search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெகபூபா முப்தி
    X
    மெகபூபா முப்தி

    ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் அடைப்பு

    பாதுகாப்பு கருதி மெகபூபா முப்தியின் இல்ல நுழைவாயிலில் நடமாடும் பதுங்கு குழி வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முக்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

    மெகபூபா முப்தியின் இல்லத்தில் இன்று மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் முக்கிய கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், மெகபூபா முப்தி போலீசாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் மாவட்டம் குப்கார் சாலையில் அமைந்துள்ள மெகபூபா முப்தியின் வீட்டின் உள்ளே அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடரந்து கண்காணிக்க, முப்தியின் இல்ல நுழைவாயில் நடமாடும் பதுங்கு குழி வாகனம் நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக மெகபூபா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×