search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "machine"

    • மாநகராட்சிக்கு புதை சாக்கடை அடைப்பு நீக்கும் எந்திரம் வாங்கப்பட்டது
    • ரூ.42 லட்சத்தில் தானியங்கி எந்திரம்

    கரூர்:

    கரூர் மாநகராட்சியில் கரூர், இனாம் கரூர் பகுதியில் உள்ள 32 வார்டுகளில் புதை சாக்கடைகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் அடைப்பு, கழிவுகளை நீக்கம் செய்ய ரூ.42 லட்சத்தில் தானியங்கி புதை சாக்கடை அடைப்பு நீக்கும் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கரூர் மாநகராட்சி அலுவலகம், அண்ணாசிலை அருகேயுள்ள புதை சாக்கடைகள் ஆளிறங்கும் குழியில், தானியங்கி புதை சாக்கடை அடைப்பு நீக்கும் எந்திர பணியை மேயர் கவிதா தொடங்கிவைத்தார்.

    • சாலையை எந்திரம் கொண்டு துளையிட்டு தார் மற்றும் கருங்கல் ஜல்லி அடங்கிய கலவையை வெளியே எடுத்து சோதனை செய்தனர்.
    • சாலை 85 மில்லிமீட்டர் ஆழத்துக்கு தரமாக உள்ளதா மற்றும் உயரம் அகலம் ஆய்வு செய்யப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து புதுப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலை ரூ.1கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் சாலை மேம்படுத்தப்பட்ட பணியை நெடுஞ்சாலை துறையின் மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் தங்கராஜ், உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தி, உதவி பொறியாளர் சசிகலா, சாலை ஆய்வாளர் பிரபு, தொழில்நுட்ப உதவியாளர் விமல் ஆகியோர் புத்தூரில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.சாலையை எந்திரம் கொண்டு துளையிட்டு தார் மற்றும் கருங்கல் ஜல்லி அடங்கிய கலவையை வெளியே எடுத்து சோதனை செய்தனர். பின்னர் கோட்ட பொறியாளர் தங்கராஜ் கூறுகையில், சாலை 85 மில்லிமீட்டர் ஆழத்துக்கு தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. உயரம் அகலம் ஆய்வு செய்யப்பட்டது என்றார். சாலை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • மக்கும் குப்பைகளைக்கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்க மக்கும் குப்பைகளை பிரிப்பதற்கு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
    • கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உபதலை ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

    ஊட்டி:

    உபதலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுமார் 27.25 லட்சம் மதிப்பீட்டில் மக்கும், மக்காத குப்பைகளை பிரிக்க கூடாரம் அமைத்து மக்கும் குப்பைகளைக்கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்க மக்கும் குப்பைகளை பிரிப்பதற்கு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த எந்திரத்தின் சோதனை ஒட்டம் தொடங்கியது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், உதவியாளர் ஜெயந்தி, தூய்மைபாரத ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், ஊராட்சி செயலாளர் சுரேஷ்குமார், உபதலை ஊராட்சிமன்ற தலைவர் சி.பாக்கியலட்சுமி சிதம்பரம் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    அனைத்து வார்டு உறுப்பினர்களையும் தூய்மை காவலர்களையும் அழைத்து எந்திரத்தை இயக்கி, கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உபதலை ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

    • ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
    • ஏ.டி.எம். மைய அலுவலர்கள் வந்த பின்பு தான் எவ்வளவு பணம் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் தெரிய வரும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ''இந்தியா ஒன்'' என்ற தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த பணம் எடுக்கும் எந்திரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து இன்று காலை ஆலம்பட்டி கிராம மக்கள் ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற போது பணம் எடுக்கும் கருவி உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏ.டி.எம். மையத்தை ஆய்வு செய்தனர். இதில் ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி இருக்கும் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார்களா? அல்லது மது போதையில் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் உடைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த மையத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்த பின்னரே இதுகுறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். ஏ.டி.எம். மைய அலுவலர்கள் வந்த பின்பு தான் எவ்வளவு பணம் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்ட இடத்தில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் ஆலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இங்கு லாரிகளுக்கு மட்டும், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    • இந்நிலையில், கோவிந்தநாட்டுசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் டிராக்டரில் மணல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டுச்சேரி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு லாரிகளுக்கு மட்டும், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கோவிந்தநாட்டுசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் டிராக்டரில் மணல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக கடந்த 2-ம் தேதி பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, சுரங்கவியல் துறை உதவி செயற்பொறியாளர் முருகைய்யன் மற்றும் கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 6-ம் தேதி முதல் 1 யூனிட் ரூ.2200-க்கு டிராக்டரில் மணல் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கிராம மக்கள் டிராக்டர் மூலம் கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்க சென்ற போது 1 யூனிட்டிற்கு ரூ.3500 வழங்க வேண்டும் என சுரங்கவியல் துறை அதிகாரிகள் மணல் வழங்க மறுத்தனர்.

    இதனை தொடர்ந்து, கிராம மக்கள் கோவிந்தநா ட்டுச்சேரி, கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியை 20-க்கும் மேற்பட்ட டிராக்டரை கொண்டு மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த கபிஸ்தலம் உதவி இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிட ப்பட்டது.

    • 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
    • 160 மாணவிகள் படித்து வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1922ம் ஆண்டு துவங்கப்பட்டது.

    1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 250 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 160 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு வெள்ளகோவில் தன்னார்வு அமைப்பின் சார்பில் நாப்கின் எந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.பி. தனலட்சுமி, தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் பி.சிவக்குமார் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் தன்னார்வளர்கள் எஸ்.ரவிச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் நேப்கின் எரியூட்டல் எந்திரத்தை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி, நளினி. மற்றும் மேற்கு தோட்டம் கார்த்திகேயம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ். என். சாமிநாதன். பள்ளி மேலாண்மை கல்விக்குழு தலைவர் கஸ்தூரி ரம்யா, உறுப்பினர் பானுமதி உட்பட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆலையில் உள்ள எந்திரங்கள் பழமையானதால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுகிறது.
    • கரும்பு வெட்டுவதற்கு 13 மாதங்களாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    மடத்துக்குளம் :

    உடுமலையை அடுத்து கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கியது. இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 1,200 டன் கரும்பு அரவைத்திறன் கொண்டது.

    ஆனால் ஆலையில் உள்ள எந்திரங்கள் பழமையானதால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுகிறது. அதனால் தினசரி முழு அரவைத்திறனுக்கு ஆலை இயங்குவதில்லை. பெரும்பாலான நாட்களில் அரவைத்திறனுக்கு குறைவாகவே கரும்பு அரவை செய்யப்படுகிறது.

    கரும்பு அரவை அடிக்கடி நிறுத்தப்படுவதால் குறுப்பிட்ட காலத்திற்குள் கரும்பு வெட்டப்படாமல், கரும்பு வெட்டுவதற்கு 13 மாதங்களாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கரும்பை வெட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆலை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்த மிஷின் ஆப்பரேட்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் (38). தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நிர்மலுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று நிர்மலின் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு காட்டுப்புதூர் திருமண விழாவிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது நிர்மல் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் நிர்மல் வரும் வழியிலேயே இறந்து–விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவு வாயிலில் கூடுதல் தானியங்கி டிக்கெட் எந்திரம் வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    மதுரை

    மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் வைக்கும்படி பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதில் பயணிகள் அவதிப்பட்டதை தவிர்க்க தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் வைக்கப்பட்டன.

    கொரோனா பரவல் காரணமாக அந்த எந்திரங்கள் முழுமையாக செயல்படவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது.

    இதனால் ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பிரதான நுழைவுவாயிலில் 8 கவுண்டராக இருந்து வந்தது. இதில் 3 கவுண்டர்கள் மட்டுமே செயல்படுகிறது. மேலும், மேற்கு நுழைவுவாயில் முன்பதிவு பயணச்சீட்டும், முன்பதிவில்லாத பயணசீட்டும் ஒரே டிக்கெட் கவுண்டரில் வழங்கப்படுகிறது.

    இதனால் தாமதமும் பிரச்சினையும் ஏற்படுகிறது. எனவே, மேற்கு நுழைவுவாயிலில் கூடுதலாக தானியங்கி டிக்கெட் வழங்கும எந்திரம் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் ரெயில் நிலைய பிரதான நுழைவுவாயிலில் கூடுதலாக 2 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் வைக்க வேண்டும்.

    இதே போன்று பரமக்குடி ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்கவும், ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பல்லடம் அருகே பனியன் கம்பெனியில் வேலை பார்த்த தொழிலாளி எந்திரத்தில் சிக்கி பலியானார்.

    பல்லடம்:

    பல்லடம் மகாலட்சுமி நகர் 6-வது வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). இவர் பல்லடம்- திருப்பூர் இடையே உள்ள குன்னாங்கல்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் எந்திர ஆபரேட்டராக இருந்தார். நேற்று மாலை வேலை செய்தபோது எந்திரத்தில் சிக்கினார். 

    காயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். 

    இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×