search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறங்கி"

    • கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டு பணிகள் தொடங்க ப்படும் என அறிவிக்க ப்பட்டது.
    • காஞ்சிகோவில் கருங்கரடு பகுதியில் நல்ல நிலையில் எந்தவிதமான உடைப்பும், பழுதும் ஏற்படாமல் மண் கரையாக உள்ள இடத்தில் இரவு நேர த்தில் பணிகள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணை மற்றும் கீழ் பவானி, தட ப்பள்ளி- அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வருகிறது.

    கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டு பணிகள் தொடங்க ப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகி ன்றனர்.

    மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொட ரப்பட்ட வழக்கில், பணி களை தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யது.

    இதனை தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொட ர்பான அரசணை எண் 276-யை ரத்து செய்ய வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டு மான பணிகளை மட்டுமே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகள் வலியுறுத்தி பெருந்துறை அருகே உள்ள கீழ் பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற உண்ணாவிரத போரா ட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டனர்.

    இந்நிலையில் விவ சாயிகளின் போராட்டம் தொடர்பாக அமைச்சர் முத்துசாமியிடம் பேச்சு வார்த்தை நடை பெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் விவசாயிகள் கீழ்பவானி கால்வாயில் பழு தடைந்த பழைய கட்டு மானத்தை மட்டுமே சீரமைக்க வேண்டும்.

    மண் கரையாக வே இருக்க வேண்டும். அரசணை 276-யை ரத்து செய்வது தொடர்பாக சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். பணிகள் தொடங்கபட்ட இடத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளின் கருத்தை கேட்டு பணிகள் மேற்கொள் வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.

    இந்த கோரிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பட்ட தை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மூலம் அரசாணையை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கையை பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் முத்துசாமி உறுதி அளித்த தை தொடர்ந்து விவ சாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் கருங்கரடு பகுதியில் நல்ல நிலையில் எந்தவிதமான உடைப்பும், பழுதும் ஏற்படாமல் மண் கரையாக உள்ள இடத்தில் இரவு நேர த்தில் பணிகள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    இது பற்றி தகவல் கிடை த்ததும் விவசாயிகள் அந்த பகுதியில் இன்று திரண்ட னர். தொடர்ந்து இதனை கண்டித்து கால்வாயில் இறங்கிய அப்பகுதி பாசன விவசாய பொது மக்கள் 200-க்கும் மேற் பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலவியது.

    • சேலம் கொண்டலாம்–பட்டி அருகே நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் விவசாய நிலத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மேலும் நிலத்தை காலி செய்ய மாட்டோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்–பட்டி அருகே உள்ள மேட்டுவெள்ளாளர் தெரு பகுதியில் ஜெயராமன் என்பவர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தின் மீது ஏற்கனவே தனியார் வங்கியில் தொழில் கடன் பெறப்பட்டுள்ளது.

    கடனுக்கான வட்டியை மாதம்தோறும் செலுத்தி வந்த நிலையில் திடீரென இந்த இடத்தை வேறு நபருக்கு வங்கி மூலம் எழுதிக் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் நிலத்தை காலி செய்யும்படியும் கடந்த 2 மாதங்களாக ஜெயராமை வங்கி நிர்வாகத்தினர் வலியுறுத்தினர்.

    இதனிடையே இன்று வங்கி ஊழியர்கள் போலீசாருடன் வந்து நிலத்தை காலி செய்யுமாறு கூறினர். இதனால் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் விவசாய நிலத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் நிலத்தை காலி செய்ய மாட்டோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வங்கி சார்பில் இருந்து இடத்தை சுற்றி வேலி அமைப்பதற்காக 50-க்கும் மேற்பட்டோர் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இடத்தை விட்டு தர மாட்டோம் மீறி, நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    ×