என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எஸ். தோனி"

    • ஐ.பி.எல். தொடரில் எனது கடைசி ஆண்டு என யாருக்கும் தெரியாது என்று தோனி தெரிவித்தார்.
    • ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை.

    நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.

    கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பு பேசிய சி.எஸ்.கே. அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி, "எனக்கு இப்போது 43 வயது ஆகிறது. நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடிவிட்டேன். ஐ.பி.எல். தொடரில் எனது கடைசி ஆண்டு என யாருக்கும் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். இந்த ஐ.பி.எல். முடிந்த உடன் அடுத்த 8 மாதத்துக்கு எனது உடல் இந்த அழுத்தத்தை தாங்குகிறதா என்பதை பார்க்க வேண்டும். ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் கிடைக்கும் ரசிகர்கள் அன்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    43 வயதான தோனி, ஓய்வு பெறுவது குறித்து எந்தவொரு தகவலையும் இன்னும் அணி நிர்வாகத்திடம் கூறவில்லை எனக் கூறப்படுகிறது

    • சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை ஆயுஷ் மாத்ரே படைத்தார்.
    • ஆயுஷ் மாத்ரே தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இதன் மூலம் சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.

    மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.

    ஆயுஷ் மத்ரேவின் துணிச்சலான ஆட்டத்தை டிரஸ்ஸிங் ரூமில் நின்றிருந்த சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ். தோனி புன்னகையுடன் ரசித்து பார்த்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது. 

    • நாங்கள் இந்த தொடரில் பவர்பிளேவில் மோசமாக விளையாடினோம்.
    • பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நாங்கள் நினைத்த தொடக்கத்தை பெறமுடியவில்லை.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    இப்போட்டியில் அதிரடி ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய கேப்டன் எம்.எஸ். தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஆட்ட நாயகன் விருது வென்ற பின்பு பேசிய டோனி, "இது போன்ற தொடர்களில் ஆடும் போது உங்களுக்கு வெற்றி என்பது மிகவும் முக்கியம். துரதிர்ஷ்டவசமாக ஆரம்ப கட்டங்களில் எங்களால் சரியாக விளையாட முடிய வில்லை. அதற்கு நிறைய விஷயங்களை சொல்லலாம். வெற்றி பெற்றது ஒட்டு மொத்த அணிக்கும் நம்பிக்கையை அளிக்கிறது.

    இதன் மூலம் எந்த துறையில் இன்னும் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதற்கு இந்த வெற்றி உதவியாக இருக்கும். கிரிக்கெட்டில் நாம் நினைத்தது போல் நடக்க வில்லை என்றால் கடவுள் நமக்கு அனைத்தையும் கடினமாக மாற்றிவிடுவார். இந்த ஆட்டம் கூட எங்களுக்கு கடினமாகதான் இருந்தது.

    நாங்கள் இந்த தொடரில் பவர்பிளேவில் மோசமாக விளையாடினோம். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நாங்கள் நினைத்த தொடக்கத்தை பெறமுடியவில்லை. சில நேரங்களில் தவறான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து விடுகின்றோம். இது எல்லாம் எங்கள் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது.

    சேப்பாக்கம் ஆடுகளமும் கொஞ்சம் தோய்வாக இருந்தது. நாங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியே விளையாடும்போது எங்கள் அணியின் பேட்டிங் நன்றாகவே இருக்கிறது. இதுபோன்ற பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாட வேண்டும் என்று நினைக்கின்றோம். இதன் மூலம் எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய ஷாட் ஆடுவதற்கான நம்பிக்கை கிடைக்கும்.

    இதேபோல அஸ்வின் மீது நாங்கள் அதிக நெருக்கடியை அளிக்கிறோம் என்று நினைக்கின்றேன்.முதல் 6 ஓவர்களில் அவர் 2 ஓவர்கள் வீசுகிறார். எனவே இந்த ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்து பார்ப்போம் என்று எங்களுக்கு தோன்றியது. பவுலிங் தாக்குதல் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதே போன்று பேட்டிங்கிலும் நாங்கள் இன்னும் கொஞ்சம் முன்னேற்றத்தை பெற வேண்டும்.

    ஷேக் ரசித் சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று நினைக்கின்றேன். அவர் சில ஆண்டுகளாக எங்கள் அணியில் இருந்தார். தற்போது அவருக்கு நல்ல தொடக்கம் கிடைத்து இருக்கிறது. இயல்பான ஷாட்களை ஆடியே அவர் பவுலர்களை ஆதிக்கம் செலுத்த முடியும். எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்திருக்கிறது. இதை சொன்னவுடன் எனக்கு ஏன் இந்த விருது தருகிறார்கள் என்று தான் யோசித்தேன். ஏனென்றால் நூர் அகமது அபாரமாக பந்துவீசினார்" என்று தெரிவித்தார். 

    • லக்னோவுக்கு எதிரான போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார் சிஎஸ்கே கேப்டன் தோனி
    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் தோனி அசத்தியிருந்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    இப்போட்டியில் அதிரடி ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய கேப்டன் எம்.எஸ். தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதன்மூலம் 43 வயதான எம்.எஸ். தோனி, ஐபிஎல் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற மிக வயதான வீரர் சாதனையை படைத்துள்ளார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    இப்போட்டியில் அதிரடி ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய கேப்டன் எம்.எஸ். தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதன்மூலம் 43 வயதான எம்.எஸ். தோனி, ஐபிஎல் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற மிக வயதான வீரர் சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி யில் பிரவீன் தாம்பே 42 வயது 208 நாட்களில் ஆட்ட நாயகன் விருது பெற்றதே சாதனையாக இருந்தது.

    6 ஆண்டுகளுக்கு பிறகு டோனிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 2019-ல் டெல்லி கேப்பிடல்சுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் அவர் இந்த விருதை பெற்று இருந்தார்.

    ஆட்ட நாயகனை விருது வென்ற பின்பு பேசிய எம்.எஸ். தோனி, "எனக்கு ஏன் விருதை வழங்குகிறார்கள் என்றுதான் நினைத்தேன். நூர் அகமது மிகவும் சிறப்பாக பந்து வீசினார்.

    ஒட்டு மொத்தத்தில் டோனி 18-வது முறையாக ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் அவர் வீராட்கோலியை சமன் செய்தார். அதிகபட்சமாக ரோகித் சர்மா 19 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் டோனி, கோலி , யூசுப் பதான் (16), ஜடோஜா (16) ஆகியோர் உள்ளனர்.

    ஆட்ட நாயகனை விருது வென்ற பின்பு பேசிய எம்.எஸ். தோனி, "எனக்கு ஏன் விருதை வழங்குகிறார்கள் என்றுதான் நினைத்தேன். நூர் அகமது மிகவும் சிறப்பாக பந்து வீசினார்" என்று தெரிவித்தார்.

    • எம்எஸ் தோனி லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங்க் செய்து வெளியேற்றினார்.
    • தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் 155 கேட்சுகளையும் 46 ஸ்டம்பிங்குகளையும் எடுத்துள்ளார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    இப்போட்டியில் எம்எஸ் தோனி லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங்க் செய்து வெளியேற்றினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 Dismissals செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.

    தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் 155 கேட்சுகளையும் 46 ஸ்டம்பிங்குகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சில இரவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது, இதுவும் அப்படித்தான்.
    • பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. தொடக்க வீரர்கள் தரமானவா்கள்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி தொடர்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 103 ரன்னில் சுருண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமாக தோற்றது.

    இந்த மோசமான தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

    சில இரவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது, இதுவும் அப்படித்தான். நாம் அடிப்படைகளுக்குத் திரும்ப வேண்டும், நாம் எங்கு தடுமாறுகிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், சவாலை நேரடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆட்டத்தில் போதுமான ரன்னை எடுக்கவில்லை.

    பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. தொடக்க வீரர்கள் தரமானவா்கள். அவர்கள் சோர்வடைய தேவையில்லை. தொடக்கத்திலேயே விக்கெட் சரிவதால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் அதை நிவர்த்தி செய்ய முடியவில்லை. இந்த தோல்வி எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் விரக்தி அடையாமல் இருப்பது முக்கியம். போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறேன்.

    இவ்வாறு தோனி கூறி உள்ளார்.

    • சுனில் நரைன் வீசிய 16வது ஓவரின் மூன்றாவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
    • பந்து பேட்டை கடக்கும்போது சிறிய அல்ட்ராஎட்ஜ் ஸ்பைக் வந்தது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.

    இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ். தோனி எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சுனில் நரைன் வீசிய 16வது ஓவரின் மூன்றாவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். நடுவரின் முடிவை தோனி மேல்முறையீடு செய்தார். அப்போது பந்து பேட்டை கடக்கும்போது சிறிய அல்ட்ராஎட்ஜ் ஸ்பைக் வந்தது. இதனை நீண்ட நேரம் பார்த்த மூன்றாவது நடுவர் இறுதியாக அவுட் கொடுத்தார்.

    தோனி ரன்களை குவிக்காமல் உடனடியாக ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

    • இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • 43 வயதான தோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் ஆவார்.

    பத்து அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 3-வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடும் சி.எஸ்.கே. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வகையில் தோனி எந்த வரிசையில் ஆடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேசிய எம்.எஸ். தோனி, "சென்னை அணிக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என்னால் விளையாட முடியும். அது என்னுடைய அணி உரிமை. நான் காயமடைந்து சக்கர நாற்காலியில் இருந்தாலும், என்னை சி.எஸ்.கே. அணிக்காக விளையாட இழுத்துச் செல்வார்கள்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    43 வயதான தோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜடேஜா ஆகஸ்ட் 25 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
    • இந்த பதிவு எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகஸ்ட் 25 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

    இந்நிலையில், ஜடேஜா எடுத்த செல்பியில் டோனி இருப்பதைப் போல எடிட் செய்த புகைப்படத்தை பகிர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், "தல தளபதி வயலில் இருந்தால் எப்படி இருக்கும், சும்மா ஒரு கற்பனைக்கு" என்று சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பதிவு எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

    ×