search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai"

    • இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
    • ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை எதிர் நோக்கி இரு அணிகளும் களமிறங்குகிறது.

    ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் இந்த போட்டியில் களமிறங்கவில்லை.

    • மும்பை மோதிய முதல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு இருந்தே ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை எதிர் நோக்கி இரு அணிகளும் களமிறங்குகிறது.

    இந்நிலையில் இந்த போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் மும்பை கா ராஜா ரோகித் சர்மா என முழக்கமிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு இருந்தே எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் அணியிடம் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஆதரவு ரசிகர்கள் மும்பை கா ராஜா ரோகித் சர்மா என முழக்கமிட்டனர். அதேபோல இந்த போட்டியிலும் முழக்கமிட்டு வருகின்றனர்.

    • சகோதரர் ராகுல் காந்திக்குக் கூடிய மக்கள் பெருந்திரள் பா.ஜ.க.வைத் தூக்கமிழக்கச் செய்தது
    • பா.ஜ.க.வை நாம் இப்போதே நிறுத்தி ஆகவேண்டும். அதுதான் நம் இலக்கு!

    மும்பையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    இந்நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்பு பேரறிஞர் அண்ணா எழுதிய மாபெரும் தமிழ்க்கனவு புத்தகத்தின் ஆங்கில பதிப்பை ராகுல்காந்திக்கு அவர் பரிசளித்தார்.

    அந்த நிகழ்வில் பேசிய மு.க. ஸ்டாலின், "எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைக் கூறுவதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன். கன்னியாகுமரியில் அவரது இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கி வைத்த பெருமிதத்துடன் இங்கு நிற்கிறேன். உங்கள் பயணம் இன்று மும்பையை அடைந்துள்ளது. விரைவில் அது டெல்லியை எட்டும்! இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்.

    ராகுல் காந்தி அவர்கள் எங்குச் சென்றாலும் பெரும் திருவிழாவைப் போல அந்த இடம் காட்சியளிக்கிறது. அப்படியொரு வரவேற்பையும் அன்பையும் மக்கள் அவர் மீது பொழிகிறார்கள். இந்தப் பயணத்தினிடையே அவர் பல இடர்களைப் பாஜக அரசின் மூலம் எதிர்கொண்டார். அவரது பயணத்துக்கு அனுமதி மறுக்க என்னென்னவோ காரணங்களைச் சொல்லிப் பார்த்தார்கள். தடைகளை மீறி ராகுல் காந்தி அவர்கள் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

    சகோதரர் ராகுல் காந்திக்குக் கூடிய மக்கள் பெருந்திரள் பா.ஜ.க.வைத் தூக்கமிழக்கச் செய்தது. அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தார்கள். ஆனால் அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து முழங்கினார்.

    இந்தப் பயணம் ராகுல் காந்தி என்ற தனிமனிதரின் பயணம் இல்லை. இது இந்தியாவுக்கான பயணம். அதனால்தான் இது இந்திய ஒற்றுமை நியாயப் பயணம். (Bharat Jodo Nyay Yatra) இந்தியாவுக்கு இப்போது தேவை ஒற்றுமைதான். மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். கடந்த பத்தாண்டுகளில் மோடி செய்தது இரண்டே இரண்டுதான். ஒன்று வெளிநாட்டுப் பயணங்கள். மற்றொன்று பொய்ப் பிரசாரம்.

    பா.ஜ.க.வை நாம் இப்போதே நிறுத்தி ஆகவேண்டும். அதுதான் நம் இலக்கு! இந்தியா கூட்டணியை நாம் உருவாக்கிய நாளில் இருந்து, இந்தியா என்ற சொல்லையே பா.ஜ.க தவிர்க்கத் தொடங்கிவிட்டது. அந்த அளவுக்கு அச்சத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் பிரதமர் மோடி நம் கூட்டணி குறித்து அவதூறு செய்து வருகிறார். இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என்கிறார். ஆனால், ஊழலில் ஊறிய கட்சி பா.ஜ.க.தான் என்பதைத் தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்தி விட்டது. 6000 கோடி ரூபாயைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டியது யார்? இது பா.ஜ.க.வின் நவீன ஊழல்! இப்படிப்பட்ட பிரதமர் ஊழல் குறித்து வாய்திறக்கலாமா? தனது தோல்விகளையும் ஊழல்களையும் திசைதிருப்பவே நம் மீது மோடி குற்றம் சாட்டுகிறார்.

    நாம் மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். கேளிக்கைக்காக அன்று! இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சகோதரர் ராகுல் காந்தி பயணித்திருக்கிறார். பா.ஜ.க.வால் சீரழிக்கப்பட்ட நம் இந்தியாவை மீட்பதற்கான பயணம் இது.

    தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இனி பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே நமது இலக்கு. பா.ஜ.க.வை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை. அவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

    ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தின் உண்மையான வெற்றி என்பது பா.ஜ.க.வை வீழ்த்துவதில்தான் அடங்கியிருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியைக் கைப்பற்றி, அனைத்துத் தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற, உண்மையான கூட்டாட்சி அரசை அமைப்பதில் நிறைவுற வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்! இந்தியாவே எழுக" என்று மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். 

    • இஷா அம்பானியின் நெருங்கியதோழி பிரியங்கா ஆவார்
    • இதில் பாலிவுட் நட்சத்திரங்கள்பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்

    பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி ஏற்பாடு செய்த "ரோமன் ஹோலி" கொண்டாட்டம் நிகழ்ச்சி மும்பை 'ஆன்டிலியா'ஜியோ வேர்ல்ட் பிளாசாவில்நேற்று மாலை நடந்தது.

    இதில் பாலிவுட் நட்சத்திரங்கள்பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.




     


    வண்ண ரத்தினக் கற்களின் மாஸ்டர் என்று அழைக்கப்படும் அற்புதமான ரோமானிய பெரிய நகைக் கடையான பல்கேரி, இந்திய வண்ண பண்டிகையான ஹோலி பண்டிகையை 'ரோமன் ஹோலி'என்ற பெயரில் கொண்டாடியது. 

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபல்கேரிய நகைக் கடையின் உலகளாவிய தூதராக உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி 'ஸ்லிட் புடவை' ரூ.8 கோடி மதிப்பு உள்ள :'பவ்ல்காரி நெக்லஸ்' அணிந்து இருந்தார்.இஷா அம்பானியின் நெருங்கியதோழி பிரியங்கா ஆவார்.

    அம்பானி வீட்டு பெண்களான இஷா அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்,ஷ்லோகா மேத்தா ஆகியோருடன் பிரியங்கா சோப்ரா, மகிழ்ச்சியாக புகைப்படங்களுக்கு 'போஸ்' கொடுத்தார்.



     

    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதில் பங்கேற்ற அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் அம்பானியின் வீட்டில் இரவு ருசியான பல்சுவையான விருந்து வழங்கப்பட்டது.

    • விதர்பா 2வது இன்னிங்சில் 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • மும்பை அணியின் தனுஷ் கோடியான் 4 விக்கெட் வீழ்த்தினர்.

    மும்பை:

    ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவருகிறது. இதில் மும்பை, விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 75 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 46 ரன்னும், லால்வாணி 37 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா சார்பில் யாஷ் தாகூர், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுத்தார்.

    மும்பை சார்பில் தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷீர் கான் 136 ரன்னும், ஷ்ரேயஸ் அய்யர் 95 ரன்னும், ரகானே 73 ரன்னும், ஷம்ஸ் முலானி 50 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    விதர்பா சார்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 538 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. 4வது நாள் ஆட்டத்தில் விதர்பா அணி நிதானமாக ஆடியது.

    அதர்வா டைட் 32 ரன்னும், துருவ் ஷோரே 28 ரன்னும், அமன் மொகாடே 32 ரன்னும், யாஷ் ரதோட் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    5-வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன், அக்ஷய் வடேகர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 90 ரன்கள் சேர்த்த நிலையில் கருண் நாயர் 74 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து ஆடிய வடேகர் அரை சதமடித்தார்.

    நான்காம் நாள் முடிவில் விதர்பா 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. வடேகர் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில, இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. பொறுமையாக ஆடிய விதர்பா வீரர்கள் உணவு இடைவேளை வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

    வடேகர் சதமடித்து 102 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹர்ஷ் துபே 67 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், விதர்பா அணி 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி

    42-வது முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது முஷீர் கானுக்கும், தொடர் நாயகன் விருது தனுஷ் கோடியானுக்கும் அளிக்கப்பட்டது.

    • விதர்பா முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 4-வது நாள் முடிவில் விதர்பா 2வது இன்னிங்சில் 248 ரன்கள் எடுத்துள்ளது.

    மும்பை:

    ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவருகிறது. இதில் மும்பை, விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 75 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 46 ரன்னும், லால்வாணி 37 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா சார்பில் யாஷ் தாகூர், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுத்தார்.

    மும்பை சார்பில் தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷீர் கான் 136 ரன்னும், ஷ்ரேயஸ் அய்யர் 95 ரன்னும், ரகானே 73 ரன்னும், ஷம்ஸ் முலானி 50 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    விதர்பா சார்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 538 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. 4வது நாள் ஆட்டத்தில் விதர்பா அணி நிதானமாக ஆடியது.

    அதர்வா டைட் 32 ரன்னும், துருவ் ஷோரே 28 ரன்னும், அமன் மொகாடே 32 ரன்னும், யாஷ் ரதோட் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    5வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன், அக்ஷய் வடேகர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 90 ரன்கள் சேர்த்த நிலையில் கருண் நாயர் 74 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து ஆடிய வடேகர் அரை சதமடித்தார்.

    நான்காம் நாள் முடிவில் விதர்பா 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. வடேகர் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கடைசி நாளான நாளை 290 ரன்களை எடுத்து விதர்பா வெற்றி பெறுமா அல்லது மீதமுள்ள 5 விக்கெட்டுகளை எடுத்து மும்பை அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்னும், 2வது இன்னிங்சில் 418 ரன்னும் எடுத்தது.
    • விதர்பா முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை:

    89-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை, விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 75 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 46 ரன்னும், லால்வாணி 37 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா சார்பில் யாஷ் தாகூர், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுத்தார்.

    மும்பை சார்பில் தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. முஷீர் கான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு உறுதுணையாக ரகானே அரை சதமடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் அய்யர் 95 ரன்னில் வெளியேறினார். ஷம்ஸ் முலானி 50 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    விதர்பா சார்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். மூன்றாம் நாள் முடிவில் விதர்பா அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் இரு நாட்கள் மீதமுள்ள நிலையில் விதர்பா அணி வெற்றிபெற 528 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • மும்பை விமான நிலையத்திற்கு தீபிகா படுகோன் கணவர் ரன்வீர் சிங்குடன் காரில் ஜோடியாக வந்தார்
    • 3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பளபளப்பான உடல் தோற்றத்தில் தீபிகா ஜொலித்தும் காணப்பட்டார்

    பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடியான தீபிகா படுகோன்- ரன்வீர்சிங்2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் தங்கள் கர்ப்பத்தை அறிவித்தனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும்,செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க போவதாகவும் அதில் தெரிவித்தனர். 

    தீபிகா படுகோனே கர்ப்பமாக உள்ள தகவல் அறிந்ததும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்த்தினார்கள் .கடந்த சில நாட்களுக்கு முன் முகேஷ் அம்பானி வீட்டு திருமண முன் வைபவ நிகழ்ச்சியில் தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் ஜோடியாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இந்நிலையில் இன்று மதியம் மும்பை விமான நிலையத்திற்கு தீபிகா படுகோன் கணவர் ரன்வீர்சிங்குடன் காரில் ஜோடியாக வந்தார்.அதன் பின் தீபிகா மட்டும் காரில் இருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் சென்றார்.அவரை ரன்வீர் சிங் வழியனுப்பி வைத்தார்.

    ரன்வீர்சிங்- தீபிகா படுகோன் மும்பை விமான நிலையத்திற்கு வந்த தகவல் அறிந்ததும் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்தனர். அவரும் புன்முறுவலுடன் தாராளமாக 'போஸ்' கொடுத்தார்.

    அதன்பின் விமான நிலைய பாதுகாப்பு சோதனை பகுதியை நோக்கி சென்றார்.தீபிகா நீலநிற டெனிம் பேண்ட், பிரவுன் நிற ஸ்வெட்டர், பிரவுன் 'பூட்ஸ்' அணிந்து இருந்தார். மேலும் கருப்பு நிற 'கூலிங் கிளாஸ்' கண்ணாடியும் அணிந்தும் 'ஸ்டைல்' ஆக இருந்தார். 3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பளபளப்பான உடல் தோற்றத்தில் தீபிகா ஜொலித்தும் காணப்பட்டார்.

    • மனோஜ் விடுமுறையில் சென்றதால், அமித் குமார் லாக்கர்களை பாதுகாக்கும் பணியில் இருந்தார்
    • மஸ்கே திருடிய பாக்கெட்டுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.3 கோடிக்கு மேல் என தெரிந்தது

    மும்பை நகரின் முலுண்ட் (Mulund) பகுதியில் உள்ளது, பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India). தங்க நகைக்கடன் சேவைக்கான பிரத்யேக கிளையாக முலுண்ட் எஸ்பிஐ (SBI) செயல்பட்டு வந்தது.

    இந்த வங்கி கிளையில் பணிபுரிந்து வந்தவர் அமித் குமார் (Amit Kumar).

    கடந்த மாதம் பிப்ரவரி 27 அன்று, அவருடன் பணிபுரிந்து வந்த 33-வயதான மனோஜ் மாருதி மஸ்கே (Manoj Maruti Mhaske) என்பவர் விடுமுறையில் சென்றிருந்ததால், அமித் குமாரிடம் லாக்கர்களை பாதுகாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

    தனது அன்றாட பணிகளில் ஒன்றான, தினசரி லாக்கர் பொருட்கள் கணக்கெடுப்பு பணியின் போது அமித் குமார் லாக்கர்களில் இருந்த தங்க நகை பாக்கெட்டுகள் குறைவதை கண்டார்.


    பிப்ரவரி 26 வரை 63 தங்க நகை கடன்கள் வழங்கப்பட்டதால், 63 பாக்கெட்டுகள் இருக்க வேண்டிய இடத்தில் அதற்கு பதில், 4 மட்டுமே இருந்தன.

    மீதம் 59 பாக்கெட்டுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அமித், மஸ்கேவை தொடர்பு கண்டு இது குறித்து கேட்டார்.

    தங்க நகை பொட்டலங்களை தான் எடுத்து வேறொரு இடத்தில் வைத்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் திரும்ப ஒப்படைப்பதாகவும் மஸ்கே தெரிவித்தார்.

    இதையடுத்து, அமித் குமார் தனது மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கூறினார்.

    மஸ்கே திருடிய தங்க நகை பாக்கெட்டுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு, சுமார் ரூ.3 கோடிக்கு மேல் என கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

    இதையடுத்து, மஸ்கே வங்கி கிளைக்கு வரவழைக்கப்பட்டார்.

    தான் திருடியதை ஒப்புக் கொண்ட மஸ்கே, சில நாட்களில் அனைத்து நகைகளையும் தந்து விடுவதாக மேலதிகாரிகளிடம் தெரிவித்தார்.


    இதை தொடர்ந்து, வங்கி அதிகாரிகள் பாண்டுப் (Bhandup) காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தனர்.

    மஸ்கே மீது இ.பி.கோ. (Indian Penal Code) சட்டத்தின் 409-வது பிரிவின் கீழ் (நம்பிக்கை மோசடி) வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

    மஸ்கேவிடம் உள்ள நகைகளை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஷார்க் சர்க்யூட் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
    • தீ பரவ தொடங்குவதற்கு முன்னதாக கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர்.

    மும்பை அருகே தானே டோம்பிவலியில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    கட்டிடங்கள் முழுவதும் தீ பரவ தொடங்குவதற்கு முன்னதாகவே கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர். பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், தீயை அணைக்கும் முயற்சியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லோதா குடியிருப்பு வளாகத்தில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்து ஷார்ச் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் 11 வது தளத்தில் ஏற்பட்ட தீ, 18 வது மாடி வரை பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

    • 1960களில் இருந்தே காலி-பீலிக்கள் மும்பையில் மிக பிரபலம்
    • சுமார் 40 ஆயிரம் காலி-பீலிக்கள் புழக்கத்தில் இருந்தன

    இந்தியாவின் 'பொருளாதார தலைநகரம்' என அழைக்கப்படும் மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை, 1950களில் இருந்தே பல மாநில மக்கள் வாழ்வாதாரத்தை தேடி வரும் நகரமாக உள்ளது. மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் நகரம் என்பதால் பலவித போக்குவரத்து வாகனங்கள் அங்கு புழக்கத்தில் உள்ளன.

    1960களில் இருந்து அங்கு பிரிமியர் ஆட்டோமொபைல் லிமிடெட் (PAL) நிறுவனத்தின் "பிரிமியர் பத்மினி" (Premier Padmini) டாக்சிகள் மிகவும் பிரபலம்.

    கருப்பு-மஞ்சள் என இரு நிறங்கள் மட்டுமே தீட்டப்பட்டதால் காலி-பீலி என மக்களிடையே பிரபலமடைந்த இந்த வாடகை கார்களின் ஓட்டுனர்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு மிக சரியாகவும், பாதுகாப்பாகவும் பயணிகளை கொண்டு சேர்ப்பதில் பெருமை பெற்றவர்கள். இதனால் மும்பைவாசிகள் மட்டுமல்லாது பிற மாநிலத்தில் இருந்து அங்கு வருபவர்களுக்கும் எளிதான போக்குவரத்தாக காலி-பீலி அமைந்தது.

    வாகனங்களிலிருந்து வரும் புகையினால் ஏற்படும் சுகாதார கேட்டை குறைக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு, 20 வருடங்களான வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதித்தது. கடைசி பிரிமியர் பத்மினி 2003 அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே, நேற்றிலிருந்து இவை சாலையிலிருந்து விலக்கி கொள்ளப்பட்டன.

    மும்பையின் பிரபாதேவி பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் கர்சேகர், கடைசியாக பதிவு செய்யப்பட்ட டாக்ஸியின் உரிமையாளராவார். இந்த டாக்சி "மும்பையின் பெருமை, எனது வாழ்க்கை" என அவர் தன் வாகனத்தை குறித்து உருக்கமாக தெரிவித்தார்.

    புள்ளி விவரங்களின்படி சுமார் 40 ஆயிரம் காலி-பீலி டாக்சிகள் மும்பையில் உள்ளன. இவையனைத்தையுமே இனி சாலைகளில் காண முடியாது. 



    சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக மக்கள் சேவையில் இருந்த காலி-பீலிக்களை மும்பை மக்கள் கனத்த இதயத்துடன் பிரிவதாக கூறுகிறார்கள். எனவே, இவற்றில் சில வாகனங்களையாவது அருங்காட்சியகத்தில், அரசாங்கம், காட்சிக்கு வைக்க வேண்டும் என மும்பை மக்கள் விரும்புகின்றனர்.

    இந்தி உட்பட ஏராளமான இந்திய திரைப்படங்களில் காலி-பீலிக்கள் முக்கிய மறைமுக கதாபாத்திரமாக இடம்பெறுவது வழக்கம்.

    தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய முதல் கார், பிரிமியர் பத்மினி என பேட்டிகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



    பல பிரபலங்கள் காலி-பீலி குறித்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். முன்னணி தொழிலதிபர் ஆனந்த மகிந்திரா இது குறித்து தனது எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.



    மும்பையில் 4-வது கொரோனா அலைக்கு வாய்ப்பு இருப்பதால் தினமும் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய மாநகராட்சி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
    மும்பை :

    மராட்டியத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மும்பையில் நேற்று ஒரே நாளில் 763 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது கடந்த பிப்ரவரி 4-ந் தேதிக்கு பிறகு அதிக பாதிப்பாகும். இதன் மூலம் மும்பையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை.

    கொரோனா அதிகரிப்பை அடுத்து மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் நேற்று அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் உத்தரவு ஒன்றை பிறப்பித்து அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கொரோனா 4-வது அலை வருகிற ஜூலை மாதம் ஏற்படலாம் என கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் கணித்து உள்ளனர். அவர்களது முந்தைய எச்சரிக்கை பலித்து உள்ளது. எனவே தற்போதைய அவர்களது இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சமீப நாட்களாக கொரோனா அதிகரித்து வருவதை பார்க்கும்போது 4-வது அலை வரும் வாய்ப்பை மறுத்து விட முடியாது.

    4-வது அலை மற்றும் மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால், சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் நிலைமையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மும்பையில் தற்போது 8 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. பாதிப்பு விகிதம் 8 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இது எச்சரிக்கை மணியாகும். எனவே கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சமீபத்தில் தொற்று பாதித்த கட்டிடங்களில் பெரிய அளவில் பரிசோதனை செய்ய வேண்டும். தினமும் 30 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். கொரோனா பரிசோதனை அறிக்கையை நோயாளிகளுக்கு ஆய்வகங்கள் நேரடியாக வழங்க கூடாது. தினமும் முதலில் பரிசோதனை அறிக்கையை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விதிமுறையை மீறும் ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிக்கலாம்...இலங்கைக்கு 3.3 டன் மருத்துவப் பொருட்கள் வழங்கியது இந்தியா
    ×