search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mehbooba Mufti"

    • வடக்கு காஷ்மீரின் பட்டான் நகருக்கு செல்வதை தடுக்கும் வகையில் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் இருக்கும் நிலையில் மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    ஸ்ரீநகர்:

    மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார்.

    வடக்கு காஷ்மீரின் பட்டான் நகருக்கு செல்வதை தடுக்கும் வகையில் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ஒரு முன்னாள் முதல்-மந்திரியின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது என்றால் சாதாரண மனிதர்களின் நிலையை நினைத்து பார்க்க முடியாது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் இருக்கும் நிலையில் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    • மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி.
    • மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்டுகளின் அவலத்தை மறைக்க விரும்புகிறது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் வசித்து வருகிறார். அவர், சமீபத்தில் சோபியானில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சுனில்குமார் பட் குடும்பத்தினரை சந்திக்க நேற்று திட்டமிட்டிருந்தார்.

    ஆனால் அங்கு செல்ல விடாமல் தடுத்து தன்னை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தனது வீட்டு கேட்டுக்கு பூட்டு போட்டிருக்கும் படங்களையும், வீட்டுக்கு வெளியே சி.ஆர்.பி.எப். வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருக்கும் படங்களையம் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

    அதில் அவர், 'மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்டுகளின் அவலத்தை மறைக்க விரும்புகிறது. ஏனெனில் அரசின் கொடூரமான கொள்கைகள், காஷ்மீரை விட்டு வெளியேற விரும்பாதவர்களை இலக்கு வைத்து கொலை செய்ய வழிவகுத்தது. எங்களை பிரதான எதிரியாக முன்னிறுத்துவதற்காகத்தான் நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன்' என்று குற்றம் சாட்டியிருந்தார்.

    மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெகபூபா முப்தி இம்மாத தொடக்கத்திலும் போலீசாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முக்தி நேற்று மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக மெகபூபா முப்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மீண்டும் வீட்டுக்காவலில் உள்ளேன். கட்சியின் மூத்த நிர்வாகிகளான சாகிப், புக்காரி ஆகியோரும் கைதாகி உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

    ஹைதர்போரா என்கவுண்டரில் அப்பாவிகள் 2 பேர் பலியானதை கடுமையாக விமர்சித்ததன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    முன்னதாக, ஹைதர்போரா என்கவுண்டர் விவகாரம் குறித்து நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாதுகாப்பு கருதி மெகபூபா முப்தியின் இல்ல நுழைவாயிலில் நடமாடும் பதுங்கு குழி வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முக்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

    மெகபூபா முப்தியின் இல்லத்தில் இன்று மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் முக்கிய கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், மெகபூபா முப்தி போலீசாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் மாவட்டம் குப்கார் சாலையில் அமைந்துள்ள மெகபூபா முப்தியின் வீட்டின் உள்ளே அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடரந்து கண்காணிக்க, முப்தியின் இல்ல நுழைவாயில் நடமாடும் பதுங்கு குழி வாகனம் நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக மெகபூபா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஷ்மீரில் அப்துல்லா குடும்பத்தையும், முப்தி குடும்பத்தையும் பிரதமர் மோடி விமர்சித்தார். அதற்கு மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி பதிலடி கொடுத்துள்ளார். #MehboobaMufti #PMModi
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அப்துல்லா குடும்பத்தையும், முப்தி குடும்பத்தையும் விமர்சித்தார். அதற்கு முப்தி முகமது சயீதின் மகளும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

    நான் அனுதாபம் தேடி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, அரசியல் எதிரிகளை திட்டுவது இல்லை. ஆனால், பிரதமர் மோடியோ அனுதாபம் தேடும் நோக்கத்தில், தன்னை தேசத்துடன் சமப்படுத்தி பேசுகிறார்.

    மோடிதான் இந்தியா அல்ல, இந்தியாதான் மோடியும் அல்ல. தேர்தலுக்கு முன்பு, குடும்பங்களை விமர்சிக்கும் மோடி, தேர்தலுக்கு பிறகு அதே கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தூது விடுவது ஏன்? பா.ஜனதாதான், சிறுபான்மையினரை ஒதுக்கிவிட்டு, இந்தியாவை பிளவுபடுத்த விரும்புகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   #MehboobaMufti #PMModi
    காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு பகுதியை ஸ்ரீநகருடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #MehboobaMufti #civilianrestriction #JammuSrinagarHighway
    ஜம்மு:

    சட்டசபை முடக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கவர்னர் சத்யபால் சிங் தலைமையில் ஜனாதிபதி ஆட்சிமுறை அமலில் உள்ளது. புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகன வரிசையின்மீது கடந்த 14-2-2019 அன்று நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலுக்கு பின்னர் மாநிலத்தின் பல பகுதிகளில் பயங்கரவாதிகளை தேடிப்பிடிக்கும் அல்லது சுட்டுகொல்லும் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

    விரைவில் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்திய கவர்னர் சில முக்கிய முடிவுகளை அறிவித்தார்.

    தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளி இடங்களில் இருந்து காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு பாதுகாப்பு படையினரை அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், முன்னர் புல்வாமாவில் நிகழ்ந்ததுபோல் பாதுகாப்பு படையினர் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் நடைபெறாமல் இருக்க ஜம்மு பகுதியை ஸ்ரீநகருடன் இணைக்கும் 370 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு  தடை விதிக்கப்பட்டது.


    இதனால், கடந்த 2 நாட்களாக இந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரிகள் மற்றும் தனியார் வாகனங்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.

    இதற்கிடையே, ரம்பான் மாவட்டத்தில் உள்ள அனோக்கி நீர்வீழ்ச்சி அருகே ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதால் இப்பகுதியிலும் போக்குவரத்து முடங்கியது.

    இந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டு, ஜம்முவை நோக்கி இன்று அதிகாலை சுமார் 2 ஆயிரம் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

    இந்நிலையில், பாதுகாப்பு என்ற பெயரில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சலையில் பொது வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடைக்கு அம்மாநில முன்னாள் முதல் மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, இந்த தடையால் வர்த்தகர்கள் பெருமளவிலான பாதிப்பு அடைந்துள்ளனர். சர்வாதிகாரத்துக்கு இணையான இந்த தடையால், சரக்கு லாரிகள் சரியாக சென்றுவர முடியாத நிலையில் உணவுப் பொருள் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஏற்படும் ஆபத்து உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    பாதுகாப்பு படையினரை ரெயில்கள் மூலமாக அனுப்பி வைக்கலாம். அல்லது, இரவு நேரங்களில் மட்டும் பொது வாகனங்களுக்கு தடை விதித்து இந்த நெடுஞ்சாலை வழியாக அனுப்பி வைக்கலாம். எனவே, கவர்னர் இந்த தடையை திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

    இதே கருத்தை முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தியும் பிரதிபலித்துள்ளார். இது எங்கள் மாநிலம், எங்கள் மாநிலத்துக்குட்பட்ட சாலைகளை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமை இங்குள்ள மக்களுக்கு உள்ளது என அவர் தெரிவித்தார்.

    மேலும், காஷ்மீர் மக்களின் அடிப்படை சுதந்திரத்தை பறிக்கும் இந்த தடை உத்தரவால் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தடைக்கு யாரும் அடிபணிய கூடாது. மக்கள் தங்களது விருப்பம்போல் சென்று வரவேண்டும். அவசியம் ஏற்பட்டால் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று மெஹபூபா முப்தி எச்சரித்துள்ளார். #MehboobaMufti  #civilianrestriction #JammuSrinagarHighway 
    காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். #MehboobaMufti #LokSabhaelection #Anantnagseat
    ஜம்மு:

    87 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 25 இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும் இதர கட்சிகள் 6 இடங்களையும் பிடித்தன.

    அங்கு ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. எனப்படும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர். 

    முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்துவந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அழைப்பு விடுத்தார். இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.

    தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த இந்த அறிவிப்புக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அங்கு பத்து மாதங்களாக ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 6-ம் தேதிவரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் அனந்த்நாக் தொகுதியில் போட்டியிடப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று தெரிவித்துள்ளார். #MehboobaMufti #LokSabhaelection #Anantnagseat
    காஷ்மீரில் சட்டசபை கலைக்கப்பட்டது ஜனநாயக படுகொலை. எனவே கவர்னர் நியமனம் குறித்து பரிசீலிக்க மீண்டும் ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். #DMK #MKstalin #JKAssemblyDissolved
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென்று கலைத்து, அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக் அரங்கேற்றி இருக்கும் அரசியல் சட்டவிரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கவர்னருக்கு கடிதம் கொடுத்தவுடன், அவரை ஆட்சி அமைக்க அழைப்பதற்குப் பதில், இந்த ஜனநாயகப் படுகொலையை நடத்தி முடித்திருக்கிறார் அம்மாநில கவர்னர்.

    மாற்று சித்தாந்தம் உடைய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது என்று கவர்னர் ராஜ்பவனில் அமர்ந்தவாறே தன்னிச்சையாக முடிவு செய்து அந்த சட்டமன்றத்தைக் கலைத்திருப்பது, உச்சநீதிமன்றம் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பிற்கும் நேர் எதிரானது.

    கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் மதசார்பற்ற ஆட்சி அமைவதைத் தடுக்கும் பொருட்டு, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட அம்மாநில கவர்னரின் நடவடிக்கை மீது சுப்ரீம்கோர்ட்டே குட்டு வைத்த பிறகும், ஜம்மு-காஷ்மீர் மாநில கவர்னர் போன்ற பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்ட ஏஜெண்ட்டுகளான கவர்னர்கள் திருந்துவதாக இல்லை.

    பா.ஜ.க.வின் விசுவாசிகளாக இருப்பதிலேயே மனநிறைவு கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் பெரும்பான்மை இல்லாத அ.தி.மு.க. ஆட்சியை, அடுத்தடுத்து தமிழ்நாட்டில் பதவியேற்ற கவர்னர்கள் மத்திய பா.ஜ.க.வின் கட்டளை கேட்டு, இப்படித்தான் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அனுமதித்தார்கள்.

    அதன் விளைவு இன்றைக்கு ஒட்டுமொத்த மாநில நிர்வாகமும் ஒரே ஊழல் மயமாகி, ‘கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன்’ என்ற கேவலமான நிலை ஏற்பட்டு, கஜா பேரிடர் போன்ற நெருக்கடியான நேரத்தில்கூட உரிய நிவாரணம் கிடைக்காமல் மக்கள் 6 நாட்களுக்கும் மேலாக இருட்டில் இடருற்று அவதிப்படுகிறார்கள் என்றால் பொறுப்பற்ற, பெரும்பான்மையற்ற அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நீடிப்பது தான் முக்கியக் காரணம்.

    இதற்கு அரசியல் சட்டத்தை வளைத்துள்ள கவர்னர்களும் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    அதேபோன்று நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய மாநிலமாகத் திகழும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலையை ஒரு கவர்னரே உருவாக்கி இருக்கிறார் என்பது வேலியே பயிரை மேய்வதைப் போல் ஆகி இருக்கிறது.

    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க.வின் சட்டமல்லாத சட்டத்திற்குப்பணிந்து, அரசியல் சட்டத்தை ஜனநாயக அக்கறை சிறிதுமின்றி காவு கொடுக்கும் கவர்னர்களால் நாட்டில் அசாதாரணமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

    அரசியல் சட்டத்தின்படி நடக்க கவர்னர்கள் தயாராக இல்லை என்ற போக்கு நீடிப்பது நாட்டின் சட்டமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதும் அல்ல. மத்திய-மாநில உறவுகளுக்கு உகந்த நிலையும் அல்ல. ஆகவே அரசியல் சட்டத்தின்படி நீடிக்கும் கவர்னர் பதவிக்கு நியமிக்கப்படுபவர்களின் தகுதிகள் குறித்து சர்க்காரியா கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளையும் தாண்டி ஆலோசிக்க வேண்டிய தருணமும் கட்டாயமும் வந்து விட்டதாகவே கருதுகிறேன்.

    ஆகவே கவர்னர் நியமனம் மற்றும் அவர்களுக்கான தகுதிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து பரிசீலித்து வரையறை செய்ய மீண்டும் ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKstalin #JKAssemblyDissolved #SatyaPalMalik
    கவர்னர் ஆட்சிக்குள் இருக்கும் காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் ஜனநாயகம் மலரும் வகையில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது. #OmarAbdullah #MehboobaMuftijoinhands #jammuKashmir
    ஜம்மு:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் இருந்து வந்த  கருத்து மோதல் ஒருகட்டத்தில் பகிரங்கமாக வெடித்தது. 
     
    காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.

    தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்படும் இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்துவிட்டது.

    புதிய அரசு அமையும் சூழ்நிலை இல்லாததால்,  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த அனுமதிக்குமாறு ஜனாதிபதி மாளிகைக்கு கவர்னர் வோரா பரிந்துரை கடிதம் அனுப்பினார். இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காஷ்மீரில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து 20-6-2018 முதல் ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது.

    தற்போது நடைபெற்றுவரும் கவர்னர் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு மேல் நீட்டிக்க முடியாது என்னும் நிலையில் காங்கிரஸ் மற்றும் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவுடன் இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது.

    இந்த தலவலை மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் நிதி மந்திரியுமான அல்தாப் புகாரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

    தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லாவை இன்று அவரது வீட்டில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அல்தாப் புகாரி, நமக்கான அடையாளங்களான அரசியலமைப்பு சட்டத்தின் 370, 35A ஆகிய பிரிவுகள் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதால் காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு தகுதியை பாதுகாக்க இந்த முடிவை கட்சி தலைமை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். வெகு விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    காஷ்மீர் சட்டசபையில் உள்ள (2 நியமன உறுப்பினர்கள் உள்பட) 89 இடங்களில் பா.ஜ.க.வுக்கு 23 உறுப்பினர்களும், மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 உறுப்பினர்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 உறுப்பினர்களும் உள்ளனர். 

    இங்கு ஆட்சி அமைக்க 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் இந்த மூன்று கட்சிகளை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்களின் மொத்த பலம் 55 என்பது குறிப்பிடத்தக்கது. 

    தற்போது அமலில் உள்ள கவர்னர் ஆட்சி வரும் 19-12-2019 அன்றுடன் முடிவடையும் நிலையில் மீண்டும் இங்கு ஆட்சி அமைக்க உரிமைகோரி மக்கள் ஜனநாயக கட்சி தலைமையிலான இந்த புதிய கூட்டணியின் சார்பில் கவர்னருக்கு கடிதம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தால் முதல் மந்திரியாக மெகபூபா முப்தி மீண்டும் பதவி ஏற்பாரா? அல்லது, அல்தாப் புகாரி நியமிக்கப்படுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. #OmarAbdullah #MehboobaMuftijoinhands #jammuKashmir
    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது ஜம்மு காஷ்மீருக்கு துயரமான செய்தியாக உள்ளது என முன்னாள் முதல் மந்திரிமெகபூபா தெரிவித்துள்ளார். #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi #MehboobaMufti
    ஸ்ரீநகர்:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளன. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவித்தார்.



    இதற்கிடையே, அமெரிக்காவில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா இன்று ரத்து செய்தது. இம்ரான் கான் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. இதனையடுத்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது எனவெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது ஜம்மு காஷ்மீருக்கு துயரமான செய்தியாக உள்ளது என முன்னாள் முதல் மந்திரி மெகபூபா தெரிவித்துள்ளார். #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi #MehboobaMufti
    இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ள பாகிஸ்தான் எதிர்கால பிரதமர் இம்ரான் கானுடன் பிரதமர் மோடி நட்பு பாராட்ட வேண்டும் என காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார். #MehboobaMufti #ImranKhanModifriendship
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அங்கு கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் விரைவில் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

    இந்தியாவுடனான பிணக்குகளையும், காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண விரும்புவதாக இம்ரான் கான் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ள பாகிஸ்தான் எதிர்கால பிரதமர் இம்ரான் கானுடன் பிரதமர் நரேந்திர மோடி நட்பு பாராட்ட வேண்டும் என காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.

    ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற மக்கள் ஜனநாயக கட்சியின் 19-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற மெகபூபா முப்தி கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் விவகாரம் எப்போதுமே நமது நாட்டின் பிரதமர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுடன் நட்புக்கரம் நீட்டியதுடன், எல்லைப்பகுதியில் போர்நிறுத்தத்தையும் ஏற்படுத்தினார். 

    அதுதான் சிறந்த தலைமைப்பண்பு. தேர்தல்கள் வரலாம், போகலாம். ஆனால், இதைப்போன்ற தலைவர்கள் தேர்தல்களைப் பற்றி கவலைப்பட்டதில்லை.

    பாகிஸ்தானில் புதிய அரசு அமையவுள்ளது. புதிய பிரதமர் பொறுப்பேற்கவுள்ளார். அவர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்தியாவுடன் அவர் விரும்பும் நட்பை ஏற்று சாதகமான முறையில் பிரதமர் மோடி நடந்துகொள்ள வேண்டும் என நான் கேட்டுகொள்கிறேன்.

    மனிதநேயத்துக்கு உட்பட்டு, காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுகண்டு, இந்த மண்ணில் ரத்தம் சிந்தப்படுவதற்கு முடிவுகட்டும் பிரதமரின் பெயர் இந்த நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். #MehboobaMufti #ImranKhanModifriendship
    மெகபூபா முப்தியின் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. விலக்கி கொண்டது ஏன்? என்பது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா இன்று விளக்கம் அளித்துள்ளார். #AmitShah #AmitShahinjammu
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா முதன்முறையாக இன்று இம்மாநிலத்துக்கு வந்துள்ளார்.

    ஜம்மு விமான நிலையத்தில் அவருக்கு மேளதாளம் முழங்க பா.ஜ.க. தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மாநில இளைஞர் அணியினர் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுக்க விமான நிலையத்தில் இருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அமித் ஷா, ஜன சங்க நிறுவன தலைவர் சியாமா பிரசாத் மூகர்ஜியின் நினைவுநாளையொட்டி மரியாதை செலுத்தினார்.

    பின்னர், கட்சி பிரமுகர்களுடன் மாநில அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்திய அமித் ஷா, இன்று மாலை ஜம்மு நகரில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிக்ளின் குடும்ப ஆட்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த இரு குடும்ப கட்சிகள் இந்த மாநிலத்துக்கு செய்யாத பலவற்றை பா.ஜ.க. செய்துள்ளது,

    பஷ்மினா பகுதி வளர்ச்சிக்கு 40 கோடி ரூபாயும், பாம்போர் பகுதியின் வளர்ச்சிக்கு 45 கோடி ரூபாயும் நாங்கள் ஒதுக்கீடு செய்தோம். கடந்த ஆண்டில் நான் காஷ்மீருக்கு வந்தபோது இங்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. அந்த ஆட்சிக்கான ஆதரவை நாங்கள் விலக்கி கொண்டதால் இன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தங்களது ஆட்சி கவிழ்ந்தால் அரசியல் கட்சிகள் கவலை அடையும். ஆனால், பாரத் மாதா கி ஜெய் என்று கூறும் மனப்பக்குவம் பா.ஜ.க.வுக்கு மட்டுமே உண்டு. இது எங்களின் தேச பக்திக்கான அடையாளமாகும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒன்றிணைந்த சமமான வளர்ச்சி ஏற்படவில்லை என்றால் இங்கு பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் பலனில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்தும் ஜம்மு மற்றும் லடாக் விவகாரத்தில் மாநில அரசு பாரபட்சம் காட்டி வந்தது. இதனால்தான், கூட்டணி ஆட்சியில் இருந்து விலகி எதிர்கட்சியாக நின்று குரல் எழுப்ப நாங்கள் தீர்மானித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #AmitShah #AmitShahinjammu 
    ×