search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSKvMI"

    • முதலில் ஆடிய மும்பை அணி 139 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய சென்னை 17.4 ஓவரில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது. அறிமுக வீரர் நேஹால் வதேரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து, 64 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சென்னை அணி சார்பில் பதீரனா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அதிரடியாக ஆடினார். 16 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 30 ரன்களைக் குவித்தார்.

    ரகானே 21 ரன்னிலும், அம்பதி ராயுடு 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    டேவன் கான்வே பொறுப்புடன் ஆடி 44 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், சென்னை அணி 140 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி 6வது வெற்றியைப் பதிவு செய்தது.

    • டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மும்பை அணி 139 ரன்களை எடுத்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. சென்னை அணியின் துல்லியமான பந்துவீச்சில் மும்பை அணி சிக்கியது.

    கேமரூன் கிரீன் 6 ரன்னிலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி, மோசமான சாதனை படைத்தார்.

    அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவுடன், நேஹால் வதேரா ஜோடி சேர்ந்தார். 4வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் 26 ரன்னில் வெளியேறினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வதேரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது.

    சென்னை அணியின் பதீரனா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன் கொடுத்தார். அடுத்த ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்ஸ் விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில்  டி காக் மூன்று சிக்ஸ் விளாசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 3 ஓவரில் 30 ரன்னைத் தொட்டது.

    டி காக் விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைக்கையில், சர்துல் தாகூர் வீசிய ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 4 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா எம்எஸ் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 45 ரன்களாக இருந்தது.



    3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். தொடக்க ஜோடி ஆட்டமிழந்ததும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது. அந்த அணி 7 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும், இஷான் கிஷன் 23 ரன்னிலும், குருணால் பாண்டியா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மும்பை 14.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.  3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷன் ஜோடி 36 பந்தில் 37 ரன்களே எடுத்தது.

    6-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். அப்போது 14.4 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

    பொல்லார்டு அவ்வப்போது சிக்ஸ் தூக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 18-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸ் தூக்கினர். 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது பந்தில் சாஹர் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்திலும் சாஹர் ரன் விட்டுக்கொடுக்கவில்லை.



    கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.  பொல்லார்டு 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் மெக்ளெனகன் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் ஏதுமில்லை



    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

    1. வாட்சன், 2. டு பிளிசிஸ், 3. ரெய்னா, 4. அம்பதி ராயுடு, 5. எம்எஸ் டோனி, 6. ஜடேஜா, 7. பிராவோ, 8. ஹர்பஜன் சிங், 9. இம்ரான் தாஹிர், 10. தீபக் சாஹர், 11. சர்துல் தாகூர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

    1. டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. குருணால் பாண்டியா, 5. ஹர்திக் பாண்டியா, 6. பொல்லார்டு, 7. ராகுல் சாஹர், 8. மலிங்கா, 9. பும்ரா, 10. மெக்ளெனகன் 11. இஷான் கிஷன்.
    ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற சிஎஸ்கே-யை காட்டிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே கூடுதல் வாய்ப்பு உள்ளது என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 12-வது சீசனில் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் தலா மூன்று முறை கோப்பைகளை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்பதே மில்லியன் கேள்விக்குறி?. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் காட்டிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கே கூடுதல் வாய்ப்பு என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘இறுதிப் போட்டி சென்னைக்கு மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த வேண்டுமென்றால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    சென்னை அணி பந்து வீச்சில் அசத்தி வருகிறது. இது மாறுபட்ட ஆடுகளம். ஆகையால், மும்பை அணிக்கு சற்று கூடுதல் வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
    சேப்பாக்கத்தில் நடைபெறும் குவாலிபையர்-1ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2019 #CSKvMI #Qualifier1
    ஐபிஎல் தொடரின் குவாலிவையர்-1 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

    இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக வாட்சன், டு பிளிசிஸ் களமிறங்கினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் மும்பை அணியினரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.



    டு பிளசிஸ் 6 ரன்னிலும், ரெய்னா 5 ரன்னிலும், வாட்சன் 10 ரன்னிலும் அவுட்டாகினர். தொடர்ந்து இறங்கிய முரளி விஜய்க்கு, அம்பதி ராயுடு ஒத்துழைப்பு கொடுத்தார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய முரளி விஜய் 26 ரன்னில் வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து கேப்டன் டோனி இறங்கினார். இருவரும் பவுண்டரி, சிக்சராக விளாசினர். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, மும்பை அணிக்கு 132 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. டோனி 37 ரன்னுடனும், ராயுடு 42 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், குருணால் பாண்டியா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. ரோகித் சர்மா 4, டி காக் 8  ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர்.  சூர்யா குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடினர். மும்பை அணி 101 ரன்கள் இருந்தபோது இஷான் கிஷன் 28 வெளியேறினார். அடுத்து வந்த குர்ணால் பாண்டியா டக் முறையில் வெளியேறினார்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யா குமார் யாதவ் அணியை வெற்றி பெற செய்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி 9 பந்துகள் மீதம் உள்ள நிலையில்  சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சூர்யா குமார் யாதவ் 71 கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்,

    சென்னை அணி தரப்பில் இம்ரான் தாகீர் 2 விக்கெட்டும் ஹர்பஜன், சாஹர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். #IPL2019 #CSKvMI #Qualifier
    ×