search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலங்கள்"

    • தொழில் வளர்ச்சிக்காக பழுப்பு நிலக்கரி உள்ள நிலங்களை கையகப்படுத்திய நில உரிமையாளர்களிடம் நிலங்களை ஒப்படைப்பு
    • அனல்மின் திட்டத்திற்காக தொழில் வளர்ச்சிக்காக பழுப்பு நிலக்கரி உள்ள நிலங்களை ஒப்படைப்பு

    ஜெயங்கொண்டம்,  

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் மூலம் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய கிறிஸ்டோபர் உத்திரவின் பேரில், அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அழகேசன், இந்த மக்கள் நீதிமன்றத்தினை தலைமையேற்று நடத்தினார்.இதில் 203 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்றும், மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் எனவும் ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (JLPP நிலம் எடுப்பு).வேலுமணி மற்றும் தேவகி கூறினர். இந்த மக்கள் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் மோகன் ராஜ், செந்தில்குமார் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கருப்பண்ணசாமி கோவிலுக்கு சொந்தமான 23 வீடுகளுடன் கூடிய 6 ஏக்கா் நிலம் உள்ளது.
    • இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள ஏரி கருப்பண்ணசாமி கோவிலுக்கு சொந்தமான 23 வீடுகளுடன் கூடிய 6 ஏக்கா் நிலம், உத்தமபாளையம் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான ஒரு வீட்டுடன் கூடிய 30 சென்ட் நிலம், இலக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரன் கோவிலுக்குச் சொந்தமான 14.04 ஏக்கா் நிலம் என மொத்தம் 20.34 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.

    இது தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை அறிவுறுத்தலின்பேரில் உதவி ஆணையா் கருணாநிதி தலைமையில் ஆக்கிரமிப்பாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட நிலங்கள் மீட்கப்பட்டு கோவில் செயல் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    மேலும் மீட்கப்பட்ட பகுதிகளில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலங்களின் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

    • பாசனத்திற்கு தண்ணீர் செல்ல தடையாக இருந்து வருகிறது.
    • 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள ஜெம்புகா வேரி பிரிவு வாய்க்காலில் வள்ளி செடிகள் , ஆகாய தாமரை செடிகள் மண்டியுள்ளது.

    அதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வருகிறது.

    கடந்த ஆண்டு பருவ மழை காலங்களில் ஜெம்புகாவேரி வாய்க்கால் மூலம் வடிகால் மற்றும் பாசன வசதிபெறக்கூடிய நெய்தலூர், குண்டூர், அன்னப்பன்பேட்டை, பொந்தையாகுளம் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    விவசாய நிலங்களை பாதுகாக்க நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள உடனடியாக ஜெம்புகாவேரி பிரிவு வாய்க்காலை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்னரே தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் உள்ளன.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களுக்கு சுமார் 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் உள்ளன. இவற்றில் குறைந்த வாடகை, மற்றும் வாடகை இல்லாமலே குத்தகைதாரர்கள் உள்ளனர். இந்துக்கோவில்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக, கோவில்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் நிலங்கள், ஆகியவற்றின் வாடகை, குத்தகை தொகை போன்றவைகளை உயர்த்துவதற்கு இந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இந்துக்கோவில்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில், அவற்றுக்கு நீண்ட காலமாக குறைந்த வாடகை, மற்றும் குறைந்த குத்தகை தொகை செலுத்தி வருகின்றனர். அவற்றை சரிபார்த்து, வாடகை மற்றும் குத்தகை தொகைகளை உயர்த்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாடகை மற்றும் குத்தகை தொகை ஆகியவற்றை உயர்த்தி கோவில்களின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    • அனல்மின் திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டது
    • 81 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

    இதில் 81 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் ராஜமூர்த்தி (நிலம்எடுப்பு) கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறினார்.

    இதில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா முன்னிலையில் ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (நிலம்எடுப்பு) ராஜமூர்த்தி, அரசு வழக்கறிஞர்கள் மோகன் ராஜ், செந்தில்குமார், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


    • 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.
    • மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கைலாசநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இந்த கோயிலுக்கு சோதியக்குடி மற்றும் கோபாலசமுத்திரம் ஆகிய கிராமங்களில் 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.

    கோயிலுக்கு எந்த வருவாயும் இன்றி ஆக்கிர மிப்பு செய்யப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் கோயில் நில ஆவணங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.

    தொடர்ச்சியாக இந்த நிலங்களை மீட்பதற்கு மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன் ஆகியோரால் அறிவுறுத்தப்பட்டு வந்தது.

    அதன்படி மயிலாடுதுறை தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் வி.ஏ.ஓ சங்கீதா முன்னிலையில் கோயில் செயலாளர் அன்பரசன், ஆய்வாளர் பிரனேஷ், கனக்கர் ராஜி ஆகியோரால் சொத்துக்கள் மீட்கப்பட்டு கோயில் வசம் எடுக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட இந்த நிலங்கள் இணை ஆணையரின் அனுமதி பெற்று கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் முதல் முறையாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீட்கப்பட்ட இந்த நிலங்களில் எவரும் அத்து மீறி பிரவேசிக்கக் கூடாது எனவும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட இடத்தில் இது குறித்த தகவல் பலகையும் வைக்கப்பட்டது.

    • தமிழ்நாடு முழுவதும் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி நடந்துவருகிறது.
    • வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு முழுவதும் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி நடந்துவருகிறது.

    அதன்படி வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி கடிநெல்வயல் பகுதியில் உள்ள வேதாரண்யேஸ் வரர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை நாகை தனி வட்டாட்சியர் (கோவில் நிலங்கள்) அமுதா தலமையில் அளவிடும் பணி நடைபெற்றது.

    இப்பணியில் கோவில் செயல் அலுவலர் அறிவழகன், கோவில் நில அளவையர் விக்னேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    • வலங்கைமான் தாலுகாவில் 1936 ஹெக்டர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • இதனால் விவசாய நிலங்கள் சரியான பாசனவசதி பெற முடியவில்லை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவின் முக்கிய பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் ஒன்றாக சுள்ளான் ஆறு உள்ளது. சுள்ளான் ஆறு மூலம் பாபநாசம்` மற்றும் வலங்கைமான் தாலுகாவில் 1936 ஹெக்டர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பாபநாசம் தாலுக்காவில் மட்டும் வேம்பகுடி, புரசக்குடி, செருமாக்கநல்லூர், அகரமாங்குடி, சோலைபூஞ்சேரி, கிடங்காநத்தம், கோடுகிளி, பொன்மான் மேய்ந்தநல்லூர், கோவிலாம்பூண்டி, கருப்பூர் மட்டையாண்திடல், மேலசெம்மங்குடி உள்பட பல கிராமங்களில் உள்ள பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி மற்றும் வடிகால் வசதி பெறுகின்றன.

    தற்போது சுள்ளான் ஆற்றில் பாலூர், புரசக்குடியில் இருந்து வேம்பகுடி, அகரமாங்குடி வரையில் ஆற்றின் முழு பரப்பையும் வெங்காய தாமரை செடிகள் ஆக்கிரமித்து வாய்க்கால் முழுவதும் படர்ந்துள்ளது தண்ணீர் வரத்து உள்ள காலங்களில் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்ல வெங்காயதாமரை செடிகள் பெருந்தடையாக இருந்து வருகிறது. அதனால் விவசாய நிலங்கள் சரியான பாசனவசதி பெற முடியவில்லை.

    அதுபோல கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லமுடியாத நிலை இருந்து வருகிறது.விவசாயிகளின் சிரமத்தை அரசு உணர்ந்து மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பே சுள்ளான் ஆற்றில் பாலூர் முதல் அகரமாங்குடி வரையிலான வடிகால் பகுதிகளில் தண்ணீர் செல்ல தடையாக உள்ள வெங்காய தாமரை செடிகள் மற்றும் வெங்காய தாமரை பூண்டுகளை முழுமையாக அழித்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நவம்பர் 11-ம் தேதி மட்டும் 52 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.
    • சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 1000 நிவாரணம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் 40031 விவசாயிகளுக்கு, ரூ.43.92 கோடி இடுபொருள் நிவாரண தொகையினை கொள்ளிடம் ஊராட்சி கடவாசல், சீர்காழி ஊராட்சி ஒன்றியம் பெருந்தோட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் கீழையூர் உப்புச் சந்தை மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:

    தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டு தலின்படி வடகிழக்கு பருவமழையால் பாதிக்க ப்பட்ட விவசா யிகளுக்கு இடுபொருள் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது.

    கடந்த நவம்பர் 11ஆம் தேதி 24 மணி நேரத்தில் 52 சென்டிமீட்டர் மழை அளவு ஒரே இரவில் பதிவானது. இதனால் மிகுந்த சேதம் ஏற்பட்டுது. குறிப்பாக கொள்ளிடம்சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழப்பட்டு பாதிப்புக்குள்ளானது.

    பாதிப்புகளை சரி செய்ய முதலமைச்சரின் உத்தரவுபடி அமைச்சர்கள் இப்பகுதியில் முகாமிட்டு 72 மணி நேரத்தில் மின் துண்டிப்பு மற்றும் அனைத்து பாதிப்புகளும் சரிசெய்யப்பட்டன. இந்தியாவில் தலைசிறந்த சிறந்த முதலமைச்சராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார்.

    முதலைமேடு திட்டு, நாதல்படுகை ஆகிய இடங்களில் தலா ரூ.3 கோடி செலவில் புயல் பாதுகாப்பு மையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இந்தியாவில் வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட் கொண்டுவந்தவர் நமது தமிழக முதல்வர் ஆவார். வேளாண்மைக்கு மட்டும் ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மக்களை பாதுகாக்கும் முதல் - அமைச்சராக நமது தமிழக முதலமைச்சர் உள்ளார்.

    வடகிழக்கு பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. 122 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்தது. குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி, வட்டங்களில் விவசாய நிலங்கள் மிகவும் சேதமடைந்தன சேதம் அடைந்த பகுதிகளை உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த (14-11-2022) நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். தமிழக முதல்வர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு சென்னை திரும்புவதற்கு முன்பாகவே சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1000 நிவாரண உதவி தொகை அறிவித்தார்கள். உடனடியாக நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் லலிதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு காரணங்களால் கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் மாயமானது.
    • மீதம் உள்ள நிலங்களும் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    குடிமங்கலம்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களில் நித்ய கால பூஜைகள், திருவிழாக்கள், பராமரிப்பு பணிகள் நிறைவாக நடக்கும் வகையில் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பல்வேறு காரணங்களால் கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் மாயமானது.

    அரசு உத்தரவு அடிப்படையில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க இந்து சமய அற நிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.நிலங்கள், வணிக மனைகள், வீட்டு மனைகள் குறித்து முழுமையாக ஆவணங்கள் சேகரித்து இணைய தளத்தில் ஏற்றும் பணியும் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1,410 கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு சொந்தமாக 49 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் உள்ளன.கோவில்களுக்கு சொந்தமானது, ஆண்டு குத்தகை,பயன்படுத்தாமல் உள்ள நிலங்கள், ஆக்கிரமிப்பு நிலங்கள் என அனைத்து வகையான நிலங்களையும் அளவீடு செய்து மீட்க வருவாய்த்துறை மற்றும் நில அளவீடு துறையில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அக்குழுவினர் ஒவ்வொரு நிலங்களையும் நவீன உபகரணங்கள் கொண்டு அளவீடு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோவில் நிலங்களில் இந்து சமய அறநிலையத்துறை பெயர் பொறித்த தனித்துவமான எல்லை கற்கள் தயாரித்து கோவில்கள் சார்பில் அக்கற்கள் நிலங்களில் நடும் பணியும் துவங்கியுள்ளது.

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியிலுள்ள பழமையான கோவில்களுக்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இப்பணி நடந்து வருகிறது.

    இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து பழைய ஆவணங்கள் அடிப்படையில் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.தற்போது கோவில் வசம் உள்ள நிலங்கள், குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் என அனைத்து நிலங்கள் குறித்தும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்புக்குழு பழைய ஆவணங்கள் அடிப்படையில் கோவில் நிலங்கள் குறித்து கணக்கெடுத்து அதில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.இதில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அறநிலையத்துறை சட்டத்தின் அடிப்படையில் உடனடியாக அகற்றப்படுகிறது.

    அதே போல் முறைகேடாக பெயர் மாற்றம் செய்திருந்தால் மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக உரிய முறையில் பெயர் மாற்றம் செய்து மீட்கப்படுகிறது. அனைத்து நிலங்களும் மீட்கப்பட்டு எல்லை கற்கள் மற்றும் சுற்றிலும் கம்பி வேலி பாதுகாப்பு ஏற்படுத்தவும் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    தற்போது உடுமலை, தாராபுரம் பகுதிகளில் ஏறத்தாழ 7,300 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலங்களும் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் கோவில் வசம் உள்ள நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலங்கள் என டிஜிட்டல் சர்வே மேற்கொள்ள நிலங்களில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என அடையாளப்படுத்தும் வகையில் அறநிலையத்துறை என தனித்துவப்படுத்தும் வகையில் எல்லை கற்கள் தயாரிக்கப்பட்டு அவை அனைத்து கோவில் நிலங்களிலும் நடப்பட்டு வருகிறது.கோவில் நிதி நிலைமைக்கு ஏற்ப அடுத்த கட்டமாக கம்பி வேலி பாதுகாப்பும் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நிவாரணம்.
    • குடிநீர் தட்டுப்பாடு, இலவச மனைபட்டா வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானுசேகர் தலைமை வகித்தார். இளநிலை உதவியாளர் கவிதா வரவேற்றார். ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, பி.டி.ஓ. அருள்மொழி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் கலந்து கொண்டு பேசுகையில், ஊராட்சியைச் சேர்ந்த முத்தரையர் தெருவில் உடனடியாக 60 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கிடவேண்டும் என்றார்.

    ஒன்றிய குழு உறுப்பினர் சிவபாலன்பேசுகையில், கோதண்டபுரம் நீரேற்றும் பணியாற்றுபவருக்கு சம்பளநிலுவையில் இருப்பதால் 6பஞ்சாயத்துக்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    லெட்சுமி பாலமுருகன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி சாலைகளையும் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த ரூ.2 கோடியே 122 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி என்றார்.

    ரீகன் பேசுகையில், நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அவசர சிகிச்சைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு போதிய மருத்துவர்கள் இருப்பதில்லை. கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

    தலைவர் (பொ) பானுசேகர் பேசுகையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் முதல் 30ஆயிரம் வரை நிவாரணம் அறிவிக்கவேண்டும். இதனை இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் ஏற்றி நிறைவேற்றம் செய்யவேண்டும் என்றார்.

    துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, கலியபெருமாள், ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூர்ண சந்திரன் பங்கேற்றனர். முடிவில் ஒன்றிய மேலாளர் சம்மந்தம் நன்றி கூறினார்.

    நெற்குப்பையில் நீர்ப்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கும் பணி நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள நவனி கண்மாய் சுமார் 18 ஹெக்டர் பரப்பளவு கொண்ட கண்மாய் ஆகும்.

    இந்த கண்மாயில் இருந்து பாசனம் பெறும் ஆயக்கட்டு தாரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து அதிகப்படியான தண்ணீர் கண்மாய்க்கு வரத்து கால்வாய் மூலம் வந்தபோதிலும் ஆக்கிரமிப்பு மற்றும் சீமை கருவேல மரங்களால் கண்மாய் முழு கொள்ளவை எட்ட முடியாமல் கலிங்குகளின் பாதை வழியாக அதிகப்படியான தண்ணீர் வீணாக சென்று விட்டது என இந்தப்பகுதி விவசாயிகள் குறை கூறி னர். 

    இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் கண்மாயின் கரைப் பகுதிகளில் கால்நடை பராமரிப்பு, தோட்டம் முதலிய ஏனைய காரணங்களுக்காக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த 14-க்கும் மேற்பட்ட வர்களுக்கு  ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளும்படி நீர்வள பாசன ஆதார துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

    இந்தநிலையில் நீர்வள ஆதார உதவி பொறியாளர் நாகராஜன் வருவாய் துறையினர் உதவியோடு ஜே.சி.பி. மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த நபர்களால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்ட போதிலும் ஆக்கிரமிப்புக்கு செய்யப்பட்ட அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்த வேப்பமரம், வாழைமரம், எலுமிச்சை, கொய்யா, போன்ற பல மரங்களும் இன்னும் ஏனைய பூச்செடி களும் முற்றிலுமாக அகற்றப்பட்டது. 

    இதுகுறித்து உதவி பொறியாளர் கூறுகையில் தொடர்ந்து நீர்நிலைப் பகுதிகள், வரத்து கால்வாய்க ளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு படிப்படியாக விரைந்து மீட்கப்படும் என்றார். 

     இதில் நீர்வள பாசன உதவியாளர் முரளி, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர்களான ரிஹானா பேகம், முனிஸ் குமார், கிராம உதவியாளர் முகமது அலி, மற்றும் பாதுகாப்பு பணிக்காக நெற்குப்பை காவல் நிலைய காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ×