என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
காலாப்பட்டில் கட்டுமான அலுவலகத்தில் ரூ.25 லட்சம் திருட்டு- என்ஜினீயர்களிடம் போலீசார் விசாரணை
- ஒரு பையில் அடுக்கி கொடுக்கப்பட்ட பணத்தை என்ஜினீயர்கள் வாங்கி அவர்கள் தங்கி இருந்த அலுவலக வீட்டில் வைத்திருந்தனர்.
- 6-ந்தேதி ரூ.35 லட்சத்தில் 25 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட்டதாக என்ஜினீயர்கள் தொழிலதிபர் ஹரிஷுக்கு தகவல் தெரிவித்தனர்.
சேதராப்பட்டு:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஹரிஷ். தொழிலதிபரான இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் கட்டுமான பணியினை காண்ட்ராக்ட் எடுத்து மேற்கொண்டு வருகிறார்.
100-க்கும் மேற்பட்டவர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியில் தெலுங்கானா, தமிழகம், புதுவை பகுதியைச் சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்களும், என்ஜினீயர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
காலாப்பட்டு பங்களா தெருவில் சிறிய அலுவலகத்துடன் கூடிய வீடு ஒன்றை தொழிலதிபர் ஹரிஷ் வாடகைக்கு எடுத்து அங்கு புதுவை மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 4 என்ஜினீயர்களை தங்க வைத்து கட்டுமான பணியை மேற்கொண்டு வந்தார்.
கடந்த 4-ந்தேதி ஹரிஷ் ஐதராபாத்தில் இருந்து காலாப்பட்டில் உள்ள என்ஜினீயர்களுக்கு போன் செய்து முக்கிய நபர் ஒருவர் ரூ.35 லட்சம் பணம் தருவார். அதை வாங்கி பாதுகாப்பாக வைக்கும்படி கூறினார். அதன்படி புதுவையைச் சேர்ந்த ஒருவர் ரூ.35 லட்சத்தை அங்கு தங்கியிருந்த என்ஜினீயர்களிடம் கொடுத்து விட்டு சென்றார்.
ஒரு பையில் அடுக்கி கொடுக்கப்பட்ட அந்த பணத்தை என்ஜினீயர்கள் வாங்கி அவர்கள் தங்கி இருந்த அலுவலக வீட்டில் வைத்திருந்தனர். இந்த நிலையில் 6-ந்தேதி ரூ.35 லட்சத்தில் 25 லட்ச ரூபாய் திருட்டுப் போய்விட்டதாக என்ஜினீயர்கள் தொழிலதிபர் ஹரிஷுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த ஹரிஷ் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தனச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த பணம் திருட்டு போன சம்பவத்தில் அறையில் தங்கி இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு என்ஜினீயர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 3 என்ஜினீயர் உட்பட 4 பேரிடம் துருவி துருவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்