search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
    X

    பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த தாந்தோணி அம்மாள் வயது 50 பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இவருக்கு இரு மகள்கள் உள்ளனர் தனியாக இருக்கும் தாந்தோணி அம்மாள் கடந்த 22-ந்தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு பூ வியாபாரத்துக்கு சென்னை சென்றுள்ளார்.

    மீண்டும் நேற்று காலை 7 மணி அளவில் வீட்டுக்கு வந்தார் வீட்டைத் திறந்து உள்ள சென்றபோது பீரோ உடைத்து திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோவில் இருந்த ரூ.55 ஆயிரமும் வீட்டு உபயோக பொருட்களை மர்ம கும்பல் கொள் ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து தாந்தோணி அம்மாள் தூசி போலீஸ் நிலையத் தில்புகார் செய்தார் தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×