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்தது.

    சூரிய நமஸ்காரம் செய்யலாம்.

    ஆதித்யஹருதிய ஸ்தோத்திரம் சொல்லலாம்.

    சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து சூரியனுக்கு படைக்கலாம்.

    பகலில் ஒரு வேளை உணவருந்திவிட்டு இரவில் பால், பழம் சாப்பிடலாம்.

    திங்கள்

    திங்கட்கிழமை விரதம் சோம வார விரதம் ஆகும்.

    சிவபெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தில் அனுஷ்டிக்க வேண்டும்.

    ஒரு அந்தணரையும், அவர் மனைவியையும் சிவனாகவும், பார்வதியாகவும் பாவித்து பூஜை செய்து,

    தான தர்மங்கள் செய்ய வேண்டும். சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

    செவ்வாய்

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமை அங்காரகனை வேண்டி விரதம் இருக்க நல்ல பலன் கிடைக்கும்.

    புதன்

    புதனுக்குரிய தெய்வம் விஷ்ணு. புதன்கிழமை விரதம் புகழைக் கொடுக்கும்.

    விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து விரதம் இருந்தால் கல்வி, ஞானம் பெருகும்.

    வியாழன்

    குரு பகவானுக்குரிய நாள் வியாழக்கிழமை.

    அந்தநாளில் விரதம் இருந்தால் எல்லா காரியங்களும் கைகூடும்.

    குரு பகவானின் தோற்றமான தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, வஸ்திரம், மஞ்சள், புஷ்பம் சாற்றி வழிபட வேண்டும்.

    வெள்ளி

    வெள்ளிக்கிழமை விரதம் சுக்ரனுக்கும், அம்பாளுக்கும் உரியது.

    வெள்ளிக்கிழமையன்று சுக்ரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு உண்டாகும்.

    கடன் தொல்லை நீங்கும்.

    சனி

    சனிக்கிழமை அன்று வேங்கடவனை வழிபட்டால் எல்லா வித சிறப்பும் வந்தடையும்

    • விஷ்ணு பகவானுக்கு உரிய விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் மகிமை வாய்ந்தது.
    • இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும்.

    விஷ்ணு பகவானுக்கு உரிய விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் மகிமை வாய்ந்தது.

    அதை உணர்த்தும் புராண வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.

    இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று

    மார்கழிமாத சுக்லபட்ச (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர்.

    பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார்.

    முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது.

    திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து

    பின் கடலை கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது.

    இந்த யோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார்.

    இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும்.

    மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம்.

    ஒருவருடம் முழுவதும் ஏகாதசிவிரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹாராஜாவை

    தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை,

    அம்பரீஷ மஹாராஜாவை திருமாலின் சுதர்சன சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.

    திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தை சேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று

    எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராக்ஷனுக்கும்

    சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.

    ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்தவிரதத்தை தானும் கடைப்பிடித்து தன் நாட்டவரும்

    பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது.

    பீமன் ஒர் ஆண்டு முழுவதும் இந்தவிரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசியாகிய

    நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழு பயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.

    பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு

    எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்.

    குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்தநாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
    • மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

    இந்த விரதம் குழந்தைகளுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.

    ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    தமிழ் நாட்டில் கருட பஞ்சமி விரதம் மிகவும் பரவலாக அனுஷ்டிக்கப்படுவதில்லை என்றாலும்

    கருட சேவையைப் பற்றி எழுதி வருவதால் இவ்விரதத்தைப் பற்றி படித்த சில தகவல்களை

    அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய

    அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.

    அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

    கருட பஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம்.

    மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

    கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.

    இப்போதும் கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு,

    அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

    கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.

    நாக சதுர்த்தி தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள்.

    .இந்த நாளில் தாய்மார்கள் உபவாசம் இருக்கவேண்டுமென்பது ஐதீகம்.

    நாகசதுர்த்தி அன்று செய்யப்படும் நாகபூஜை குழந்தைகளின் நல்வாழ்விற்கானது.

    • பெண்களின் திருமாங்கல்யத்தை காப்பதற்காக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
    • நோன்பு இருக்கும் தினத்தன்று காலையில் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்.

    மாசி மாத ஏகாதசியில் வருகின்ற முக்கியமான நோன்பு காரடையான் நோன்பு.

    பெண்களால் இந்த விரதம் மேற்கொள்ளப்படும்.

    இந்த விரதத்தை கடைபிடிக்க ஒரு கலசத்தில் தேங்காயை வைத்து அதைச் சுற்றி மாவிலைகள் கொண்டு கட்ட வேண்டும்.

    அந்த கலசத்தின் மேல் மஞ்சள் கயிறு கொண்டு கட்டி மஞ்சள், சந்தனம், குங்குமம் பூச வேண்டும்.

    அலங்கரிக்கப்பட்ட கலசத்தை பூஜையறையில் வைத்து காமாட்சியம்மனை வேண்டிக் கொண்டு

    நைவேத்தியம் படைத்து, தீபாராதனைகள் செய்து வணங்க வேண்டும்.

    நைவேத்தியமாக பழம், பொரி, சுண்டல் வைக்கலாம்.

    பெண்களின் திருமாங்கல்யத்தை காப்பதற்காக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    பூஜை முடிந்தவுடன் கார அடையுடன், ஜாக்கெட் பிட், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை

    சுமங்கலிப் பெண்களுக்கு தந்து விட்டு அதன்பின்னர் கலசத்தில் கட்டிய மஞ்சள் கயிற்றை எடுத்து

    விரதமிருந்த பெண் கட்டிக் கொள்ளலாம்.

    நோன்பு இருக்கும் தினத்தன்று காலையில் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்.

    • .கன்வென்ஷன் சென்டரில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
    • தொழில் அதிபருமான ஜாகிர்உசேன் தொடங்கிவைத்து நோன்பின் மாண்பு பற்றி பேசினார்.

    கடலூர்:

    பண்ருட்டி இஸ்லாமிக் பைத்துல்மால்டிரஸ்ட் சார்பில் பண்ருட்டி, எல்.என்.புரம் சென்னை சாலை ஆர்.கே.எம்.கன்வென்ஷன் சென்டரில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் இஸ்லாமிக் பைத்துல்மால் டிரஸ்ட் செயலாளரும், தொழில் அதிபருமான ஜாகிர்உசேன் தொடங்கிவைத்து நோன்பின் மாண்பு பற்றி பேசினார். மதார்ஷா பள்ளி மாணவர்கள் கிராத் ஓதினர்.

    விழாவில் சிறப்பு அழைப் பாளர்களாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, வர்த்தக சங்க தலைவர் சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் இந்து, முஸ்லீம், கிருஷ்த்துவ சமுதாய தலைவர்கள், அரசுதுறை அதிகாரிகள், நூர் முகமது ஷா அவுலியா தர்கா கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள், ரோட்டரி, அரிமா, எக்ஸ்னோரா, செந்தமிழ், முத்தமிழ் சங்கம், வர்த்தக சங்க நிர்வாகிகள், பள்ளி வாசல் பொறுப் பாளர்கள் திரளாக கலந்து கொண்ட னர். முன்னதாக அனைவரை யும் பண்ருட்டி இஸ்லாமிக் பைத்துல் மால் டிரஸ்ட் தலைவர் வக்கீல் இதயத்துல்லா வரவேற்றார். முடிவில் பைத்துல்மால் டிரஸ்ட் பி.எம்.டி.இ. நவாஸ் நன்றி கூறினார். தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு தொழுகை நடந்தது.

    • அறந்தாங்கியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்

    அறந்தாங்கி:

    ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பை கடைபிடிப்பதோடு, இந்த காலகட்டத்தில் பிரார்த்தனைகளை தீவிரப்படுத்துவது, திருக்குர்ஆனை பாராட்டுதல் போன்ற நற்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் அறந்தாங்கி எல்.என்.புரம் தனியார் பள்ளியில் சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் நோக்கில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு நோன்பை திறந்து வைத்து அவர்களோடு உணவு உண்டு மகிழ்ந்தார்.அப்போது அமைச்சர் பேசுகையில், சிறுபான்மையினருக்கு தமிழக முதல்வர் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகிறார். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் பாகுபாடின்றி ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றோம். இதனால் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அறந்தாங்கி நகர் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள தனியார் அமைப்புகள் புது விதமான முயற்சிகளை மேற்கொண்டு 500 கிலோ பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை கொண்டு வருவோருக்கு தங்க நாணயம் அறிவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இது வரவேற்கதக்கதாகும் என்றும் அதற்கான பணிகளை இன்று முதல் தொடங்கி வைப்பதாகவும் கூறினார். மேலும் அவர்கள் அறிவித்துள்ளது தங்க நாணயம் என்றாலும், குப்பைகளை விற்று அதன் மூலம் வரும் பணத்தையும் நாணயத்தோடு சேர்த்து வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஆனந்த், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகர்மன்ற துணை தலைவர் முத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    • திருப்புத்தூரில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முஸ்லிம் ஜமாத்தார்கள் நடத்திய இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்று தலைமை வகித்தார்.

    முன்னதாக மாவட்ட அரசு டவுன் காஜி முகமது பாரூக் ஆலிம் துவா ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் அனைத்து பள்ளி ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் முன்னிலை வகித்தனர்.

    மேலும் பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கமருன் ஜமான், ஆதில் மௌலானா ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி துணை தலைவர் கான் முகமது, நகர இளைஞரணி அமைப்பாளர் பசீர் அகமது, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரெமி சுலைமான் பாதுஷா, ஷமீம் நவாஸ், அபுதாஹிர் ஆகியோர் செய்திருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி கேயன், நாராயணன், நகர துணை செயலாளர் உதய சண்முகம், பேரூராட்சி கவுன்சிலர்கள் பிளாசா ராஜேஸ்வரி, சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் சாக்ளா, பழக்கடை அபுதாஹிர், ஷாஜகான், வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.எஸ்.ஆர்.சி.லெட்சுமணன் நன்றி கூறினார்.

    • கடலுார் முதுநகர் ஜூம்மா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்,

    கடலூர்:

    கடலுார் முதுநகர் ஜூம்மா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், டாக்டர் பிரவீன் அய்யப்பன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், கீதா குணசேகரன், தமிழரசன், சரத் தினகரன், பாரூக் அலி, சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயகுமார், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேதட குமார், கர்ணன், வக்கீல் சிவராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜ சேகர், பள்ளி வாசல் நிர்வாகிகள் காசிம் மான்பஈ, இமாம் பேஷிம்மா, இப்ராகிம் மரைக்காயர், காதர் மொய்தீன், முகமது காசிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது காசீம்,நகர் துணை செயலாளர் சுபைர், இளைஞரனி அன்சர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

    ராமநாதபுரம்

    பனைக்குளத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் மாநில தகவல் தொழில்நுட்ப இணை ஒருங்கினைப்பாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணை தலைவர் சாதுல்லாக்கான், மாவட்ட உதவி செயலாளர் பனைக்குளம் முகம்மது இக்பால், மாவட்ட உதவி செயலாளர் ஆசீக் உசேன், மாநில மாணவரனி ஈரோடு முஹம்மது பாருக், மாவட்ட தகவல் தொழில் நுட்ப ஒருங்கினைப்பாளர் சுல்தான் சலாவுதீன், பனைக்குளம் கிருஷ்ணாபுரம் கணேசன் தலைமையி்ல் ஐந்து நபர்கள்,சோகையன் தோப்பு சேர்ந்த இரண்டு நபர்களும்,பொன்குளம் ஆதிராஜ் , சக்திமுருகன் பனைக்குளம் துணை செயலாளர் சீமான் என்ற சாகுல் ஹமீது, பனைக்குளம் பொருளாளர் சபிக் ரஹ்மான், பனைக்குளம் முஸ்லீம் பரிபாலன சபை, முஸ்லீம் நிர்வாக சபை,ஐக்கிய முஸ்லிம் சங்கம் வாலிப முஸ்லிம் சங்கத்தை சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது காசீம்,நகர் துணை செயலாளர் சுபைர், இளைஞரனி அன்சர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்

    • கீழக்கரையில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாட்டை எஸ்.டி.பி.ஐ. கீழக்கரை நகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    வுமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரையில் நகர தலைவர் முபினா தலைமையில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி ஆகியோர் கலந்து கொண்டனர். வுமன் இந்தியா மூவ்மெண்ட் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் மற்றும் மாவட்ட செயலாளர் சித்தி நிஷா ஆகியோர் பேசினர். ஜகாங்கீர் அரூஷியின் பிரார்த்தனையோடு இப்தார் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்கான ஏற்பாட்டை எஸ்.டி.பி.ஐ. கீழக்கரை நகர செயலாளர் காதர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். கீழக்கரை நகர துணைத் தலைவர் ரீகான் நன்றி கூறினார்.

    • செஞ்சி சத்திர தெருவில் உள்ள பெரிய பள்ளி வாசலில் முஸ்லீம்களின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி சத்திர தெருவில் உள்ள பெரிய பள்ளி வாசலில் முஸ்லீம்களின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சையத் அன்வர் தலைமை தாங்கினார். செஞ்சி வட்ட ஜமாத் தலைவர் சையத் அப்துல் மஜீத் மற்றும் அனைத்து பள்ளிவாசல் பட்டேல்கள், முத்தவல்லிகள் முன்னிலை வகித்தனர். ஆபீஸ் ஜாஹீர் ஆலம் இறைவணக்கம் செய்தார். சித்திக் ஹஸ்ரத் மன்பா வரவேற்றார். முகமது அஷ்ரப் தொகுத்து வழங்கி னார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ,பேரூராட்சி கவுன்சிலர் சங்கர் ,தி.மு.க. நகர செயலாளர் காஜா நசீர், ஆதில் பாஷா, அம்ஜத் பாண்டே மாவட்ட பிரதிநிதி ஜெ.எஸ்.சர்தார், தொண்டர் அணி பாஷா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர். சையத் சாதுல்லா நன்றி கூறினார்.

    ×