search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் அருகே வீட்டின் கூரையை பிரித்து பணம் திருடிய  தொழிலாளி கைது
    X

    கோப்புபடம்.

    தாராபுரம் அருகே வீட்டின் கூரையை பிரித்து பணம் திருடிய தொழிலாளி கைது

    • தொப்பம்பட்டி ஹரிஜன காலனியைச் சோ்ந்தவா் நாட்டுதுறை, கூலி தொழிலாளி.
    • பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளாா்.

    தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி ஹரிஜன காலனியைச் சோ்ந்தவா் நாட்டுதுறை (வயது 23), கூலி தொழிலாளி. இவரது வீட்டுக்கு அருகில் ராஜ் (60) என்ற முதியவா் வசித்து வருகிறாா்.

    இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு முதியவா் வீட்டில் இல்லாதபோது மேற்கூரையைப் பிரித்து அவரது வீட்டுக்குள் நுழைந்த நாட்டுதுறை, பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளாா். இது குறித்து தாராபுரம் குற்றப் பிரிவில் ராஜ் புகாா் அளித்தாா்.இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார்நாட்டுதுறையை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    Next Story
    ×