என் மலர்
நீங்கள் தேடியது "Qualifier 1"
- டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சண்டிகர்:
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடங்கியது. சண்டிகரில் நடந்த குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பஞ்சாப் முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே ஆர்சிபி வீரர்கள் அசத்தலாகப் பந்து வீசினர். இதனால் பஞ்சாப் வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆர்சிபி சார்பில் சூயஷ் சர்மா, ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டும், யாஷ் தயாள் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் 12 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மயங்க் அகர்வால் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், ஆர்சிபி அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஆர்சிபி அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- குவாலிபயர் 1 போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகிறது.
- குவாலிபயர் 1 போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி குறித்த அஸ்வின் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறம் குவாலிபயர் 1 போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், குவாலிபயர் 1 போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆர்சிபி அணியில் மாயங்க் அகர்வாலின் பங்களிப்பு பற்றி பேச மறுக்கக்கூடாது. ஏனெனில் அவர் இந்த ஆண்டு சிறந்த உள்நாட்டு சீசனை வைத்திருந்தார். ஐபிஎல் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் பேசினேன். ஆனால் பலரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பில் தற்போது அவர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயரின் சீசனாக இல்லாமல் போனால் ஆர்.சி.பி அணி தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தற்போதைய பஞ்சாப் கிங்ஸ் அணி வலிமையான அணியாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை பெங்களூரு அணி தான் முதல் அணியாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழையும் என்று உள்ளுணர்வு சொல்கிறது.
என அஸ்வின் கூறினார்.
- புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து பெங்களூரு அணி அசத்தியுள்ளது.
- பஞ்சாப் அணியுடன் ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் மோதுகிறது.
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறியது.
இந்த போட்டியின் வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தொடரின் தனது அனைத்து AWAY GAMES போட்டியிலும் வெற்றி பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை பெங்களூரு அணி படைத்தது.
பெங்களூரு அணி மொத்தமுள்ள 14 போட்டிகளில், அதன் 7 AWAY போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தது.
- பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை அணிகள் தகுதி பெற்றன.
புதுடெல்லி:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் வரும் வியாழக்கிழமை மோதுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் குஜராத், மும்பை அணிகள் மோதவுள்ளன.
இந்த குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரில் நடைபெறுகிறது. குவாலிபையர்2 சுற்று மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் பில்லிங்ஸ் நீக்கப்பட்டு, ஷேன் வாட்சன் சேர்க்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

தவான், கோஸ்வாமி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்திலேயே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சாஹல் வீசிய பந்தில் தவான் க்ளீன் போல்டானார். அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். இவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினார். இந்த ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார்.

ஆட்டத்தின் 4-வது ஓவரில் கோஸ்வாமி 12 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் வெளியேறினார். அடுத்த ஓவரில் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை சர்துல் தாகூர் வீசினார்.

கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்கும்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4.2 ஓவரில் 36 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. சாகிப் அல் ஹசன் 12 ரன்னிலும், மணிஷ் பாண்டே 8 ரன்னிலும், யூசுப் பதான் 24 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

18-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் இரண்டு சிக்சர் விளாசினார். இதனால் 17 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச சன்சைரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. பிராத்வைட் 29 பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 140 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.சர்துல் தாகூரின் கடைசி 2 ஓவரில் 37 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பெற்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (16 புள்ளி), ராஜஸ்தான் ராயல்ஸ் (14 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. நடப்பு சாம்பியன் மும்பை, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகள் வெளியேற்றப்பட்டன.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை வகிக்கும் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு (செவ்வாய்க்கிழமை) கோதாவில் இறங்குகின்றன.
இந்த சீசனில் 7 எதிரணிகளையும் குறைந்தது ஒருமுறையாவது வீழ்த்திய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இரண்டு ஆண்டு தடை காலத்துக்கு பிறகு திரும்பிய சென்னை அணியில் 30 வயதுக்கு மேல் அதிக வீரர்கள் இடம் பெற்றிருந்ததால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்தனர். ஆனால் வயதுக்கும், திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை சென்னை வீரர்கள் நிரூபித்து காட்டிவிட்டனர்.
அம்பத்தி ராயுடு (586 ரன்), கேப்டன் டோனி (446 ரன்), ஷேன் வாட்சன் (438 ரன்), சுரேஷ் ரெய்னா (4 அரைசதத்துடன் 391 ரன்) ஆகியோர் சென்னை அணியின் பேட்டிங் தூண்களாக திகழ்கிறார்கள். இதில் டோனி 9 முறை ‘நாட்-அவுட்’ ஆக இருந்தது கவனிக்கத்தக்க அம்சமாகும். இவர்களில் யாராவது ஒருவர் நீண்ட நேரம் பேட்டை சுழட்டினாலே சென்னை அணி கணிசமான ஸ்கோரை குவித்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் (14 விக்கெட்), நிகிடி (9 விக்கெட்), தீபக் சாஹர் (9 விக்கெட்) ஆகியோர் கைகொடுக்கிறார்கள். ஆல்- ரவுண்டர் வெய்ன் பிராவோ 11 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தாலும் ஓவருக்கு சராசரியாக 10.15 ரன்களை விட்டுக்கொடுத்து வள்ளலாகவும் பார்க்கப்படுகிறார்.
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்த முறை ஐதராபாத் அணி தாக்குப்பிடிப்பது கடினம் என்று கூறப்பட்ட நிலையில், கனே வில்லியம்சன் தலைமையில் அந்த அணி எழுச்சி பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து பிரமாதப்படுத்தியது. பேட்டிங்கில் ஐதராபாத் அணியின் ஆணிவேராக விளங்கும் வில்லியம்சன் 8 அரைசதத்துடன் 661 ரன் சேர்த்து முத்திரை பதித்துள்ளார். அவருக்கு ஷிகர் தவான் (4 அரைசதத்துடன் 437 ரன்), மனிஷ் பாண்டே (276 ரன்) பக்கபலமாக இருக்கிறார்கள். இவர்களைத் தான் அந்த அணி முழுமையாக நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் சித்தார்த் கவுல் (17 விக்கெட்), ரஷித்கான் (16 விக்கெட்), சந்தீப் ஷர்மா (9 விக்கெட்), புவனேஷ்வர்குமார் (8 விக்கெட்) முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆனால் தொடக்க ஆட்டங்களில் பந்து வீச்சில் அச்சுறுத்திய ஐதராபாத் பவுலர்கள், கடைசி 4 ஆட்டங்களில் ரன்களை வாரி வழங்கி விட்டனர். இதனால் ஐதராபாத் அணி பந்து வீச்சை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தும்.
மேலும் கடைசி மூன்று லீக்கில் வரிசையாக தோல்வி கண்ட அந்த அணி மீண்டும் முழு உத்வேகத்துக்கு திரும்புவதற்கு எல்லா வகையிலும் ஆயத்தமாகி வருகிறது.
இரு அணிகளும் சரிசமபலத்துடன் இருப்பது போல் தெரிந்தாலும், இந்த ஆண்டில் ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. லீக் சுற்றில் இரண்டு ஆட்டங்களிலும் முறையே 4 ரன் மற்றும் 8 விக்கெட் வித்தியாசங்களில் சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தியது. இதனால் சென்னை அணியினர் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். 7-வது முறையாக சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்குமா? அல்லது முந்தைய தோல்விக்கு ஐதராபாத் அணி பழிதீர்க்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதிச்சுற்றை எட்டும் அதே வேளையில், தோல்வி அடையும் அணி வெளியேறாது. அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், நிகிடி.
ஐதராபாத்: அலெக்ஸ் ஹாலெஸ், ஷிகர் தவான், வில்லியம்சன் (கேப்டன்), மனிஷ் பாண்டே, யூசுப் பதான் அல்லது தீபக் ஹூடா, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, ஷகிப் அல்-ஹசன், புவனேஷ்வர்குமார், ரஷித்கான், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா.
இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #IPL2018 #SRH #CSK






