என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Prophet"
- நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள் பவன்.
- நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
மனிதன் தன்னைப்பற்றி அறிந்துகொள்ள ஆசைப் படுவதை விட அடுத்தவர்களைப்பற்றி அறிந்து கொள்வதில்தான் அதிக நேரத்தை செலவளிக்கின்றான், அடுத்தவர்களைப் பற்றி அறிந்து கொள்வது தவறல்ல ஆனால் அது நல்லுறவுக்காக இருந்தால் தான் நல்லது, அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்து கொண்டு புறம் பேசுவதற்காக இருந்தால் அது நல்லதல்ல.
'யாரைப்பற்றியும் தவறான செய்திகளை என்னிடம் சொல்லாதீர்கள், நான் மன நிம்மதியுடன் இருக்கவே விரும்புகிறேன்' என்று நபிகள் நாயகம் சொன்னது அந்த அர்த்தத்தில் தான்.
அல்லாஹ் தனது திரு மறையில் கூறுகின்றான்: 'விசுவாசிகளே! (சந்தேகமான) பல எண்ணங்களில்இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள்; மேலும், உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள் பவன்; மிக்க கிருபை செய்பவன்' (திருக்குர்ஆன் 49:12).
மேற்கண்ட இறை வசனம் சகமனிதர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்கு தெள்ளத்தெளிவாக சொல்லிக்காட்டுகிறது. நாம் பிறரின் குறைகளை பார்க்கத் தொடங்கும் போது தான் நம்மை அது புறம் பேசத்தூண்டுகிறது. எனவே அடுத்தவர்களின் நிறைகளை காண்பதில் அதிக கவனம் செலுத்துவதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
இதனால் தான் நபிகள் நாயகம் இப்படி சொன்னார்கள்: 'யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும் அல்லது அவர் வாய் மூடி இருக்கட்டும்' (நூல்: புகாரி, முஸ்லிம்).
எனவே அடுத்தவர்களைப் பற்றி அவர் என்ன செய்கிறார், இவர் எங்கே போகிறார் என்று தேவையில்லாமல் துருவித்துருவி ஆராய்வது இறைவிசுவாசிக்கு நல்ல பழக்கமல்ல. சுப்யான் இப்னு அப்துல்லாஹ் என்ற நபித்தோழர் நபி களாரிடம், 'இறைத் தூதரே! நான் எதற்கு அதிகம் பயப்பட வேண்டும்? என்று கேட்ட போது, தமது நாவை பிடித்துக் காட்டி 'இதைத் தான்' என்று நபிகளார் சொன்னார்கள்'. (நூல்: திர்மிதி)
பின்வரும் நபிமொழி உண்மையில் புறம் என்பது என்ன என்பதைப் பற்றி கூறுகிறது.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
புறம் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, `அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் நன்கு அறிவார்கள்' என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபிகளார், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் `புறம்' என்றார்கள். நான் கூறுவது எனது சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகளார் 'நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லை என்றால் நீ அவனைப் பற்றி அவதூறு கூறுகிறாய்' என்றார்கள். (நூல்: முஸ்லிம்)
எனவே நமது நண்பர்களிடம் குற்றங் குறைகள் இருந்தால் அவற்றை யாரோ ஒருவரிம் சொல்லிக் கொண்டிருக்காமல் குறையுடன் சம்பந்தப்பட்டவரையே நேரில் சந்தித்து அவரிடமுள்ள குறைகளை பக்குவமாக எடுத்துச் சொன்னால் நிச்சயம் அவர் ஏற்றுக்கொள்ளத் தான் செய்வார்.
அந்தக் குறைகளை வேறு ஒருவரிடம் பேசும் போது அது தெரியாதவர்களுக்கும் தெரிய வருகிறது, நாளடைவில் அது வீட்டுச் சண்டையாகவும் சில நேரங்களில் ஊர்ச் சண்டையாகவும் கூடமாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தான் வாயை திறக்கும் விஷயத்தில் நாம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். இதன் பாதிப்பு இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும், ஏன் நமது மண்ணறையிலும் கூட தொடரும் என்பதை பின்வரும் நிகழ்வு உணர்த்திக்காட்டுகிறது...
இப்னு அப்பாஸ் (ரலி) சொன்னார்கள்: "நபிகளார் இரண்டு மண்ணறைகளைக் கடந்துசென்றபோது 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய பாவத்திற்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது (மர்ம உறுப்புக்களை) மறைப்பதில்லை. மற்றொருவர், புறம் பேசித்திரிந்தார்" என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச்சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபிகளாரிடம் 'இறைத் தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்ட போது, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்கள் இருவரின் மண்ணறை வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று நபிகளார் கூறினார்கள்" (நூல்: புகாரி)
புறம் பேசுவது என்பது எவ்வளவு கொடியது என்று இதன் மூலம் நாம் விளங்க முடிகிறது, ஆகவே தான் நபிகள் நாயகம் 'புறம் பேசுபவன் சுவனத்தில் நுழையமாட்டான்' என்று சொன்னார்கள். எனவே இனியேனும் நாம் அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவதைத் தவிர்த்து அறம் பேசுவோம். அது தான் இன்றைய அவசரத் தேவையும் கூட.
வாருங்கள் புறம் பேசுவதை தடுப்போம்...! அறம் பேசுவதை தொடுப்போம்...!!
- காலையிலும், மாலையிலும் இறைவனை துதிக்க வேண்டும்.
- அருட்பாக்கியங்களை பிரார்த்தனை மூலம் இறைவனிடம் பெற வேண்டும்.
காலையிலும், மாலையிலும் இறைவனை துதிக்க வேண்டும்; இறைவனை துதித்த பிறகு காலையிலும், மாலையிலும் நாம் பெற வேண்டிய 6 அருட்பாக்கியங்களை பிரார்த்தனையின் மூலம் இறைவனிடம் கேட்டுப்பெற வேண்டும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
`இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் மாலைப்பொழுதிலும், நீங்கள் காலைப் பொழுதிலும் இறைவனை துதித்துக் கொண்டிருங்கள்'. (திருக்குர்ஆன் 30:17)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் காலைப்பொழுதை அடையும்போது, (இறைவனின் கிருபையால்) நாம் காலைப்பொழுதை அடைந்து விட்டோம். காலைப்பொழுது ஆட்சியும் அல்லாஹ்விற்கே. அவன் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து, வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவன். இறைவா, நான் உன்னிடம் இந்த நாளின் நன்மைகள் யாவையும் வேண்டுகிறேன். மேலும், இந்த நாளின் வெற்றியையும் வேண்டுகிறேன்.
மேலும், இந்த நாளின் உதவியையும் வேண்டுகிறேன். மேலும், இந்த நாளின் அபிவிருத்தியையும் வேண்டுகிறேன். மேலும் இந்தநாளின் நேர்வழியையும் வேண்டுகிறேன்' என அவர் பிரார்த்திக்கட்டும். மேலும், 'இறைவா! இந்த நாளில் ஏற்படும் தீங்கை விட்டும், இந்த நாளுக்கு பிறகு வரும் தீங்கை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும், அவர் மாலைப்பொழுதை அடையும் போதும் இவ்வாறே பிரார்த்திக்கட்டும்'. (அறிவிப்பாளர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி), நூல்:அபூதாவூத்)
ஒருவர் மாலைப்பொழுதை அடையும் போது, அவர் தமது மாலை நேரப் பிரார்த்தனையில், காலை என்பதற்குப் பதிலாக மாலை என்ற வார்த்தையை மொழிந்து கொள்ள வேண்டும்.
`இறைவனின் கிருபையால் நாம் மாலைப்பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சியும் அல்லாஹ்விற்கே உரியது. அவன் அகிலங்களைப் படைத்து பராமரிப்பவன். இறைவா! நான் உன்னிடம் இந்த இரவின் நன்மைகள் யாவையும், இரவின் வெற்றியையும், இரவின் உதவியையும், இரவின் பிரகாசத்தையும், இரவின் அபிவிருத்தியையும், இரவின் நேர்வழியையும் வேண்டு கிறேன்.
மேலும், இறைவா! இந்த இரவில் ஏற்படும் தீங்கை விட்டும், இந்த இரவுக்கு பின்னால் வரும் தீங்கை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்' என பிரார்த்திக்க வேண்டும்.
இறைநம்பிக்கையாளரின் காலைப் பொழுதும், மாலைப் பொழுதும் நன்றாக அமைய வேண்டுமானால் அவர் இவ்வாறு இறைவனிடம் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் பிரார்த்திக்க வேண்டும்.
வெற்றி: வெற்றி என்பது நமது நோக்கங்கள், நமது எண்ணங்கள், நமது எதிர்பார்ப்புகள் இவற்றுக்கு கிடைக்கக்கூடிய வெற்றியாகும்.
வெற்றியும் - தோல்வியும் வாழ்வின் இருபக்கங்கள். எனினும் வெற்றி என்பது இனிமையானது.
"நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு இறைவனை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்" என்று திருக்குர்ஆன் (2:189) குறிப்பிடுகிறது.
உதவி: உதவி என்பது எதிரிகளுக்கு எதிராக நமக்கு சாதகமாக அமைந்து விடுவது. அநியாயக்காரன், அட்டூழியம் புரிபவன், அடக்குமுறை செலுத்துபவன், ஆதிக்க வெறியுடன் நடப்பவன், வரம்பு மீறி நடப்பவன் போன்றோருக்கு எதிராக நமக்கு இறைவனின் புறத்திலிருந்து கிடைக்கும் உதவி என்பது எதிரியின் சூழ்ச்சியை விட்டும், எதிரியின் சதியை விட்டும் நம்மைக் காப்பாற்றும். இதையே, "இறைவா!
உன்னையே நாங்கள் வணங்கு கிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்" என்று திருக்குர்ஆன் (1:5) கூறுகின்றது.
பிரகாசம்: நமது அன்றாட வாழ்வு பிரகாசமாக, ஒளிமயமாக அமைய வேண்டுமானால் அந்நாளின் செயல்பாடும், அந்நாளின் அறிவும் சீராக அமைய வேண்டும்.
"அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்பு வோருக்கு அல்லாஹ் அதன் மூலம் சாந்திக்கான வழி களைக் காண்பிக்கின்றான்.
மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்" என்று திருக்குர்ஆன் (5:16) குறிப்பிடுகின்றது.
அபிவிருத்தி: ஒவ்வொரு நாளும் நமது வாழ்வாதாரம் அபிவிருத்தியாக அமைந்துவிட்டால், நாம் யாரிடமும் கைகட்டி நிற்க வேண்டியதில்லை. அபிவிருத்தி என்பது பொருள் குறைவாக இருப்பினும் அதனால் ஏற்படும் பயன் அளப்பெரியதாக இருக்கும். ஒரு பொருளின் மீது நன்மை இருப்பது, அந்த நன்மை உறுதியாகவும், நிரந்தரமாகவும் இருப்பதாகும்.
நேர்வழி: நேரான பாதையில் வாழ்க்கைப்பயணத்தை தொடர்வது, மனோ இச்சைகளை விட்டுவிடுவது பாக்கியமுள்ளதாகும். மேலும், இறைவனிடம் அனைத்து விதமான தீமைகள், தீங்குகள், சோதனைகள், குழப்பங்கள், நோய் நொடிகள், மனஅழுத்தங்கள், கவலைகள், கஷ்டங்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாவல் தேடி, அவற்றிலிருந்து விடுதலை கிடைத்தால் அந்நாளும் என்னாளும் பொன்னாளாகும்.
இதையே திருக்குர்ஆன் (2:5) "இவர்கள் தான் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்" என்று குறிப்பிடுகிறது.
நாமும் இறைவனின் வழியில் தினமும் காலையிலும், மாலையிலும் நடந்து, முறையாக இறைவனை வழிபட்டு, நன்மைகளைச்செய்து இறைவனின் அருட்கொடைகளை பெறுவோம்.
- உறவுகள்-நட்பில் விரிசலுக்கு கோபமே காரணமாக அமைகிறது.
- ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்.
எப்போதும் மகிழ்ச்சியும், வெற்றியும் நிறைந்ததாக இந்த உலக வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே மனிதர்கள் பலரின் விருப்பமாக உள்ளது. நினைத்தது நடக்க வேண்டும், விரும்பியது கிடைக்க வேண்டும் என்பதே இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கைப் பாதையாக இருக்கின்றது. அதேபோல இன்றைய மனிதன் தனது வெற்றிக்காக, மகிழ்ச்சிக்காக அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எளிதில் கோபம் கொள்கிறான். கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது கூட உணராமல் வார்த்தைகளை அள்ளி வீசுகின்றான்.
கோபம் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் விரிவாக எடுத்துக்கூறி மனிதர்களுக்கு நல்வழி காட்டுகின்றது. இன்றைய காலகட்டத்தில் குடும்பங்களில் பிரிவு, உறவுகள்-நட்பில் விரிசல் போன்றவற்றுக்கு கோபமே காரணமாக அமைந்து விடுகின்றது. எனவே தான் கோபம் கொள்ளுதலை தவிர்க்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் வற்புறுத்துகின்றன. அவற்றை காண்போம்:
`இறை நம்பிக்கையாளர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்' (திருக்குர்ஆன் 42:37)
`பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால், அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கிக்கொள்வார்கள்; மனிதர்கள் செய்யும் பிழைகளை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்'. (திருக்குர்ஆன் 3:134)
கோபம் குறித்து நபிகள் நாயகம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய இந்த தகவல்கள் புகாரி நூலில் இடம்பெற்றுள்ளது. அவை:
`மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்'.
`ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'எனக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'கோபத்தைக் கைவிடு' என்று அறிவுரை கூறினார்கள். அவர் 'அறிவுரை கூறுங்கள்' எனப் பல முறை கேட்டபோதும் நபி(ஸல்) அவர்கள் 'கோபத்தைக் கைவிடு' என்றே சொன்னார்கள்'.
கோபம் ஏற்படும் போது நாம் என்ன செய்யவேண்டும்
`சுலைமான் இப்னு ஸுரத் (ரலி), நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்' என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், 'நபி (ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா?' என்று கூறினார். அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன் அல்லன்' என்றார். (நூல்: ஸஹீஹ் புகாரி)
கோபத்தினால் 3 நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்காதீர்கள் என்று நபிகளார் கூறியுள்ளார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறுகின்றார்: "ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக, அல்லாஹ்வின் அடியார்களே! அன்பு பாராட்டுவதில் சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று". (நூல்: ஸஹீஹ் புகாரி)
கோபத்தில் இருந்து வெளியேறுங்கள்
இறைத்தூதர் (ஸல்) "ஒருவர் தம் சகோதரரிடம் மனஸ்தாபம் கொண்டு மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். இவ்வாறு செய்யலாகாது. ஸலாமை முதலில் தொடங்குகிறவர் தாம் இவர்கள் இருவரில் சிறந்தவர் ஆவார்". அறிவிப்பாளர்: அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), நூல்: ஸஹீஹ் புகாரி).
கோபம் ஏற்படும் போது செய்ய வேண்டியது:
உங்களில் ஒருவருக்கு நிற்கும் போது கோபம் வந்தால் அமர்ந்து கொள்ளட்டும். அப்போதும் போகவில்லையானால் அவர் படுத்துக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: ஸுனன் அபூதாவூத்)
"நிச்சயமாக கோபம் ஷைத்தானின் குணம். ஷைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டான். நீரைக் கொண்டுதான் நெருப்பை அணைக்க முடியும். எனவே உங்களில் ஒருவர் கோபப்பட்டால் ஒளு (உறுப்புக்களை நீரால் கழுவி சுத்தம்) செய்து கொள்ளட்டும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அதிய்யா (ரலி) நூல்: ஸுனன் அபூதாவூத்).
இறைவனின் நல்லடியார்களே, கோபத்தை கைவிடுவோம், சாந்தியையும், சமாதானத்தையும் பரப்புவோம்.
- மக்களிடம் நற்பெயர் பெற்றால் போதும், அவருக்கு சொர்க்கம் உறுதி.
- நல்லவர்களுக்கு நீ கெடுதல் செய்யாதே
ஓய்வு என்பது, தற்காலிக ஓய்வு, நிரந்தரமான ஓய்வு என இரு வகைப்படும். ஓய்வு என்பதன் பொருள்: 'தொடர்ச்சியான, ஒரு செயலில் இருந்து விடுபடுவது' என்பதாகும். இந்த விடுபடுதல் என்பது தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இருக்கலாம்.
நாம் ஈடுபடும் செயலில் இருந்து சிறிது நேரம் நம்மை விடுவித்து களைப்பாறுதல். நமது அன்றாட பணியின் வேலைப்பளு தாக்கத்தில் இருந்து தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள இளைப்பாறுதல். ஒருநாள் தொடர் வேலையில் மத்தியப்பகுதியில் சற்றுநேரம் அவகாசம் எடுத்துக் கொண்டு தளர்வை போக்க ஓய்வு பெறுதல். நோயில் இருந்து உடல் விடுபட மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமுறை ஓய்வு, இவையாவும் தற்காலிக ஓய்வுகளாகும்.
இன்னும், சில ஓய்வுகள் நிரந்தரமானதாக அமைந்துவிடுகிறது. அது, பணிநிறைவு எனும் ஓய்வு. அடுத்தது, வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விடுபட்டு, இயற்கை எய்தி இறைவனடி நிழலில் இளைப்பாறுதலாகும்.
'நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் 'இவர் ஓய்வு பெற்றவராவார்; அல்லது இவர் பிறருக்கு ஓய்வு அளித்தவராவார்' என்றார்கள்.
மக்கள் 'இறைத்தூர் அவர்களே, ஓய்வு பெற்றவர், அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இறைநம்பிக்கை கொண்ட அடியார் இறக்கும்போது இவ்வுலகத்தின் துன்பத்தில் இருந்தும், தொல்லையில் இருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார்.
பாவியான அடியான் இறக்கும்போது அவனின் தொல்லைகளிடம் இருந்து மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: புகாரி)
'ஒருமுறை, ஒரு பிரேதத்தை கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றி மக்கள் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது' என்றார்கள். மற்றொருமுறை வேறொரு பிரேதத்தை கடந்து சென்றபோது, மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசினார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது' என்றார்கள்.
உடனே உமர் (ரலி), 'எது உறுதியாகி விட்டது?' என்று கேட்டதும், நபி (ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறி புகழ்ந்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. மற்றவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள், எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் இறைவனின் சாட்சிகளாவீர்கள்' என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி) மக்களிடம் நல்லவிதமாக நடந்து, நல்லதை செய்து, இவர் நல்லவர் என்று மக்களிடம் நற்பெயர் பெற்றால் போதும், அவருக்கு சொர்க்கம் உறுதி. மக்களிடம் மோசமாக நடந்து, மோசடி செய்து, கெட்டபெயர் பெற்று, கெட்டவன் என்று மக்கள் இகழ்ந்தாலே போதும், அவருக்கு நரகம் உறுதி.
ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அநியாயத்திலும், அட்டூழியத்திலும், கொடுமைப்படுத்துவதிலும் பிரபலமாகத் திகழ்ந்தான். அப்துல்லாஹ் பின் சுபைர், ஸயீத் பின் சுபைர் போன்றோரை ஈவு இரக்கமின்றி கொன்றான். இறுதியில் அவன் நோய்வாய்ப்பட்டான். நோயின் வேதனை தாங்கமுடியாமல் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் உதவியும், நிவாரணமும் வேண்டினான். அதற்கு ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் 'நல்லவர்களுக்கு நீ கெடுதல் செய்யாதே, என நான் உன்னைத் தடுத்தேன்.
இப்போது நீ கடும் சிரமத்தில் மாட்டிக்கொண்டாய்' என்றார். அதற்கு ஹஜ்ஜாஜ் பின் யூசுப் 'ஹஸனே! என்னிடமிருந்து கடும் சிரமம் நீங்கிவிட இறைவனிடம் பிரார்த்திக்கும்படி நான் உம்மை வேண்டிக் கொள்ளவில்லை. மாறாக, எனது உயிர் சீக்கிரமாக கைப்பற்றப்பட வேண்டும் எனவும், எனக்கு ஏற்படும் வேதனை நீடிக்கக்கூடாது எனவும் தான் நான் உம்மை வேண்டும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
ஹஜ்ஜாஜ் இறந்தபோது, அந்த செய்தியை அறிந்த மக்கள் வீதிக்கு வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மஃமூன் இறந்தபோது இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். தன்னை நபி என்று வாதிட்ட பொய்யன் முஸைலமா கொல்லப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) இறைவனுக்கு தலைவணங்கி, சிரம் தாழ்த்தி நன்றி கூறி மகிழ்ந்தார்.
நல்லவர்கள் நம்மை விட்டுச் சென்றால் அது நமக்கு கவலை தரும். தீயவர்கள் மரணமானால் அது உலகத்திற்கும், உலக மக்களுக்கும் நிம்மதி தரும் ஓய்வாகும். நல்லவர்களால் இந்த உலகம் நன்மை பெறட்டும்.
- இயக்குனர்கள் பி.ஜி. மோகன் - எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தீர்க்கதரிசி’.
- இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் சார்பில் பி.சதீஷ் குமார் தயாரிப்பில், பி.ஜி. மோகன் - எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில் உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது.

தீர்க்கதரிசி இசை வெளியீட்டு விழா
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, "இந்த படத்தின் இயக்குனர்கள் மிகச்சிறந்த இயக்குனர்களிடம் இருந்து வந்தவர்கள். அது இந்த படத்தில் நன்றாகத் தெரிகிறது. ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்குமென்பது பார்க்கும்போதே தெரிகிறது. அதோடு சத்யராஜ் சார் உடைய நடிப்பு, தீர்க்கதரிசி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது. அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல் இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்" என்று பேசினார்.

தீர்க்கதரிசி இசை வெளியீட்டு விழா
நடிகர் சத்யராஜ் பேசியதாவது, "இது போன்ற சிறிய படங்கள் செய்யத் தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குனர்கள் வரிசையில் இந்த இயக்குனர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கண்டெண்ட் சிறப்பாக இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி" என்று பேசினார்.
- அவரது கருத்துக்களுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து கட்சியால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- நோட்டீஸ் வந்த நாளிலிருந்து 10 நாட்களுக்குள் ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று சிங் காரணம் காட்ட வேண்டும்.
நபிகள் நாயகம் குறிவைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தெலுங்கானா எம்எல்ஏ ராஜா சிங்கை பாஜக இன்று இடைநீக்கம் செய்துள்ளது.
கடுமையான இந்துத்துவா கருத்துக்களுக்கும், இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவிப்பதில் பெயர் பெற்ற ராஜா சிங், தெலுங்கானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது கருத்துக்களுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து கட்சியால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் மத்திய ஒழுங்குக் குழுவின் செயலாளரான ஓம் பதக் வெளியிட்ட அறிக்கையில், "பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்துகளை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். இது பாரதிய ஜனதாவின் அரசியலமைப்பின் விதியை தெளிவாக மீறுவதாகும். மேலும், விசாரணை நிலுவையில் உள்ளதால், நீங்கள் கட்சியிலிருந்தும், உங்கள் பொறுப்புகள் அல்லது பணிகளில் இருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்படி எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நோட்டீஸ் வந்த நாளிலிருந்து 10 நாட்களுக்குள் ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று சிங் காரணம் காட்ட வேண்டும் என்றும் சிங்கின் விரிவான பதில் செப்டம்பர் 2-ம் தேதி 2022க்குள் தெரிவிக்க வேண்டும்" என்றும் பதக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மூட நம்பிக்கையில் திளைத்திருந்த காலம் அது. தங்கள் கற்பனையில் உருவான உருவங்களை கடவுளாக வணங்கி வந்தனர். மேலும் தவறான, பாவம் நிறைந்த செயல்களில் ஈடுபட்டு வாழ்ந்தனர்.
அப்போது மக்களை திருத்தி, நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு நேர்வழிகாட்ட முகம்மது நபி (ஸல்) அவர்களை, தனது தூதராக இறைவன் அனுப்பினான். ஏக இறைவன் அல்லாஹ், தனது இறைச்செய்தியை நபிகளாருக்கு அனுப்பி மக்களிடம் அதை தெரிவிக்கச்செய்தான். ஆனால் மக்கள் இதை ஏற்க மறுத்தனர். அதோடு, நபிகளாருக்கு கடும் துன்பங்களையும் கொடுத்தார்கள்.
நாளுக்கு நாள் இறைமறுப்பாளர்களின் துன்பங்களும், கொடுமைகளும் அதிகரித்தன. ஏக இறைக்கொள்கைகளை மக்களிடம் எடுத்துச்சொல்ல முடியாத அளவுக்கு எதிரிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.
எனவே இறைக்கட்டளைப்படி நபிகளார் தனது தோழர் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடன் மக்காவில் இருந்து மதினாவுக்கு புலம் பெயர்ந்து சென்றார். இந்த நிகழ்ச்சி ‘ஹிஜரத்’ என்று அழைக்கப்பட்டது.
அருமை நாயகம் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில்இருந்து தப்பி விட்டார்கள் என்ற செய்தி அறிந்த எதிரிகள் கோபம் அடைந்தனர். குறிப்பாக அபூஜஹில் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தான், ‘அவர்கள் அவ்வளவு எளிதில் எல்லையை கடந் திருக்க முடியாது. முகம்மதை உயிரோடு பிடித்து கொண்டு வருபவர்களுக்கு நூறு வெள்ளை ஒட்டகங்கள் பரிசாக அளிப்பேன்’ என்று அறிவித்தான்.
அரேபியர்கள் மத்தியில் வெள்ளை ஒட்டகத்திற்கு என்று தனி மதிப்பு உண்டு. அதுவும் நூறு வெள்ளை ஒட்டகங்கள் என்றால் கேட்கவா வேண்டும். எதிரிகள் அத்தனை பேருமே அண்ணலாரைத் தேடி பல திசைகளில் பயணித்தார்கள்.
ஆனால், அருமை நபிகளும், அபூபக்கரும் பாலைவனத்தில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்தார்கள். கிட்டத்தட்ட பாதி தூரம் சென்றவர்கள், அந்த பாலைவனத்தைக் கடந்து தவுர் மலையில் உள்ள ஒரு குகையை அடைந்தார்கள்.
அந்த குகை மிகவும் பழமை வாய்ந்த பள்ளதாக்கில் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டு இருவரும் அதில் ஏறினார்கள். தங்களது கால்தடங்கள் கூட தங்களை எதிரிகளிடம் காட்டிக்கொடுத்து விடும் என்று நபிகளார் அஞ்சினார்கள். எனவே அவர்கள் தங்களது விரல் நுனியிலேயே நடந்து வந்தார்கள். இதனால் அவர் களது கால் விரல் வெப்பத்தினால் வெந்து காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது.
அதனைக் கண்ணுற்ற அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் உடனே நபிகளாரை தனது தோள்களில் தூக்கி வைத்துக்கொண்டு அந்த குகையை ேநாக்கி நடந்தார்கள். குகைக்குச் சென்றதும் அண்ணலாரை வெளியே இருக்கச் செய்து விட்டு, தான் மட்டும் உள்ளே நுழைந்தார்கள். அந்த குகை மிகவும் சிறியதாக இருந்தது. இரண்டு நபர்கள் படுப்பதற்கும் மூன்று அல்லது நான்கு நபர்கள் அமரும் இடவசதி கொண்டது.
உள்ளே சென்ற அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் குகையை நன்றாக சுத்தம் செய்தார்கள். குகைகளில் இருந்த ஏராளமான துவாரங்களை தங்களுடைய ஆடையை கிழித்து அடைத்தார்கள். பின்னர் அண்ணலாரை உள்ளே அழைத்தார்கள். அண்ணலார் உள்ளே சென்றதும், களைப்பின் மிகுதியால் அப்படியே துயில் கொள்ள ஆரம்பித்தார்கள்.
அண்ணலாரின் தலையை தன் மடியில் சாய்த்துக்கொண்ட அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள், தன்னுடைய கால் விரல்களால் மீதமிருந்த இரண்டு துவாரங்களையும் அடைத்துக் கொண்டார்கள்.
துரதிர்ஷ்டவசமாக அந்த துவாரத்தில் இருந்த நாகம் ஒன்று அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் பாதங்களை தீண்டி விட்டது. கொடிய விஷம் உடலில் ஏறியதால் சொல்லொண்ணா வலியும் வேதனையும் ஏற்பட்டது. கால்களை அசைத்தால் அது அண்ணலாரின் தூக்கத்தை கெடுத்து விடும் என்று நினைத்து, வலியை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.
ஆனால், வலியின் வேதனையில் அவரது கண்ணிலிருந்து வழிந்தோடிய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சில கண்ணீர்த்துளிகள் வழிந்தோடி அண்ணலாரின் கன்னங்களில் பட்டு தெறித்தது.
உடனே விழித்துக்கொண்ட அண்ணலார், ‘அபூபக்கரே! என்ன நேர்ந்தது?’ என வினவினார்கள்.
அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள், ‘அண்ணலே! எனது காலில் ஏதோ விஷ ஜந்து தீண்டி விட்டது போல் தெரிகிறது. வலியையும் வேதனையையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என்றார்கள்.
உடனே பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் உமிழ் நீரை எடுத்து கடிபட்ட இடத்தில் தடவினார்கள். உடனே அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வலியும் வேதனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.
அண்ணலாரும், அபூபக்கரும் குகையில் நுழைந்ததும் ஒரு புறா ஜோடி அங்கே கூடு கட்டி அதில் முட்டையிட்டு அடைகாக்க ஆரம்பித்து விட்டது. குகையின் வாயிற் பகுதியில் ஒரு சிலந்தி தன் வலைகளை முழுவதுமாக பின்னி அந்த இடத்தில் எந்தவித அசைவுகளும் ஏற்படவில்லை என்பது போலவும், யாரும் அங்கே நுழைந்திருக்க முடியாது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது.
சுகாதாரமற்ற, காற்று வசதி இல்லாத இருண்ட, விஷ ஜந்துக்கள் குடியிருக்கும் அந்த குகையில் இரு நண்பர்களும் தங்கினார்கள்.
இந்நிலையில் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் மகன் ஹஸ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், விரோதிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஒவ்வொரு இரவும் குகைக்கு வந்து மக்கா நகரின் தற்போதைய தகவல்களை சொல்லிச் செல்வார்கள்.
அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் அடிமை ஆமீர் இப்னு பஷீர் என்பவர் பாலைவனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருவது போல குகை இருக்கும் பகுதிக்கு இரவில் வந்து, குகையில் தங்கியிருந்த அண்ணலாருக்கும், அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுக்கும் ஆட்டின் பாலைக் கறந்து அருந்த கொடுப்பார்கள்.
பரிசுகளின் அறிவிப்பை தொடர்ந்து மேலும் பலர் அண்ணலாரை எல்லா இடங்களிலும் தேட ஆரம்பித்தார்கள். ஒரு கூட்டத்தினர் அண்ணலார் இருந்த குகை வாசல் வரை வந்து விட்டார்கள். அவர்களின் கால் பாதங்களை அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களால் பார்க்க முடிந்தது.
“அண்ணலே! நம்மை எதிரிகள் சூழ்ந்து விட்டார்கள். சற்று குனிந்து பார்த்தால் நாம் பிடிபட்டு விடுவோம். என்ன செய்வது ரசூலே” என்றார்கள்.
அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் “நீர் அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்றார்கள். (திருக்குர்ஆன் 9:40)
அந்த நேரத்தில் எதிரிகளில் ஒருவன், ‘ஏதோ இங்கே ஒரு குகையின் வாசல் போல தோன்று கிறதே’ என்றான். ஆனால் அதற்கு பதிலாக மற்றொருவன், ‘இங்கே புறா கூடு கட்டியுள்ளது, சிலந்தி வலை பின்னியுள்ளது. இதனை அறுத்துக்கொண்டு யாரும் சென்றதற்கான அடையாளமே இல்லையே?. எனவே இங்கே யாரும் இருக்க மாட்டார்கள்’ என்று கூறியபடியே அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.
எதிரிகளின் ஆரவாரம் முடிந்ததும், நபிகளார் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து மதினாவின் எல்லையை அடைந்தார்கள். அந்த எல்லையில் ஒரு இடத்தில் தங்கினார்கள். அதுவே ஹிஜ்ரத்தின் கடைசி இடமாகும். அங்கு தான் வந்து தங்கியதும் தொழுவதற்காக பேரீச்சம் மர இலைகளால் கூரை வேய்ந்த பள்ளியைக் கட்டினார்கள். அதுவே ‘மஸ்ஜிதே குபா’ என்று அழைக்கப்படுகிறது.
அங்கிருந்து அன்சாரி நண்பர்கள் புடைசூழ அல்லாஹ்வின் தூதர் ஏகத்துவத்தின் தலைநகரம் மதினாவை சென்றடைந்தார்கள். ஹிஜ்ரத் முடிவடைந்தது. இஸ்லாம் என்னும் பேரொளி குன்றிலிட்ட ஒளியாய் பிரகாசிக்கத் தொடங்கியது.
மு. முஹம்மது யூசுப் - உடன்குடி.
ஆனால் மனிதர்களுக்கு எது சரி, எது சரியல்ல, இதைச் செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று பகுத்து அறியும் ஆற்றலை இறைவன் அருளியுள்ளான். எனவே உணர்ச்சிகள் கொப்புளிக்கும்பொழுது தன்னைக் கட்டுப்படுத்துபவனே விலங்குகளிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்கிறான்.
மற்றவர்களைக் காயப்படுத்தும் உணர்ச்சிகளுள் ஒன்றான கோபத்தை ஒருவன் அடக்கத் தவறினால் அந்தக் கோபம் அவனையும் அழித்து, அடுத்தவர்களையும் பொசுக்கி விடும்.
மற்றவர்களின் மீது ஒருவருக்கு கோபம் ஏற்பட முக்கிய காரணங்கள் இவை தான்: 1) சம்பந்தப்பட்ட நபர் மீது வெறுப்பு, 2) தான் சரியென்று நினைப்பதை அடுத்தவர் ஒப்புக்கொள்ளாமல் இருப்பது, 3) தான் எண்ணியது நடக்கவில்லை என்கிற போது... இதுபோன்று பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
கோபத்தில் முகம் சிவந்தது, கோபத்தில் ரத்தம் கொதித்தது போன்ற வார்த்தை பிரயோகங்கள் அறிவியல் பூர்வமாக சரியானவையே. ஒருவர் கோபப்படும் பொழுது ரத்த நுண் குழாய்களில் அழுத்தம் அதிகமாகி வெடித்து விடும் ஆபத்தும் உள்ளது என்று எச்சரிக்கிறது மருத்துவம்.
இதனால் கோபப்படுபவருக்கு உடல் நலம் கெடுவதுடன் அதனால் சம்பந்தப்பட்டவர்களும் மனஅழுத்தத்திற்கு ஆளாகலாம். கோபத்தினால் எந்த லாபமும் இல்லை, புண்ணியமும் இல்லை.
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் (எளிதில் கோபப்படும் இயல்புடைய) ஒருவர் வந்து, ‘எனக்கு ஏதாவது ஒரு அறிவுரை கூறுங்களேன்’ என்று கேட்டார். அதற்கு ஏந்தல் நபி (ஸல்) ‘கோபப்படாதீர்’ என்று பதில் கூறினார்கள். இதே கேள்வியை பல முறை அந்த மனிதர் கேட்டும் அண்ணலார் அவர்கள் ஒவ்வொரு முறையும் ‘நீர் கோபம் கொள்ளாதீர்’ என்றே கூறினார்கள்.
கட்டுப்படுத்த முடியாமல் கோபம் வரும்பொழுது அதை அடக்கிக் கொள்பவனே உண்மையான வீரன். “குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்பொழுது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையில் வலிமை வாய்ந்தவன்” என்றும் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
மிகுதியான கோபம் ஏற்படும்பொழுது நாவைக் கட்டுப்படுத்துவது மிகச்சிறந்ததாகும். ஏனெனில் கோபம் மூளையை ஆக்கிரமித்து, என்ன பேசுகிறோம் என்பதை நாம் உணராத அளவிற்கு செய்து விடும். கோபம் குறைந்த பின், ‘நானா அப்படிச் சொன்னேன்?’ என்று நாம் ஆச்சரியப்படுவது இந்த காரணத்தினால் தான்.
எரிமலையாய்ச் சீறும் ஒருவரின் நாவில் இருந்து வரும் வார்த்தைகள் தீக்கங்குகளாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. எனவே தான் கோபம் சாட்டப்பட்டவர்கள் வேதனையில் வெந்து போகிறார்கள். இதையே திருவள்ளுவர் ‘தீயினாற் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்கிறார்.
கோபம் கொள்பவர்கள் ஷைத்தானின் ஆதிக்கத்தில் இருக்கிறார்கள். நெருப்பால் படைக்கப்பட்ட அவனின் தாக்கமே அவர்களிடமிருந்து கோபமாக கொப்புளிக்கிறது. ஆகவேதான் கோபம் தலைக்கேறும் பொழுது நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டு உடனே தண்ணீரும் பருகுவதால் கோபம் தணியும்.
கோபத்தில் பொங்கும் மன தைக் குளிர்விக்கவே ரஸூல் (ஸல்) அவர்கள் “கோபம் ஷைத்தானின் பாதிப்பினால் ஏற்பட்ட விளைவாகும். அவன் நெருப்பினால் படைக்கப்பட்டவன். நெருப்பு நீரினால் மட்டுமே அணைகிறது. எனவே உங்களில் ஒருவர் கோபம் கொள்ளும் பொழுது அவர் ‘ஒளு’ செய்து கொள்ளட்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
இன்னும் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் பொழுது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும், இப்படிச் செய்து கோபம் மறைந்து விட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவுரை பகன்றுள்ளார்கள்.
கோபம் வரும்பொழுது, ‘விரட்டப்பட்ட ஷைத்தானிடம் இருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்று இறைவனிடம் கோருவது, கோபத்தில் இருந்து நம்மைத் தடுத்துக் கொள்வதற்கான ஒரு எளிய வழியாகும்.
கோபத்தை அடக்க முடியாமல் ஆத்திரத்தில் கொலை போன்ற கடுமையான குற்றங்களைச் செய்பவர்களை நாம் பார்க்கிறோம். கோபம் வடிந்து, ‘தவறு செய்து விட்டோமே’ என்று காலம் தாழ்ந்து உணர்பவர்கள் வேதனைப்பட்டாலும் அதில் எந்த பலனும் கிடைக்காது. பெரும் தவறு செய்த குற்றத்திற்காக சிறை தண்டனைதான் கிடைக்கும்.
கோபத்தினாலும், ஆத்திரத்தினாலும் நடந்த முதல் கொலை ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் நடந்தது. காபீல், ஹாபீல் இருவரும் ஆதம் (அலை) அவர்களின் புதல்வர்கள். காபீலுக்கு ஹாபீலின் மீது பொறாமை ஏற்படுகிறது.
இறைவனுக்காக இருவரும் சமர்ப்பணம் செய்த காணிக்கைகளில் ஹாபீலின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனால் பொறாமைத் தீ இன்னும் கொழுந்து விட்டு எரிய, கோபத்தில் காபீல், ஹாபீலைக் கொன்று விடுகிறார்.
கோபம் எப்படிப்பட்ட சீரழிவிலும் கொண்டு போய் விட்டு விடும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இல்லை. இதுமட்டுமின்றி பொறாமையின் காரணமாகவும் மனிதர்கள் கோபம் கொள்கிறார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
‘நான் தான் பெரியவன்’ என்னும் அகம்பாவம் மனதில் மேலோங்கும் பொழுது ‘தாங்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும்’ என்று எண்ணுபவர்களுக்கு, தங்கள் சொல்லைக் கேட்காதவர்கள் மீது கோபம் ஏற்படுகிறது. இதனால்தான் சிலர் தமக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் கோபம் கொள்கிறார்கள்.
எல்லோரையும் ஏற்ற, தாழ்வின்றி சமமாகப் பாவிப்பவர்களுக்கு கோபம் வருவது அரிதே. கோபம் கொள்வதால் நாம் செய்யும் நற்செயல்கள், இறைவனிடத்தில் எந்த பலனையும் பெற்றுத் தராது. கோபத்தை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மையை அளிக்கக் கூடியது என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.
மனிதர்களுக்கு கோபத்தைத் தூண்டி விட்டு, அவர்களை நன்மைகள் செய்வதிலிருந்தும் தடுப்பது ஷைத்தானின் வேலையாக இருக்கிறது. எனவே நாம், கோபம் கொள்வதிலிருந்து இறைவனிடத்தில் பாதுகாப்பு தேடிக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.
ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84
இந்த நான்கு அம்சங்கள் ஒரு முஸ்லிமிடம் இடம் பெற்றால் அவர் இறைவனின் அன்பை எளிதாக பெற்றுவிடலாம். இந்த நான்கு அம்சங்களும் புனித ரமலானின் நோன்பில் அமைந்துள்ளது.
உணவை குறைப்பது
புனித ரமலானில் நோன்பாளிகள் வெகுவாக உணவை குறைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு உணவை குறைத்துக் கொள்வதின் மூலம் இறைவனின் நெருக்கத்தை சுலபமாக அடைந்து கொள்கிறார்கள். இதுகுறித்த நபிமொழி வருமாறு:-
‘எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார். நோன்பு எனக்கு மட்டுமே உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று இறைவன் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) புகாரி)
நோன்பு காலத்தில் உணவை குறைத்துக் கொள்வதின் வழியாக நோன்பின் சன்மானத்தை இறைவனின் திருக்கரத்தால் பெறமுடிகிறது.
தூக்கத்தை குறைப்பது
புனித ரமலானில் இரவு வணக்கம் என்பது முக்கியமானது. மற்ற மாதங்களை விட ரமலானில் இரவு வணக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் வெகுநேரம் தூங்கமுடியாது.
‘எவர் ரமலான் இரவில் இறை நம்பிக்கையாளராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் இருந்து (தராவீஹ்) தொழு கிறாரோ, அவர் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) புகாரி)
‘நபி (ஸல்) அவர்கள் ரமலான் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள்.’ (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) புகாரி)
‘கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பான தொழுகை ‘தஹஜ்ஜத்’ தொழுகை ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)
‘பயபக்தியாளர்கள் பொறுமையாளராகவும், வாய்மையாளராகவும், இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவோராகவும், தான தர்மங்கள் செய்வோராகவும், ஸஹ்ர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருபவராகவும் இருப்பர்.’ (திருக்குர்ஆன் 3:17)
‘(ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவில் அல்லாஹ்வைத் தொழுது உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்.’ (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), புகாரி)
‘நோன்பும், திருக்குர்ஆனும் நாளை மறுமையில் அடியானுக்கு பரிந்துரை செய்யும். ‘இறைவா! நான் அவனை பகலில் உண்ணுவதை விட்டும், மனோ இச்சைகளை விட்டும் தடுத்தேன். எனவே அவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக’ என்று நோன்பு கூறும்.
‘இறைவா! நான் அவனை இரவில் தூங்குவதை விட்டும் தடுத்தேன். எனவே அவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக’ என்று திருக்குர்ஆன் கூறும். எனவே இரண்டு வகையான பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்பின்அம்ர் (ரலி), அஹ்மது)
புனித ரமலானில் நிறைவேற்றப்படும் இந்த செயல்பாடுகள்தான் அவர்களுக்கு இறைவனின் அன்பை பெற்றுத்தர போதுமானதாக அமைந்துவிடுகிறது.
பேச்சை குறைப்பது
‘எவர் பொய்யான காரியங்கள் செய்வதையும், பொய்யான பேச்சுகளையும் விடவில்லையோ, அவர் தமது உணவையும், நீரையும் விட்டுவிடுவ(நோன்பு வைப்ப)தில் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)
‘நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே நோன்பாளி தவறான பேச்சுகளைப் பேசவேண்டாம். முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடவேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால், அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி’ என்று இருமுறை கூறட்டும்! என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)
நோன்பு என்பது உண்ணாமல், பருகாமல் இருப்பது மட்டுமே அல்ல. கெட்ட வார்த்தைகளை பேசாமலும், பொய் பேசாமலும், புறம் பேசாமலும், அவதூறு பேசாமலும், கோள் பேசாமலும், ஆபாசமாக பேசாமலும், தீச்சொல் பேசாமலும் இருக்க வேண்டும். இவ்வாறு இருப்பதுதான் மெய்யான நோன்பாகும்.
நோன்பின் ஒழுக்கங்கள் எட்டு. அதில் நாவைப் பேணுதலும் அடங்கும். இறைவனின் அன்பை பெற தேவையற்ற பேச்சு களை விட்டு தவிர்ந்திருக்க வேண்டும்.
மக்களுடன் குறைவாக கலந்திருப்பது
புனித ரமலானில் நோன்பாளிகள் தமது நட்பு வட்டாரத்தை சுருக்கிக் கொண்டு, இறை நெருக்கத்தை அடையும் வகையில் மக்களுடன் கலந்திருப்பதை தவிர்த்து கொள்கிறார்கள்.
ரமலானின் மூன்றாவது பத்தில் நோன்பாளிகள் உலகத் தொடர்பை துண்டித்து, குடும்ப உறவை தற்காலிகமாக நிறுத்திவைத்து, இல்லறத்தொடர்பை முற்றிலும் விட்டுவிட்டு, பள்ளிவாசலில் தஞ்சமடைந்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை தியானிக்க ‘இதிகாப்’ இருப்பார்கள்.
இதுகுறித்து குர்ஆன் கூறுவதைக் காண்போம். ‘நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இதிகாப்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்’ (2:187)
‘நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் இதிகாப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியரும் இதிகாப் இருந்தனர்.’ (அறிவிப் பாளர் : ஆயிஷா (ரலி), புகாரி)
கெட்ட சகவாசத்தை விட ஒதுங்கி தனியாக இருப்பதே மேல். அதிலும் ரமலானில் இருப்பது அதைவிடவும் மேலானது.
மேற்கூறப்பட்ட நான்கு அம்சங்களையும் கடைப்பிடித்தால் இறைவனின் அன்பை அடையலாம். மேலும், இறைவனையே பரிசாக பெற்றுவிடலாம். இத்தகைய அம்சங்களை கடைப்பிடிக்கக்கூடிய பாக்கியம் புனித ரமலானில் மட்டுமே அரிதாகக் கிடைக்கும்.
‘சுவையான உணவை தேடுபவன் இறைவணக்கத்தில் இன்பம் பெறமாட்டான். அதிகமாக தூங்குபவன் வாழ்க்கையில் அபிவிருத்தியை அடையமாட்டான். மனிதர்களிடம் புகழை தேடுபவன் இறைவனின் பொருத்தத்தை பெறமாட்டான். புறமும், வீண் பேச்சும் பேசுபவன் தீனுல் இஸ்லாத்தில் மரணிக்கமாட்டான்’ என இப்ராகீம் பின் அத்ஹம் (ரஹ்) கூறுகிறார்கள்.
இந்த புனித ரமலானில் இறைவனுக்கு பிடிக்காத அனைத்துவிதமான செயல்களையும் அறவே விட்டுவிட்டு, அறவழியில் சென்று இறையருளைத்தேடுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.