search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
    X

    கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

    • ஆஞ்சநேயர் சிலையையும் சேதப்படுத்தி சென்ற மர்மகும்பல்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தில் ஆர்.எம்.பி. நகரில் ஸ்ரீ குரு ராகவேந்திரர் சுவாமி ம்ருத்திகா பிருந்தாவன கோவில் உள்ளது.

    நேற்று மாலையில் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்துள்ளனர். அப்போது கோவிலின் நுழைவாயிலில் இருந்த ஆஞ்சநேயர் சிலையின் வலது கை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

    கண்டு அதிர்ச்சிய டைந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது கோவிலின் கதவின் பூட்டு உடைக்கப்படும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி இருந்தது. உண்டியல் உடைக்கப்பட்ட அதிலிருந்து பணமும் திருடப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் கோவில் நிர்வாகிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உள்ள வர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்-வேலூர் செல்லும் முக்கிய சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் சிலையை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×