search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலத்தில்"

    • அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது. இதனால் விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இரும்புப்பாலம் அடுத்த செங்கோடம்பாளையம் செல்லும் வழியில் ஏராளமான ஏக்கரில் மானாவரி சாகுபடி செய்யும் விவசாய நிலங்கள் உள்ளன.

    இதில் மக்காசோளம், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப் பட்டுள்ளன. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது நிலத்தில், அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது.

    இந்த விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அருகில் இருந்த விவசாய நிலங்களுக்கும் பரவியது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்அடிப்படையில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    இந்த திடீர் தீவிபத்திற்கு காரணம் மர்ம நபர்களா? அல்லது கடுமையான வெயிலின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • சேலம் கொண்டலாம்–பட்டி அருகே நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் விவசாய நிலத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மேலும் நிலத்தை காலி செய்ய மாட்டோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்–பட்டி அருகே உள்ள மேட்டுவெள்ளாளர் தெரு பகுதியில் ஜெயராமன் என்பவர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தின் மீது ஏற்கனவே தனியார் வங்கியில் தொழில் கடன் பெறப்பட்டுள்ளது.

    கடனுக்கான வட்டியை மாதம்தோறும் செலுத்தி வந்த நிலையில் திடீரென இந்த இடத்தை வேறு நபருக்கு வங்கி மூலம் எழுதிக் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் நிலத்தை காலி செய்யும்படியும் கடந்த 2 மாதங்களாக ஜெயராமை வங்கி நிர்வாகத்தினர் வலியுறுத்தினர்.

    இதனிடையே இன்று வங்கி ஊழியர்கள் போலீசாருடன் வந்து நிலத்தை காலி செய்யுமாறு கூறினர். இதனால் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் விவசாய நிலத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் நிலத்தை காலி செய்ய மாட்டோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கி சார்பில் இருந்து இடத்தை சுற்றி வேலி அமைப்பதற்காக 50-க்கும் மேற்பட்டோர் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இடத்தை விட்டு தர மாட்டோம் மீறி, நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    ×