என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டீக்கடைக்காரர் வீட்டில் நகை, பணம் திருட்டு
- சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் துப்பு துலக்கப்பட்டு வருகிறது
- போலீசார் விசாரணை
கலசபாக்கம்:
கலசபாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் ஆதிமூலம் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், அவரது மனைவி மணிமேகலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு டீக்கடை வியாபாரத்திற்காக சென்று விட்டனர்.
இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு அங்கேயே தங் கிய அவர்கள் மறுநாள் காலை வந்தபோது வீட்டின் முன் பக்க மரக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப் பட்டு அதில் வைத்திருந்த நெக்லஸ், டாலர் செயின், கம்பல், மோதிரம் உட்பட 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக் கம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது சம்பந்தமாக கலசபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு மர்ம கும்பலின் கைரேகை களை பதிவு செய்தனர். திருடப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் வரை இருக்கும் என கூறப்படு கிறது.
கொள்ளையடிகளை பிடிப்பதற் காக கூட்ரோடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்