என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
    X

    ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

    • கீழக்கரையில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாட்டை எஸ்.டி.பி.ஐ. கீழக்கரை நகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    வுமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரையில் நகர தலைவர் முபினா தலைமையில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி ஆகியோர் கலந்து கொண்டனர். வுமன் இந்தியா மூவ்மெண்ட் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் மற்றும் மாவட்ட செயலாளர் சித்தி நிஷா ஆகியோர் பேசினர். ஜகாங்கீர் அரூஷியின் பிரார்த்தனையோடு இப்தார் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்கான ஏற்பாட்டை எஸ்.டி.பி.ஐ. கீழக்கரை நகர செயலாளர் காதர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். கீழக்கரை நகர துணைத் தலைவர் ரீகான் நன்றி கூறினார்.

    Next Story
    ×