என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வங்கி ஊழியர்களை கண்டித்து விவசாய நிலத்தில் இறங்கி போராட்டம்
- சேலம் கொண்டலாம்–பட்டி அருகே நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் விவசாய நிலத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மேலும் நிலத்தை காலி செய்ய மாட்டோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் கொண்டலாம்–பட்டி அருகே உள்ள மேட்டுவெள்ளாளர் தெரு பகுதியில் ஜெயராமன் என்பவர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தின் மீது ஏற்கனவே தனியார் வங்கியில் தொழில் கடன் பெறப்பட்டுள்ளது.
கடனுக்கான வட்டியை மாதம்தோறும் செலுத்தி வந்த நிலையில் திடீரென இந்த இடத்தை வேறு நபருக்கு வங்கி மூலம் எழுதிக் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் நிலத்தை காலி செய்யும்படியும் கடந்த 2 மாதங்களாக ஜெயராமை வங்கி நிர்வாகத்தினர் வலியுறுத்தினர்.
இதனிடையே இன்று வங்கி ஊழியர்கள் போலீசாருடன் வந்து நிலத்தை காலி செய்யுமாறு கூறினர். இதனால் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் விவசாய நிலத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நிலத்தை காலி செய்ய மாட்டோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கி சார்பில் இருந்து இடத்தை சுற்றி வேலி அமைப்பதற்காக 50-க்கும் மேற்பட்டோர் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இடத்தை விட்டு தர மாட்டோம் மீறி, நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்