search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MI"

    • 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றவர். எம்.ஐ-ல் ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவியை நீட்டிக்க வேண்டும்
    • ஹார்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும்.


    இந்தியன் பிரீமியர் லீக் போட்டிவருகிற 22 முதல் மே- 26 வரை நடைபெறுகிறது.இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி 2024-க்கு முன் அந்த அணியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.மும்பை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹார்திக் பாண்டியாவைகேப்டனாக நியமித்து உள்ளது.

    ஐபிஎல் பட்டத்தை வென்றவர் ரோஹித் சர்மா. இந்த அறிவிப்பிற்கு பிறகு எம்.ஐ.ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேப்டனை மாற்றும் உரிமையாளரின் முடிவை கண்டித்தனர்.இதே போல் முன்னாள் இந்திய மற்றும் எம்.ஐ ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கும் கருத்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-

    ரோஹித் சர்மா 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றவர். எம்.ஐ-ல் ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவியை நீட்டிக்க வேண்டும். மேலும் ஹார்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும்.

    தற்போது ரோஹித் இந்திய அணியை வழிநடத்தி சிறப்பாக விளையாடி வருகிறார்.ரோஹித் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கிறார், இன்னும் சிறப்பாக விளையாடுகிறார்.ஐபிஎல் 2024 -க்கு முன் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய எம்ஐ முடிவு கண்டிக்கதக்கது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமனம்.
    • நீண்ட காலகமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வெற்றிகளை தேடிக் கொடுத்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். தோனி இருந்து வருகிறார். 42 வயதாகும் எம்.எஸ். தோனி இந்த சீசனுக்கு பிறகு விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. இதற்கிடையில் சிஎஸ்கே-யில் புதிய பொறுப்பை ஏற்க இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    இருந்தபோதிலும் ஹர்திக் பாண்ட்யாவுக்காக ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. இதனால் ரோகித் சர்மா சற்று அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

    எம்.எஸ். தோனி விளையாடாவிட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் ஜடேஜா உள்ளார். ஏற்கனவே ஜடேஜாவிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அவரது தலைமையில் அணி சிறப்பாக செயல்படவில்லை. இதனால் தொடரின் பாதிலேயே எம்.எஸ். தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார்.

    இவர்தான் என்பதுபோல் குறிப்பிடத்தகுந்த நபர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லை. இந்த நிலையில்தான் ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் 36 வயதான அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அம்பதி ராயுடு கூறியதாவது:-

    எதிர்காலத்தில் ரோகித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடி விட்டார். சிஎஸ்கே அணிக்காக விளையாடி அதேபோல் வெற்றிகளை குவித்தால் அது சிறப்பானதாக இருக்கும். சிஎஸ்கே-யில் கேப்டன் பதவியும் (எம்.எஸ். தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெற்றால்) அவரை நோக்கி இருக்கும். அதை பெறும் உரிமையை அவர் பெற்றுள்ளார். அணியை வழி நடத்த விரும்புகிறாரா? இல்லையா? என்பது அவரது முடிவு.

    இவ்வாறு அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

    எம்எஸ் தோனி கடந்த சீசனில் மூட்டு வலியுடன் விளையாடினார். பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் 2025 சீசனில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அம்பதி ராயுடன் இவ்வாறு தெரிவித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் எம்.எஸ். தோனி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    • கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    • ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாஷ்டேகுகள் வைரலாகின.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 ஆண்டாக கேப்டன் பொறுப்பு வகித்த ரோகித் சர்மாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.

    ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 லட்சம் பாலோயர்ஸ்களை மும்பை அணி இழந்துள்ளது.

    மும்பை அணியிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என குமுறும் இணைய வாசிகள், ரோகித் சர்மாவுக்காக மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவளித்து வருவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாஷ்டேகுகள் வைரலாகி வருகிறது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பு வகித்த ரோகித் சர்மாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 2013 முதல் 2023 வரை ஒரு பத்தாண்டு கால உற்சாகமான சவால், ரோகித்துக்கு மரியாதை என பதிவிட்டுள்ளது.

    • ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது.
    • ஒருவேளை அவர் மும்பை அணிக்கு சென்றால் சுப்மன கில் கேப்டனாக செயல்படுவார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் விவரத்தை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள்தான் அதிகமான வீரர்களை தக்க வைத்துள்ளன.

    சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

    குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டயா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் வீரர்களின் பரிமாற்றம் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை தங்களது அணிக்கு கொண்டுவர மும்பை அணி தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வீரர்கள் விடுவிப்புக்கு பிறகு 10 அணிகளிடமும் ரூ.262.95 கோடி கையிருப்பு இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம்தான் அதிகபட்சமாக ரூ. 40.75 கோடி கையிருப்பு உள்ளது. அந்த அணி 11 வீரர்களை விடுவித்தது.


    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை வெளியேற்றி உள்ளதால் ரூ. 31.4 கோடி கைவசம் இருக்கிறது.

    ஐதராபாத் அணி ரூ.34 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32.7 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.29.1 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.28.95 கோடியும், குஜராத் ரூ.23.15 கோடியும், மும்பை இந்தியன்ன்ஸ ரூ.15.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.13.15 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.

    • கடந்த முறை மும்பையில் இரு அணிகளும் விளையாடிய போது, சென்னை அணி ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • மும்பை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக அந்த மைதானத்தில் இரண்டு கேலரிகளை நிதா அம்பானி முன்பதிவு செய்துள்ளார்.

    மும்பை:

    ஐபிஎல் வரலாற்றில் அதிக சாம்பியன்ஸ் டிராபிகளை வென்ற இரு அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முதல் முறையாக இந்த ஐபிஎல் தொடரில் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. ஆனால் இந்த போட்டியில் மும்பை அணிக்கு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நீதா அம்பானி முடிவு செய்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஐபிஎல் சாம்பியன்ஸ் டிராபியை மும்பை 5 முறையும், சென்னை 4 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 5 கோப்பைகளை வென்ற மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், 4 முறை வென்ற சென்னை அணிக்கு டோனி கேப்டனாகவும் இருந்துள்ளனர்.

    இதனால் இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. டோனிக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம் உண்டு. கடந்த முறை மும்பையில் இரு அணிகளும் விளையாடிய போது, சென்னை அணி ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மும்பை வான்கடே மைதானமே மஞ்சள் நிறத்தில் காட்சி அளித்தது.

    இதே போன்று ஆர்சிபி விளையாடும் ஆட்டத்திற்கும் விராட் கோலி ரசிகர்கள் மும்பையை ஆக்கிரமித்து விட்டார்கள். இதனால் நிடா அம்பானி, தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் மற்ற ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டம் போட்டு உள்ளார். அதன் படி, மும்பை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக அந்த மைதானத்தில் இரண்டு கேலரிகளை நிதா அம்பானி முன்பதிவு செய்துள்ளார்.

    அந்த கேலரியில் மும்பை அணி ரசிகர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளது. அந்த கேலரியில் சிஎஸ்கே உள்ளிட்ட ரசிகர்கள் அமர அனுமதிக்கப்படவில்லை. மும்பை ரசிகர்கள் மண்டல பகுதியில் வெறும் மும்பை அணி ஜெர்சியை மட்டும் தான் அணி தான் வர வேண்டும் என்றும், வேறு அணி ஜெர்சியை அணிந்து வரக் கூடாது என்றும் வேறு நிறத்தில் டிசர்ட் போடக்கூடாது என்று மும்பை அணி நிர்வாகம் கூறியுள்ளது. இதன் மூலம் மும்பையில் நடைபெறும் ஐபில் போட்டியை மற்ற அணி ரசிகர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மற்ற அணி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • சி.எஸ்.கே, மும்பை உள்பட 10 அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரம் வெளியானது.
    • டெல்லி, ஐதராபாத் உள்பட 10 அணிகள் விடுவித்துள்ள வீரர்களின் விவரம் வெளியானது.

    மும்பை:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.

    இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை இன்றைக்குள் ( நவம்பர் 15) சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிந்ததால் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

    சென்னை சூப்பர் கிங்ஸ்:

    எம்.எஸ்.தோனி , ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி

    மீதமுள்ள தொகை: 20.45 கோடி மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2

    மும்பை இந்தியன்ஸ்:

    ரோகித் ஷர்மா , இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், குமார் கார்த்திகேய சிங், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால்

    டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட வீரர்கள்: ஜேசன் பெஹ்ரெண்டோர்ப்

    மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3 மீதமுள்ள தொகை: 20.55 கோடி

    பஞ்சாப் கிங்ஸ்:

    ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா , ஹர்ப்ரீத் ப்ரார்

    மீதமுள்ள தொகை: 32.2 கோடி ரூபாய். மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

    அப்துல் சமத், ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்

    மீதமுள்ள தொகை: 42.25 கோடி ரூபாய். மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

    ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங்

    டிரேடிங் முறையில் வாங்கப்பட்டவர்கள்: ஷர்துல் தாக்கூர், ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன்

    மீதமுள்ள தொகை: 7.05 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

    குஜராத் டைட்டன்ஸ்:

    ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் தெவாடியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் நங்வான், தர்ஷன் நங்வான், , ஜெயந்த் யாதவ், ஆர் சாய் கிஷோர், நூர் அகமது

    மீதமுள்ள தொகை: 19.25 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

    கே.எல்.ராகுல் (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய்

    மீதமுள்ள தொகை: 23.35 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

    பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, மஹிபால், மஹிபால், மஹிபால். சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப்

    மீதமுள்ள தொகை: 8.75 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2

    ராஜஸ்தான் ராயல்ஸ்:

    சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், சாஹல், சாஹல். , கே.சி கரியப்பா

    மீதமுள்ள தொகை: 13.2 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4

    டெல்லி கேப்பிட்டல்ஸ்:

    ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அஹ்மத், லுங்கி அகமது , முஸ்தாபிசுர் ரஹ்மான், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால்

    மீதமுள்ள தொகை: 19.45 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள் - 2

    சேப்பாக்கத்தில் நடைபெறும் குவாலிபையர்-1ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2019 #CSKvMI #Qualifier1
    ஐபிஎல் தொடரின் குவாலிவையர்-1 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

    இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக வாட்சன், டு பிளிசிஸ் களமிறங்கினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் மும்பை அணியினரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.



    டு பிளசிஸ் 6 ரன்னிலும், ரெய்னா 5 ரன்னிலும், வாட்சன் 10 ரன்னிலும் அவுட்டாகினர். தொடர்ந்து இறங்கிய முரளி விஜய்க்கு, அம்பதி ராயுடு ஒத்துழைப்பு கொடுத்தார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய முரளி விஜய் 26 ரன்னில் வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து கேப்டன் டோனி இறங்கினார். இருவரும் பவுண்டரி, சிக்சராக விளாசினர். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, மும்பை அணிக்கு 132 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. டோனி 37 ரன்னுடனும், ராயுடு 42 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், குருணால் பாண்டியா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. ரோகித் சர்மா 4, டி காக் 8  ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர்.  சூர்யா குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடினர். மும்பை அணி 101 ரன்கள் இருந்தபோது இஷான் கிஷன் 28 வெளியேறினார். அடுத்து வந்த குர்ணால் பாண்டியா டக் முறையில் வெளியேறினார்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யா குமார் யாதவ் அணியை வெற்றி பெற செய்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி 9 பந்துகள் மீதம் உள்ள நிலையில்  சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சூர்யா குமார் யாதவ் 71 கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்,

    சென்னை அணி தரப்பில் இம்ரான் தாகீர் 2 விக்கெட்டும் ஹர்பஜன், சாஹர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். #IPL2019 #CSKvMI #Qualifier
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. #IPL2019 #KKRvMI

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு அரங்கேறிய 47-லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் மல்லுகட்டின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மான் கில்லும் களம் புகுந்தனர். பரிந்தர் ஸ்ரன் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓட விட்ட சுப்மான் கில், அதே உத்வேகத்துடன் விடாமல் மட்டையை சுழட்டினார். கிறிஸ் லின்னும் சரவெடியாய் வெடிக்க, ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் ஜோடியாக 96 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கிறிஸ் லின் 54 ரன்களில் (29 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர் ) கேட்ச் ஆனார். இதன் பின்னர், முந்தைய நாள் கேப்டனின் முடிவுகளை சரமாரியாக விமர்சித்த ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல், திடீரென 2-வது விக்கெட்டுக்கு இறக்கப்பட்டார். ஒரு சில ஓவர்கள் நிதானத்துக்கு பிறகு ரஸ்செல் தனது கைவரிசையை காட்டினார். மறுமுனையில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் 76 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர் ) வெளியேறினார்.




    அடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் வந்தார். மறுமுனையில் ரஸ்செல் ரன்வேட்டை நடத்தினார். அவரை கட்டுப்படுத்த வழிதெரியாமல் மும்பை கேப்டன் ரோகித் சர்மா விழிபிதுங்கிப் போனார். அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் பவுலர்கள் திண்டாடினர். ஆப்-சைடுக்கு வெளியே பந்து வீசினாலும் அதையும் நொறுக்கித் தள்ளினார். ஹர்திக் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசிய அவர், பும்ரா, மலிங்காவின் பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை. அவரது அசுரத்தனமான பேட்டிங்கால் கொல்கத்தா அணி மலைப்பான ஸ்கோரை எட்டிப்பிடித்தது.

    20 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணியின் அதிகபட்சமான ஸ்கோர் இதுதான். அது மட்டுமின்றி மும்பைக்கு எதிராக கொல்கத்தாவின் அதிகபட்சமாகவும் இது பதிவானது. இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 80 ரன்களுடனும் (40 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 15 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.





    அடுத்து 233 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. குயின்டான் டி காக் (0), கேப்டன் ரோகித் சர்மா (12 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் நிலைத்து நின்று வாணவேடிக்கை காட்டினார். அவர் 17 பந்துகளில் 7 சிக்சருடன் அரைசதத்தை கடந்து மிரள வைத்தார். இந்த சீசனில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இது தான்.

    ஹர்திக் பாண்ட்யா மிரட்டினாலும் ரன்தேவை அதிகமாக இருந்ததால் கொல்கத்தா அணியின் கையே ஓங்கி இருந்தது. பாண்ட்யா 91 ரன்களில் (34 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) கேட்ச் ஆனார். 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 198 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.




    தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்று இருந்த கொல்கத்தா அணி ஒரு வழியாக தோல்விப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. மேலும் கொல்கத்தா அணி 4 ஆண்டுகளுக்கு பிறகு (அதாவது தொடர்ந்து 8 தோல்விக்கு பிறகு) மும்பையை சாய்த்து இருக்கிறது.

    கொல்கத்தா தரப்பில் ரஸ்செல், நரின், குர்னே தலா 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பியூஸ் சாவ்லாவுக்கு ஐ.பி.எல்.-ல் இது 150-வது விக்கெட்டாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 3-வது பவுலர் ஆவார்.  #IPL2019 #KKRvsMI

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #CSKvMI
    ஐபிஎல் தொடரின் 44-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் சுரெஷ் ரெய்னா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்

    அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது டி காக் 15 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய எவின் லெவிஸ் 32 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்டியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.



    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரோகித் சர்மா ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 48 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 67 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா 23 ரன்னுடனும், பொல்லார்டு 13 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. முரளி விஜய், வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் ஓவரிலேயே சிஎஸ்கே ரசிர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்கா வீசிய அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த வாட்சன் 8 ரன்னில் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

    அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா பந்தில் ரெய்னா 2 ரன்களிலும், அம்பதி ராயுடு ரன்ஏதும் எடுக்காமலும் குருணால் பாண்டியா பந்திலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் முரளி விஜய் நிலைத்து நிற்க மறுபக்கம் விக்கெட் வீழந்த வண்ணமே இருந்தது.

    கேதர் ஜாதவ் 6 ரன்னிலும், ஷொரே 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து விளையாடிய முரளி விஜய் 38 ரன்னில் வெளியேறினார். இதனால் சிஎஸ்கே 11.4 ஓவரில் 66 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 6 விக்கெட்டுக்களை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு பிராவோ உடன் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 99 ரன்கள் இருந்த போது மலிங்கா பந்து வீச்சில் பிராவோ வெளியேற அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் சென்னை அணி 109 ரன்களில் ஆல் அவுட் ஆகி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #IPL2019 #CSKvMI
    மும்பை இந்தியன்ஸ் அணி கம்மின்ஸ், டுமினி, முஷ்டாபிஜூர் ரஹ்மான் ஆகியோரை 2019 சீசனுக்கான அணியில் இருந்து விடுவித்துள்ளது. #IPL2019 #MI
    ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 18-ந்தேதி நடக்கியது. இதற்கு முன் வீரர்களை தக்கவைத்தல், விடுவித்தல் ஆகியவற்றிற்கான காலக்கெடு 2018 ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து நேற்றுடன் முடிவடைந்தது.



    மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ், தென்ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் டுமினி, வங்காள தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான ஆகியோரை விடுவித்துள்ளது.
    மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா மோசமான பேட்டிங்கால் விரும்பத்தகாத சாதனைப் படைத்துள்ளார். #IPL2018 #MI #Rohitsharma
    ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் 14 போட்டிகளில் 8-ல் தோல்வியடைந்து பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை மும்பை இந்தியன்ஸ் சந்தித்தது. அதிக ரன்ரேட் வைத்திருந்த மும்பை இந்தியன்ஸ், டெல்லியை வீழ்த்தினாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை இருந்தது.

    ஆனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து லீக் சுற்றோடு வெளியேறியது. மும்பை அணியின் தோல்விக்கு ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் முக்கிய காரணம்.



    இந்த தொடரில் 14 ஆட்டங்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன்மூலம் ஒரு தொடரில் 300 ரன்களுக்கு கீழ் முதன்முறையாக அடித்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். சராசரி 23.83 புள்ளியே. 2013-ல் 538 ரன்கள் குவித்தார். 19 போட்டியில் சராசரி 38.42 ஆகும்.

    2008-ல் 404 ரன்கள் அடித்திருந்தார். 2009-ல் 362 ரன்களும், 2010-ல் 404 ரன்களும், 2011-ல் 372 ரன்களும், 2012-ல் 433 ரன்களும், 2013-ல் 538 ரன்களும், 2014-ல் 390 ரன்களும், 2015-ல் 482 ரன்களும், 2016-ல் 489 ரன்களும், 2017-ல் 333 ரன்களும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×