search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leopard"

    • 2 சிறுத்தைகளும் சோளக்காட்டிற்குள் புகுந்து ஓடிவிட்டதாகவும் திருப்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
    • சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா? என்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி. இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள சென்னியப்பன் காட்டு பாறை என்ற பகுதியில் 2 சிறுத்தைகள் நாயை துரத்தி கொண்டு வந்ததாகவும், பின்னர் மோட்டார் சைக்கிள் சத்தத்தை கேட்டதும் 2 சிறுத்தைகளும் சோளக்காட்டிற்குள் புகுந்து ஓடிவிட்டதாகவும் திருப்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் வனச்சரக அலுவலர், வருவாய்த்துறையினர் மற்றும் சேவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா? என்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து சோளக்காட்டில் சில காலடித்தடங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் காட்டுத்தீ போல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் திரளாக கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு இதே பகுதியின் அருகில் உள்ள பாப்பாங்குளத்தில் ஒரு சிறுத்தை இருவரை தாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பெண் கூறிய தகவலால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை தீவிரமாக கண்காணித்து அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.
    • இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தை யொட்டியுள்ள கரடு பகுதியில் வித்தியாசமான உறுமல் சத்தம் வந்து கொண்டிருக்கவே சத்தம் வந்த இடத்திற்கு கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர்.

    அங்கு சிறுத்தை ஒன்றின் கழுத்தில் இரும்பு கம்பி இறுக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,

    இதனை அடுத்து பாலக்கோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வன விலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துபட்டது,

    சிறுத்தை மயங்கியதும் கழுத்தை இறுக்கியிருந்த இரும்பு கம்பி அகற்றபட்டு காயங்களுக்கு மருந்துகள் தடவி விட்ட பின்னர் கூண்டு ஒன்றில் சிறுத்தையை அடைத்து இரவோடு இரவாக ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    இறைச்சிக்காக மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் வைத்த இரும்பு கம்பி வலையில் எதிர்பாராத விதமாக சிறுத்தை சிக்கியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

    கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.

    வன விலங்குகளை வேட்டையாட இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேரையூர் அருகே சிறுத்தை ஒன்று உலா வந்ததாக கூறப்படுகிறது.
    • சிறுத்தை நடமாட்டம் தகவல் பொதுமக்களிடைேய பீதியை ஏற்படுத்தியது.


    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.மேலப்பட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த கிராமத்திற்குள் நேற்று இரவு வந்த சிறுத்தை ஒன்று உலா வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுத்தை அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம், சுப்பிர மணி, சுந்தரம் மற்றும் ரவி என்பவர்களின் 5 ஆடுகளை கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

    மேலும் இந்த கிராமத்தில் சிறுத்தை உலா வரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வதற்காக வர உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு மேற் கொண்டால் சிறுத்தையா? அல்லது வேறு ஏதும் மிருகமா? என தெரியவரும்.

    சிறுத்தை வந்திருந்தால் அதனை காட்டுப் பகுதிக் குள் விரட்ட வேண்டும் எனவும் அல்லது கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதி யில் விட நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் தகவல் பொதுமக்களிடைேய பீதியை ஏற்படுத்தியது.

    • கிராம மக்கள் பீதி
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளது.

    இதில் முருகன் குட்டை மற்றும் கீழ் குட்டை கிராம பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். ஆந்திர வனப்பகுதியில் நடமாடும் இந்த சிறுத்தை தமிழக எல்லைப் பகுதிக்கு தற்போது வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    கீழ் குட்டை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஊருக்குள் நுழைந்து 4 ஆடுகளை கடித்துக் குதறியது. அதேபோல் நேற்று இரவும் முருகன் குட்டை பகுதியில் நுழைந்த சிறுத்தை பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகளை கடித்து குதறியுள்ளது.

    ஆடுகளை சிறுத்தை கடித்து குதறும் காட்சிகள், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தகவல் சுற்றுவட்டார கிராம மக்களிடம் காட்டு தீப்போல் பரவியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    இரவு நேரங்களில் மக்கள் வெளியே வராமல் அச்சைமடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • இணையத்தில் வீடியோ வைரல்
    • கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

    அரவேணு,

    கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிரித்து வருகிறது.

    குறிப்பாக காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் வீடுகளை சேதப்படுத்தி, வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி செல்கிறது.

    கோத்தகிரி அருகே அரவேனு பெரியார் நகர் பகுதி உள்ளது.

    இந்த பகுதியில் ஆயிரக்க ணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு இந்த குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.

    இந்த சிறுத்தை வெகுநேரமாக குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது. பின்னர் அங்கிருந்து வன த்திற்குள் சென்று விட்டது.

    இந்த காட்சிகள் அனைத்தும், அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராக்களில் பதிவாகி இருந் தது.

    இதனை பார்த்த குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதிக்குள் சிறுத்தை நடமாடியதால் அச்சத்தில் உள்ள னர்.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, இந்த பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை வந்து சென்று ள்ளது. இனி இது தொடர்ந்து வரலாம்.

    சிறுத்தை ஊருக்குள் வந்ததால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவும் தனியாக செல்லும் பயப்படுகின்றனர்

    எனவே சிறுத்தையை கண்காணித்து ஊருக்குள் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை காணப்படுவது இது முதல் முறையல்ல.
    • கடந்த ஆண்டும் புறநகரில் சிறுத்தை நடமாட்டம் குறித்த காட்சிகள் பலமுறை பதிவாகி இருந்தன.

    பெங்களூரு:

    பெங்களூரு பொம்மனஹள்ளி அருகே கூட்லு கேட் பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுகிறது.

    இந்த நிலையில் கூட்லு கேட் பகுதியில் இருந்து நகர பகுதியான ஓசூர் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி அங்கிருந்த வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் ஒரு வீட்டின் அருகே சாலையில் சிறுத்தை ஒன்று தென்படுகிறது.

    அப்போது அந்த சாலையில் உள்ள தெருநாய்கள் விரட்டியதும் சிறுத்தை அங்கிருந்து தப்பி விடுகிறது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் கூட்லு கேட் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    இதனை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க தென்கிழக்கு பெங்களூருவில் உள்ள ஏஇசிஎஸ் லேஅவுட், சிங்கசந்திரா, குட்லு கேட் ஆகிய பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் குழு தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுத்தை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அது பெரிய பூனையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. நேற்றிரவு ஒரு குழுவை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அங்கு அனுப்பியிருந்தோம். பின்னர் மேலும் ஒரு குழு அங்கு குவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.

    இதனிடையே பரப்பன அக்ரஹாரா போலீசாரும் சிறுத்தை இருப்பதை உறுதி செய்தனர். பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை காணப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் புறநகரில் சிறுத்தை நடமாட்டம் குறித்த காட்சிகள் பலமுறை பதிவாகி இருந்தன. 

    • பந்தலூர் பகுதிகளில் ஒரு சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வருகிறது.
    • சிறுத்ைத வேட்டையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது.

    எனவே இங்கு காட்டு யானை, கரடி, காட்டு மாடு, சிறுத்தை, புலி ஆகிய வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் பந்தலூர் இந்திரா நகர், எம்.ஜி.ஆர் நகர், நத்தம், ரிச்மண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வருகிறது.

    அங்கு உள்ள வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்கிறது.

    இதற்கிடையே நத்தம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் இரவு நேரத்தில் ஒரு சிறுத்தைப்புலி புகுந்தது.

    தொடர்ந்து அங்கு உள்ள ஒரு வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடியது. பின்னர் இறைச்சியை வாயில் கவ்வி கொண்டு சென்றது.

    இந்த காட்சிகள் குடியிருப்பில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா மூலம் தெரியவந்தது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 

    • இரவு நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என ஒலிபெருக்கி வைத்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
    • சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் கரையில் சிறுத்தையின் உருமல் சத்தத்தை தச்சங்காட்டு வலசை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கேட்டுள்ளார்.

    அறச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சியில் ஓம்சக்தி நகர் உள்ளது. அறச்சலூர் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள இந்த நகரில் சண்முகசுந்தரம் என்ற விவசாயிக்கு சொந்தமான 7 மாத கன்றுக்குட்டியை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரவில் மர்மவிலங்கு ஒன்று இழுத்து சென்றுவிட்டது.

    அந்த பகுதியில் மழைபெய்த மறுநாள் நடந்த இந்த சம்பவத்தின் போது பதிந்த விலங்கின் கால்தடத்தை வைத்து வனத்துறையினர் கன்றுக்குட்டியை இழுத்து சென்ற விலங்கு எந்த வகையை சேர்ந்தது என்பதை தெரிவிக்காமல் உள்ளனர். மேலும் அந்த மர்மவிலங்கை அறிந்து கொள்ள அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்களையும் பொருத்திவிட்டு விலங்கை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.

    விலங்கின் நடமாட்டம் அந்த பகுதியில் உள்ளது என்பதை உறுதி செய்த பின்னர் அறச்சலூர் பகுதியில் அமைந்துள்ள ஊர்களான கிழக்கு தலவுமலை, ஓம்சக்திநகர், சங்கரன்காடு, வேமாண்டம்பாளையம், வெள்ளிவலசு, ஊஞ்சப்பாளையம், பழைய பாளையம், முருங்க தொழுவு, மேற்கு தலவு மலை, கத்தக்கொடிக்காடு, மூலக்கடை, மீனாட்சி புரம், வீரப்பம்பாளையம், ஊசிப்பாளையம், நடுப்பாளையம் மற்றும் மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறும், இரவு நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என ஒலிபெருக்கி வைத்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    கன்றுக்குட்டியை இழுத்துச்சென்ற விலங்கு எது? என்பது குறித்து வனத்துறையினர் இன்னும் அறிவிக்காத நிலையில் நேற்று அந்த விலங்கை பிடிக்க கூடுதலாக ஒரு கூண்டும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களால் மக்கள் மிகுந்த பீதிக்குள்ளாகியுள்ளனர்.

    அறச்சலூர் பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவரின் தோட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளதாகவும், அந்த புகைப்படத்தில் உள்ள பதிவு தேதிகள் 18 மற்றும் 19 என்றும் அத்துடன் புகைப்படம் எடுக்கப்பட்ட நேரமும் பதிவாகியிருந்ததால் மக்கள் வெளியான தகவலால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    இதனால் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் கரும்பு பயிர்களுக்கான நீர்பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகள் உயிர்பயம் காரணமாக நின்றுபோயுள்ளன.

    இந்நிலையில் அறச்சலூரில் இருந்து கொடுமுடி நோக்கி பிரிந்து செல்லும் கீழ்பவானி கிளை சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் கரையில் சிறுத்தையின் உருமல் சத்தத்தை தச்சங்காட்டு வலசை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கேட்டுள்ளார்.

    இதனை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையை தேடி கொண்டுள்ளனர் என்ற தகவல் வாட்ஸ் அப்பில் வைரலானதை அடுத்து பீதி அறச்சலூரை கடந்து சுற்றுப்புற பகுதிகளையும் ஆட்கொண்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தகவல் அறிந்ததும் வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த 7-ந் தேதி சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றதாக அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் திருப்பூர் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று தெரிவித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் காலடித்தடங்களை ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் இல்லை என்றும் தெளிவாக தெரிவித்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பல்லடம்-தாராபுரம் சாலையில் உள்ள துத்தாரி பாளையத்தில் வித்தியாசமான உருவம் கொண்ட மிருகம் ஒன்று சாலையை கடந்து சென்றதாக ஒருவர் தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற வனத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்ட போது அங்கிருந்த கால் தட பதிவுகள் நாயின் கால் தட பதிவுகளை விட சற்று பெரியதாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிறுத்தையின் கால் தடப்பதிவுகள் போல் அல்லாமல் இருந்தது.

    சிறுத்தையின் கால் தட பதிவுகளில் நகம் பதிவாகி இருக்கும். ஆனால் இந்த கால் தட பதிவுகளில் அப்படி இல்லை என்று தெரிவித்தனர். இந்நிலையில் பொதுமக்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டம் குறித்த பீதியை போக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்நிலையில் பல்லடம் அருகே அலகுமலை பகுதியில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று புகுந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். விவசாய தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை கடித்து கொல்ல முயற்சித்ததாகவும், அப்போது அருகே இருந்த விவசாயிகளின் அலறல் சத்தம் கேட்டு கன்றுக்குட்டியை விட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கன்றுகுட்டி மீது சிறுத்தை விரலால் கீறியதற்கான தடயங்கள் இருந்தது. அதனைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதனால் பல்லடம் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். மேலும் சிறுத்தையை பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லடம் அருகே மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அவ்வப்போது வளர்ப்பு பிராணிகளையும் வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
    • வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி உலா வருகிறது. அவ்வப்போது வளர்ப்பு பிராணிகளையும் வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில் குன்னூர் டென்ட்ஹில் பகுதிக்கு ஒரு சிறுத்தை வந்து அங்கு திரிந்த பூனையை வேட்டையாடி சென்றது. தொடர்ந்து பாய்ஸ் கம்பெனி, அருவங்காடு கேட்டில் பவுண்ட், மவுண்ட் பிளசன்ட் ஆகிய பகுதிகளில் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி கவ்வி சென்றது.

    இந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. குன்னூர் பகுதியில் கடந்த ஒருவாரமாக சிறுத்தைகள் நடமாடடம் குடியிருப்புகள் பகுதிகளில் அதிகமாக காணபடுவதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வனத்துறை யினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி னார்.
    • வண்டி ப்பெரியாறு, மூங்கிலாறு உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்களில் 3 இடங்களில் வனத்துறையி னர் கூண்டு வைத்தனர்.

    கூடலூர்:

    தமிழக - கேரள எல்லை ப்பகுதியான வண்டிப்பெரி யாறு, மூங்கிலாறு அருகே வனப்பகுதியையொட்டி தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு எஸ்டேட் மற்றும் குடியிருப்புகளில் வளர்க்கப்பட்டு வரும் பசு மற்றும் மாடுகளை கடந்த சில நாட்களாக சிறுத்தை கொன்று வந்தது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையிரிடம் புகார் அளித்தனர். தேக்கடி ரேஞ்சர் அனில்குமார் தலைமையில் வனத்துறை யினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி னார். இதில் சிறுத்தை வந்து செல்வது உறுதி செய்ய ப்பட்டது.

    இதனையடுத்து வண்டி ப்பெரியாறு, மூங்கிலாறு உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்களில் 3 இடங்களில் வனத்துறையி னர் கூண்டு வைத்தனர். சிறுத்தை சிக்கும் வரை சுழற்சி முறையில் வனத்து றையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக வும் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி இதே போல் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட சிறுத்தையை பெரியாறு புலிகள் சரணாலயத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதி க்குள் வனத்துறையினர் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறுத்தைகளை விஜயவாடா உயிரியல் பூங்கா மற்றும் வன சரணாலயத்தில் வனத்துறையினர்விட்டனர்.
    • பக்தர்களின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக அப்பகுதியில் சுற்றி தெரியும் சிறுத்தையை பிடிக்க வேண்டும்.

    திருப்பதி:

    திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் 6 வயது சிறுமியை சிறுத்தை கடித்து கொன்றது.

    இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறையினர் சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க நடைபாதை அருகே இரும்பு கூண்டுகளை வைத்தனர். இதில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கின.

    மேலும் 200 கேமராக்களை பொருத்தி சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கம்பு வழங்கப்பட்டது.

    கூண்டில் சிக்கிய சிறுத்தைகளை வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் அடைத்தனர். சிறுமியை கொன்ற சிறுத்தை எது என்பதை அறிய சிறுத்தைகளின் முடி ரத்தம் உள்ளிட்டவைகள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் 2 சிறுத்தைகளின் டி என் ஏ பரிசோதனை அறிக்கை வந்தது. அறிக்கையில் 2 சிறுத்தைகளும் சிறுமையை கொல்லவில்லை என தெரியவந்தது.

    இதையடுத்து சிறுத்தைகளை விஜயவாடா உயிரியல் பூங்கா மற்றும் வன சரணாலயத்தில் வனத்துறையினர் விட்டனர்.

    மற்ற சிறுத்தைகளின் டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை விரைவில் வர உள்ளது. அதற்குப் பிறகு சிறுமியை கொன்ற சிறுத்தை எது என தெரியவரும்.

    இந்நிலையில் நேற்று இரவு மலைப்பாதையின் 15-வது திருப்பத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனை வாகனங்களில் சென்ற பக்தர்கள் பார்த்தனர்.

    இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

    சேஷாசல வனப்பகுதியில் உள்ள ஒரு சில சிறுத்தைகள் திருப்பதி மலைபாதை அருகே வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

    தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    பக்தர்களின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக அப்பகுதியில் சுற்றி தெரியும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பக்தர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×