search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தைப்புலி"

    • வயநாடு பகுதியில் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
    • வனப்பகுதிக்குள் சிறுத்தை சென்றதை சிலர் பார்த்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவசாயி ஒருவரை புலி தாக்கி கொன்றது. அந்த புலி 10 நாட்களுக்கு பிறகு சிக்கியது. அந்த பரபரப்பு அடங்கும் முன்பு அங்கு மேலும் ஒரு புலி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

    இந்நிலையில் திருவனந்தபுரம் நகரின் முக்கிய சுற்றுலாமையமான பொன்முடியில் சிறுத்தை புகுந்துள்ளது. அங்குள்ள போலீஸ் நிலையம் அருகிலேயே நடமாட்டம் இருந்துள்ளது. அங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சிறுத்தை சென்றதை சிலர் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர்.

    ஆனால் அப்போது சிறுத்தைப்புலி தென்படவில்லை. வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தைப்புலி மீண்டும் ஊருக்குள் வரலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டிருக்கிறது. அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோழி கூண்டுக்கள் சிறுத்தைப்புலி ஒன்று படுத்துக்கிடந்தது.
    • கோழி கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியிருப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. தெற்கு வயநாடு வனப்பகுதிக்கு உட்பட் கிராமங்களில் கால்நடைகளை வன விலங்குள் தாக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றது.

    இதனால் அங்குள்ள பல கிராமங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வயநாடு கல்பெட்டா பகுதியில் கோழிகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் சிறுத்தைப்புலி ஒன்று தானாகவே வந்து சிக்கிக்கொண்டது.

    தெற்கு வயநாடு வனப்பிரிவுக்கு உட்பட்ட கல்பெட்டா வடுவாஞ்சல் அருகே உள்ள கடசேரியை சேர்ந்த விவசாயி ஹம்சா. இவர் தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். அவற்றை அடைப்பதற்கு பெரிய கூண்டு வைத்திருக்கிறார். அனைத்து கோழிகளையும் இரவில் அந்த கூண்டுக்குள் தான் அடைத்து வைப்பார்.

    சம்பவத்தன்றும் அதே போன்று கோழிகள் அனைத்தையும் கூண்டுக்குள் அடைத்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் திடீரென கோழிகள் அனைத்தும் இறக்கைகளை படபடவென அடித்து பயத்தில் சத்தம் கேட்டது. இதனால் ஹம்சா மற்றும் அவரது பக்கத்து வீட்டினர் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது கோழி கூண்டுக்கள் சிறுத்தைப்புலி ஒன்று படுத்துக்கிடந்தது. அதனைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த சிறுத்தையால் எழுந்திருக்கவும் முடியவில்லை. சத்தமிடவும் முடியவில்லை. மிகவும் சோர்வுடன் காணப் பட்டது.

    கோழிகளை வேட்டையாடுவதற்காக கூண்டுக்குள் புகுந்த அந்த சிறுத்தையால் கூண்டை விட்டு வெளியே வரக்கூட முடியவில்லை. கோழி கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியிருப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று கூண்டுக்குள் இருந்த சிறுத்தையை பிடித்தனர்.

    பின்பு மற்றொரு கூண்டின் மூலம் அதனை அங்கிருந்து கொண்டு சென்றனர். ஊருக்குள் சிறுத்தை வந்தது குறித்து தெற்கு வயநாடு வன அதிகாரி ஷஜ்னா கூறியதாவது:-

    உணவைத்தேடி சிறுத்தை ஊருக்குள் வந்திருக்கலாம். ஆனால் அந்த சிறுத்தை கோழிகளை வேட்டையாடவில்லை. அந்த சிறுத்தை உணவு கிடைக்காமல் வெகுநாட்களாக இருந்திருக்கலாம். இதனால் உணவு தேடி ஊருக்குள் வந்த சிறுத்தை, கோழிகளை வேட்டையாடி சாப்பிட கூண்டுக்குள் சென்றிருக்கிறது.

    ஆனால் அதன்பிறகு அந்த சிறுத்தையால் எதுவும் செய்ய முடியவில்லை. பல நாட்கள் பட்டினியால் இருந்ததால் அதன் உடல் வலுவிழந்ததால், வேட்டையாட முடியவில்லை. மேலும் கூண்டுக்குள் இருந்து தப்பிச் செல்லக்கூட அதனால் முடியவில்லை. இதனால் கூண்டுக்குள்ளேயே அது சுருண்டு படுத்துக் கொண்டது. அந்த சிறுத்தைக்கு உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது. அதற்கு சிகிச்சை முடிந்ததும் வனத்திற்குள் விடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக சிறுத்தைகள் கோழிகளை வேட்டையாடி சாப்பிடுவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சிறுத்தை பல நாட்களாக பட்டினியாக கிடந்ததால் வேறு வழியின்றி கோழிகளை வேட்டையாட முயன்று கூண்டுக்குள் சிக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவ்வப்போது வளர்ப்பு பிராணிகளையும் வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
    • வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி உலா வருகிறது. அவ்வப்போது வளர்ப்பு பிராணிகளையும் வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில் குன்னூர் டென்ட்ஹில் பகுதிக்கு ஒரு சிறுத்தை வந்து அங்கு திரிந்த பூனையை வேட்டையாடி சென்றது. தொடர்ந்து பாய்ஸ் கம்பெனி, அருவங்காடு கேட்டில் பவுண்ட், மவுண்ட் பிளசன்ட் ஆகிய பகுதிகளில் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி கவ்வி சென்றது.

    இந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. குன்னூர் பகுதியில் கடந்த ஒருவாரமாக சிறுத்தைகள் நடமாடடம் குடியிருப்புகள் பகுதிகளில் அதிகமாக காணபடுவதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கிராம பகுதியில் சிறுத்தைப்புலியின் கால்தடம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று பார்வையிட்டனர்.
    • ஆடுகளை கொன்ற மர்மவிலங்கு குறித்து அறிய அப்பகுதியை சுற்றிலும் 5 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

    திருவள்ளூர்:

    பூண்டி பகுதியில் உள்ள காப்புக்காடு அருகே மோவூர் கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சேர்ந்த ரஜினி என்பவரின் 8 ஆடுகளை மர்ம விலங்கு கடித்தில் இறந்து போனது.

    அனைத்து ஆடுகளின் கழுத்திலும் விலங்கின் பல் தடம் பதிந்து இருந்தால் தாக்கியது சிறுத்தைப்புலியாக இருக்கலாம் என்ற தகவல் பரவியது. இதனால் மோவூர் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். கிராமத்திற்கும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கும் குறைந்த தூரமே உள்ளதால் சிறுத்தைப்புலி வந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    ஆனால் இதுவரை சிறுத்தை நடமாட்டம் அப்பகுதியில் இல்லை. எனினும் வன அலுவலர் விஜயசாரதி தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மோவூர் கிராமத்திற்கு சென்று இறந்து போன ஆடுகளை ஆய்வு செய்தனர். கிராம பகுதியில் சிறுத்தைப்புலியின் கால்தடம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று பார்வையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆடுகளை கொன்ற மர்மவிலங்கு குறித்து அறிய அப்பகுதியை சுற்றிலும் 5 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். அதில் சிறுத்தைப்புலி அல்லது வேறு ஏதேனும் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். பூண்டி காப்புக்காடு பகுதியிலும் ரோந்து சென்று மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து பார்வையிட்டனர்.

    ஒரே நாளில் 8 ஆடுகளை மர்மவிலங்கு கடித்து கொன்றதால் மோவூர் கிராம மக்கள் சிறுத்தைப்புலி பீதியில் உள்ளனர்.

    • இறந்த ஆடுகளின் கழுத்து பகுதியில் மர்ம விலங்கு கடித்து இருந்தது.
    • சிறுத்தைப்புலி நடமாட்டத்துக்கு வனத்துறையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    பூண்டி ஏரிக்கரை அருகே காட்டுப்பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள மோவூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் வீடுகளில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு கிராமத்தைச் சேர்ந்த ரஜினி என்வரின் 8 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றுவிட்டு சென்று விட்டது. இன்று காலை ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு ரஜினி அதிர்ச்சி அடைந்தார்.

    இறந்த ஆடுகளின் கழுத்து பகுதியில் மர்ம விலங்கு கடித்து இருந்தது. எனவே ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றுவிட்டு சென்றதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது. தகவல் அறிந்ததும் வன அலுவலர் விஜயசாரதி தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மற்றும் பீமன் தோப்பு கால்நடை மருத்துவர் சரவணகுமார், கால்நடை ஆய்வாளர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளின் உடல்களை ஆய்வு செய்தனர்.

    சிறுத்தைப்புலி நடமாட்டத்துக்கு வனத்துறையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். எனினும் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து வனத்துறை ஊழியர்கள் காட்டுப்பகுதிக்குள் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சிறுத்தைப்புலி கால் தடம் பதிவாகி உள்ளதா என்று பார்வையிட்டு வருகின்றனர். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனினும் மோவூர் கிராம மக்கள் சிறுத்தை புலி பீதியால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • பறவைகள் சிதறி பறப்பதையும் அங்கு சுமார் 2 அடி உயரமுள்ள 2 சிறுத்தை புலி குட்டிகள் செல்வதையும் கண்டு அதனை செல்போனில் வீடியோ எடுத்தேன்.
    • தரையில் மர்ம விலங்கின் கால் தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலூர்:

    மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அருகே தேவன்குளம் உள்ளது. இங்கு எம்.மலம்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் நேற்று காலை 7 மணியளவில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பறவைகள் திடீரென கூச்சலிட்டு பறப்பதையும் அதன் அருகே 2 சிறுத்தை புலிகள் ஓடியதை பார்த்து அதனை அவர் செல்போனில் படம் எடுத்துள்ளார். அந்த 2 சிறுத்தைப்புலிகளும் அருகிலுள்ள வாழைத்தோப்புக்குள் சென்று மறைந்துள்ளன. இந்த வீடியோ மேலூர் பகுதியில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை வன இலாகா அதிகாரிகள் வனவர் மூர்த்தி மற்றும் வனக்காப்பாளர் குருசுந்தரி ஆகியோர் தேவன்குளம் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது தரையில் மர்ம விலங்கின் கால் தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சிறுத்தைப்புலிகளை பார்த்த ரமேஷ் கூறியதாவது:-

    தினமும் நடை பயிற்சி சென்று தேவன்குளத்தில் குளிப்பது பழக்கம். அவ்வாறு சென்றபோது அங்கு பறவைகள் சிதறி பறப்பதையும் அங்கு சுமார் 2 அடி உயரமுள்ள 2 சிறுத்தை புலி குட்டிகள் செல்வதையும் கண்டு அதனை செல்போனில் வீடியோ எடுத்தேன். வன இலாகாவினர் வந்து அங்கிருந்த கால் தடங்களை ஆய்வு செய்ததில் ஒரு இடத்தில் புலியின் கால் தடத்தை போன்றதை கண்டுபிடித்தனர். ஆனால் அவர்கள் வேறு ஏதாவது வன விலங்காக இருக்கலாம் என்றும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் புலிகள் இல்லை என்று கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சென்றுவிட்டனர். இப்பகுதியில் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் நடப்பதற்குள் அரசு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.. இந்த சம்பவத்தினால் மேலூரில் உள்ள எம்.மலம்பட்டி மக்கள் இரவில் வெளியே செல்லாமல் அச்சத்துடன் வீடுகளில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×