search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money theft"

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கியில் விவசாயி வாங்கிய ரூ.1½ லட்சம் கடன் பணம் திருடு போனது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள குன்னூர் புதூர் ரோட்டை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 62). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு வங்கியில் வேளாண் கடன் கிடைத்தது. இந்த பணத்தை எடுப்பதற்காக கருப்பசாமி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றார்.

    வங்கி கொடுத்த கடன் பணத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். பணத்தை மோட்டார் சைக்கிள் லாக்கரில் வைத்திருந்தார். மார்க்கெட் அருகே சென்ற போது கருப்பசாமி அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரு நகைக்கடைக்கு சென்றார்.

    அங்கு அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் லாக்கரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், பான் கார்டு, வங்கி புத்தகம் மற்றும் ஆவணங்கள் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கருப்பசாமி கொடுத்தபுகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    கருப்பசாமி நகைக்கடையில் இருந்தபோது மர்மநபர் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    • 6 வருடமாக மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல் போன் மற்றும் ரொக்கம் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, காப்ரா மலை பகுதியில் வசிப்பவர் துரையரசன்(வயது27). இவர் ஆனங்கூர் சாலை, சேட்டாங்காடு, தங்கவேல் சைசிங் மில் அருகே 6 வருடமாக மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் இவரது வீட்டருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 4 பேர், அவர் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல் போன் மற்றும் ரொக்கம் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

    இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தொப்பம்பட்டி ஹரிஜன காலனியைச் சோ்ந்தவா் நாட்டுதுறை, கூலி தொழிலாளி.
    • பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளாா்.

     தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி ஹரிஜன காலனியைச் சோ்ந்தவா் நாட்டுதுறை (வயது 23), கூலி தொழிலாளி. இவரது வீட்டுக்கு அருகில் ராஜ் (60) என்ற முதியவா் வசித்து வருகிறாா்.

    இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு முதியவா் வீட்டில் இல்லாதபோது மேற்கூரையைப் பிரித்து அவரது வீட்டுக்குள் நுழைந்த நாட்டுதுறை, பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளாா். இது குறித்து தாராபுரம் குற்றப் பிரிவில் ராஜ் புகாா் அளித்தாா்.இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார்நாட்டுதுறையை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த தாந்தோணி அம்மாள் வயது 50 பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இவருக்கு இரு மகள்கள் உள்ளனர் தனியாக இருக்கும் தாந்தோணி அம்மாள் கடந்த 22-ந்தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு பூ வியாபாரத்துக்கு சென்னை சென்றுள்ளார்.

    மீண்டும் நேற்று காலை 7 மணி அளவில் வீட்டுக்கு வந்தார் வீட்டைத் திறந்து உள்ள சென்றபோது பீரோ உடைத்து திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோவில் இருந்த ரூ.55 ஆயிரமும் வீட்டு உபயோக பொருட்களை மர்ம கும்பல் கொள் ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து தாந்தோணி அம்மாள் தூசி போலீஸ் நிலையத் தில்புகார் செய்தார் தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் கல்லூரி நகரைச் சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கல்லூரி நகரில் உள்ள வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று காலை தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அறையில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து விருத்தாசலம் போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை ஊழியர் ஒருவர் பார்த்தார்.
    • பீரோவில் இருந்த ரூ.5240 ஐ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இரவில் பூட்டை உடைத்து யாரோ திருடி சென்று உள்ளனர்.

     கோவை:

    கோவை ரத்தினபுரி செல்லப்பன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(55). அதேபகுதியில் வாழைக்காய் மண்டி வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மண்டியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை ஊழியர் ஒருவர் பார்த்தார்.

    உடனே அவர் இது குறித்து சீனிவாசனுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்த போது உள்ளே பீரோவில் இருந்த ரூ.5240 ஐ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இரவில் பூட்டை உடைத்து யாரோ திருடி சென்று உள்ளனர். இது குறித்து சீனிவாசன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் பணம் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். 

    • நேற்று முன்தினம் தம்பியின் வீட்டில் தூங்கிவிட்டு நேற்று தனது வீட்டிற்கு சென்றார்.
    • அதிர்ச்சி அடைந்த பரிதாபேகம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரை-கவர்பணை சாலையில் வசித்து வருபவர் பரிதாேபகம் (வயது 42). இவரது கணவர் ரகமத்துல்லா. இவர் திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையம் பள்ளிவாசலில் ஹஜ்ரத் ஆக பணியாற்றி வருகிறார்.

    இந்தநிலையில் பரிதாபேகம் கணவர் ஊருக்கு வராத போது அருகே உள்ள தம்பி அப்துல்நசீர் வீட்டில் தங்குவது வழக்கம். நேற்று முன்தினம் தம்பியின் வீட்டில் தூங்கிவிட்டு நேற்று தனது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பரிதாபேகம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 1¼ பவுன் நகை மற்றும் ரூ.1¼ லட்சம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பள்ளிக்குள் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.28ஆயிரம் பணத்தை திருடிச்சென்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர். அதன்பின்னர் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பள்ளிக்குள் இருந்த பீேராவை திறந்து அதிலிருந்த ரூ.28ஆயிரம் பணத்தை திருடிச்சென்றனர்.

    இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணம் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் திருடுபோன நிலையில் தற்போது மீண்டும் ஒரு பள்ளியில் கொள்ளைபோனது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கத்தில் தனியார் ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த நந்தியம் பாக்கத்தை சேர்ந்தவர் ஏஜாஸ் முகைதீன் (வயது 50). தனியார் கம்பெனி ஊழியர். இன்று அதிகாலை 3 மணிக்கு மசூதிக்கு தொழுகைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 4 பவுன் நகை. ரூ. 10 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த 3 செல்போன்கள் திருடுபோனது தெரியவந்தது.

    கொள்ளையர்கள் சிம் கார்டை கழற்றி கட்டிலில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகிறாகள்.

    கோவில்பாளையம் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    கோவை:

    கோவை விளாங்குறிச்சி ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் சந்தானம் (வயது 36). டாக்டர். நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் இரவில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் அறையில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதில் அதிர்ச்சியடைந்த சந்தானம் வீட்டை சுற்றி பார்த்தார்.

    அப்போது வீட்டின் பால்கனி வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சந்தானம் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பொன்னேரி அருகே கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த ஏலியம்பேட்டையை சேர்ந்தவர் பூபாலன் (வயது 28). இவர் பொன்னேரி புதுவாயல் சாலையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் அங்கு சென்று பூபாலனை பிடித்து சிறையில் அடைத்தார். கைதான பூபாலன் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

    கோயம்பேட்டில் ஓடும் பஸ்சில் 2 பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    போரூர்:

    சாலிகிராமம் மதியழகன் நகர் கே.கே. சாலையை சேர்ந்தவர் ஜெயகுமாரி (வயது40). இவர் தனது மகள் பிருந்தாவின் திருமணத்திற்காக நகை வாங்க ரூ. 40 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்து கொண்டு அண்ணா நகரில் உள்ள நகைக் கடைக்கு மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    கோயம்பேடு 100அடி சாலை வந்தபோது நகை மற்றும் பணம் இருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்

    கூட்ட நெரிசலை பயன் படுத்தி பஸ்சில் வந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயகுமாரி கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார்.

    இதேபோல் பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (48). இவர் நேற்று நெற்குன்றத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

    பின்னர் நெற்குன்றம் செல்லும் மினி பஸ்சில் ஏறி அமர்ந்தார். பஸ் கிளம்பி சிறிது தூரம் சென்றதும் தனது கைப்பை கிழிந்து கிடந்ததை நாகலட்சுமி கண்டார்.

    மர்ம நபர்கள் பையை கிழித்து அதிலிருந்த 5 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×