search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாங்க"

    • நாமக்கல் 50 சதவீத மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
    • 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்ப–தாவது:-

    நாமக்கல் 50 சதவீத மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    நடப்பாண்டில் மானிய கோரிக்–கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடையும் விதமாக சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.

    இந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு 200 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த விவசாயத்தொழில் செய்பவர்களில் நில உடமைகளை அதிகரிக்கும் பொருட்டும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயத்தில் வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    முத்திரை தாள் கட்டணத்தில் விலக்கு இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நிலம் வாங்க உத்தேசியுள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

    வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய தாட்கோ இணையதளமான www.tahdco.com-ல் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பவானிசாகர் அருகே வெற்றிலை வாங்க சென்று மாயமான மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார்.
    • இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அடுத்த கறி தொட்டம்பாளையம், ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (30). இவர் தனது பாட்டி ரங்கம்மாள் (73) உடன் வசித்து வருகிறார். ரங்கம்மாள் தினமும் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நால் ரோடு பகுதிக்கு சென்று தனக்கு தேவையான வெற்றிலை பாக்கு வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த 4-ந் தேதி வெற்றிலை பாக்கு வாங்க சென்ற மூதாட்டி ரங்கம்மாள் பின்னர் வீடு திரும்பவில்லை.

    அவரை பல்வேறு இடங்களில் தேடினர் எனினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம், மாங்கள் மொக்கைக்கு கீழ்புறம் உள்ள காய்ந்த குட்டை பக்கமாக மூதாட்டி உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தேவராஜிக்கும் தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தது தனது பாட்டி என உறுதிப்படுத்தினார்.

    இதையடுத்து பவானிசாகர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×