search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் அரசு பள்ளிக்கு நாப்கின் எரியூட்டல் எந்திரம்
    X

    நாப்கின் எரியூட்டல் எந்திரம் தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்ட காட்சி

    வெள்ளகோவிலில் அரசு பள்ளிக்கு நாப்கின் எரியூட்டல் எந்திரம்

    • 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
    • 160 மாணவிகள் படித்து வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1922ம் ஆண்டு துவங்கப்பட்டது.

    1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 250 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 160 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு வெள்ளகோவில் தன்னார்வு அமைப்பின் சார்பில் நாப்கின் எந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.பி. தனலட்சுமி, தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் பி.சிவக்குமார் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் தன்னார்வளர்கள் எஸ்.ரவிச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் நேப்கின் எரியூட்டல் எந்திரத்தை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி, நளினி. மற்றும் மேற்கு தோட்டம் கார்த்திகேயம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ். என். சாமிநாதன். பள்ளி மேலாண்மை கல்விக்குழு தலைவர் கஸ்தூரி ரம்யா, உறுப்பினர் பானுமதி உட்பட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×