search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money theft"

    • கதிர்வேல் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டி ருந்தார்.
    • கதிர்வேல் கீழே இறங்கி வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கதவின் அருகே நின்று கொண்டு இருப்பது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 34) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மேல் மாடியில் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது கீழ் வீட்டில் உள்ள அறை யில் கதிர்வேல் அண்ணன் பெருமாள் மனைவி கவிதா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டப்ப டாமல் சாத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நள்ளிரவில் வீட்டில் கதவை உடைப்பது போல் சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த கதிர்வேல் கீழே இறங்கி வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கதவின் அருகே நின்று கொண்டு இருப்பது தெரிய வந்தது. இவரைப் பார்த்த கதிர்வேல் கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் இருந்து தப்பி ஓடினர். உள்ளே சென்று பார்த்த போது கவிதா படுத்திருந்த அறையை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோ கதவை உடைத்து அதிலிருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குண சேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்த னர். மேலும் கைரேகை நிபுணர் ராஜவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தார். இது குறித்து கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான மரங்கள் ரூ.20 ஆயிரம் வருவாயாக ஏலம் விடப்பட்டது. இந்த பணத்தை ஊர் பொது மக்கள் கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர்.
    • இன்று காலை கோயில் பூசாரி வந்து பார்த்தபோது, கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார்.

    கடலூர்:

    வேப்பூர் திருபாக்கம் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏலம் விடப்பட்டது. இதில் ரூ.20 ஆயிரம் வருவாயாக கோவிலுக்கு கிடைத்தது. இந்த பணத்தை ஊர் பொது மக்கள் கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர் இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கோவிலில் பூஜைகள் செய்து வீட்டு, கோவிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டிற்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது ,கோவிலின் பூட்டு திறக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தார். ஊர் பொதுமக்கள் இது குறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவில் உண்டியலில் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும், அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது.   இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவிலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் சாலையில் பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது.
    • விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து அதை ஆவின் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தனியார் கல்வி நிறுவனங்கள் அருகே, கடலூர் சாலையில் பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் அளவையாளராக கோமதி யும், உதவியாளராக சிவகு மாரும் பணிபுரிந்து வரு கின்றனர். நேற்று மாலை வழக்கம் போல் விவசாயி களிடம் பால் கொள்முதல் செய்து அதை ஆவின் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    இன்று காலை விவசாயி களிடம் பால் கொள்முதல் செய்வதற்காக கூட்டுறவு சங்க கட்டிடத்திற்கு வந்த போது, ஷட்டர் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    நள்ளிரவில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் விவசாயிகளுக்கு வழங்கு வதற்காக வைக்கப்பட்டி ருந்த ரூ.28ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பணியா ளர்கள் வாழப்பாடி போலீ சில் புகார் செய்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வாழப்பாடி போலீசார் மர்ம நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆஞ்சநேயர் சிலையையும் சேதப்படுத்தி சென்ற மர்மகும்பல்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தில் ஆர்.எம்.பி. நகரில் ஸ்ரீ குரு ராகவேந்திரர் சுவாமி ம்ருத்திகா பிருந்தாவன கோவில் உள்ளது.

    நேற்று மாலையில் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்துள்ளனர். அப்போது கோவிலின் நுழைவாயிலில் இருந்த ஆஞ்சநேயர் சிலையின் வலது கை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

    கண்டு அதிர்ச்சிய டைந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது கோவிலின் கதவின் பூட்டு உடைக்கப்படும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி இருந்தது. உண்டியல் உடைக்கப்பட்ட அதிலிருந்து பணமும் திருடப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் கோவில் நிர்வாகிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உள்ள வர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்-வேலூர் செல்லும் முக்கிய சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் சிலையை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகரில் அரசு அதிகாரியின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் கொள்ளையடித்தனர்.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் என்.ஜி.ஓ.கால னியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது71). இவர் அரசு புள்ளியியல் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் சம்பவத்தன்று ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். பணத்தை எடுப்ப தற்கு முன் வரவு-செலவு கணக்கு விபரங்களை சரி பார்க்க நினைத்தார்.

    அப்போது அருகில் இருந்த 35வயது மதிக்கத்தக்க 2 பேர் சீனிவாசனிடம் நைசாக பேசி தாங்கள் விபரங்களை எடுத்து தருகிறோம் என கூறி ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி யுள்ளனர். அதன் பின் மர்ம நபர்கள் சீனிவாசனின் ஏ.டி.எம். கார்டை வைத்துக் கொண்டு மற்றொரு ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.

    இதை அறியாத சீனிவாசன் ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் செலுத்தியபோது ரகசிய குறியீடு எண் தவறு என காட்டப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அது தன்னுடையது இல்லை என சீனிவாசன் உணர்ந்தார். இதற்கிடையே ஏ.டி.எம். கார்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் சீனிவாசன் கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை எடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தினமும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
    • வீடு திரும்பினர் அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்து.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். கூலித் தொழிலாளி. இவரும் இவரது மனைவியும் தினமும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு நேற்று சென்றனர். பின்னர் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்து. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த 2 பேரும் வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே சென்ற பார்த்தனர். வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தை கண்டனர். மேலும், பீரோவில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.55 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போய் இருந்தது.

    இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின் பெயரில் ரோசனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் திருட்டுச் சம்பவம் நடந்தது திண்டிவனம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு பையில் அடுக்கி கொடுக்கப்பட்ட பணத்தை என்ஜினீயர்கள் வாங்கி அவர்கள் தங்கி இருந்த அலுவலக வீட்டில் வைத்திருந்தனர்.
    • 6-ந்தேதி ரூ.35 லட்சத்தில் 25 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட்டதாக என்ஜினீயர்கள் தொழிலதிபர் ஹரிஷுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேதராப்பட்டு:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஹரிஷ். தொழிலதிபரான இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் கட்டுமான பணியினை காண்ட்ராக்ட் எடுத்து மேற்கொண்டு வருகிறார்.

    100-க்கும் மேற்பட்டவர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியில் தெலுங்கானா, தமிழகம், புதுவை பகுதியைச் சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்களும், என்ஜினீயர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

    காலாப்பட்டு பங்களா தெருவில் சிறிய அலுவலகத்துடன் கூடிய வீடு ஒன்றை தொழிலதிபர் ஹரிஷ் வாடகைக்கு எடுத்து அங்கு புதுவை மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 4 என்ஜினீயர்களை தங்க வைத்து கட்டுமான பணியை மேற்கொண்டு வந்தார்.

    கடந்த 4-ந்தேதி ஹரிஷ் ஐதராபாத்தில் இருந்து காலாப்பட்டில் உள்ள என்ஜினீயர்களுக்கு போன் செய்து முக்கிய நபர் ஒருவர் ரூ.35 லட்சம் பணம் தருவார். அதை வாங்கி பாதுகாப்பாக வைக்கும்படி கூறினார். அதன்படி புதுவையைச் சேர்ந்த ஒருவர் ரூ.35 லட்சத்தை அங்கு தங்கியிருந்த என்ஜினீயர்களிடம் கொடுத்து விட்டு சென்றார்.

    ஒரு பையில் அடுக்கி கொடுக்கப்பட்ட அந்த பணத்தை என்ஜினீயர்கள் வாங்கி அவர்கள் தங்கி இருந்த அலுவலக வீட்டில் வைத்திருந்தனர். இந்த நிலையில் 6-ந்தேதி ரூ.35 லட்சத்தில் 25 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட்டதாக என்ஜினீயர்கள் தொழிலதிபர் ஹரிஷுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த ஹரிஷ் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தனச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் இந்த பணம் திருட்டு போன சம்பவத்தில் அறையில் தங்கி இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு என்ஜினீயர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 3 என்ஜினீயர் உட்பட 4 பேரிடம் துருவி துருவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தேவகோட்டை அருகே நாச்சியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருடப்பபட்டது.
    • தேவகோட்டை அருகே நாச்சியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருடப்பபட்டது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றங்கரை நாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. விசேஷ நாட்களில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    கோவில் பூசாரி தியாகராஜன் நேற்று காலை வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மதிய நேரத்தில் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் கோவில் சன்னதி முன்பு இருந்த உண்டியலை பெயர்த்து கொண்டு அங்கிருந்து தப்பினர்.

    மாலையில் கோவிலுக்கு வந்த தியாகராஜன் உண்டியல் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் மர்மநபர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கண்ணங்கோட்டையில் கடந்த 11-ந் தேதி 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு தாய், மகள் கொலை செய்யப்பட்டனர்.நேற்று முன்தினம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் மர்மநபர்கள் காம்பவுன்டு சுவர் ஏறி திருட முயன்றனர். இதை பார்த்து அப்பகுதி நாய்கள் கூச்சலிட்டதால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர்.

    கடந்த சில மாதங்களாகவே தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை-கொள்ளை, வழிப்பறி, நகைபறிப்பு போன்றவை சர்வ சாதரணமாக நடந்து வருகிறது. கொள்ளையர்கள் இப்பகுதியில் முகாமிட்டு இதுபோன்ற துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க்கில் பணம் திருடிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் எலியாருபத்தி டோல்கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் மினிவேனில் டீசல் நிரப்ப வந்தனர்.

    திருமங்கலம்

    மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் எலியாருஅ பத்தி டோல்கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் மினிவேனில் டீசல் நிரப்ப வந்த 2 வாலிபர்கள், தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க் அலுவலக மேஜேயில் இருந்த ரூ.40 ஆயிரத்து 400 பணத்தை திருடி சென்று விட்டனர்.

    பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் வாலிபர்கள் பணம் திருடிவிட்டு, தாங்கள் வந்த வாகனத்தில் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இது குறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்று அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.

    அதில் அவர்கள் மதுரை சாமநத்தத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் கார்த்திக்(வயது29), சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் காமாட்சி(30) என்பது தெரியவந்தது.

    அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மினிவேனில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். மற்றொருவரான காமாட்சி அந்த வேனில் டிரைவராக இருந்துள்ளார். இருவரும் சம்பவத்தன்று வியாபாரம் செய்வதற்கு சென்றபோது பெட்ரோல் பங்க்கில் இருந்த ஊழியர் ராஜேஷ் கவனிக்காத நேரத்தில் பணத்தை திருடியது தெரியவந்தது.

    • சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் துப்பு துலக்கப்பட்டு வருகிறது
    • போலீசார் விசாரணை

    கலசபாக்கம்:

    கலசபாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் ஆதிமூலம் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், அவரது மனைவி மணிமேகலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு டீக்கடை வியாபாரத்திற்காக சென்று விட்டனர்.

    இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு அங்கேயே தங் கிய அவர்கள் மறுநாள் காலை வந்தபோது வீட்டின் முன் பக்க மரக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப் பட்டு அதில் வைத்திருந்த நெக்லஸ், டாலர் செயின், கம்பல், மோதிரம் உட்பட 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக் கம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது சம்பந்தமாக கலசபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு மர்ம கும்பலின் கைரேகை களை பதிவு செய்தனர். திருடப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் வரை இருக்கும் என கூறப்படு கிறது.

    கொள்ளையடிகளை பிடிப்பதற் காக கூட்ரோடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • சம்பவம் நடந்த ஓட்டல் முன்பு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • பணத்தை பறித்து சென்ற 2 வாலிபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி சண்முகபுரம் புதுக்கிராமம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது 42). இவர் அரிசி, வெங்காயம், கிழங்கு வகைகளை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் தனது நண்பரான தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த செல்வராஜ்(46) என்பவருடன் நேற்று முன்தினம் காரில் நாகர்கோவிலுக்கு சென்று, ஒருவரிடம் தொழில் தேவைக்காக ரூ.25 லட்சம் கடனாக வாங்கிக்கொண்டு தூத்துக்குடிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

    பாளை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட நிறுத்தியபோது மர்மநபர் ஒருவர் காரில் இருந்த பணப்பையை திருடிச்சென்றார். இதுதொடர்பாக பாளை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த ஓட்டல் முன்பு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் சரவணகுமார் தனக்கு சாப்பாடு வாங்குவதற்காக கார் டிரைவரை அனுப்பி உள்ளார். காரின் முன் இருக்கையில் சரவணகுமாரும், பின் இருக்கையில் செல்வராஜூம் இருந்துள்ளனர். பணம் இருந்த பைபின் இருக்கையில் இருந்தது. அப்போது அங்குவந்த மர்மநபர் காரின் கதவை திறந்து பணம் இருந்த பையை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், சரவணகுமார் ஆகியோர் கூச்சல் போடுவதும், அந்த மர்மநபரோ சிறிது தூரத்தில் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மற்றொருவருடன் சேர்ந்து தப்பி சென்றதும் தெரியவந்தது.

    இதற்கிடையே கார் டிரைவரான தூத்துக்குடி பி.என்.டி. காலனி 7-வது தெருவை சேர்ந்த செல்வசரவண கண்ணன்(25) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தனியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை திருடியது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், செல்வ சரவணகண்ணன் டிரைவராக வேலைக்கு சேர்வதற்கு முன்பாக பெயிண்டிங் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் ஒரு வாலிபர் என 2 பேருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தொழிலுக்காக சரவணகுமார் குமரி மாவட்டத்திற்கு பணம் வாங்க செல்வதை அறிந்த செல்வசரவண கண்ணன் தனது நண்பர்களுடன் வாட்ஸ்-அப் மூலமாக போனில் பேசி உள்ளார்.

    ஓட்டலுக்கு சாப்பிட செல்லும் நேரத்தில் வந்து பணத்தை திருடி செல்லுமாறும், அதன்பின்னர் அந்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழலாம் என முடிவு செய்திருந்ததாகவும் தெரியவந்ததது. அவரது தகவலின் அடிப்படையில் பணத்தை பறித்து சென்ற 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    அவர்களை கைது செய்வதற்காக உதவி கமிஷனர் பிரதீப் மேற்பார்வையில் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் தலைமையில் ஒரு தனிப்படை, சப்-இன்ஸ்பெக்டர் விமலன் தலைமையில் ஒரு தனிப்படை என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • ரூ.5 ஆயிரம் அபேஸ்
    • கதவை உடைத்து துணிகரம்

    திருப்பத்தூர்:

    கந்திலியை அடுத்த காக்கங்கரை ஆரம்ப சுகாதார நிலையத் தில் நர்சாக பணிபுரிபவர் சங்கீதா (வயது 31). இவர் அருகே உள்ள நர்ஸ் குடியிருப்பில் தங்கி வருகிறார்.

    நேற்று வழக்கம்போல பணி முடிந்து வீட்டுக்கு சென்று மீண்டும் தனியாகபடுத்துக்கொள்ள பயந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் வந்து தூங்கினார்.

    அப்போது குடியிருப்பு வீட் டில் முன்பக்க கதவை உடைத்து அவரது அலமாரியில் வைத் திருந்த ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×