search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூண்டி அருகே சிறுத்தைப்புலி நடமாட்டமா?: காட்டுப்பகுதியில் கேமரா பொருத்தி கண்காணிப்பு
    X

    பூண்டி அருகே சிறுத்தைப்புலி நடமாட்டமா?: காட்டுப்பகுதியில் கேமரா பொருத்தி கண்காணிப்பு

    • கிராம பகுதியில் சிறுத்தைப்புலியின் கால்தடம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று பார்வையிட்டனர்.
    • ஆடுகளை கொன்ற மர்மவிலங்கு குறித்து அறிய அப்பகுதியை சுற்றிலும் 5 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

    திருவள்ளூர்:

    பூண்டி பகுதியில் உள்ள காப்புக்காடு அருகே மோவூர் கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சேர்ந்த ரஜினி என்பவரின் 8 ஆடுகளை மர்ம விலங்கு கடித்தில் இறந்து போனது.

    அனைத்து ஆடுகளின் கழுத்திலும் விலங்கின் பல் தடம் பதிந்து இருந்தால் தாக்கியது சிறுத்தைப்புலியாக இருக்கலாம் என்ற தகவல் பரவியது. இதனால் மோவூர் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். கிராமத்திற்கும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கும் குறைந்த தூரமே உள்ளதால் சிறுத்தைப்புலி வந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    ஆனால் இதுவரை சிறுத்தை நடமாட்டம் அப்பகுதியில் இல்லை. எனினும் வன அலுவலர் விஜயசாரதி தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மோவூர் கிராமத்திற்கு சென்று இறந்து போன ஆடுகளை ஆய்வு செய்தனர். கிராம பகுதியில் சிறுத்தைப்புலியின் கால்தடம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று பார்வையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆடுகளை கொன்ற மர்மவிலங்கு குறித்து அறிய அப்பகுதியை சுற்றிலும் 5 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். அதில் சிறுத்தைப்புலி அல்லது வேறு ஏதேனும் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். பூண்டி காப்புக்காடு பகுதியிலும் ரோந்து சென்று மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து பார்வையிட்டனர்.

    ஒரே நாளில் 8 ஆடுகளை மர்மவிலங்கு கடித்து கொன்றதால் மோவூர் கிராம மக்கள் சிறுத்தைப்புலி பீதியில் உள்ளனர்.

    Next Story
    ×