என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் அடைப்பு
Byமாலை மலர்1 Nov 2021 8:26 AM GMT (Updated: 1 Nov 2021 8:26 AM GMT)
பாதுகாப்பு கருதி மெகபூபா முப்தியின் இல்ல நுழைவாயிலில் நடமாடும் பதுங்கு குழி வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முக்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
மெகபூபா முப்தியின் இல்லத்தில் இன்று மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் முக்கிய கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், மெகபூபா முப்தி போலீசாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் மாவட்டம் குப்கார் சாலையில் அமைந்துள்ள மெகபூபா முப்தியின் வீட்டின் உள்ளே அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடரந்து கண்காணிக்க, முப்தியின் இல்ல நுழைவாயில் நடமாடும் பதுங்கு குழி வாகனம் நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக மெகபூபா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X