search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Land"

    • பெரியம்மாபாளையத்தில் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது
    • இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெரியம்மாபாளையம கிராமத்தில் அமைந்துள்ள 0.88 சென்ட் நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் செல்வராஜூக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் தேவி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெரியம்மாபாளையம் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ரூ.25 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • உழவு செய்து நிலத்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
    • ஆழமாக உழுவதால் களைகள் வேரோடு வெளியேற்றப் படுகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெய்த கோடை மழையால் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, சாயல்குடி, அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோடை உழவு செய்து வருகின்றனர்.

    கோடைகாலத்தில் வயல்களில் உழவு செய்வ தன் மூலம் ஆழமாகவும், வயலை சாய்வு மற்றும் குறுக்காக உழுவதால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண்கட்டிகள் உடைந்து மண் அரிப்பு தடுக்கப்பட்டு சத்துக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மழைகாலத்தில் பெய்யும் மழைநீர் வடிந்து வீணாகாமல் மண்ணுக்குள் செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடைமழை பெய்ததால் கோடை உழவு செய்ய வாய்ப்பிருக்கிறது. கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் அதிக ரிப்பதுடன் மண்ணின் வளமும் அதிகரிக்கிறது.இதனால் பருவகாலத்தில் ஒரளவு மழை பெய்தாலும் நெல் உள்பட அனைத்து பயிர்களும் பயன்தரும் என்றார்.மேலும் இதுகுறித்து வேளாண்மை துறையினர் கூறியதாவது:-

    கோடைகாலத்தில் நிலத்தை உழுவதால் மண்ணின் காற்றோட்டம் அதிகரிக்கிறது. களைக்கொல்லி' பூச்சிக்கொல்லி, எச்சம் மற்றும் முந்தைய பயிர்களின் வேர், களைகள் மூலம் வெளிப்படும் தீங்கான ரசாயனம் விரைவாக சிதைவ டைகிறது. மண்ணின் மூலம் பரவும் பூச்சி, முட்டை, புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிந்து விடுகிறது. அடுத்தடுத்த பயிர் சாகுபடியில் பூச்சி களால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது. பூச்சிக் கொல்லி களை பயன்ப டுத்துவதும் குறைவதால் விவசாயிகளுக்கு செலவும் குறைகிறது. கோடை உழவின் காரண மாக தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா வித்துக்கள் மற்றும் பூஞ்சை நுண்ணு யிரிகள் இறக்கின்றன. கோடை உழவு, பயிர் சுழற்சி ஆகியவை புழுக்களை கட்டுப்படுத்தும். ஆழமாக உழுவதால் களைகள் வேரோடு வெளியேற்றப் படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    • கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.
    • அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோயில் பின்புறம் உள்ள 10 சென்ட் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் செட்டியார் மனைவி வள்ளியம்மாள் கோவில் கட்டளை பயன்பாட்டுக்காக 1963ல் தானமாக வழங்கியுள்ளார்.

    அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர். அதன்பின் அவர்களை அப்புறப்படுத்தி தனியார் ஆக்கிரமித்தனர். பின் பயன்பாடு இன்றி புதர்மண்டிய நிலமாக இருந்து வந்தது. கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவில் நிர்வாகம் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு கோவில் சுவாதீனத்துக்கு நிலத்தை எடுத்துள்ளது.

    • அனல்மின் திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டது
    • 81 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

    இதில் 81 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் ராஜமூர்த்தி (நிலம்எடுப்பு) கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறினார்.

    இதில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா முன்னிலையில் ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (நிலம்எடுப்பு) ராஜமூர்த்தி, அரசு வழக்கறிஞர்கள் மோகன் ராஜ், செந்தில்குமார், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


    • காட்டாம்பூர் கண்மாய் நடுவே நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைக்க முயற்சி செய்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • கிராம மக்கள் ஆக்கிரமிப்பு செய்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் நுராம்பட்டி ஏந்தல் உள்ளது. இந்த கண்மாயின் மூலம் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்கள் பாசனம் பெற்று விவசாயம் நடந்து வருகிறது.

    இந்த கண்மாயின் அருகில் தனி நபர் ஒருவரால் வீட்டுமனை போடப்பட்டு உள்ளது. அதற்கு பாதை இல்லாத காரணத்தினால் கண்மாயின் நடுவே அவர் சாலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் மற்றும் வருவாய் துறையினரிடமும் புகார் செய்தனர்.

    அதன்பேரில் சேர்மன்சண்முக வடிவேல், மாவட்ட கவுன்சிலர் ரவி மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு செய்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    இதைத்தொடர்ந்து சேர்மன் சண்முக வடிவேல் சாலை அமைக்கும் பணியை நிறுத்த அரசு அலுவலர்களின் மூலமாக நடவடிக்கை எடுத்தார். இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டது.

    திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேசன் கண்மாயில் ஆய்வு செய்து கண்மாய் நடுவே சாலை அமைக்க முயன்ற தனி நபர் மீது புகார் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்மாயில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாதை அமைக்கப்பட்டதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.

    • அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது. இதனால் விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இரும்புப்பாலம் அடுத்த செங்கோடம்பாளையம் செல்லும் வழியில் ஏராளமான ஏக்கரில் மானாவரி சாகுபடி செய்யும் விவசாய நிலங்கள் உள்ளன.

    இதில் மக்காசோளம், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப் பட்டுள்ளன. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது நிலத்தில், அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது.

    இந்த விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அருகில் இருந்த விவசாய நிலங்களுக்கும் பரவியது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்அடிப்படையில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    இந்த திடீர் தீவிபத்திற்கு காரணம் மர்ம நபர்களா? அல்லது கடுமையான வெயிலின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கோவில் மனை, மடம், நிலங்களில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர்.
    • அறநிலையத்துறைக்கு பகுதிக்கு பதிலாக வாடகை செலுத்த வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் கோவில் மனை, மடம், நிலங்களில் குடியிருப்போர் சங்க கூட்டம் நாகை செல்வராஜ் எம்.பி. தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சந்திரராமன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, நகர செயலாளர் மார்க்ஸ், வி.தொ.ச ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், கோவில் மனை, மடம், நிலங்களில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர்.

    தற்போது அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் பகுதி என்பதை மாற்றி வாடகை என்ற பெயரில் மிக அதிகமான தொகை நிர்ணயம் செய்து, அறநிலையத்துறைக்கு பகுதிக்கு பதிலாக வாடகை செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செய்து வருகிறார்கள்.

    அவ்வாறு நிர்ணயம் செய்த தொகையை கட்ட தவறினால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீடு கட்ட மற்றும் எந்த சலுகைகளும் கிடைக்காது என்றும், இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சொல்லி வருவதை கைவிட வேண்டும். எனவே, தமிழக முதல்-அமைச்சரும், அறநிலையத்துறை அமைச்சரும் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யோகநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிலூர் ரவி, அமைப்பின் பொறுப்பாளர்கள் ஆடிட்டர் கருணாநிதி, மங்கலூர் பிரபாகரன், முஜிபூர் ரஹ்மான், ரெத்தினம், மருதுராஜேந்திரன், திருமலை உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கோவில் மனை மடம் நிலங்களில் குடியிருக்கும் சுமார் 300-க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நிர்வாகி அன்பன் நன்றி கூறினார்.

    • ஆக்கிரமிப்பில் இருந்த 1.60 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டன.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு ஒருங்கிணைந்த வளாகம் கட்டும் பணி தொடங்கப்படும்

    சோழவந்தான்

    வாடிப்பட்டி யூனியனுக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம், சேவை மையம் என ஒருங்கி ணைந்த வளாகம் கட்ட கடந்தாண்டு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்காக காடுபட்டி கிராமத்தில் சர்வே எண் 566/37 மற்றும் 293/2-ல் அமைந்துள்ள அரசு நத்தம் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளதால் வருவாய் துறை மூலம் சர்வே பணி செய்து கொடுக்க காடுபட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாடிப்பட்டி தாலுகா அலுவலத்தில் உள்ள வட்ட அளவையர் பிரிவில் சர்வே பணிக்குறிய தொகையான ரூ.1600-ஐ இ-சலான் மூலம் கடந்தாண்டு நவம்பர் 14-ல் செலுத்தப்பட்டது.

    ஆனால் இதுவரை அரசு நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெறா மல் 4 மாதங்களாக சர்வே பிரிவினர் இழுத்தடிப்பு செய்து வந்தனர். இந்த நிலையில் தென்கரை குறுவட்ட அளவையர் சந்திரா தலைமையில் காடுபட்டி அரசு நத்தம் சர்வே எண். 566/37 மற்றும் வடகாட்டுபட்டி மந்தைகளம் சர்வே எண் 293/2-ல் உள்ள 1 ஏக்கர் 60 செண்ட் நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் ஊன்றி நிலத்தை மீட்டனர்.

    அப்போது ஊராட்சி தலைவர் ஆனந்தன், யூனியன் பொறியாளர் பூம்பாண்டி, மேற்பார்வை யாளர் கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் ஆகியோர் உடனி ருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், முத்துபாண்டி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு ஒருங்கி ணைந்த வளாகம் கட்டும் பணி தொடங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • சேலம் கொண்டலாம்–பட்டி அருகே நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் விவசாய நிலத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மேலும் நிலத்தை காலி செய்ய மாட்டோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்–பட்டி அருகே உள்ள மேட்டுவெள்ளாளர் தெரு பகுதியில் ஜெயராமன் என்பவர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தின் மீது ஏற்கனவே தனியார் வங்கியில் தொழில் கடன் பெறப்பட்டுள்ளது.

    கடனுக்கான வட்டியை மாதம்தோறும் செலுத்தி வந்த நிலையில் திடீரென இந்த இடத்தை வேறு நபருக்கு வங்கி மூலம் எழுதிக் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் நிலத்தை காலி செய்யும்படியும் கடந்த 2 மாதங்களாக ஜெயராமை வங்கி நிர்வாகத்தினர் வலியுறுத்தினர்.

    இதனிடையே இன்று வங்கி ஊழியர்கள் போலீசாருடன் வந்து நிலத்தை காலி செய்யுமாறு கூறினர். இதனால் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் விவசாய நிலத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் நிலத்தை காலி செய்ய மாட்டோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கி சார்பில் இருந்து இடத்தை சுற்றி வேலி அமைப்பதற்காக 50-க்கும் மேற்பட்டோர் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இடத்தை விட்டு தர மாட்டோம் மீறி, நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • நாமக்கல் 50 சதவீத மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
    • 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்ப–தாவது:-

    நாமக்கல் 50 சதவீத மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    நடப்பாண்டில் மானிய கோரிக்–கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடையும் விதமாக சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.

    இந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு 200 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த விவசாயத்தொழில் செய்பவர்களில் நில உடமைகளை அதிகரிக்கும் பொருட்டும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயத்தில் வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    முத்திரை தாள் கட்டணத்தில் விலக்கு இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நிலம் வாங்க உத்தேசியுள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

    வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய தாட்கோ இணையதளமான www.tahdco.com-ல் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய இயலவில்லை.
    • நில உரிமையாளர்கள், குடியிருப்போர், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் உள்ள நிலங்களை வக்பு வாரிய நிலம் என கூறி ஊத்துக்குளி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய உள்ள தடையை நீக்க கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊத்துக்குளி சார்பதிவாளரிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வடுகபாளையம் கிராமத்தில் ராமமூர்த்தி நகர், கே.கே.நகர், செந்தில் நகர், சரசுவதி நகர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய இயலவில்லை. இந்த பிரச்சினையால் நில உரிமையாளர்கள், குடியிருப்போர், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்கான தடையை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பாளை கே.டி.சி.நகர் பிருந்தாவன்நகரை சேர்ந்தவர் ஜுடி. இவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது.
    • இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 24 சென்ட் நிலத்தினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    பாளை கே.டி.சி.நகர் பிருந்தாவன்நகரை சேர்ந்தவர் ஜுடி. இவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது.

    எஸ்.பி.யிடம் மனு

    இந்த நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து வேறொருவருக்கு இடம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ஜுடிக்கு தெரியவரவே, அவர் தனது நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு அளித்தார்.

    இதுதொடர்பாக மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நிலமானது போலி ஆவணம் மூலம் வேறு நபருக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.

    போலி ஆவணம்

    இதனையடுத்து மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து நடத்தி வரும் நில அபகரிப்பு தொடர்பான முகாமில் நில உரிமையாளர் ஜுடி மற்றும் எதிர் மனுதாரர்கள் ஆகியோர் முகாமிற்கு அழைக்கப்பட்டு, துணை கலெக்டர் தமிழரசி , தாசில்தார் பகவதிபெருமாள் ஆகியோர் முயற்சியால் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அது போலி ஆவணம் என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஜுடியிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 24 சென்ட் நிலத்தினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மற்றொரு சம்பவம்

    நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் வேப்பங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு தளபதி சமுத்திரம் பகுதியில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஒலி ஆவணம் மூலம் மற்றொரு நபர் பத்திர பதிவு செய்திருப்பதை அறிந்த சுப்பையா தனது நிலத்தை மீட்டு தருமாறு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி புகார் அளித்து இருந்தார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் டி.எஸ்.பி. ஜெயபால் பர்ணபாஸ் மேற்பார்வையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மீரால் பானு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை நில உரிமையாளர் சுப்பையாவிடம் வழங்கினர். 

    ×