search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல் போன்"

    • 6 வருடமாக மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல் போன் மற்றும் ரொக்கம் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, காப்ரா மலை பகுதியில் வசிப்பவர் துரையரசன்(வயது27). இவர் ஆனங்கூர் சாலை, சேட்டாங்காடு, தங்கவேல் சைசிங் மில் அருகே 6 வருடமாக மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் இவரது வீட்டருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 4 பேர், அவர் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல் போன் மற்றும் ரொக்கம் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

    இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×