search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திரம்"

    • தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு
    • மின்வாரிய ஊழியர்களும் கவுரவிப்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் உலிகல்அரசு உயர்நிலைப் பள்ளியில் நல் உள்ளம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் உலிக்கல் சண்முகம் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    அப்போது அங்கு குழந்தைகள் தின நிகழ்ச்சி, பள்ளிக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்குதல் மற்றும் சிறப்பாக சேவை செய்த மின்துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் வரவேற்றார். அமிர்தாஜ் பவுண்டேஷன் நிறுவனர் அமிர்தராஜ் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் ஆதிவாசி கிரா மப்பகுதிகளில் சிறப் பாக சேவை செய்த மின்துறை ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து உலிகல் பேரூராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் வளம் மீட்பு பூங்கா ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் சேகர், உலிக்கல்பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமரன், நீலகிரி விடியல் அறக் கட்டளை தலைவர் லாரன்ஸ்,சோசியல் மீடியா தலைவர் சிக்கந்தர், மனிதனை நேசிப்போம் பாரூக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை நிறுவன தலைவர் சாதிக் சேனா நன்றி கூறினார்.

    • மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது சட்டப்படி குற்றமாகும்.
    • மனித கழிவுகளை அகற்ற வேண்டுமானால் தானியங்கி எந்திரம் மூலம் அகற்ற வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சார்பில் சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அறிவுடையநம்பி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர மன்ற தலைவர் துர்காராஜசேகரன் கலந்து கொண்டு பேசுகையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றக் கூடாது. இது சட்டப்படி குற்றமாகும். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளினால் அவர்களுக்கு பிணையில் வர முடியாமல் இரண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

    சீர்காழி நகர் பகுதியில் மனித கழிவுகளை அகற்ற வேண்டுமானால் தானியங்கி இயந்திரம் மூலம் அகற்ற வேண்டும். சீர்காழி நகராட்சியில் பதிவு செய்த ஒப்பந்தக்தாரர்களைக் கொண்டு தான் இயந்திரம் மூலம் மனித கழிவுகளை அகற்ற வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், டெங்கு ஒழிப்பு பணி மேற்பார்வையாளர் அலெக்ஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இப்பகுதியில் உள்ள மின்கம்பிகள் மிகவும் சேதமடைந்து தாழ்வாக செல்கிறது.
    • அறுவடை எந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் சாலையோ ரமாகவும், வயல் வெளிகள் நடுவிலும் மின்கம்பங்கள் அமைக்க ப்பட்டு வாழ்ம ங்கலம் பூலாப்பள்ளம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றும் மோட்டார் இயக்கு அறைக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள மின் கம்பிகள் சேதம டைந்து தாழ்வாக செல்கிறது.

    இதனால் விவசாயிகள் விவசாய பணிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட வாக னங்கள் கொண்டு செல்ல முடியாமல் அவதிக்கு ள்ளாகின்றனர்.

    மேலும் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அறுவடை செய்ய அறுவடை இயந்திர ங்களை கொண்டு செல்ல முடியாமல் குறுவை நெற்பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை எனவும் விவசா யிகள் விவசாய பணிகளை செய்ய சேதமடைந்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நரிக்குடி வாரச்சந்தையில் நடமாடும் ஏ.டி.எம். எந்திரம் செயல்படுகிறது.
    • சந்தைக்கு வரும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு அரசு மருத்துவமனை, வங்கிகள் மற்றும் யூனியன் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நரிக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களின் நெடுங்கால கோரிக் கையை நிறைவேற்றும் வகையில் கடந்த மாதம் 29-ந் தேதியன்று வாரந்தோறும் வியாழக்கிழமை யன்று செயல்படும் வகையில் நரிக்குடியில் புதிய வாரச்சந்தை யை தொடங்கி வைத்து நரிக்குடி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

    இதனையடுத்து கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் நரிக்குடி வாரச்சந்தையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கி சென்று பயனடைந்து வருகின்ற னர். இந்த நிலையில் நரிக்குடி வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான பண தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் ஏ.டி.எம். வாகனம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

    நேற்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து திருட முயன்றனர்.

    இன்று காலை ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்ற சிலர், எந்திரம் முன்பக்கம் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    திருட வந்த மர்ம நபர்கள் ஏதோ ஒரு பொருளை வைத்து கேமராக்களை மறைத்துள்ளனர்.

    எந்திரத்தின் முன்பக்க பேனல் உடைத்த பிறகு, பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பணம் திருடு போகவில்லை.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
    • கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஊசூர்-அணைக்கட்டு மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இன்று காலை ஊசூர் காலனியை சேர்ந்த கந்தசாமி (வயது 53) கூலி தொழிலாளி. என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி பணம் எடுக்க பலமுறை முயற்சி செய்து உள்ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று கோடாரியை எடுத்து வந்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கப் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கந்தசாமியை தடுத்தனர்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத கந்தசாமி ஏ.டி.எம். எந்திரம் முழுவதையும் உடைத்தார். எந்திரம் முழுவதும் துண்டு, துண்டாக நொறுங்கியது.

    அங்கிருந்தவர்கள் கந்தசாமியை பிடித்து வைத்துக்கொண்டு இது குறித்து உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எந்த பணமும் திருடு போகவில்லை ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராததால் கந்தசாமி ஏடிஎம் எந்திரத்தை உடைத்துள்ளார்.

    கந்தசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர். 

    • சிவகங்கையில் வாக்குப்பதிவு எந்திர அறையை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    இந்திய தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் பொது அறிவுரையின்படி, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறையினை 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து, ஆய்வு மேற்கொண்டு, காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    அதனடிப்படையில், இம்மாத காலாண்டு ஆய்வு அறிக்கையை சமர்பிப்ப தற்கு ஏதுவாக, சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பறை யினை, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்களுடன் திறக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

    இதில் தேர்தல் வட்டாட்சியர் மாணிக்க வாசகம், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் திருமாறன், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் சங்கர், சுமதி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • கமுதி அருகே அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது.
    • இந்த எந்திரங்களை கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பள்ளிகளுக்கு வழங்கினர்.

    கமுதி

    கமுதி அருகே உள்ள திம்மநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வீர மச்சான் பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, ராமசாமி பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, உடைகுளம் ஊராட்சி ஒன்றிய பள்ளி, தலைவ நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உட்பட 7 அரசு பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது. இந்த எந்திரங்களை கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பள்ளிகளுக்கு வழங்கினர். 

    • குவாரி அமைக்கப்பட்டு பொக்லைன் எந்திரங்களை கொண்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது.
    • அரசு அனுமதித்த 2 மீட்டர் ஆழம் வரைதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே மத்தியக்குடியில் விவசாய நிலங்களுக்கு மையத்தில் குவாரி அமைக்கப்பட்டு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது.

    இங்கு எடுக்கப்படும் மண் குத்தாலம்,திட்டச்சேரி வழியாக பனங்குடி பகுதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த குவாரியில் அரசு அனுமதித்ததை விட கூடுதலாக மண் எடுப்பதாகவும், இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து நாகை புள்ளியியல் துறை உதவி புவியியலாளர் சேகர், தா சில்தார் ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் மத்தியக்கு டியில் உள்ள குவாரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது உதவி புவியியலாளர் சேகர் கூறியதாவது:-

    மத்தியக்குடியில் உள்ள குவாரி மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.

    இங்கு எடுக்கப்படும் மண் 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

    அரசு அனுமதித்த 2 மீட்டர் ஆழம் வரைதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மண் எடுத்து கரையில் வைக்கப்பட்டுள்ளது.

    அதிலிருந்து பார்க்கும்போது ஆழமாக தெரிகிறது.

    எனவே அதை உடனடியாக அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு விதிகளுக்கு உட்பட்டுதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.

    விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை என்றார்.

    • தாண்டவனூரை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, மண் எடுத்து சென்றது தெரியவந்தது.
    • இதையடுத்து டிராக்டர் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியில் கட்டுமானத்திற்கு தேவைப்படும் கிராவல் மண் கடத்துவதாக சேலம் மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கனிமவளத்துறை புவியியல் உதவி அலுவலர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் தொளசம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தாண்டவனூரை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, மண் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் உதவி அலுவலர் பிரசாந்த் கொடுத்த புகாரின்பேரில் மானத்தாள் கிராமத்தை சேர்ந்த சித்துராஜ் (38), உப்பாரப்பட்டியை சேர்ந்த விஜி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.

    • தனியாா் எண்ணெய் ஆலையில் கூலி வேலை செய்து வந்தாா்.
    • பருப்பு உலர வைக்கும் கலனில் சிக்கி அவா் காயமடைந்தாா்.

    காங்கயம் :

    மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்தவா் பப்லு பிரமானிக் (வயது 21). இவா் காங்கயம் அருகே, சத்திரவலசு பகுதியில் உள்ள தனியாா் எண்ணெய் ஆலையில் கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக பருப்பு உலர வைக்கும் கலனில் சிக்கி அவா் காயமடைந்தாா்.இதைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

    • தனியார் ஏ.சி. பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
    • திடீரென ஏ.சி. எந்திரம் வெடித்து 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சேகலாவுதீன் (வயது 24) கணேஷ் (23). இவர்கள் 2 பேரும் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஏ.சி. பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் திருநாகேஸ்வரம் மேலமடவளாகம் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் ஏ.சி. எந்திரத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது திடீரென ஏ.சி. எந்திரம் வெடித்துள்ளது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×